ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை போகும் மணல் வளம்

2 posters

Go down

 கொள்ளை போகும் மணல் வளம் Empty கொள்ளை போகும் மணல் வளம்

Post by சிவா Sat Jul 26, 2014 10:55 pm


கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை போவதால், நமது வாரிசுகள் நீருக்காகத் தவிக்க நேரிடும். இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இன்றைய தேவை நிறைவேறினால் போதும் என்ற போக்கில் அரசு நிர்வாகம் உள்பட எல்லோருடைய செயல்பாடும் இருப்பது ஆபத்தானது.

சட்டப்பேரவையில் வேட்டி விஷயத்துக்கு வரிந்துகட்டிக் கொண்டு குரல் கொடுத்தவர்கள், மணல் கொள்ளையர்கள் லாரி, லாரியாக கொள்ளையடித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி நம் பொக்கிஷத்தை கரைப்பதைப் பற்றி கவலைப்படவில்லையே!

சென்னை, பெங்களூரு ஆகிய இரு மாநகரங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் பாலாற்று மணலில் எழுந்தவைதான் என்பது பலருக்குத் தெரியாது. இரு பெரும் நகரங்களின் கட்டமைப்புக்காகத் தொடர்ந்து பாலாற்று மணல் சுரண்டப்பட்டு வருகிறது.

பாலாற்றில் எல்லைமீறி மணல் சுரண்டப்படுவதால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலத்தடி நீராதாரம் அபாயக மான நிலையை எட்டத் தொடங்கியதுள்ளது என்பதை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக பட்டியலிட்டு மாநில அரசு நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.

இன்றைய விஞ்ஞானத்தால் இயற்கையாகக் கிடைக்கும் மணலை செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரு கனஅடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆவதாக கணக்கிட்டுள்ள பொறியாளர்கள், இந்த மணல் வளம் குன்றுவதன் காரணமாகவே பல மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் வளம்தான் மழைக் காலத்தில் ஆங்காங்கே பெய்யும் மழை ஆற்றை அடைந்ததும், நிலத்தடி பகுதிக்கு கொண்டு சென்று சேமிக்க உதவுகிறது என்பதை நாம் ஏனோ மறந்துவிட்டோம்.

மணல் எடுக்க அனுமதி இல்லாத இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதும், இதற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வருவாய்த்துறை, காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பல நூறு மாட்டு வண்டிக்காரர்கள் பிழைப்பு நடத்துவதையும் யாரும் மறுக்க முடியாது.

அரசு ஒரு யூனிட் மணலுக்கு நிர்ணயிக்கும் விலை ரூ.315. மூன்று யூனிட் மணலுக்கான விலை ரூ.915. ஆனால் லாரிகள் நூற்றுக்கணக்கில் மணல் குவாரிகளில் 3 நாள் கூட வரிசையில் காத்திருந்து மணல் எடுத்துச் செல்லும் அளவுக்கு இத்தொழிலில் ஒருசிலர் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்கு 3 யூனிட் மணல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் அரசுக்கு சொற்ப வருவாயும், இடைத் தரகர்களுக்கு கோடிக்கணக்கிலும் வருவாயும் கிடைப்பது ஊரறிந்த ரகசியம்.

அதிகபட்சம் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்கலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும். குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அள்ள வேண்டும்.

தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது போன்ற அரசின் விதிமுறைகள் எதுவும் மணல் அள்ளப்படுவதில் பின்பற்றப்படுவதில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் மணல் எடுப்பதால் நில அதிர்வுகள், இயற்கை சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரின் ஆதாரப்பூர்வமான தகவல்களை நாம் கவனத்துடன் உற்று பார்க்க வேண்டியுள்ளது.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வேளாண்மை பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க இனியாவது அரசும் நிர்வாகமும் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசு நிர்வாகம் மணலை விதிமுறை மீறி அள்ளுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

எல்லா விஷயத்திலும் மேலை நாடுகளை பின்பற்றும் நாம், கட்டுமானத் தொழிலிலும் மணலை குறைவாக பயன்படுத்தி உறுதியான கட்டடங்களை உருவாக்கும் மேலை நாட்டு நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்தை கட்டட வல்லுநர்கள் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கொள்ளை போகும் மணல் வளம் Empty Re: கொள்ளை போகும் மணல் வளம்

Post by Dr.S.Soundarapandian Sun Jul 27, 2014 2:21 pm

 கொள்ளை போகும் மணல் வளம் 103459460 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.
» தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..!
» ஐரோப்பாவில் உள்ள மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய மணல் மேட்டு - புகைப்படம்
» கொள்ளை போகும் தண்ணீர்- கட்டுரை
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum