புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 காமன்வெல்த் போட்டிகள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு 6–வது இடம்
20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23–ந் தேதி முதல் ஆகஸ்டு 3–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்குவாஷ் வீரர்–வீராங்கனைகளுக்கு போட்டி தர வரிசையை உலக ஸ்குவாஷ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டி தர வரிசையில் இங்கிலாந்து வீரர் நிக் மேத்யூ முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் சவுரவ் கோஷல் 4–வது இடம் பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் நிகோல் டேவிட் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 6–வது இடம் பெற்றுள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23–ந் தேதி முதல் ஆகஸ்டு 3–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்குவாஷ் வீரர்–வீராங்கனைகளுக்கு போட்டி தர வரிசையை உலக ஸ்குவாஷ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டி தர வரிசையில் இங்கிலாந்து வீரர் நிக் மேத்யூ முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் சவுரவ் கோஷல் 4–வது இடம் பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் நிகோல் டேவிட் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 6–வது இடம் பெற்றுள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காமன்வெல்த் கிராமத்தில் இந்திய வீரர்களுக்கு பொது கழிப்பறை
ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு பொது குளியலறை வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருவது கவலையளிப்பதாக இருந்தபோதிலும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் விருந்தோம்பல் நன்றாக இருப்பதாக இந்திய வீரர்கள் தெரிவித்தனர். எனினும், டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது போன்று காமன்வெல்த் கிராமத்தில் கழிப்பறையுடன் கூடிய அறைகளுக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
“டெல்லியில் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் கிராமம் சிறப்பாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிக அளவில் திறந்தவெளி இருந்தது. ஒட்டுமொத்த தரத்தைப் பொறுத்தவரையில், இங்கு சிறப்பாக உள்ளது. உணவும் நன்றாக இருக்கிறது. டாய்லெட்டுகளை பகிர்ந்துகொண்டுள்ளபோதிலும், இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை” என்றார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்.
சரத் கமலின் பயிற்சியாளர் பவானி முகர்ஜி கூறுகையில், “குடிசைகள் போன்ற மிகச்சிறிய அறைகள் கொண்ட குடியிருப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் இரண்டு குளியலறைகள், 4 அறைகள் உள்ளன. இது பிரச்சினையாக இருந்தாலும், விளையாட்டு கிராமம் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சிறிய குறைபாடுகளை இங்குள்ள நல்ல சீதோஷ்ண நிலை சரி செய்கிறது. வயிற்றுப் போக்கு அபாயம் இருப்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறோம்” என்றார்.
ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு பொது குளியலறை வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருவது கவலையளிப்பதாக இருந்தபோதிலும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் விருந்தோம்பல் நன்றாக இருப்பதாக இந்திய வீரர்கள் தெரிவித்தனர். எனினும், டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது போன்று காமன்வெல்த் கிராமத்தில் கழிப்பறையுடன் கூடிய அறைகளுக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
“டெல்லியில் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் கிராமம் சிறப்பாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிக அளவில் திறந்தவெளி இருந்தது. ஒட்டுமொத்த தரத்தைப் பொறுத்தவரையில், இங்கு சிறப்பாக உள்ளது. உணவும் நன்றாக இருக்கிறது. டாய்லெட்டுகளை பகிர்ந்துகொண்டுள்ளபோதிலும், இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை” என்றார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்.
சரத் கமலின் பயிற்சியாளர் பவானி முகர்ஜி கூறுகையில், “குடிசைகள் போன்ற மிகச்சிறிய அறைகள் கொண்ட குடியிருப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் இரண்டு குளியலறைகள், 4 அறைகள் உள்ளன. இது பிரச்சினையாக இருந்தாலும், விளையாட்டு கிராமம் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சிறிய குறைபாடுகளை இங்குள்ள நல்ல சீதோஷ்ண நிலை சரி செய்கிறது. வயிற்றுப் போக்கு அபாயம் இருப்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறோம்” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மூவர்ணக் கொடியுடன் விஜய் குமார்
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நாளை துவங்குகிறது. இதன் துவக்க விழாவில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திக் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், டில்லி காமன்வெல்த் (2010) விளையாட்டில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கங்களை கைப்பற்றினார். தவிர இவர், 2010ல் நடந்த ஆசிய விளையாட்டில் ஒரு வெண்கலம் வென்றார்.
விஜய் குமாருக்கு மாற்று வீரராக, மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு, லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை விஜய் குமார் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொண்டால் மட்டும், யோகேஷ்வர் தத் மூவர்ணக் கொடி ஏந்தி வருவார்.
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நாளை துவங்குகிறது. இதன் துவக்க விழாவில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திக் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், டில்லி காமன்வெல்த் (2010) விளையாட்டில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கங்களை கைப்பற்றினார். தவிர இவர், 2010ல் நடந்த ஆசிய விளையாட்டில் ஒரு வெண்கலம் வென்றார்.
விஜய் குமாருக்கு மாற்று வீரராக, மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு, லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை விஜய் குமார் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொண்டால் மட்டும், யோகேஷ்வர் தத் மூவர்ணக் கொடி ஏந்தி வருவார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை
புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டு 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பதக்கம் கிடைக்கும்,’’ என, இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்குகிறது. இதில், 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீராங்கனைகள் நேற்று கிளாஸ்கோ சென்றனர். டில்லி காமன்வெல்த் விளையாட்டில் நடந்த 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதில் இடம் பெற்ற இந்தியாவின் ஜோதி, சர்பானி நந்தா இம்முறையும் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர, ஆஷா ராய், சாரதா நாராயணா, மெர்லின் கே ஜோசப், ஷாந்தினி ஆகியோரும் விளையாடுகின்றனர்.
இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘‘கிளாஸ்கோ காமன்வெல்த்தில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை தேசிய சாதனையை (44.43 வினாடி) முறியடிக்க திட்டமிட்டுள்ளோம். தேர்வாகி உள்ள 6 வீராங்கனைகளும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மொழியால் வேறுபட்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து இருப்பதால், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.
இந்திய அணியின் உக்ரைன் பயிற்சியாளர் டிமிட்ரி கூறுகையில், ‘‘ஜமைக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியாவில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்பதால், இம்முறை 4*100 மீ., தொடர் ஓட்டம் கடினமானது. கடந்த 45 நாட்களாக நடந்த பயிற்சி முகாமில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான முறையில் தயாராகினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனைகள் மிகவும் திறமையானவர்கள்,’’ என்றார்.
இதுகுறித்து சாரதா கூறுகையில்,‘‘இம்முறை தேர்வு செய்யப்படுள்ள 6 வீராங்கனைகளுக்கும் 2 முதல் 3 வயது வித்தியாசமே உள்ளது. தினமும் 6 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், கருத்துகளை பரிமாறிக் கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை,’’என்றார்.
புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டு 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பதக்கம் கிடைக்கும்,’’ என, இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்குகிறது. இதில், 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீராங்கனைகள் நேற்று கிளாஸ்கோ சென்றனர். டில்லி காமன்வெல்த் விளையாட்டில் நடந்த 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதில் இடம் பெற்ற இந்தியாவின் ஜோதி, சர்பானி நந்தா இம்முறையும் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர, ஆஷா ராய், சாரதா நாராயணா, மெர்லின் கே ஜோசப், ஷாந்தினி ஆகியோரும் விளையாடுகின்றனர்.
இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘‘கிளாஸ்கோ காமன்வெல்த்தில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை தேசிய சாதனையை (44.43 வினாடி) முறியடிக்க திட்டமிட்டுள்ளோம். தேர்வாகி உள்ள 6 வீராங்கனைகளும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மொழியால் வேறுபட்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து இருப்பதால், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.
இந்திய அணியின் உக்ரைன் பயிற்சியாளர் டிமிட்ரி கூறுகையில், ‘‘ஜமைக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியாவில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்பதால், இம்முறை 4*100 மீ., தொடர் ஓட்டம் கடினமானது. கடந்த 45 நாட்களாக நடந்த பயிற்சி முகாமில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான முறையில் தயாராகினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனைகள் மிகவும் திறமையானவர்கள்,’’ என்றார்.
இதுகுறித்து சாரதா கூறுகையில்,‘‘இம்முறை தேர்வு செய்யப்படுள்ள 6 வீராங்கனைகளுக்கும் 2 முதல் 3 வயது வித்தியாசமே உள்ளது. தினமும் 6 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், கருத்துகளை பரிமாறிக் கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை,’’என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாதிக்குமா இந்தியா: கிளாஸ்கோவில் கடின சவால்
கிளாஸ்கோ: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காமன்வெல்த் விளையாட்டு இன்று ஆரம்பமாகிறது. தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, பாட்மின்டன் என அனைத்து வகையான ஆட்டங்களையும் 11 நாட்களுக்கு உற்சாகமாக கண்டு களிக்கலாம். கடந்த முறை டில்லியில் நடந்த போட்டியில், இரண்டாம் இடம் பெற்ற இந்தியாவுக்கு இம்முறை கடின சவால் காத்திருக்கிறது. நமக்கு சாதகமான டென்னிஸ், வில்வித்தை, மல்யுத்தத்தில் ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கம், துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்றவை பெரும் பின்னடைவு.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு (ஜூலை 23–ஆக.,3) நடக்க உள்ளது. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, திறமை நிரூபிக்க உள்ளனர். இந்தியா சார்பில் 14 வகையிலான போட்டிகளில் மொத்தம் 215 பேர் பங்கேற்கின்றனர்.
செய்னா, சானியா இல்லை:
டென்னிஸ் நீக்கப்பட்டதால், சானியாவை பார்க்க முடியாது. காயம் அடைந்ததால், செய்னா நேவல் ஆட்டத்தையும் காண இயலாது. இவரது இழப்பை, இளம் பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஈடுசெய்வார் என எதிர்பார்க்கலாம்.
இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா நம்பிக்கை தருகின்றனர்.
மல்யுத்தம் சிக்கல்:
மல்யுத்த போட்டியில் நம்மவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கப்பட்டதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பிரீஸ்டைல்’ பிரிவில் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் கைப்பற்றிய யோகேஷ்வர் தத் மற்றும் பெண்கள் பிரிவில் பபிதா குமாரி, ஜோதி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்பதால், குறைந்தது 2 தங்கம் கிடைக்கலாம்.
பிந்த்ரா எதிர்பார்ப்பு:
துப்பாக்கிசுடுதல் போட்டியில் கடந்தமுறை வழங்கப்பட்ட 44 தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை இம்முறை 19 ஆக குறைக்கப்பட்டது இந்தியாவுக்கு பேரிழப்பு. 2010ல் துப்பாக்கி சுடுதலில் 14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 30 பதக்கங்கள் கிடைத்தன.
இம்முறை இவ்வளவு பதக்கம் கிடைப்பது சந்தேகமே. ‘ஒலிம்பிக் நாயகன்’ அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெள்ளி கைப்பற்றிய விஜய் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங் இருப்பது நல்ல விஷயம். பெண்கள் பிரிவில் ஹீனா சித்து பதக்கத்தை நிச்சயமாக குறி வைக்கலாம்.
தீபிகா உறுதி:
ஸ்குவாஷ் போட்டியில் அசத்த, தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷால் உள்ளதால், பதக்கம் உறுதி. குத்துச்சண்டை கோதாவில் மிரட்ட தேவேந்திரோ சிங், ஷிவா தபா, விஜேந்தர் சிங், தினேஷ் குமார்
தயாராக உள்ளனர். பெண்கள் பிரிவில், ஒலிம்பிக் நட்சத்திரம் மேரி கோமை வென்று அதிர்ச்சி அளித்த பிங்கி ஜாங்க்ரா மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
பளுதுாக்குதலில் விகாஸ் தாகூர், சுகன் தேவ், சஞ்சிதா சானு, மீனா குமாரி மிரட்டலாம்.
கிளாஸ்கோ: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காமன்வெல்த் விளையாட்டு இன்று ஆரம்பமாகிறது. தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, பாட்மின்டன் என அனைத்து வகையான ஆட்டங்களையும் 11 நாட்களுக்கு உற்சாகமாக கண்டு களிக்கலாம். கடந்த முறை டில்லியில் நடந்த போட்டியில், இரண்டாம் இடம் பெற்ற இந்தியாவுக்கு இம்முறை கடின சவால் காத்திருக்கிறது. நமக்கு சாதகமான டென்னிஸ், வில்வித்தை, மல்யுத்தத்தில் ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கம், துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்றவை பெரும் பின்னடைவு.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு (ஜூலை 23–ஆக.,3) நடக்க உள்ளது. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, திறமை நிரூபிக்க உள்ளனர். இந்தியா சார்பில் 14 வகையிலான போட்டிகளில் மொத்தம் 215 பேர் பங்கேற்கின்றனர்.
செய்னா, சானியா இல்லை:
டென்னிஸ் நீக்கப்பட்டதால், சானியாவை பார்க்க முடியாது. காயம் அடைந்ததால், செய்னா நேவல் ஆட்டத்தையும் காண இயலாது. இவரது இழப்பை, இளம் பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஈடுசெய்வார் என எதிர்பார்க்கலாம்.
இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா நம்பிக்கை தருகின்றனர்.
மல்யுத்தம் சிக்கல்:
மல்யுத்த போட்டியில் நம்மவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கப்பட்டதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பிரீஸ்டைல்’ பிரிவில் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் கைப்பற்றிய யோகேஷ்வர் தத் மற்றும் பெண்கள் பிரிவில் பபிதா குமாரி, ஜோதி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்பதால், குறைந்தது 2 தங்கம் கிடைக்கலாம்.
பிந்த்ரா எதிர்பார்ப்பு:
துப்பாக்கிசுடுதல் போட்டியில் கடந்தமுறை வழங்கப்பட்ட 44 தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை இம்முறை 19 ஆக குறைக்கப்பட்டது இந்தியாவுக்கு பேரிழப்பு. 2010ல் துப்பாக்கி சுடுதலில் 14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 30 பதக்கங்கள் கிடைத்தன.
இம்முறை இவ்வளவு பதக்கம் கிடைப்பது சந்தேகமே. ‘ஒலிம்பிக் நாயகன்’ அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெள்ளி கைப்பற்றிய விஜய் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங் இருப்பது நல்ல விஷயம். பெண்கள் பிரிவில் ஹீனா சித்து பதக்கத்தை நிச்சயமாக குறி வைக்கலாம்.
தீபிகா உறுதி:
ஸ்குவாஷ் போட்டியில் அசத்த, தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷால் உள்ளதால், பதக்கம் உறுதி. குத்துச்சண்டை கோதாவில் மிரட்ட தேவேந்திரோ சிங், ஷிவா தபா, விஜேந்தர் சிங், தினேஷ் குமார்
தயாராக உள்ளனர். பெண்கள் பிரிவில், ஒலிம்பிக் நட்சத்திரம் மேரி கோமை வென்று அதிர்ச்சி அளித்த பிங்கி ஜாங்க்ரா மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
பளுதுாக்குதலில் விகாஸ் தாகூர், சுகன் தேவ், சஞ்சிதா சானு, மீனா குமாரி மிரட்டலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாக்கி சவால்:
குழுப் போட்டிகளில் சர்தார் சிங் தலைமையிலான ஹாக்கி அணி தான் கைகொடுக்க வேண்டும். கடந்த முறை வெள்ளி வென்ற இந்திய அணியினர் இம்முறை ஆஸ்திரேலியாவின் கடும் சவாலை சமாளித்தால், தங்கம் வெல்லலாம்.
தடகளத்தில் விகாஸ் கவுடா(வட்டு எறிதல்), டின்டு லுாக்கா, பூவம்மா, அஷ்வினி அடங்கிய பெண்கள் (4*400 தொடர் ஓட்டம்) அணியினர் பதக்கம் வெல்ல வாய்ப்பு உண்டு.
சர்வதேச அளவில், ஜமைக்காவின் ‘மின்னல் வேக’ வீரரான உசைன் போல்ட், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மட்டும் கலந்து கொள்கிறார். இதே போல ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி–ஆன்–பிரேசர் பிரைசும் 4*100 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். இவர்களை தவிர, பல தடகள நட்சத்திரங்களும் தடம் பதிக்க காத்திருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படலாம்.
கோலாகல துவக்கவிழா
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி காமன்வெல்த். இதை இரண்டாம் ராணி எலிசபெத், இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.
மொத்தம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்று அசத்த உள்ளனர். மூன்று மணி நேரம் நடக்கும் துவக்க விழாவில், கிராம்மி விருது வென்ற பிரபல பாடகர் ராடு ஸ்டீவர்ட், ஸ்காட்லாந்து பாடகி சூசன் பாய்ல் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
காமன்வெல்த் ஜோதி
கிளாஸ்கோ காமன்வெல்த் ஜோதி ஓட்டம் கடந்த 2013, அக்., 9ல் பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியது. பின், 14ம் தேதி இந்தியா வந்த இந்த ஜோதி, ஆக்ரா வழியாக டில்லி இந்தியா கேட் பகுதிக்கு வந்தது.
இந்தியா இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் பங்கேற்கும் 71 நாடுகளில் 1 லட்சத்து, 90 ஆயிரம் கி.மீ., துாரம், இந்த ஜோதி பயணித்து, 288 நாட்களுக்குப் பின், துவக்கவிழா நடக்கும் கிளாஸ்கோ மைதானத்துக்கு இன்று வருகிறது.
கிளாஸ்கோவை சேர்ந்த வில்லியம் மிட்சல் என்பவரது தலைமையிலான குழு இந்த ஜோதியை வடிவமைத்தது. 2 கி.கி., எடைக்கு குறைவான இது, டைட்டானியம், கிரானைட் மற்றும் மரத்தினால் ஆனது.
ஒளி ஊடுருவிச் செல்லும் சிலிண்டர் வடிவ மேற்பகுதியின் மையத்தில் ராணி சார்பில் வழங்கப்பட்ட செய்தி அச்சிடப்பட்டுள்ளது. இதிலுள்ள எல்.இ.டி., விளக்குகள் ஒ ளிரும் போது தான் இந்த செய்தியை படிக்க முடியும். தவிர, துவக்க விழா நடக்கும் அந்த நிமிடம் வரை இதில் என்ன செய்தி உள்ளது என்பதை படிக்க முடியாதபடி அச்சிட்டுள்ளது கூடுதல் விஷேசம்.
குழுப் போட்டிகளில் சர்தார் சிங் தலைமையிலான ஹாக்கி அணி தான் கைகொடுக்க வேண்டும். கடந்த முறை வெள்ளி வென்ற இந்திய அணியினர் இம்முறை ஆஸ்திரேலியாவின் கடும் சவாலை சமாளித்தால், தங்கம் வெல்லலாம்.
தடகளத்தில் விகாஸ் கவுடா(வட்டு எறிதல்), டின்டு லுாக்கா, பூவம்மா, அஷ்வினி அடங்கிய பெண்கள் (4*400 தொடர் ஓட்டம்) அணியினர் பதக்கம் வெல்ல வாய்ப்பு உண்டு.
சர்வதேச அளவில், ஜமைக்காவின் ‘மின்னல் வேக’ வீரரான உசைன் போல்ட், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மட்டும் கலந்து கொள்கிறார். இதே போல ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி–ஆன்–பிரேசர் பிரைசும் 4*100 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். இவர்களை தவிர, பல தடகள நட்சத்திரங்களும் தடம் பதிக்க காத்திருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படலாம்.
கோலாகல துவக்கவிழா
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி காமன்வெல்த். இதை இரண்டாம் ராணி எலிசபெத், இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.
மொத்தம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்று அசத்த உள்ளனர். மூன்று மணி நேரம் நடக்கும் துவக்க விழாவில், கிராம்மி விருது வென்ற பிரபல பாடகர் ராடு ஸ்டீவர்ட், ஸ்காட்லாந்து பாடகி சூசன் பாய்ல் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
காமன்வெல்த் ஜோதி
கிளாஸ்கோ காமன்வெல்த் ஜோதி ஓட்டம் கடந்த 2013, அக்., 9ல் பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியது. பின், 14ம் தேதி இந்தியா வந்த இந்த ஜோதி, ஆக்ரா வழியாக டில்லி இந்தியா கேட் பகுதிக்கு வந்தது.
இந்தியா இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் பங்கேற்கும் 71 நாடுகளில் 1 லட்சத்து, 90 ஆயிரம் கி.மீ., துாரம், இந்த ஜோதி பயணித்து, 288 நாட்களுக்குப் பின், துவக்கவிழா நடக்கும் கிளாஸ்கோ மைதானத்துக்கு இன்று வருகிறது.
கிளாஸ்கோவை சேர்ந்த வில்லியம் மிட்சல் என்பவரது தலைமையிலான குழு இந்த ஜோதியை வடிவமைத்தது. 2 கி.கி., எடைக்கு குறைவான இது, டைட்டானியம், கிரானைட் மற்றும் மரத்தினால் ஆனது.
ஒளி ஊடுருவிச் செல்லும் சிலிண்டர் வடிவ மேற்பகுதியின் மையத்தில் ராணி சார்பில் வழங்கப்பட்ட செய்தி அச்சிடப்பட்டுள்ளது. இதிலுள்ள எல்.இ.டி., விளக்குகள் ஒ ளிரும் போது தான் இந்த செய்தியை படிக்க முடியும். தவிர, துவக்க விழா நடக்கும் அந்த நிமிடம் வரை இதில் என்ன செய்தி உள்ளது என்பதை படிக்க முடியாதபடி அச்சிட்டுள்ளது கூடுதல் விஷேசம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சின்னம்
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக கார்ட்டூன் வடிவ மனிதன் ‘கிளைடு’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை தேர்வு செய்ய போட்டி நடந்தது. இதில், 12 வயது சிறுவன் பேத் கில்மர் வடிவமைத்த ‘கிளைடு’ தேர்வானது.
லோகோ
20வது காமன்வெல்த் போட்டியின் லோகாவின் நேரம், அளவீடு மற்றும் டேட்டாவை என, மூன்று முக்கிய குறிப்புகளை உள்ளடக்கி உள்ளது.
இதன் வெளிப்புற வட்டம் (சிவப்பு) 20வது காமன்வெல்த் போட்டியை குறிக்கும். ஆரஞ்சு நிறத்தினாலான முழுமை பெறாத அடுத்த வட்டம் 17 போட்டிகள் நடப்பதையும், நீல நிறத்தில் உள்ள மற்றொரு அரை வளையம், 11 நாட்கள் போட்டி நடப்பதையும் குறிக்கிறது.
நடுவில் ‘ஜி’ வடிவம், போட்டி நடக்கும் கிளாஸ்கோவின் துவக்க எழுத்தை குறிக்கும் வகையில் உள்ளது. இந்த நகரத்தை ‘ டியர் கிரீன் பிளேஸ்’ என்றழைப்பர். அதாவது பசுமை நிறைந்த நகரம் என்பதால், இந்த ‘ஜி’ என்ற எழுத்து பச்சை நிறத்தில் இருக்கும்.
பதக்க விவரம்
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் தலா 100 கிராம் எடை கொண்டது.
இவற்கை ஜோனாதன் மாத்யூ போய்டு, 29, தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தயாரித்தது.
20வது காமன்வெல்த் போட்டியில், 261 பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மொத்தம் 1,380 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக கார்ட்டூன் வடிவ மனிதன் ‘கிளைடு’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை தேர்வு செய்ய போட்டி நடந்தது. இதில், 12 வயது சிறுவன் பேத் கில்மர் வடிவமைத்த ‘கிளைடு’ தேர்வானது.
லோகோ
20வது காமன்வெல்த் போட்டியின் லோகாவின் நேரம், அளவீடு மற்றும் டேட்டாவை என, மூன்று முக்கிய குறிப்புகளை உள்ளடக்கி உள்ளது.
இதன் வெளிப்புற வட்டம் (சிவப்பு) 20வது காமன்வெல்த் போட்டியை குறிக்கும். ஆரஞ்சு நிறத்தினாலான முழுமை பெறாத அடுத்த வட்டம் 17 போட்டிகள் நடப்பதையும், நீல நிறத்தில் உள்ள மற்றொரு அரை வளையம், 11 நாட்கள் போட்டி நடப்பதையும் குறிக்கிறது.
நடுவில் ‘ஜி’ வடிவம், போட்டி நடக்கும் கிளாஸ்கோவின் துவக்க எழுத்தை குறிக்கும் வகையில் உள்ளது. இந்த நகரத்தை ‘ டியர் கிரீன் பிளேஸ்’ என்றழைப்பர். அதாவது பசுமை நிறைந்த நகரம் என்பதால், இந்த ‘ஜி’ என்ற எழுத்து பச்சை நிறத்தில் இருக்கும்.
பதக்க விவரம்
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் தலா 100 கிராம் எடை கொண்டது.
இவற்கை ஜோனாதன் மாத்யூ போய்டு, 29, தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தயாரித்தது.
20வது காமன்வெல்த் போட்டியில், 261 பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மொத்தம் 1,380 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிளாஸ்கோ போவோமா
ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரம்தான் கிளாஸ்கோ. இங்கு அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். கட்டுமானத்துறை, கப்பல்கட்டும்துறைகள் கொடிகட்டிப்பறக்கின்றன. பிரிட்டனின் ஐந்தாவது மிகப்பெரிய விமானநிலையம் இங்குதான் உள்ளது. கிளாஸ்கோவில் அதிக வெப்பம், அதிக பனி என கலந்தே காணப்படுகிறது. சில நேரத்தில் பிரிட்டனுடன் ஒப்பிடும்போது, இங்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். ஜூலை மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் துவங்கும். இன்று துவங்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முக்கியமான இடங்கள்:
ஹன்டேரியன் அருங்காட்சியகம்:
இது 1807ல் துவங்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம். 16,17ம் நுாற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், இங்குள்ள பல்கலைகழக மாணவர்கள் வரைந்தவை உள்ளிட்ட பல வகையானவை இங்கு இடம்பெற்றுள்ளன. கிளாஸ்கோவில் உள்ள முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.
மிட்சல் நுாலகம்:
கிளாஸ்கோவில் உள்ள இந்த நுாலகம் 1877ல் துவங்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிகப்பெரிய நுாலகம் இது. பல லட்ச கணக்கான புத்தகத்தை கொண்டுள்ளது.
லண்டன் டூ டில்லி
லண்டனில், 1934ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா அறிமுகமானது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.
* கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.
* கடந்த 2010ல் நடந்த தொடரில், இந்தியாவுக்கு 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 101 பதக்கங்கள் கிடைத்தது. இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில், முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன், 2002ல் 69 பதக்கங்களும், 2006ல் 49 பதக்கங்களும் கிடைத்தன.
* கடந்த 2010ல் 101 பதக்கங்கள் வென்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதல் மூலம் 30 பதக்கங்கள் (14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்தது. அதன்பின், மல்யுத்தம் (19), தடகளம் (12), வில்வித்தை (8), பளுதுாக்குதல் (8), குத்துச்சண்டை (7) போட்டிகளில் அதிக பதக்கங்கள் கிடைத்தன. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், அதிகபட்சமாக 4 தங்கம் வென்றார். மற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஓம்கார் சிங் (3 தங்கம், ஒரு வெள்ளி), விஜய் குமார் (3 தங்கம், ஒரு வெள்ளி) ஆகியோர் அதிக பதக்கம் வென்றனர்.
* இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 104 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதிக பதக்கம் வென்ற நாடுகள் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரம்தான் கிளாஸ்கோ. இங்கு அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். கட்டுமானத்துறை, கப்பல்கட்டும்துறைகள் கொடிகட்டிப்பறக்கின்றன. பிரிட்டனின் ஐந்தாவது மிகப்பெரிய விமானநிலையம் இங்குதான் உள்ளது. கிளாஸ்கோவில் அதிக வெப்பம், அதிக பனி என கலந்தே காணப்படுகிறது. சில நேரத்தில் பிரிட்டனுடன் ஒப்பிடும்போது, இங்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். ஜூலை மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் துவங்கும். இன்று துவங்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முக்கியமான இடங்கள்:
ஹன்டேரியன் அருங்காட்சியகம்:
இது 1807ல் துவங்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம். 16,17ம் நுாற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், இங்குள்ள பல்கலைகழக மாணவர்கள் வரைந்தவை உள்ளிட்ட பல வகையானவை இங்கு இடம்பெற்றுள்ளன. கிளாஸ்கோவில் உள்ள முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.
மிட்சல் நுாலகம்:
கிளாஸ்கோவில் உள்ள இந்த நுாலகம் 1877ல் துவங்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிகப்பெரிய நுாலகம் இது. பல லட்ச கணக்கான புத்தகத்தை கொண்டுள்ளது.
லண்டன் டூ டில்லி
லண்டனில், 1934ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா அறிமுகமானது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.
* கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.
* கடந்த 2010ல் நடந்த தொடரில், இந்தியாவுக்கு 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 101 பதக்கங்கள் கிடைத்தது. இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில், முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன், 2002ல் 69 பதக்கங்களும், 2006ல் 49 பதக்கங்களும் கிடைத்தன.
* கடந்த 2010ல் 101 பதக்கங்கள் வென்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதல் மூலம் 30 பதக்கங்கள் (14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்தது. அதன்பின், மல்யுத்தம் (19), தடகளம் (12), வில்வித்தை (8), பளுதுாக்குதல் (8), குத்துச்சண்டை (7) போட்டிகளில் அதிக பதக்கங்கள் கிடைத்தன. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், அதிகபட்சமாக 4 தங்கம் வென்றார். மற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஓம்கார் சிங் (3 தங்கம், ஒரு வெள்ளி), விஜய் குமார் (3 தங்கம், ஒரு வெள்ளி) ஆகியோர் அதிக பதக்கம் வென்றனர்.
* இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 104 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதிக பதக்கம் வென்ற நாடுகள் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துளிகள்...
* 1958 ம் ஆண்டு வேல்சில் உள்ள கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தான், முதன் முதலாக காமன்வெல்த் ஜோதி அறிமுகப்படுத்தப் பட்டது.
* 1958 ம் ஆண்டு காமன்வெல்த்தில், ஆஸ்திரேலியாவின் ஜான் கொன்ராட்ஸ், 440 யார்டு "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில், தங்கம் வென்றார். அதே ஆண்டு இவரது சகோதரியான இஸ்லா கொன்ராட்சும் இதே பிரிவில் தங்கம் வென்றார். அண்ணன், தங்கை இணைந்து ஒரே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சம்பவம், இதுவரை ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது.
* கடந்த 1950 ம் ஆண்டு முதல் 1970 வரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில், வாள் சண்டையும் இடம் பெற்றிருந்தது. இக்கால கட்டத்தில் இங்கிலாந்தின் ஹென்றி வில்லியம் 9 தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
* காமன்வெல்த் நீச்சலில், 500 பதக்கங்களுக்கு மேல் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியா. இதுவரை 237 தங்கம், 170 வெள்ளி, 150 வெண்கலம் உட்பட மொத்தம் 557 பதக்கங்களை வென்றுள்ளது.
* 1982 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் 200 மீ., ஓட்டத்தில் அம்பயரின் தீர்ப்பால் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இங்கிலாந்தின் மைக் மெக்பெர்லேன், ஸ்காட்லாந்தின் ஆலன் வெல்ஸ் இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
* நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 1990 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், வங்கதேசம் முதல் தங்கம் வென்றது. இந்த அணியின் துப்பாக்கி சுடும் வீரர்களான , அடீர் அர் ரஹ்மான், அப்டஸ் சட்டா ஜோடி ஏர் பிஸ்டல் பிரிவில் சாதித்தனர்.
* மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 16 வது காமன்வெல்த் போட்டியில் முதன் முதலாக கிரிக்கெட், ஹாக்கி, நெட் பால், ரக்பி உள்ளிட்ட அணி விளையாட்டுகள் இடம் பிடித்தன.
* 1958 ம் ஆண்டு வேல்சில் உள்ள கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தான், முதன் முதலாக காமன்வெல்த் ஜோதி அறிமுகப்படுத்தப் பட்டது.
* 1958 ம் ஆண்டு காமன்வெல்த்தில், ஆஸ்திரேலியாவின் ஜான் கொன்ராட்ஸ், 440 யார்டு "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில், தங்கம் வென்றார். அதே ஆண்டு இவரது சகோதரியான இஸ்லா கொன்ராட்சும் இதே பிரிவில் தங்கம் வென்றார். அண்ணன், தங்கை இணைந்து ஒரே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சம்பவம், இதுவரை ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது.
* கடந்த 1950 ம் ஆண்டு முதல் 1970 வரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில், வாள் சண்டையும் இடம் பெற்றிருந்தது. இக்கால கட்டத்தில் இங்கிலாந்தின் ஹென்றி வில்லியம் 9 தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
* காமன்வெல்த் நீச்சலில், 500 பதக்கங்களுக்கு மேல் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியா. இதுவரை 237 தங்கம், 170 வெள்ளி, 150 வெண்கலம் உட்பட மொத்தம் 557 பதக்கங்களை வென்றுள்ளது.
* 1982 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் 200 மீ., ஓட்டத்தில் அம்பயரின் தீர்ப்பால் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இங்கிலாந்தின் மைக் மெக்பெர்லேன், ஸ்காட்லாந்தின் ஆலன் வெல்ஸ் இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
* நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 1990 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், வங்கதேசம் முதல் தங்கம் வென்றது. இந்த அணியின் துப்பாக்கி சுடும் வீரர்களான , அடீர் அர் ரஹ்மான், அப்டஸ் சட்டா ஜோடி ஏர் பிஸ்டல் பிரிவில் சாதித்தனர்.
* மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 16 வது காமன்வெல்த் போட்டியில் முதன் முதலாக கிரிக்கெட், ஹாக்கி, நெட் பால், ரக்பி உள்ளிட்ட அணி விளையாட்டுகள் இடம் பிடித்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|