Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
+2
அருண்பிரகாஷ்
விமந்தனி
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
இந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா?
என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?
காதல் வயப்பட்டதன் விளைவோ?
ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?
காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.
பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!
என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.
ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....
“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?
நிஜம் தான் –
பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.
என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?
காதல் வயப்பட்டதன் விளைவோ?
ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?
காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.
பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!
என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.
ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....
“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?
நிஜம் தான் –
பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.
கதை தொடரும்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
நல்ல இருக்கு தொடருங்கள்...
அருண்பிரகாஷ்- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
அருண்பிரகாஷ் wrote:நல்லா இருக்கு தொடருங்கள்...
அருண் பிரகாஷ்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
“அபி...?” அருகில் படுத்திருந்த கீர்த்தியின் குரல் கேட்டு மூடியிருந்த கண்களை திறந்தேன்.
“இன்னும் நீ தூங்கலை? என்ன யோசனை?”
“...................”
“அஜய்...?” – கீர்த்தி.
“உம்...” – நான்.
கீர்த்தி சிரித்தாள்.
“என்ன கீர்த்தி சிரிக்கறே...? அவர் எப்போ என்னோட பேசப்போறார்னு...
தினம், தினம் காத்துட்டு இருக்கேன் தெரியுமா?”
“அப்படியா... அப்ப உடனே ப்ரபோஸ் பண்ணிடு...”
“அவ்ளோ தைரியம் இல்லைன்றது தானே இப்ப பிரச்சனை. ப்ச்.... விடுடி என்ன நடக்கனும்னு இருக்கோ அது தான் நடக்கும். விதின்னு ஒண்ணு இருக்கில்லே..?”
“நீயா இதை சொல்றே...? அன்னைக்கு மேடையில பாரதியின் புரட்சியை முழங்கிய அபியா நீ..? ‘நாம செய்யற தப்புக்கு விதி மேல பழி போடறது குழந்தை தனம் மட்டுமில்ல முட்டாள்தனமும் கூட..’ ன்னு சொல்ற நீயா... இப்படி விதின்னு சொல்றே...? எல்லாத்துக்கும் காரணம் நீ தானே?” – கீர்த்தி.
“அது எனக்கும் தெரியறது. ஆனா, ஏதோ ஒண்ணு என்னை சொல்லவிடாம தடுக்குது. என்ன பண்றதுன்னே தெரியல..சொல்லவும் பயமாயிருக்கு... முடியாதுன்னு சொல்லிட்டா..?
“ஐ...யோ.....! முடியாது கீர்த்தி, செத்துடுவேன்.” எனக்கு துக்கம் பொங்கிவர சட்டென்று முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டேன்.
கீர்த்தி எதுவும் பேசவில்லை. நானும் நிமிரவே இல்லை. அழுகையை கஷ்டப்பட்டு அடக்கினேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ! நீண்ட நேர இடைவெளிக்கு பிறகு,
“அபி...?” கீர்த்தி கூப்பிட்டாள்.
நிமிர்ந்தேன். எனது கலங்காத கண்களை கண்டு அவள் லேசாய் திருப்தி அடைந்தது போலிருந்தது.
“ஒருவேளை அஜய்யும் உன்னைப்போலவே நினைக்கலாம் இல்லையா? சொன்னா நீ எங்க செருப்ப கழட்டிவியோ –ன்னு பயமோ என்னவோ...” சூழ்நிலையை கீர்த்தி சகஜமாக்க முயல்வது புரிந்தது.
ஆனாலும், பேசாமலிருந்தேன்.
அவளே தொடர்ந்தாள், “பின்னாடி நடக்கறத பத்தி நீ கவலைபடாதே... நாளைக்கு நீ அஜய்கிட்ட போய்......”
“நோ.... கீர்த்தி... ப்ளீஸ்..! விட்டுடு. நான் இருக்கற வரைக்கும் இப்படியே அவரை காதலிச்சுட்டே இருந்துட்டு போயிடறேன்... பட் ப்ளீஸ்! அவர் கிட்ட மட்டும் என்னால சொல்ல முடியாது. இப்ப மட்டுமில்ல... எப்பவுமே முடியாது... நான்... என்னை.... இப்படியே விட்டுடு ப்ளீஸ்!” இன்னும் சற்று நேரம் நான் பேசியிருந்தால் அழ ஆரம்பித்திருப்பேன்.
“இன்னும் நீ தூங்கலை? என்ன யோசனை?”
“...................”
“அஜய்...?” – கீர்த்தி.
“உம்...” – நான்.
கீர்த்தி சிரித்தாள்.
“என்ன கீர்த்தி சிரிக்கறே...? அவர் எப்போ என்னோட பேசப்போறார்னு...
தினம், தினம் காத்துட்டு இருக்கேன் தெரியுமா?”
“அப்படியா... அப்ப உடனே ப்ரபோஸ் பண்ணிடு...”
“அவ்ளோ தைரியம் இல்லைன்றது தானே இப்ப பிரச்சனை. ப்ச்.... விடுடி என்ன நடக்கனும்னு இருக்கோ அது தான் நடக்கும். விதின்னு ஒண்ணு இருக்கில்லே..?”
“நீயா இதை சொல்றே...? அன்னைக்கு மேடையில பாரதியின் புரட்சியை முழங்கிய அபியா நீ..? ‘நாம செய்யற தப்புக்கு விதி மேல பழி போடறது குழந்தை தனம் மட்டுமில்ல முட்டாள்தனமும் கூட..’ ன்னு சொல்ற நீயா... இப்படி விதின்னு சொல்றே...? எல்லாத்துக்கும் காரணம் நீ தானே?” – கீர்த்தி.
“அது எனக்கும் தெரியறது. ஆனா, ஏதோ ஒண்ணு என்னை சொல்லவிடாம தடுக்குது. என்ன பண்றதுன்னே தெரியல..சொல்லவும் பயமாயிருக்கு... முடியாதுன்னு சொல்லிட்டா..?
“ஐ...யோ.....! முடியாது கீர்த்தி, செத்துடுவேன்.” எனக்கு துக்கம் பொங்கிவர சட்டென்று முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டேன்.
கீர்த்தி எதுவும் பேசவில்லை. நானும் நிமிரவே இல்லை. அழுகையை கஷ்டப்பட்டு அடக்கினேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ! நீண்ட நேர இடைவெளிக்கு பிறகு,
“அபி...?” கீர்த்தி கூப்பிட்டாள்.
நிமிர்ந்தேன். எனது கலங்காத கண்களை கண்டு அவள் லேசாய் திருப்தி அடைந்தது போலிருந்தது.
“ஒருவேளை அஜய்யும் உன்னைப்போலவே நினைக்கலாம் இல்லையா? சொன்னா நீ எங்க செருப்ப கழட்டிவியோ –ன்னு பயமோ என்னவோ...” சூழ்நிலையை கீர்த்தி சகஜமாக்க முயல்வது புரிந்தது.
ஆனாலும், பேசாமலிருந்தேன்.
அவளே தொடர்ந்தாள், “பின்னாடி நடக்கறத பத்தி நீ கவலைபடாதே... நாளைக்கு நீ அஜய்கிட்ட போய்......”
“நோ.... கீர்த்தி... ப்ளீஸ்..! விட்டுடு. நான் இருக்கற வரைக்கும் இப்படியே அவரை காதலிச்சுட்டே இருந்துட்டு போயிடறேன்... பட் ப்ளீஸ்! அவர் கிட்ட மட்டும் என்னால சொல்ல முடியாது. இப்ப மட்டுமில்ல... எப்பவுமே முடியாது... நான்... என்னை.... இப்படியே விட்டுடு ப்ளீஸ்!” இன்னும் சற்று நேரம் நான் பேசியிருந்தால் அழ ஆரம்பித்திருப்பேன்.
தொடரும்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
அன்றிரவு ஹாஸ்டலில் ---
ஏதேதோ நினைத்தபடி படுத்திருந்தேன். கீர்த்தி எப்போதோ தூங்கி விட்டிருந்தாள். அவளுக்கென்ன, காதல் நோய் பிடிக்கவில்லை. காதலிப்பவளாய் இருந்தால் இவ்வளவு சுகமாகவா தூங்குவாள்? ம்ம்ம்ம்........ கொடுத்து வைத்தவள்.
கடவுளே, எனக்கு மட்டும் எப்படி இந்த எண்ணம் ஏற்பட்டது? இந்த காதல், எய்ட்சை விட பயங்கரமாய் இருக்கும் போலிருக்கே....
என்ன செய்யறது? ஏதாவது மருந்து இருக்குமா இதற்கு? இது தீர ஒரே மருந்து நான், அஜயை கல்யாணம் பண்ணிக்கறது தான்.
கல்யாணம்!
விரக்தி மேலிட எனக்கு சிரிப்பு வந்தது. நடக்க கூடிய காரியமா அது..?
இப்போது அவரே ஒரு கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம். ஆமாம்! இந்த விஷயம் கூட அவர் தங்கை சொல்லித்தான் எனக்கு தெரியும். பெயர் உஷாவாம். பெரியவர்கள் நிச்சயித்த வண்ணம் நடக்கப்போகும் திருமணம். பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்களாம். வரும் வெள்ளியன்று பாக்கு – வெற்றிலை மாற்றி கொள்வார்களாம், அதாவது இன்று.
உஷா!
எவ்வளவு அழகான பெயர் உனக்கு? நீ தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி...
இது தான் முடிவு. நிழலுக்கு முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால், நிஜத்திற்கு...?
இதோ... இது தான்... முடிவு! இந்த முடிவில் தான் உஷா என்ற ஒரு பெண்ணின், வாழ்வின் தொடக்கமும் கூட.
ஒருவரின் முடிவு இன்னொருவரின் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாய் அமைவது இயற்கையின் நியதியாக இருக்கலாம். அஸ்தமனம் இல்லாவிட்டால் உதயம் தான் ஏது..? எல்லா விஞ்ஞானமும் அறிவிற்கு எட்டும் தூரத்திலும் மனதிற்கு எட்டா வானமுமாய்தான் இருக்கின்றது.
உஷா! நீ தான் எத்தனை அதிர்ஷ்டசாலி? ஆனால் உன்னை விட நான் பாக்கியசாலி. எப்படி தெரியுமா? அவருடைய நிஜம் என்னிடம் உள்ளது. அவரோட எண்ணம் அறிஞ்சு நடந்துக்கோ உஷா. அவர் கோபித்துக்கொண்டால் நீ பணிஞ்சு போ. நீ கோபித்துக்கொண்டால் அதிக நேரம் இழுத்து பிடிக்காமல் விட்டுக்கொடு. விட்டுக்கொடுப்பதில், அதுவும் கணவனுக்காக விட்டு கொடுப்பதில் உள்ள சுகம் இருக்கே... ப்பா...!
விட்டு கொடுத்தல் –
இது தான் பெண்களின் பலம். நிறைய ஆண்களுக்கு இது புரிவதில்லை. ‘நான் எவ்வளவு சண்டை போட்டாலும், என் மனைவியே முதல்ல விட்டுக்கொடுத்து, என்கிட்டே சரண்டர் ஆயிடுவா. அது தான் அவளோட வீக்னெஸ்.’ – என்று சிரித்துக்கொண்டே வெற்றி கொண்ட களிப்பில் பேசும் பல கணவன்களுக்கு, அது தான் தன்னுடைய பலவீனம் என்பதும், உண்மையில் தோற்றது நாம் தான் என்பதும் தெரியாது. பார்த்து நடந்துக்கோ உஷா. உனக்கு என்னோட வாழ்த்துக்கள்!
“ஏய்.. அபி...?” கீர்த்தி தான். ஏன் அதற்குள் எழுந்து விட்டாள்?
“இன்னும் நீ தூங்கல...?” --- கீர்த்தி.
“தூக்கம் வரல..” எனக்கே என்மீது சுயபச்சாதாபம் ஏற்பட்டது. ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் யோசித்து கொண்டிருக்கிறேன்? என் மன நிலையில் மாற்றம் ஏதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா? யாரிந்த உஷா... இவளிடம் எதற்கு நூற்று கிழவி போல அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறேன்?
இந்த நேரத்தில் நான் அஜையை நினைத்து எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது.
‘அன்பே...!
நீ இல்லாவிடில்
மரணித்து போக ஆசைபடும்
கோழை அல்ல நான்.
ஆனால்,
உன் நினைவுகளுடன்
உன்மத்தமாகி
விட ஆசைப்படுகிறேன்...’ - தன்னை மறந்த நிலையில், பித்து பிடித்து வாழ்வது என்பது கொடுமை அல்லவா...? அதை விட மரணம் ஒன்றும் கொடுமை அல்லவே...! எழுதியபோது அழகாய் தோன்றிய வரிகள் இப்போது என்னை பயமுறுத்துவது போலிருந்தது.
ஏதேதோ நினைத்தபடி படுத்திருந்தேன். கீர்த்தி எப்போதோ தூங்கி விட்டிருந்தாள். அவளுக்கென்ன, காதல் நோய் பிடிக்கவில்லை. காதலிப்பவளாய் இருந்தால் இவ்வளவு சுகமாகவா தூங்குவாள்? ம்ம்ம்ம்........ கொடுத்து வைத்தவள்.
கடவுளே, எனக்கு மட்டும் எப்படி இந்த எண்ணம் ஏற்பட்டது? இந்த காதல், எய்ட்சை விட பயங்கரமாய் இருக்கும் போலிருக்கே....
என்ன செய்யறது? ஏதாவது மருந்து இருக்குமா இதற்கு? இது தீர ஒரே மருந்து நான், அஜயை கல்யாணம் பண்ணிக்கறது தான்.
கல்யாணம்!
விரக்தி மேலிட எனக்கு சிரிப்பு வந்தது. நடக்க கூடிய காரியமா அது..?
இப்போது அவரே ஒரு கல்யாணம் செய்து கொள்ள போகிறாராம். ஆமாம்! இந்த விஷயம் கூட அவர் தங்கை சொல்லித்தான் எனக்கு தெரியும். பெயர் உஷாவாம். பெரியவர்கள் நிச்சயித்த வண்ணம் நடக்கப்போகும் திருமணம். பெண் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்களாம். வரும் வெள்ளியன்று பாக்கு – வெற்றிலை மாற்றி கொள்வார்களாம், அதாவது இன்று.
உஷா!
எவ்வளவு அழகான பெயர் உனக்கு? நீ தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி...
இது தான் முடிவு. நிழலுக்கு முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால், நிஜத்திற்கு...?
இதோ... இது தான்... முடிவு! இந்த முடிவில் தான் உஷா என்ற ஒரு பெண்ணின், வாழ்வின் தொடக்கமும் கூட.
ஒருவரின் முடிவு இன்னொருவரின் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாய் அமைவது இயற்கையின் நியதியாக இருக்கலாம். அஸ்தமனம் இல்லாவிட்டால் உதயம் தான் ஏது..? எல்லா விஞ்ஞானமும் அறிவிற்கு எட்டும் தூரத்திலும் மனதிற்கு எட்டா வானமுமாய்தான் இருக்கின்றது.
உஷா! நீ தான் எத்தனை அதிர்ஷ்டசாலி? ஆனால் உன்னை விட நான் பாக்கியசாலி. எப்படி தெரியுமா? அவருடைய நிஜம் என்னிடம் உள்ளது. அவரோட எண்ணம் அறிஞ்சு நடந்துக்கோ உஷா. அவர் கோபித்துக்கொண்டால் நீ பணிஞ்சு போ. நீ கோபித்துக்கொண்டால் அதிக நேரம் இழுத்து பிடிக்காமல் விட்டுக்கொடு. விட்டுக்கொடுப்பதில், அதுவும் கணவனுக்காக விட்டு கொடுப்பதில் உள்ள சுகம் இருக்கே... ப்பா...!
விட்டு கொடுத்தல் –
இது தான் பெண்களின் பலம். நிறைய ஆண்களுக்கு இது புரிவதில்லை. ‘நான் எவ்வளவு சண்டை போட்டாலும், என் மனைவியே முதல்ல விட்டுக்கொடுத்து, என்கிட்டே சரண்டர் ஆயிடுவா. அது தான் அவளோட வீக்னெஸ்.’ – என்று சிரித்துக்கொண்டே வெற்றி கொண்ட களிப்பில் பேசும் பல கணவன்களுக்கு, அது தான் தன்னுடைய பலவீனம் என்பதும், உண்மையில் தோற்றது நாம் தான் என்பதும் தெரியாது. பார்த்து நடந்துக்கோ உஷா. உனக்கு என்னோட வாழ்த்துக்கள்!
“ஏய்.. அபி...?” கீர்த்தி தான். ஏன் அதற்குள் எழுந்து விட்டாள்?
“இன்னும் நீ தூங்கல...?” --- கீர்த்தி.
“தூக்கம் வரல..” எனக்கே என்மீது சுயபச்சாதாபம் ஏற்பட்டது. ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் யோசித்து கொண்டிருக்கிறேன்? என் மன நிலையில் மாற்றம் ஏதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா? யாரிந்த உஷா... இவளிடம் எதற்கு நூற்று கிழவி போல அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறேன்?
இந்த நேரத்தில் நான் அஜையை நினைத்து எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது.
‘அன்பே...!
நீ இல்லாவிடில்
மரணித்து போக ஆசைபடும்
கோழை அல்ல நான்.
ஆனால்,
உன் நினைவுகளுடன்
உன்மத்தமாகி
விட ஆசைப்படுகிறேன்...’ - தன்னை மறந்த நிலையில், பித்து பிடித்து வாழ்வது என்பது கொடுமை அல்லவா...? அதை விட மரணம் ஒன்றும் கொடுமை அல்லவே...! எழுதியபோது அழகாய் தோன்றிய வரிகள் இப்போது என்னை பயமுறுத்துவது போலிருந்தது.
தொடரும்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
"விட்டுக்கொடுப்பதில், அதுவும் கணவனுக்காக விட்டு கொடுப்பதில் உள்ள சுகம் இருக்கே...ப்பா...! "
அன்பும் புரிதலும் இருந்தா விட்டு கொடுத்து போற மனபாங்கு வந்துரும்...கணவன் மனைவிகுள்ள மனபக்குவத்தின் அளவு கூடகுறைச்சு இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக விட்டுகொடுத்து போறத புருஞ்கிட்டா...ப்பா...! ...தேன்மிட்டாய் மாதிரி தித்திப்பா இனிக்கும்...
ஜெயமோகனின் நாவல் மாதிரி நல்ல இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
அன்பும் புரிதலும் இருந்தா விட்டு கொடுத்து போற மனபாங்கு வந்துரும்...கணவன் மனைவிகுள்ள மனபக்குவத்தின் அளவு கூடகுறைச்சு இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக விட்டுகொடுத்து போறத புருஞ்கிட்டா...ப்பா...! ...தேன்மிட்டாய் மாதிரி தித்திப்பா இனிக்கும்...
ஜெயமோகனின் நாவல் மாதிரி நல்ல இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
அருண்பிரகாஷ்- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.
விமந்தனி- வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டியுள்ளீர்கள் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பிறந்த தின வாழ்த்துகள்.--விமந்தினி
» குறுகிய காலத்தில் 1000 மதிப்பீடுகள் கடந்த விமந்தினி...
» என்னுயிர் காதலிக்கு...
» என்னுயிர் காதலா!!!!!!!!!!!!
» என்னுயிர் நீதான்
» குறுகிய காலத்தில் 1000 மதிப்பீடுகள் கடந்த விமந்தினி...
» என்னுயிர் காதலிக்கு...
» என்னுயிர் காதலா!!!!!!!!!!!!
» என்னுயிர் நீதான்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|