ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

+3
jesifer
Dr.S.Soundarapandian
ayyasamy ram
7 posters

Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Tue 22 Jul 2014 - 18:09


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு FtonyWyzRqkeJj74AagJ+1
-
வலைக்கு வழி!

-
சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில்
சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.
சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக
இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக்
கொசு வலை கொடுத்திருந்தார்கள்.
-
அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால்,
வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை
என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
-
"வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு
என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக
ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார்.
-
அதற்கு சிறை அதிகாரி, ""ஆர்டர் கொடுத்துள்ளோம்.
இன்னும் கொசு வலை வந்தபாடில்லை..!'' என்றார்.
-
படேல் மிகவும் துணிவுடன், ""சிறைக்கு நானாக
வரவில்லை என்று உனது மேலதிகாரியிடம் கூறு.
சிறைக்கதவை திறந்து விடுங்கள். வலை வந்ததும்
தகவல் தரவும். மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறேன்...''
என்றார்.
-
சில மணி நேரங்களில் சிறைக்கு புதிய கொசு
வலை வந்து சேர்ந்தது.
-
-------------------------------
-கலவை பா.வரதன். (தினமணி)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Tue 22 Jul 2014 - 18:21


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு ZvgHEsHXTlK0bmvn5Rem+2
-
உழைப்பு... உழைப்பு...

-

ஒரு சமயம் வானொலி நிலையப் பேட்டியில்
பெரியாரிடம், ""ஐயா, நீங்கள் அந்தக் காலத்திலேயே
பெரிய தியாகம் செய்திருக்கிறீர்களே?'' என்று
பேட்டியாளர் கேட்டார்.
-
"நான் பெரிசா ஒண்ணும் செய்யலீங்க...'' என்று
அடக்கத்துடன் பதில் கூறினார் பெரியார்.
-
அடுத்ததாக, ""இந்தத் தள்ளாத வயதிலும்கூட நீங்கள்
ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று
அந்தப் பேட்டியாளர் கேட்டார்.
-
அதற்கு பெரியார், ""மூன்று வேளை சாப்பிடுகிறேன்.
என்னுடைய துணிமணிகளுக்கு நான் செலவு செய்ய
வேண்டியிருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது
செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா?
தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக்
கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்குத்
தண்டமாக அல்லவா இருப்பேன்?
சமுதாயத்துக்கு இதைவிட வேறு தண்டனை
வேண்டுமா?'' என்று கேட்டார்.
-
--------------------------------------
-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by Dr.S.Soundarapandian Sun 3 Aug 2014 - 13:52

கலவை பா.வரதன் , கோட்டாறு ஆ.கோலப்பன், ayyasamy ram   ஆகியோர்க்கு நன்றி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by jesifer Mon 18 Aug 2014 - 20:35

2 பதிவும் அருமையானவை... ஆனால் பெரியார் பதிவு மிகவும் புடிச்சிருச்சி...

 வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு 3838410834 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by krishnaamma Mon 18 Aug 2014 - 20:58

சூப்பர் திரி துவங்கி இருக்கீங்க ராம் அண்ணா புன்னகை அருமையாக இருக்கு தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sat 1 Nov 2014 - 18:02

வேறு வழி தெரியவில்லை – திரு.வி.க
-
சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டக்
கூட்டம் இராயப்பேட்டையில் நடைபெற்றது.
அப்பொழுது திரு.வி.க. அவர்கள் மேடையில்
அமர்ந்திருந்த மறைமலை அடிகளின் காலில்
வீழ்ந்து வணங்கிவிட்டு பேசத்துவங்கினார்.
-
மறைமலை அடிகள் இந்நிகழ்வால் பெரிதும்
அதிர்ச்சியுற்றார். கூட்டம் முடிந்தவுடன் திரு.வி.க வும்
மறைமலை அடிகள் வீட்டிற்குச் சென்றார்.

அங்கே,”என்னடா கல்யாணசுந்தரம், நீ என்
காலில் விழுவதா?” என்று கேட்டார். அதற்கு
திரு.வி.க. அவர்கள் “”எல்லோரும் தமிழில்
நான்தான் பெரியவன் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். தாங்கள்தான் பெரியவர்
என்பதை எடுத்துச் சொல்ல எனக்கு இதைவிட
வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியதும்
மனம் நெகிழ்ந்து போனார் மறைமலை அடிகள்.
-
——————————————————
மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை
–சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by M.Saranya Sat 1 Nov 2014 - 18:21

அருமையான பதிவுகள்...
இதில் இன்னொரு நிகழ்வை கூற விரும்புகிறேன்...
ஜீவா (சுத்த தமிழன்) அவர்கள் மறைமலை அடிகள் வீட்டிற்கு சென்றபோது அடிகள் வீட்டிற்கு தபால் காரல் வந்துள்ளார்..
அடிகள் அவரது மனைவியிடம் போஸ்ட்மன் வந்துள்ளார் என்ன என்று பார் என்றுள்ளார்..ஜீவாவிற்கு அதிர்ச்சி ..தமிழ் தமிழ் என்பதெல்லாம் மேடையோடு சரி என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்லவே இல்லையாம்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Tue 4 Nov 2014 - 8:19

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு PSw94XqlSoqCRuy3xtwZ+florence_nightingal-lady-with-the-lampe
-
அன்பு!

"அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது' என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச் சிந்திக்க வைத்தது. அவளைத் திருமணம் முடிக்க உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு மணமகன் வந்தார்.

ஆனால், ""என் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது. அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்!'' என்று மறுத்துவிட்டாள்.

ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவள், அங்கு நோயாளிகளின் பரிதாப நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். "அன்பு செலுத்து' என்ற வாசகத்தின் அர்த்தம் உணர்ந்தாள். உடனே மறு யோசனையின்றி நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களின் காயங்களைத் துடைத்துச் சுத்தம் செய்தாள்.

இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் கடும்கோபம் கொண்டனர்.

""உனக்கும் அந்த நோய் தொற்றிவிடும். ஏன் இப்படி, நமது குடும்ப மானம் போகும்படி நடந்து கொள்கிறாய்? உனக்குத் திருமணம் ஏற்பாடாகி வருகிறது... திருமணம் செய்து கொள்'' என்று வற்புறுத்தினர்.

ஆனால், ""ஆதரவற்று நிற்கும் நோயாளிகளுக்கு அன்பு செலுத்தி அவர்கள் மனத்தில் இடம்பிடிக்கப் போகிறேன். என்னை விட்டுவிடுங்கள். அன்பு செலுத்தக் காலம் குறைவாகவே உள்ளது...'' என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

அவர்தான் "விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப்பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்!

-கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83933
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by raghavansriramya Tue 4 Nov 2014 - 11:17

அனைத்து தகவல்களுக்கும் நன்றி
raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by mbalasaravanan Tue 4 Nov 2014 - 13:41

விளக்கேந்திய சீமாட்டி' அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Empty Re: வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum