புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_lcapகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_voting_barகீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jul 21, 2014 10:34 pm

கீதை 13 : ஷேத்திர ஷேத்ரக்ஞ விபாக யோகம் 0702_arjunkrishna


கீதை 13 : 1 அர்ச்சுணன் கேட்கிறான் : கேசவா ! பிரகிருதி மற்றும் புருஷன் ; களம் மற்றும் துய்த்தறிகிறவன் மேலும் ஞானம் மற்றும் தெய்வீக அன்பில் திளைக்கிறவன் என்பவைகளைப்பற்றி ஆழமாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்

கீதை 13 : 2 கிரிஸ்னர் கூறினார் : களம் என்பது சரீரம் அதில் இயங்குகிற ஆத்மாவே துய்த்து அறிகிறவன் . ஞானம் என்பது முழுமையான தெளிவு . அதோடு ஒத்திசைந்து நாளுக்கு நாள் உள்விளையும் தெய்வீக அன்பை பெருக்குகிறவனே ஞேயன் – யோகி

கீதை 13 : 3 பாரத குலத்தோன்றலே ! சரீரத்தையும் அதிலிருந்து அறிந்துணர்கிறவனையும் ( ஜீவாத்மாவையும் ) உணர்ந்து கொள்வதே ஞானமடைதலாகும் . மேலும் எல்லா மனிதர்களின் சரீரங்களிலும் அறிந்துணர்கிறவனாக என்னை ( பரமாத்மாவாக ) உணர்ந்துகொள்வதே  மெய்ஞான விருத்தியாகும்  .

கீதை 13 : 4 சரீரத்தின் தன்மை என்ன ? அதிலிருந்து விகாரங்கள் எவ்வாறு உண்டாகிறது ? அதை உணர்ந்தறிகிறவன் யார் ? அவனுக்கு அதன் மீதுள்ள ஆளுமை என்ன ? என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேட்பாயாக !

கீதை 13 : 5 செயல்களின் களமான சரீரம் ; மற்றும் செயல்களை அறிந்துணர்கிறவனாகிய ஆத்மாவைப்பற்றிய அறிவு ; அறிவிற்சிறந்த முனிவர்களால் பற்பல வழிகளில் பல்வேறு மந்திரங்களில் உபதேசிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக வெளிப்படுத்தப்பட்ட இறை வேதங்களில் (ரிக் , யஜுர் , சாம , அதர்வண , தவ்ராத் , இன்ஜீல் மற்றும் குரான்) இவை நுணுக்கமாக காரணம் மற்றும் காரியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன .

கீதை 13 : 6 & 7 மகா (பஞ்ச) பூதங்கள் ; அவற்றின் சுயம் மற்றும் புலப்படாத குணங்களும் ;அவற்றால் உண்டான பஞ்சேந்திரியங்களும் (கண் ,காது , மூக்கு , நாக்கு & தோல்)அவற்றின் ஐந்து கோசாரங்களும் (குரல் , கால்கள் , கைகள் , ஆசனவாய் மற்றும் பாலுறுப்பு) அவற்றுடன் புலப்படாத மனமும் ஆக பதினொன்று இவைகளுடன் கூடியவை சரீரமாகும் ; இவற்றால் உண்டாகும் விருப்பு , வெறுப்பு , இன்பம் , துன்பம் ஆகிய பாதிப்புகள் மற்றும் அவை தொடர்பால் எழும்பும் சுயமுயற்சியும் சரீரத்தின் விகாரங்கள் எனப்படுகின்றன .

3 .ஞானம் மற்றும் நேயம்

கீதை 13 : 8 அடக்கம் , அத்துமீறாதிருத்தல் , சாத்வீகம் , சமாதானம் , எளிமை , குருவை அடுத்திருந்து கற்றுக்கொண்டே இருத்தல் , தூய்மை , தளராமை , ஆத்ம விழிப்பு

கீதை 13 : 9 ஐம்புலன்களையும் அடக்குதலில் தளராமை , சுயத்தை கடரும் மனநிலை இவைகளுடன் பிறப்பு , இறப்பு , முதுமை , நோய் , துன்பம் , களங்கம் ஆகியவைகளில் சாட்சியாக மட்டும் இருந்து கொண்டு

கீதை 13 : 1௦ பற்றுதலின்றி பட்டும்படாமல் குழந்தைகள் , மனைவி மற்றும் இதர பந்தங்களில் விடுபட்டு இருத்தல் ; விருப்பு வெறுப்புகளில் சமநிலை அடைதல் ;

கீதை 13 : 11 சதா ஆழ்ந்த யோகத்தில் நிலைக்க என்னை சரணடைந்த குருபக்தியும் ; தனித்தும் விழித்தும் ஜனத்திரளின் புகழில் பற்றின்றியும்

கீதை 13 : 12 ஆத்மாவில் விளையும் நித்தியானத்த போதத்தில் திளைத்தும் ; தத்துவ விசாரத்தில் தெளியும் தரிசனத்தை அடையும் இலக்கில் செயல்பாடும் ஆகிய இவையே ஞானமடைதல் என்கிறேன் ; இதிலிருந்து வேறுபட்டவை எல்லாம் மாயையே ஆகும் .

கீதை 13 : 13 மேலும் எதை அறிவதால் அமிர்தத்தை சுவைப்பாயோ அந்த தெய்வீக அன்பை (நேயம்) இப்போது விளக்குகிறேன் . அது பரப்பிரம்மம் – ஆதிமூலம் - கடவுள் . ஆரம்பம் இல்லாததும் எனக்கு கீழ்படாததும் இந்த ஜட இயற்கையின் (பிரக்ருதியின்) காரணம் (அடிப்படை- சத்) ; மற்றும் விளைவுகளுக்கும் (வெளிப்பாடுகள் – அசத்) அப்பாற்பட்டும் – பாதிப்பிலாமலும் இருக்கின்றது .

கீதை 13 : 14 எங்கும் அவரது கரங்களும் ; கால்களும் ; கண்களும் ; காதுகளும் ; முகங்களும் இருந்தாலும் இவ்வுலகத்தில் இல்லாதவரைப்போல திரையிட்டு எங்கும் விளங்குகின்றார் .

கீதை 13 : 15 சகல இந்திரியங்களின் குணாதிசயங்களுக்கும் மூலமாக அவரே இருந்தாலும் இந்திரியங்களிளிருந்து உருவாகும் விகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அனைத்தையும் அவரே பராமரிப்பவர் ஆனாலும் அவைகளால் பந்தப்படாதவர் . ஜட இயற்கையின் குணங்களுக்கும் அவரே எஜமானர் ஆனாலும் அவைகளால் பாதிப்படையாதவர் .

கீதை 13 : 16 படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளவர் . மேலும் அசைவன மற்றும் அசையாதனவற்றிலும் உள்ளவர் . புலன்களால் காணவோ அறியவோ முடியாத அருபமானவர் ஆனாலும் உணரக்கூடிய தெய்வீக அன்பால் நிறைந்தவர் . வெகுதூரத்தில் இருப்பவர் போல இருந்தாலும் நெருக்கமாகவே – உங்களுக்குள்ளேயே இருப்பவர் .

I யோவான் 4 :
தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் – வள்ளலார் . ஆன்மநேய ஒருமைப்பாடு நித்திய ஜீவர்களின் அடையாளமாகும் .ஒருவன் தன்னிலே வாசமாயிருந்து தன்னை அழிய விடாமல் காக்கும் உயிரின் அன்பை உணர்ந்து கொள்வானானால் ; அதே உயிர் வாசமாயிருக்கும் சகல உயிரினங்களின் மீதும் அபிமானம் பெருகுவதை தடுக்கவே முடியாது .

கீதை 13 : 17 படைப்பினங்கள் அனைத்திலும் பிரிந்து அவைகளுக்குள் நிலைபெற்று இருப்பதுபோல் இருந்தாலும் அவர் பிரிவின்றி எங்கும் நிலைத்திருப்பவர் . படைப்பினங்கள் அனைத்திலும் உயிராக இருந்து காப்பவர் என்றாலும் அவற்றை அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

கீதை 13 : 18 பிராகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றின் ஒளியாக இருந்தாலும் மாயையின் இருளால் உணரமுடியாதவராகவும் இருக்கிறார் . ஞானத்தாலும் ஞானத்தின் விருத்தியாலும் உணரப்படவேண்டிய தெய்வீக அன்பாக சகலரின் இதயத்திலும் அவர் வீற்றிருக்கிறார் .

கீதை 13 : 19 இவ்வாறாக பிரபஞ்சம் ; பரமாத்மா ; சேத்ரம் (சரீரம் – செயல்களின் களம்) சேத்ரக்ஞன் ; ஞானம் ; தெய்வீக அன்பு ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது . இவற்றை புரிந்து கொண்ட எனது சீடன் என்னைப்போலவே பாவனை அடைகிறான்

கீதை 13 : 2௦ பிரக்ருதியும் அதன் மையமான பரமபுருஷனும் நித்தியமானவை என்பதை அறிந்துகொள் . ஜட இயற்கையின் முக்குணங்களும் அவற்றிலிருந்து எழும்பும் விகாரங்களும் பிரக்ருதியால் உற்பத்தி செய்யப்படுபவை – அநித்தியமானவை என்பதையும் அறிந்துகொள் .
கீதை 13 : 21 படைப்புகளின் விசயத்தில் எல்லா செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் பிரக்ருதியே காரணமாகும் . அதுபோல அதனால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்து உணர்வது புருஷனே – ஆத்மாவே ஆகும் .

கீதை 13 : 22 ஆத்மா சரீரத்தின் ஜட இயற்கையில் நிலைபெற்று ஜட இயற்கையின் முக்குணங்களையும் அவற்றின் சங்கமத்தால் எழும்பும் பல்வேறு விகாரங்களையும் அனுபவித்து நன்மை தீமைகளை செய்கிறது . அதற்கேற்ற கர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் ஜனித்து வாழ்வை தொடர்கிறது .
கீதை 13 : 23 இருப்பினும் அந்த சரீரத்தில் பரமாத்மாவோடு தெய்வீகமான மற்றொருவரும் இருக்கிறார் . அவரே பரம உரிமையாளர் ; தலைவர் ; மேற்பார்வை செய்பவர் ; அனுமதிக்கிறவர் ; முற்றுயிராய் பரத்தில் நிறைந்த இறைவன் அவரே .

கீதை 13 : 24 (பிண்டத்தில்) உயிர் ; ஆத்மா ; சரீரம் (அதுபோல அண்டத்தில் கடவுள் ; பரமாத்மா ; பிரக்ருதி ) இவற்றோடு ஜட இயற்கையின் முக்குணங்களின் வர்த்தமானங்களால் உருவாகும் செயல்பாடுகள் மற்றும் இவைகளுக்கிடையான உறவுகளை செம்மையாக புரிந்துகொள்பவன் யாரோ அவன் நித்திய ஜீவனை – மரணமில்லா பெரு வாழ்வை நிச்சயம் அடைவான் .

கீதை 13 : 25 தியானத்தினால் தன்னை ஆத்மாவாக (ஜீவாத்மாவாவாக) உணர்ந்து அந்த ஆத்மாவின் மூலமாக பரமாத்மாவை கண்டுணரலாம் . மேலும் தத்வ விசாரத்தாலும் யோக அப்பியாசத்தாலும் கர்ம யோகத்தாலும் பரமாத்மாவை உணரலாம் .

கீதை 13 : 26 வேறு சிலர் ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த பயிற்சி இல்லாத போதிலும் ; அத்தகையோரின் (உபகுருக்கள்) உபதேசங்களை கேட்டதில் ஆர்வமுற்று பின்பற்றுவதால் மரணத்தின் வழியை கடக்கும் - நித்தியஜீவனுக்கான பாதையில் பயணிக்க தொடங்குகின்றனர் .

கீதை 13 : 27 பரதவர்களின் தலைவனே ! ஏதேனும் அசைவற்று இருக்கின்றதோ அல்லது எதுவெல்லாம் அசைவுற்று மாறிக்கொண்டே இருக்கின்றதோ அவையெல்லாம் ஷேத்ரம் (சரீரம்) மற்றும் ஷேத்ரக்ஞன் (ஆத்மா) இவைகளுக்கிடையிலான இயக்கங்களால் வெளிப்படுபவை என்பதை அறிந்து கொள்வாயாக .

கீதை 13 : 28 எல்லா உயிரினங்களிலும் ஆதி மூலமான கடவுள் (உயிராக) வசிப்பதை எவனொருவன் காண்கிறானோ அழிவுறும் சரீரத்தில் அழிவற்ற உயிரும் பரமாத்மாவும் வசிப்பதை யாரொருவன் காண்கிறானோ அவனே உண்மையை உணர்கிறவன் .

கீதை 13 : 29 எல்லா உயிரினங்களிலும் சமமாக வசிக்கும் (உயிராகிய) கடவுளையும் ; பரமாத்மாவே சமமாக எங்கும் ஜீவாத்மாவாக வசிப்பதையும் உணர்கிறவன் எதையும் இழிவுபடுத்துவதில்லை .இதனால் அவன் தெய்வீகத்தன்மையை அடைகிறான் .

I யோவான் 4 :
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனிடத்து அன்பு கூராதவன் ஒரு  பொய்யன்; தான் கண்ணில் கண்ட மனிதனிடத்தில் அன்புகூராதவன், தான் கண்ணில் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

கீதை 13 : 30 எவனொருவன் ஜட இயற்கையே (சரீரமே) சகல செயல்களையும் ஊக்கப்படுத்தி செய்விக்கிறது ; ஆத்மா அத்தேவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற பக்குவத்தை அடைகிறானோ அவனே எல்லா விதங்களிலும் உண்மையை உணர்கிறவன் .

கீதை 13 : 31 (அழிவுறும்)சரீரங்களின் தனிப்பட்ட அடையாளங்களை காண்பதை நிறுத்தி எல்லாவற்றிலும் பரந்துவிரிந்துள்ள (அழிவற்ற)பிரம்மத்தை –(உயிராகிய கடவுளையும் ; பரமாத்வாவாகிய நாராயணனையும்) உணர்கிறவனே அநுபூதி அடைகிறவன் .

கீதை 13 : 32 அழிவற்ற ஆத்மாவின் நித்தியத்தன்மையை உணர்ந்தவன் ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகமான பரமாத்மாவை தன்னில் காண்கிறான் . அவன் சரீரத்தில் வீற்றிருந்தாலும் அதன் செயல்களால் பந்தப்படாத பக்குவத்தை அடைகிறான் .

கீதை 13 : 33 நுண்ணிய இயற்கையினால் உயிர் எங்கும் பரவி எதிலும் வீற்றிருந்தாலும் அவைகளால் களங்கப்படாமல் இருக்கிறதோ அப்படியே உயிரில் நிலைபெற்ற ஆத்மாவினால் உடலால் களங்கப்படாத தன்மையை அடையமுடியும் .

கீதை 13 : 34 அப்படிப்பட்ட ஆத்மா (உயிராகிய கடவுளில் நிலைபெற்ற ஆத்மா) ஒரே ஒரு சூரியன் இந்த உலகம் முழுவதையும் பிரகாசமாக்குவது போல முழு உடலையும் பிரகாசமாக்கும் .

கீதை 13 : 35 இவ்வாறு உடலுக்கும் (ஷேத்ரம்) உடலின் உரிமையாளனுக்கும் (ஷேத்ரக்ஞன்- ஜீவாத்மா) உள்ள வேறுபாட்டை ஞானத்தால் உணர்ந்து யாரெல்லாம் கடவுளில் நிலைக்கின்றார்களோ அவர்கள் ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து விடுபடுவார்கள் – அதாவது முக்தி அடைவார்கள் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எது முக்தி ? ஆன்மீக வட்டாரங்களில் முக்தி என்ற பதத்தை இறைவனோடு கலந்து இல்லாமல் போதல் – அதாவது சூன்யவாதம் போல பிரயோகப்படுத்துகிறார்கள் . ஆனால் பரமாத்மா இங்கே தெளிவுரை வழங்கி இருக்கிறார் . முக்தி என்பது இல்லாமல் போவதல்ல ; அழிவற்ற ஜீவாத்மா ; தான் உலகியலில் வாழ்ந்ததால் தொடர்பு கொண்டிருந்த ஜட இயற்கையின் முக்குனங்களிளிருந்து தன்னை விடுவித்து ; பந்தப்படாத தன்மையை அடைதலே முக்தி . அதாவது சகலமும் பரமாத்மாவின் விரிவாக இருந்தாலும் அவைகளால் பாதிப்பில்லாத இயல்பில் பரமாத்மா எவ்வாறு உள்ளாரோ அவரைப்போலவே ஜீவாத்மாவும் எவைகளாலும் பாதிப்பிலாத சுதந்திர நிலையை அடையும் .

வீடுபேறு – முக்தி – விடுதலை அடைதல் – இவையெல்லாம் ஆத்மா அடைகிற பரிபூரணத்துவத்தை குறிப்பதாகும் . இதற்கு ஜீவாத்மா உடலுடன் உறவுள்ள ஆத்மா என்ற நிலையிலிருந்து உயிருடன் உறவுள்ள ஆத்மாவாக பயிற்சித்தல் என்பதே வழி . ஏனென்றால் ஆத்மா என்பது பந்தப்படும் இயல்புள்ளது . ஆனால் உயிரோ எதனாலும் பந்தப்படாமல் எப்போதும் தூய்மையாகவே இருப்பது .
சகலவற்றிற்கும் சாட்சியாக தனது அன்பால் உயிரினத்தை வாழவைத்துக்கொண்டிருப்பது . தெய்வீக அன்பால் அது ஒரு உடலில் தங்கிக்கொண்டிருக்கும் வரை அந்த உடல் மரிக்காமல் இயங்கிக்கொண்டு விணை ஆற்றிக்கொண்டிருக்கும் . அது அன்பு மற்றும் சாட்சி நிலை மட்டுமே . அந்த உயிரினம் செய்யும் நன்மை தீமை எதனாலும் அது பந்தப்படுவதில்லை . இதுதான் விடுதலையின் ரகசியம் , இவ்வாறுதான் பரமாத்மாவும் எதனாலும் பந்தப்படாதவராக உள்ளார் . அதற்கு அவரும் கடவுளில் நிலைத்துள்ளார் . அதுவே ஜீவாத்மா கற்றுக்கொள்ளவேண்டியது ,அல்லது அநுபூதி .

வேதங்களின் சாரம் என்ன யுகபுருஷன் இயேசுவிடம் கேட்கப்பட்டது :

மத்தேயு 22:37. இயேசு அவனை நோக்கி: கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

38. இது முதலாம் பிரதான கட்டளை .

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கட்டளைளிலும் வேதங்கள் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக