புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
11 Posts - 4%
prajai
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
3 Posts - 1%
jairam
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_m10கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது


   
   
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sat Jul 19, 2014 3:15 pm

கோத்தகிரி அருகே பீதியை ஏற்படுத்திய சம்பவம்: சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது  201407172053491971_Frequently-in-childrens-body-on-fire_SECVPF
கோத்தகிரி அருகே சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது நின்றது.கலெக்டரின் உத்தரவின் பேரில் வீட்டை சுற்றி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவில் பூசாரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 41). இவருடைய மனைவி பிரியா (38). இவர்களுக்கு ராகுல் (14), கோகுல் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும், இவர் ஹெத்தையம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.

சீருடையில் தீப்பிடித்தது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல், கோகுல் ஆகியோர் பள்ளிக்கு புறப்படும் போது அவர்கள் அணிந்து இருந்த சீருடையில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் மாணவர்கள் கூச்சலிடவே அவர்களுடைய தாயார் பிரியா தீயை அணைத்தார். இதில் புத்தகப்பை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பின்னர் அவர்களுடைய உடல்களில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுவர்களின் வீட்டில் பேய் உருவம் தெரிவதாகவும், வீட்டில் வைத்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் தானாகவே தூக்கி வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சினை காரணமாக சிறுவன் ராகுல் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக 4 போலீசாரை நியமிக்க கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார். இவர்கள் அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு தங்கியிருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுடன் சிறுவர்களின் உடலில் தீப்பிடிப்பது நின்று உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

தந்தை பேட்டி

இந்த சம்பவம் குறித்து சிறுவர்களின் தந்தை சுப்பிரமணி கூறியதாவது:–

கக்குச்சி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எனது மூத்தமகன் ராகுல் 10–ம் வகுப்பும், இளைய மகன் கோகுல் 8–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10–ந் தேதி இரவு ராகுல், கோகுல் ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுடைய படுக்கையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அந்த தீயை அணைத்தேன். பின்னர் ஜனவரி மாதம் 17–ந் தேதி இரவு 8.30 மணிக்கு அவர்கள் அமர்ந்து இருந்த படுக்கை மற்றும் கம்பளி ஆடைகளில் தீப்பிடித்தது. அப்போது இவர்களுடைய அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். பின்னர் இவர்களுடைய உடல்களில் பல முறை தீப்பிடித்து காய அடைந்தனர். இதையடுத்து, அவர்களை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றேன். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களுக்கு உடல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை என்று கூறினார்கள்.

பரிகார பூஜையிலும் தீ

இதையடுத்து, கூக்கல் கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் அவர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கைகளில் வைத்து இருந்த வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன.

இதைத்தொடர்ந்து எனது மகன்களுடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாத்தான் மடத்தில் 20 நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது நிலப்பிரச்சினை காரணமாக எனது மகன்களுக்கு சிலர் செய்வினை வைத்து இருப்பதாக மாந்திரீகர் ஒருவர் தெரிவித்தார். இதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்காக பல்வேறு பரிகாரங்கள் செய்யப்பட்டன. அங்கு தங்கி இருந்த போது இவர்களுடைய உடல்களில் தீப்பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய வீட்டிற்கு திரும்பினோம். பின்னர் வீட்டில் இருந்த பழைய துணிகள் மற்றும் தீயில் எரிந்து போன பொருட்களை அகற்றி விட்டு வீட்டிற்கு பெயிண்ட் அடித்தோம். அப்போது வீட்டில் பேய் உருவம் போல் சுவற்றில் ஒரு படம் வரைந்து உள்ளது.

மேலும் வீட்டில் வைத்து இருந்த கியாஸ் அடுப்பு தானாக எரிகிறது. இதேபோல் வீட்டில் புதிதாக சமைக்கும் உணவு பொருட்கள் 10 நிமிடங்களில் கெட்டு போய்விடுவதுடன் நிறமும் மாறி விடுகிறது. எனது மகன்களின் உடலில் தீப்பிடித்ததால் சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் பரிகார பூஜைகளுக்காக ரூ.13 லட்சம் வரை இதுவரை செலவு செய்து உள்ளேன். ஆனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு மட்டும் குறைய வில்லை.

தாயார் பேட்டி

சிறுவர்களின் தாயார் பிரியா கூறியதாவது:–

எங்களுடைய வீட்டில் கடந்த 8 மாதங்களாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ராகுல், கோகுல் ஆகியோரின் உடல்களில் தானாக தீப்பிடித்து வருவதால் வீட்டில் வைத்து இருந்த துணிமணிகள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டன. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுடைய வீட்டில் இந்த சம்பவங்கள் நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்து பார்த்தோம். ஆனால் அங்கேயும் அவர்களுடைய உடல்களில் தீ பரவியது. ஆரம்ப காலத்தில் நாங்கள் கூறியதை எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் நம்பவில்லை. தற்போது அனைவரும் பீதி அடைந்து உள்ளனர். மேலும் எங்களுக்கு உதவி செய்பவர்களின் வீடுகளிலும் தீவிபத்து ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுடைய வீட்டுக்கு வந்த உறவினர் சிக்கன்னன் (வயது 60) என்பவர் எனது மகன்கள் மீது தானாக தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். பின்னர் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் எங்களுடைய வீட்டிற்கு உறவினர்கள் யாரும் வருவதில்லை.

பள்ளிக்கு செல்லமுடியாமல் தவிக்கிறேன்  சிறுவன் ராகுல் கண்ணீர்

உடலில் தீபிடிப்பதால் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று பாதிக்கப்பட்ட சிறுவன் ராகுல் கூறினான்.

இதுகுறித்து ராகுல் கண்ணீர் மல்க கூறியதாவது:–

என்னை கண்டாலே பீதி

கடந்த நவம்பர் மாதம் எங்களுடைய வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எனது வயிற்றின் அடிப்பகுதியில் தானாக தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பயத்தில் அலறினேன். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் எனது உடலில் லேசான தழும்பு ஏற்பட்டது. எனது உடலில் பல முறை தீப்பிடித்ததால் அதிர்ச்சி அடைந்த எனது பெற்றோர் பல்வேறு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தனர். அப்போது நான் கோவில் பூசாரிகள் கொடுக்கும் பழம், தேங்காய்களை கையில் எடுத்தால் அவை தீப்பற்றி எரியும். இதனால் எங்களுடைய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என்னை கண்டாலே பீதி அடைந்து வருகின்றனர்.

நான் 10–ம் வகுப்பு படித்து வருகிறேன். ஆனால், நான் பள்ளிக்கு சென்றால் எனது கழுத்தை யாரோ ஒருவர் நெரிப்பதுடன், வாயை பொத்திக் கொள்வது போல் இருக்கும். இதனை மீறி நான் பள்ளிக்கு சென்றால் பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்து விடுவேன். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதனால் நான் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவன் கூறினான்.

தொடர்ந்து அவனது தம்பி சிறுவன் கோகுல் கூறியதாவது:–

நான் தற்போது 8–ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது உடலில் கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் தீப்பிடிக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை கேரளாவுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு எனக்கு பல்வேறு பரிகாரங்கள் செய்தனர். இதனால் தற்போது எனது உடலில் தீப்பிடிப்பது இல்லை. இதனால் நான் வழக்கம் போலவே பள்ளிக்கு சென்று வருகிறேன்.என்றாலும் எப்போது உடலில் தீப்பிடிக்குமோ என்றுபயமாக இருக்கிறது.

இவ்வாறு கோகுல் பீதியுடன் கூறினான்.

தீப்பிடித்த துணிகளின் ஆய்வறிக்கைக்கு பிறகு மேல் நடவடிக்கை

கலெக்டர் சங்கர் பேட்டி

தீப்பிடித்த துணிகளின் ஆய்வறிக்கைக்கு பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சங்கர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:–

ஆய்வறிக்கை

கூக்கல் கிராமத்தை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகிய சிறுவர்களின் உடல்களில் தானாக தீப்பிடிப்பது இல்லை. ஆனால் அந்த சிறுவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களின் வீடுகளில் தீப்பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த சிறுவர்களின் வீடுகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அறிய சென்னையில் இருந்து தட அறிவியல் குழுவினர் இங்கு ஆய்வு செய்து உள்ளனர். மேலும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் துணிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் கூறியதாவது:–

மாவட்ட கலெக்டர் சங்கரின் உத்தரவின் பேரில் அந்த சிறுவர்களின் வீட்டு முன்பு 4 போலீசார் இரவு பகல் பராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. மேலும், இந்த சம்பவங்கள் எப்படி நடைபெறுகின்றன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுவர்களின் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்த 2 நாட்களில் அவர்களுடைய உடல்களில் தீப்பிடிக்கவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கேனும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு டாக்டர்கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஆல்துரைகூறியதாவது:–

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூலி தொழிலாளியின் 2 மாத குழந்தையின் உடலில் தானாகவே தீப்பிடித்தது. இந்த குழந்தைக்கு ‘‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்‘‘ என்ற அபூர்வ நோய் இருந்தது. இதேபோல் இந்த சிறுவர்களுக்கும் இந்த நோய் உள்ளதா? என்பதை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுடைய பெற்றோருக்கு பல முறை எடுத்து கூறியும் அவர்கள் மருத்துவ பரிசோதனை இதுவரை செய்யவில்லை. மருத்துவ பரிசோதனை செய்தால் தான் இதற்கான காரணம் என்ன என்பது தெரியவரும். பின்னர் அவர்களுக்கு சென்னை அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக