புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
44 Posts - 60%
heezulia
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெப்போலியன் மர்மம்! Poll_c10நெப்போலியன் மர்மம்! Poll_m10நெப்போலியன் மர்மம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெப்போலியன் மர்மம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 27, 2014 12:09 am


மாவீரன் நெப்போலியன் பற்றி எத்தனையோ கதைகள் படித்திருக்கிறோம். இருந்தாலும் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றுவரை தொடர்கிறது. அது பிரெஞ்ச் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட மிகச்சிறிய தீவு போனபர்ட். இங்கு பிறந்த மாவீரன் நெப்போலியன், தனது இருபதாவது வயதில் போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக பிரான்ஸ் நாட்டின் நிகரில்லா மன்னனாக விளங்கினார். தனது வாழ்நாளில் பெரும்பாலான நாட்களைப் போர்க் களத்திலேயே செலவிட்ட இம்மாவீரன், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை வெற்றி கண்டார்.

இந்நிலையில் 1812ம் ஆண்டு ரஷ்யா மீதான போர் நெப்போலியனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மோசமான திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பிரெஞ்ச் படைகள் மோசமான அழிவை முதன்முறையாகச் சந்தித்தது. அதிலிருந்து மீள்வதற்கு நெப்போலியனால் முடியாத இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. 1813ம் ஆண்டு அக்டோபர் மாதம் "லீப்சிக்' என்னும் இடத்தில் நெப்போலியனின் படைகளை ஆறாவது கூட்டணி முறியடித்து பின்வாங்கச் செய்தது. 1814ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட்டணி பிரான்ஸ் நாடு முழுவதையும் கைப்பற்றி, நெப்போலியனைக் கைது செய்தது. இதற்கு மேலும் நெப்போலியனை உயிரோடு விட்டு வைத்தால் ஆபத்து என்று நினைத்தது ஆறாவது கூட்டணியில் ஒன்றான பிரிட்டன்.

எல்பாத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார் நெப்போலியன். அங்கு சிறை வைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பி அடுத்த ஓராண்டுக்குள் மீண்டும் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்ட நெப்போலியன் இழந்த நாட்டைக் கைப்பற்றி, பிரான்ஸ் தேசத்தின் மன்னராக மீண்டும் ஆனார்.

அதன்பிறகும் எதிரிகளோடு நடந்த போரில் மீண்டும் வாட்டர்லு என்னுமிடத்தில் தோல்வியைச் சந்தித்த நெப்போலியன், அத்துடன் தன் வாழ்நாளின் இறுதி அத்தியாயத்தில் இருந்தார். பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த செயின்ட் ஹெலினா என்னும் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டார் நெப்போலியன். ஆறாண்டு கள் கொடுஞ்சிறையில் இருந்த நெப்போலியன் இறுதியில் தனது 52வது வயதில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண மடைந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்று வரை சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவர் எப்படி இறந்தார் என்பதற்கான சரியான விடை இதுவரை கிடைக்கவே இல்லை.

இவர் இறந்ததும் இவரது தலைமுடி மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெப்போலியனின் சாவில் சந்தேகம் தோன்றியதன் காரணமாக 1961ம் ஆண்டு அவரது தலைமுடி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் விஷம் இருந்தது தெரியவந்தது. எனவே, பிரிட்டீஷ் அரசு மாவீரன் நெப்போலியனை விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்று பரவலாக அனைவராலும் நம்பப்பட்டது.

இதனிடையே அண்மையில் இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் சிலர் நெப்போலியனின் தலை முடியை அணு சக்தியைப் பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முடிவில், நெப்போலியனைக் கொல்கிற அளவிற்கு அவரது தலைமுடியில் விஷத்தன்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சிறுவனாக இருந்தபோது அவரது முடியில் எந்த அளவிற்கு விஷத்தன்மை இருந்ததோ, அதே அளவு விஷத் தன்மைதான் அவர் இறக்கும்போதும் அவரது முடியில் இருந்ததாக இத்தாலிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே, வயிற்றுப் புற்றுநோய் பாதிப்பு காரணமாகவே நெப்போலியன் மரணமடைந்தார் என்பது உண்மைதான் என்று கூறி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ஆனாலும் இத்தாலிய விஞ்ஞானிகளின் கருத்தை ஏற்க உலகில் பலரும் மறுத்து வருகின்றனர். எனினும், நெப்போலியன் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் காரணமாகவே மரணமடைந்ததாகவும் ஒரு சந்தேகம் தோன்றியது.

இந்நிலையில், அவரது மரணம் பற்றிய சந்தேகங்கள் எழத் தொடங்கியதுமே அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் அறையை வல்லுநர்கள் பலரும் நுண்மையாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இன்னும் சில சந்தேகங்களைத் தூண்டக் கூடிய வகையில் காரணங்கள் அமைந்திருந்தன.

நெப்போலியன் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த ஓவியம் ஒன்று முதல் சந்தேகத்தைக் கிளப்பியது. அடுத்த சந்தேகம், அந்த அறைச் சுவரை அலங்கரித்த வால் பேப்பர்கள். முதலில் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை நன்றாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் விஷம் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. அதாவது பாம்பின் விஷத்தை ஒரு வர்ணத்தில் கலந்து அந்த சுவர் ஓவியத்தில் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓவியத்தில் விஷம் தடவப்பட்டிருந்ததற்கும், நெப்போலியன் சாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருக்க நேரிட்டது. இதனால் விஷம் கலந்த காற்றையே அவர் சுவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அதுவே அவரது உடம்பில் சிறுகச் சிறுகக் கலந்து மரணத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்னொன்று அங்கு சுவரை அலங்கரித்த வால் பேப்பர்கள். அதனை சுவரில் ஒட்டுவதற் கான பசையிலும் கொடிய விஷம் கலக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உணவளிக்காமல் காயப் போட்டிருந்த காரணத்தால் கொடிய பசி ஏற்பட்டிருக்க வேண்டும். அப்போது வேறு வழியின்றி சுவரில் இருந்த வால் பேப்பரைக் கிழித்துத் தின்றிருக்கலாம். அதில் கலந்திருந்த விஷம் அவருள் கலந்து மரணத்தை உண்டாக்கி இருக்கக்கூடும் என்றும் ஒரு சந்தேகம் உள்ளது.

இவ்வாறாக, ஒரு மாவீரனின் மரணத்திற்கான காரணம் இன்றுவரை சரியாகத் தெரியவில்லை என்பதே உண்மை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 27, 2014 6:55 am

நெப்போலியன் மர்மம்! TTefSU1R7uuwOwPe9rkP+E_1406198070
-
 நெப்போலியன் மர்மம்! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக