புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
40 Posts - 63%
heezulia
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
2 Posts - 3%
viyasan
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
232 Posts - 42%
heezulia
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
21 Posts - 4%
prajai
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
7 Posts - 1%
mruthun
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_m10'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜெயலலிதா எனக்கு அக்கா!''


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 4:06 am

'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' P5
கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!
 
ஜெயராமன் - சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில் தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத் தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். அங்கு சென்றதும் முதலில் நம்மை சாப்பிடச் சொன்னார். நாம் மறுத்தோம். ''எங்க அக்கா ஊருக்கே உணவகம் திறந்து உணவளிக்கிறார். நீங்கள் சாப்பிட்டால்தான் பேட்டி கொடுப்பேன்'' என்றபடி ஒரு மசால் தோசை ஆர்டர் செய்தார். தனது மகள் அமிர்தாவை அருகில் வைத்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். அதில் இருந்து...

''உண்மையில் நீங்கள் யார்... உங்களின் பின்புலம் என்ன?''

''என் பேரு சைலஜா. தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் தங்கை நான். எங்க அப்பா பேரு ஜெயராமன். அம்மா பேரு வேதம்மாள் என்கிற சந்தியா. இவர்களுக்குப் பிறந்தவர்கள் அண்ணன் ஜெயக்குமார், அடுத்து அக்கா ஜெயலலிதா. கடைசியாக பிறந்தவள்தான் நான். எங்களுக்கெல்லாம் மூத்தவர் அப்பாவின் முதல் தாரத்துப் பையன் வாசுதேவன். அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார்.
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' P4நான் எங்க அம்மா வயிற்றில் மூன்று மாத கருவாக இருக்கும்போது, அப்பா ஜெயராமன் இறந்துவிட்டார். நான் பிறந்து மூன்று மாதத்திலேயே என் அம்மா அன்றைய சினிமா துறையில் புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் பி.தாமோதரப் பிள்ளையிடம் என்னை வளர்க்கக் கொடுத்துவிட்டார். 'மலைக்கள்ளன்’, 'மரகதம்’, 'பெட்டத கண்ணா’ என பல கன்னட, தமிழ் சினிமாக்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர்தான் பி.தாமோதரப்பிள்ளை. என்னை தாமோதரப் பிள்ளை செல்வச் செழிப்பாக வளர்த்தார். அப்பா தாமோதரப் பிள்ளை கோவையில் உள்ள பட்சிராஜா ஸ்டுடியோவில் வேலைபார்த்துக்கொண்டிருந்ததால் என் ஐந்து வயது வரை கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் ஏரியாவில் குடியிருந்தோம். அதன் பிறகு அப்பா தாமோதரப் பிள்ளையுடன் நாங்கள் பெங்களூரு வந்துவிட்டோம். இங்கே களாசிபாளையத்தில் குடியிருந்தோம். 

தமிழ் மீடியத்தில் படித்துக்கொண்டிருந்த என்னை, என் அம்மா சந்தியா பெங்களூரில் உள்ள மகிளா சிவ சமாஜ் என்ற ஆங்கில மீடியத்தில் சேர்த்துப் படிக்கவைக்க அழைத்துக்கொண்டு போனார். ஆனால், தாமோதரப் பிள்ளை அதனை ஏற்கவில்லை. 'உன் பிள்ளையை இங்கிலீஷ் மீடியத்திலேயே படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி வுமன் பிசி லீக் என்ற ஆங்கிலப் பள்ளியில் என்னைச் சேர்த்தார். டி.எஸ்.பட்டு என்பவரிடம் பரதநாட்டியம், குச்சிபிடி, கதகளி கிளாஸிகலும் பயில என் அம்மா சேர்த்துவிட்டார்.

வாரம் ரெண்டு, மூன்று முறை என்னை அம்மா வந்து பார்ப்பார். வெளியில் கூட்டிக்கொண்டு போய் சாக்லேட் வாங்கித் தருவார். பிறகு கிளம்பும்போது தங்க நகைகளும் அணியவைத்து மகிழ்வார். ஒருமுறை, 'உங்க அக்கா நடித்த படத்தைக் காட்டுகிறேன்’ என்று பெங்களூரு ஜே.சி ரோட்டில் உள்ள சிவாஜி தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போனார். அந்த தியேட்டரில், எம்.ஜி.ஆர் அங்கிள்கூட அக்கா நடித்த 'காவல்காரன்’ படம் ஓடியது. இடைவேளை நேரத்தில் என் வளர்ப்பு தந்தை தாமோதரப் பிள்ளை வந்து என்னை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். இதெல்லாம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது.''

''நீங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கைதான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்​கிறது?''

''எங்க அம்மா சந்தியா என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல ஒரு போட்டோவை ரொம்ப நாளாக வைத்திருந்தேன். அது எப்படியோ தொலைந்துவிட்டது. ஜெயலலிதாதான் என் அக்கா என்று நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இப்போது கிடையாது. ஆனால், நான் இருக்கிறேன். என்னை டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தால், உண்மைகள் தெரியும். எனக்கு 16 வயது இருக்கும்போது என் வளர்ப்புத் தந்தை தாமோதரப் பிள்ளை, அப்போதைய கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அங்கிளிடம் அழைத்துக்கொண்டு போனார். என்னைப் பார்த்ததும் ராஜ்குமார் அங்கிள் என் அப்பாவிடம், 'இது சந்தியா பொண்ணா?’ என்று கேட்டார். அதற்கு அப்பா 'ஆமாம்’ என்று சொன்னது இப்பவும் ஞாபகத்தில் இருக்கிறது.''

''உங்களைப் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? அவரைச் சந்தித்து இருக்​கிறீர்களா?''

''அக்காவுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அக்காவைப் பார்க்க பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். சந்திக்க முடியவில்லை. அவர் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். நான் சாதாரணமாக இருக்கிறேன். ஆட்டோவில் போய், 'முதல்வர்தான் என் அக்கா’ என்று சொன்னால் யார் நம்புவார்கள்? ஆனால், என் மகள் அமிர்தா, முதல்வரைப் பார்த்திருக்கிறார். ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

நான் 6-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, அம்மா என்னை மைசூரில் உள்ள ஒரு ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கே அக்கா பேட்மிண்டன் ஆடிட்டு இருந்தார்.. அக்காவுக்குத் தெரியாமல் அம்மா என்னிடம் அக்காவைக் காட்டி, 'இதுதான் உங்க அக்கா’ என்று சொன்னார்.
அம்மா உயிரோடு இருக்கும்வரை சென்னைக்குச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் சந்திப்போம். என்னை அண்ணன் ஜெயக்குமார் வீட்டுக்கும் அழைத்துப் போயிருக்கிறார். அண்ணன் ஜெயக்குமார், 'இனி இவளை இங்கு கூட்டிட்டு வந்தால், நடப்பதே வேறு’ என்று திட்டுவார்.

ஆனால், அக்கா சினிமா துறையில் பிஸியாக இருந்ததால், அவரைச் சந்திக்க முடியவில்லை. அண்ணன் ஜெயக்குமாரையும் அண்ணி விஜயலட்சுமியையும் பலமுறை சந்திக்கச் சென்றிருக்கிறேன். ஆனால், அண்ணன் என்னைத் திட்டி அனுப்புவார். நான் அழுதுகொண்டே வந்துவிடுவேன். என் அண்ணன் ஜெயக்குமார் இறந்ததுகூட எனக்குத் தெரியாது. அவர் இறப்புக்குப் பிறகு சென்றபோது, அண்ணன் மகள் தீபா, 'எங்க அப்பா செத்ததுக்கே வரலை. அப்புறம் என்ன உங்ககூட உறவு வைத்துக்கொள்ள இருக்கு?’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். தீபா வெளியில் சென்ற பிறகு, அண்ணியைச் சந்தித்துப் பேசிவிட்டுதான் வந்தேன்.''

''இதுநாள் வரை ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தீர்கள்?''

''அதைச் சொல்வதற்கு சந்தர்ப்பம் வரவில்லை. இப்போதுகூட நானாக வெளியுலகத்துக்கு இந்தத் தகவல்களை சொல்லவில்லை. திடீரென கன்னட சேனல்கள் சிலவற்றில் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு இந்த உண்மைகள் எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. என்னிடம் இதுபற்றி துருவித் துருவி கேட்டார்கள். நான் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன். ஒருபோதும் அக்காவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கனவில்கூட நான் நினைத்தது இல்லை. அக்கா என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நான்தான் அவரது தங்கை என்பது நிச்சயம் உண்மை.''

''முதல்வரிடம் எதிர்பார்ப்பது என்ன?''



''நான் மிகுந்த வறுமையில் இருந்தபோதுகூட, அக்காவிடம் உதவிக்காகச் சென்றது இல்லை. இப்போது கடவுளின் அருளால் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன். அதனால், அவரின் சொத்துகளுக்கோ, அதிகாரத்துக்கோ ஆசைப்பட்டது இல்லை. அக்காகிட்ட நான் கேட்கிறதெல்லாம் ஒன்று மட்டுதான். எனக்கும் என் ஒரே மகள் மஞ்சு என்கிற அமிர்தாவுக்கும் அக்காவின் அன்பு கிடைத்தால் போதும்!'' என்று உருகுகிறார் சைலஜா.

- வீ.கே.ரமேஷ்
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' P6
 
 
 
'ஜெயலலிதா எனக்கு அக்கா!'' P6aசைலஜா சொன்ன வாசுதேவனைச் சந்திக்க நாமும் புறப்பட்டோம். அவர் மைசூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தில் தனிமையில் வசித்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ''4.4.2001 ஜூனியர் விகடன் இதழில் 'சிஸ்டர் பார்வை இந்த அண்ணன் மீது படுமா?’ என்ற தலைப்பில் என்னுடைய பேட்டி வந்திருக்கிறது'' என்று அந்த இதழை எடுத்து ஞாபகப்படுத்தியபடி நம்மிடம் பேசினார்.

''என் அப்பா ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மா. அவரது மகன்தான் நான். என் அப்பாவின் இரண்டாவது மனைவி சந்தியா. அவருக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இரண்டு பிள்ளைகள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், கடந்த வாரம் கன்னட டி.வி-களில் எனக்கு இன்னொரு தங்கை சைலஜா இருப்பதாக ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தார்கள். அதை முதலில் நானும் நம்பாமல் சைலஜாவைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வந்தார். எல்லா உண்மைகளையும் சொன்னார். அவர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயம் அவரும் என் தங்கைதான் என்பதை உணர்ந்துகொண்டேன். யாருக்கும் தெரியாத எங்கள் குடும்ப வரலாறுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

சைலஜாவும் நிச்சயம் என் தங்கைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என் தங்கை ஜெயலலிதா எங்களைச் சந்தித்தால் எல்லா உண்மைகளும் தெரியவரும். என் தங்கைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைக்கக் காரணம், எங்களுக்கு மைசூரில் ஜெயா விலாஸ், லலித விலாஸ் என்ற பெயரில் வீடுகள் இருந்தன. அதன் பெயரைத்தான் என் தங்கைக்கு அப்பா ஜெயலலிதா என்று சூட்டினார். நான் இப்போது மகனை, மனைவியை இழந்து தனிமையில் தவிக்கிறேன். எல்லோருக்கும் என் தங்கை நன்மைகளை செய்கிறார் என்பதை கேள்விப்படும்போது, மிகவும் பெருமையாக இருக்கும்.

எனக்கும் வயதாகிவிட்டது. நான் சாவதற்குள் என் தங்கையைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

என்னுடைய நிலையில்தான் என் இன்​னொரு தங்கை சைலஜாவும் இருக்கிறார். எங்கள் இருவரையும் தாயுள்ளத்தோடு ஜெயலலிதா சந்திக்க முன்வர வேண்டும். அன்பு என்ற ஒரு விஷயத்துக்காகத்தான் நானும் சைலஜாவும் ஏங்குகிறோம். என் தங்கை ஜெயலலிதாவின் அன்பு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்!'' என்று கலங்கினார்.

ஜூனியர் விகடன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 21, 2014 12:41 pm

எனக்கு, அவுங்க அக்கா இல்லீங்கோ அதுக்கு மேல, அது அப்போ. இப்போ என்னான்கு கூப்பிடரதுன்னு தான் தெரியல.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 21, 2014 1:47 pm

ஒண்ணுமே புரியல உலகத்துல...!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக