Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
3 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
First topic message reminder :
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 QzKZDftkRMOnYnAhqgg5+p19](https://www.filepicker.io/api/file/qzKZDftkRMOnYnAhqgg5+p19.jpg)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001](https://www.filepicker.io/api/file/sdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001.png)
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 QzKZDftkRMOnYnAhqgg5+p19](https://www.filepicker.io/api/file/qzKZDftkRMOnYnAhqgg5+p19.jpg)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001](https://www.filepicker.io/api/file/sdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001.png)
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
அந்தப் பெண்மணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.
நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்ல முடியும். இந்த இடத்தின் கண்களே நான்தான். உதாரணமாக, இன்று காலை, இங்கு யார், யாருடன் என்ன பேசிக் கொண்டு இருந்தார்கள் என்பது உனக்குத் தெரிய வேண்டுமா.. நான் சொன்னால், நீ திகைத்துப் போவாய்.
இருக்கட்டும்.. வேறு எப்போதாவது உன்னிடம் தொடர்பு கொள்கிறேன்.
இப்போது நந்திராவை தொடர்வது அவசியமில்லை. ரமோட்ஸ்வே, அந்த சினிமா தியேட்டருக்குச் சென்று, மாலை காட்சி எத்தனை மணிக்கு என்பதை விசாரித்தாள். அதைத்தான் அந்தப் பெண்ணும் செய்திருக்க வேண்டும். தன்னுடைய சிறிய காரில் வீடு திரும்பினாள். சீக்கிரமாக உணவை முடித்துக் கொண்டு, மாலைக் காட்சிக்குப் போகத் தயாரானாள். அவள் கிளம்புவதற்கு முன் பட்டேல் போன் செய்தார்.
என் பெண், பள்ளிப் பாடம் செய்வதற்கு ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போவதாகக் கூறுகிறாள். அது பொய் என்று எனக்குத் தெரியும்.
ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவள் எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரியும். நான் அங்கே இருப்பேன். வீணாகக் கவலைப் படாதீர்கள்..
அந்த ஜாக் பையனைப் பார்க்கத்தானே போகிறாள்? - பட்டேல் கத்தினார்.. எனக்குத் தெரியும்.. அவனைச் சந்திக்கத்தான் அவள் செல்கிறாள்.
இருக்கலாம்.. ரமோட்ஸ்வே கூறினாள்.
உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். நாளைக்கு நான் எல்லா விவரத்தையும் தருகிறேன்.
காலையில் சீக்கிரமாக தர வேண்டும். நான் எப்போதுமே ஆறு மணிக்கு எழுந்து விடுவேன்.
சினிமா தியேட்டருக்குள் ரமோட்ஸ்வே நுழையும் போது மிகச் சிலரே இருந்தனர். கடைசி வரிசைக்கு முந்தின வரிசையில் இருக்கையை அவள் தேர்ந்தெடுத் தாள். தியேட்டரின் நுழைவாயில் அவளது பார்வையின் நேர்கோட்டில் இருந்தது. வருபவர்கள் அந்த வாயில் வழியாகத்தான் வரவேண்டும். விளக்குகளை அணைத்த பிறகும் கூட, நந்திராவும் ஜாக்கும் வந்தால் அவளால் நன்றாக இனம் காண முடியும்.
அங்கு படம் பார்க்க வந்திருந்த பலரை ரமோட்ஸ்வே அறிவாள். அவளுக்கு மாமிசம் விற்கும் கசாப்புக் கடைக் காரர் இவள் வந்த சிறிது நேரத்துக்குப் பிறகு வந்தார். அவரும், அவர் மனைவியும் நட்புடன் கையை அசைத்தனர். பள்ளியின் ஆசிரியைகளில் ஒருவர், பிரசிடென்ட் ஹோட்டலில் ஏரோபிக்ஸ் என்னும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தும் பெண்மணி, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், கரமுரவென பாப்கார்னைக் கொறித்தபடி முன் வரிசையில் இருந்தார்.
படத்தின் முதல் பகுதி ஆரம்பிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது நந்திரா வந்தாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 11
----------------------------------------------------------------
நந்திரா தனியாகத்தான் வந்திருந்தாள். கதவின் அருகில் நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். ரமோட்ஸ்வே, அவள் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து, கீழே தரையில் ஏதோ தேடுவது போல் பாசாங்கு செய்தாள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு நிமிர்ந்து பார்த்தபோது அவள், இவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ரமோட்ஸ்வே திரும்பவும் கீழே பார்த்தாள். அங்கு கிடந்த பழைய டிக்கெட் ஒன்றை எடுக்கும் சாக்கில் குனிந்தாள்.
நந்திரா, வேண்டுமென்றே நடந்து வந்து ரமோட்ஸ்வேயின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
குட் ஈவ்னிங் மேடம்... இங்கே யாரேனும் உட்காரப் போகிறார்களா?
ரமோட்ஸ்வே வியப்புடன் அவளைப் பார்த்தாள்.
ஒருவரும் இல்லை. அது காலியாகத்தான் இருக்கிறது.. நந்திரா வசதியாக சாய்ந்து கொண்டாள்.
இந்தப் படத்தை ரொம்ப நாளாகவே பார்க்க நான் ஆசைப்பட்டேன்..
நல்லது.. ஆசைப்பட்டதைப் பார்ப்பது சந்தோஷமான விஷயம்தான்..
சற்று நேரம் மௌனம்.
அந்தப் பெண், அவளையே பார்த்துக் கொண்டிருப்பது ரமோட்ஸ்வேக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. க்ளோவிஸ் ஆண்டர்ஸன் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்..?
அவர், இது பற்றி ஏதோ சொல்லியிருப்பது ரமோட்ஸ்வேயின் கவனத்துக்கு வந்தது. ஆனால், அது என்ன என்பதுதான் நினைவுக்கு வரவில்லை.
நான் உங்களை இன்று மத்தியானம் பார்த்தேன். மாரு-அ-புலா வாசலில்..
அ.. ஆமாம் - அவசரமாக பதிலளித்தாள் ரமோட்ஸ்வே..
நான் ஒருவருக்காக காத்திருந்தேன்..
அப்புறம் உங்களை புத்தகக் கடையிலும் பார்த்தேன்.. நீங்களும் ஏதோ புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
- அவள் மடக்கினாள்.
ஆமாம். நான் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று நினைத்தேன்..
அப்புறம் நீங்கள் பாப்புஸேயிடம் - அதுதான் அந்த சட்டைகள் விற்றுக் கொண்டிருந்த பெண்மணி - அவளிடம் என்னைப் பற்றி விசாரித்தீர்கள்..
ரமோட்ஸ்வே தர்மசங்கடத்துடன் நெளிந்தாள். இனிமேல் பாப்புஸேயிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள்.
நீங்கள் எதற்காக என்னைத் தொடர்கிறீர்கள்?
- அந்தப் பெண் நேரடியாக ரமோட்ஸ்வேயிடம் கேட்டு விட்டாள்.
ரமோட்ஸ்வேயின் மூளை துரிதகதியில் வேலை செய்தது.
இத்தனைக்குப் பிறகு மறுப்பதில் அர்த்தமேயில்லை. சங்கடமான நிலைமையையும் சரியாகப் பயன்படுத்தவேண்டும். ஆதலால் அவள், நந்திராவின் தந்தை படும் கவலையைப் பற்றியும், அதற்காக அவர் தன்னை அணுகியது பற்றியும் கூறிவிட்டாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
நீ ஒருவேளை பையன்களுடன் சுற்றுகிறாயோ என்று அவர் மிகவும் கவலைப்படுகிறார்.
நந்திராவின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
அவர் கவலைப்படுவதற்குக் காரணம் அவரேதான். நான் பையன்களுடன் சுற்றுவதாக அவரே நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் அப்படியெல்லாம் இல்லை
அப்படியானால் அந்த ஜாக் யார்? யார் வீட்டுப் பையன்?
ரமோட்ஸ்வே ஆவலை அடக்கியபடி கேட்டாள்.
சில நிமிடங்கள் நந்திரா பதிலே பேசவில்லை. அவளுடைய தனி வாழ்க்கையில் இன்னொருவர் தலையிடுவதை அவள் என்றைக்குமே விரும்பியதில்லை. ஆனால், ரமோட்ஸ்வேயைப் பார்க்கும்போது அவளுக்கு நம்பலாம் எனத் தோன்றியதோ என்னவோ..
ஒருவேளை அவள் உபயோகமாகக்கூட இருக்கலாம் இல்லையா..
ஜாக் என்று ஒருவனுமே இல்லை. நானேதான் அப்படியருவனை சிருஷ்டி செய்தேன்.
அவள் வெற்றுப் பார்வை பார்த்தபடி சொன்னாள்.
எதற்காக?
அவர்கள் - அதாவது என் குடும்பத்தினர் எனக்கு ஆண் சிநேகிதர்கள் உண்டு என்று நம்புவதற்காக அப்படிச் செய்தேன். நானே ஒருவரைத் தேர்ந்தெடுப்பேன் என்று அவர்கள் நினைக்க வேண்டும். அவர்கள் எனக்குச் சரியானவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுப்பதை நான் விரும்பவில்லை. உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா?
ரமோட்ஸ்வே ஒரு நிமிடம், தனக்குள் அமிழ்ந்து போனாள். கட்டுக்காவலுடன் வளர்க்கப்படும் அந்தப் பெண்ணின் மீது அவளுக்குப் பரிதாபம்தான் ஏற்பட்டது. இந்த மாதிரி கட்டுப்படுத்தினால், மீறத்தான் தோன்றும். எனக்கு ஆண் நண்பர்கள் உண்டு என்று சொல்லத்தான் தோன்றும்.
அவள், நந்திராவின் கரத்தைப் பரிவுடன் பிடித்தாள்.
ஆம்.. உன் நிலைமை எனக்குப் புரிகிறது.
நந்திரா, தன்னுடைய கைக்கடிகாரத்தைத் திருகியபடி இருந்தாள்.
நீங்கள்.. இங்கே நாம் பேசியதைச் சொல்லிவிடுவீர்களா?
வேறு வழி?
இப்படி கேட்ட ரமோட்ஸ்வே தொடர்ந்து சொன்னாள்: நான் உன்னை, ஜாக் என்கிற இல்லாத பையனுடன் பார்த்ததாக எப்படிச் சொல்ல முடியும்?
நந்திரா பெருமூச்சுடன் சொன்னாள்:
எனக்குத் தேவைதான். இந்த மாதிரி முட்டாள்தனமாக விளையாடியதற்குப் பலன்..
..............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
எனக்கு ஆண் நண்பர்கள் ஒருவரும் இல்லை என்று தெரிந்தால், எனக்கு கொஞ்சமாவது சுதந்திரம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. நான் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்தையும் எங்கே, எப்படி என்று இவர்களிடம் கூறாமல் நிம்மதியாக இருக்க முடியுமா?
ரமோட்ஸ்வே யோசனையுடன் சொன்னாள்:
நான், அவரிடம் சொல்லி வாதாடிப் பார்க்கிறேன்.. நான் சொல்வதைக் கேட்பாரோ என்னவோ.. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
தயவுசெய்து செய்யுங்கள்.. அப்படியே செய்யுங்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்தே படத்தை ரசித்துப் பார்த்தனர். ரமோட்ஸ்வே, நந்திராவை தன் காரில் ஏற்றிச் சென்று, அவளது வீட்டுக் காம்பவுண்ட் சுவர் அருகே இறக்கிவிட்டாள். அந்தப் பெண், கார் போவதையே பார்த்தபடி சற்று நேரம் நின்றிருந்து விட்டு, அழைப்பு மணியை அழுத்தினாள்.
இது பட்டேல் வீடு. என்ன வேண்டும்?
உள்ளிருந்து ஸ்பீக்கர் ஒலித்தது.
சுதந்திரம்.. பல்லைக் கடித்தபடி முணுமுணுத்த நந்திரா, உரத்துச் சொன்னாள்..
நான்தான் அப்பா வந்திருக்கேன்.
ரமோட்ஸ்வே மறுநாள் விடிகாலையிலேயே பட்டேலுக்கு போன் செய்தாள். தொலைபேசியில் விளக்கிக் கொண்டிருப்பதை விட நேரிடச் சென்று வீட்டில் பேசுவதுதான் நல்லது என்றும் கூறினாள்.
ஏதோ கெட்ட செய்தி கூறப் போகிறீர்களா..? என்றவர் உரக்கக் கத்தினார்.. ஏதோ கெட்ட செய்திதான். கடவுளே.. என்ன கூறப்போகிறீர்கள்.. இப்போதே சொல்லுங்கள்..
ரமோட்ஸ்வே, மோசமான செய்தி அல்ல என்று அவருக்கு நம்பிக்கையூட்டினாள்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு பட்டேலின் ஆபீஸ் அறையில் அவள் இருந்தாள். பட்டேல் மிகுந்த கவலையுடன், ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
நான் ரொம்பவும் கவலையுடன் இருக்கிறேன். ஒரு தந்தையின் கவலைகள் உங்களுக்குப் புரியாது. தாயின் மன வருத்தம் மாதிரியானது இல்லை அது. தந்தைக்கு வேறு விதமான அக்கறை, மன உளைச்சல்கள் எல்லாம் உண்டு..
கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை என்பது போல ரமோட்ஸ்வே சிரித்தாள்.
நல்ல செய்திதான். அவளுக்கு ஆண் சிநேகிதர்கள் யாரும் கிடையாது..
அப்படியானால் அந்தக் காகிதத்தில் குறிப்பிடப்பட்ட ஜாக் யார்? அதுவும் கற்பனைதானா..?
ஆமாம். அதுவும் கற்பனைதான்!
பட்டேல் ஒன்றும் புரியாமல் விழித்தார். கைத்தடியை உயர்த்தி, செயற்கைக் காலை பலமுறை தட்டினார். ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தார். ஆனால், பேச்சு வரவில்லை.
நந்திரா, தன் சிநேகிதர்களுடன் வாழ்வது போல ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்து வைத்திருக்கிறாள். அவள் வாழ்வில் கொஞ்சம் சுதந்திரம் வேண்டியிருந்தது. அதற்காக ஓர் ஆண் நண்பனை கற்பனை செய்து கொண்டிருக்கிறாள். இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான். அவள் விருப்பப்படி இருக்க அனுமதியுங்கள். சும்மா அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். இப்போதைக்கு அவளுக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லை. இன்னும் சில காலத்துக்கு இருக்க மாட்டார்கள் என நம்பலாம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
பட்டேல் தன்னுடைய கைத்தடியை கீழே வைத்துவிட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்தார்.
நான் எதற்காக அப்படி இருக்க வேண்டும்? நாகரிகப் போக்குக்கு நான் ஏன் அனுமதி தர வேண்டும்?
ரமோட்ஸ்வே பதிலைத் தயாராக வைத்திருந்தாள்.
நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால், கற்பனை சிநேகிதன் உண்மையாகவே தோன்றிவிடுவான். அவ்வளவுதான்.
ரமோட்ஸ்வே, அவருடைய முக மாற்றத்தைக் கூர்ந்து கவனித்தாள். அவர், திடீரென்று எழுந்து நின்று, சற்று தடுமாறி விட்டு அவளைப் பார்த்தாள்.
நீங்கள் மிகவும் புத்திசாலியான பெண்மணி. உங்களுடைய அறிவுரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவளுடைய வாழ்க்கையை அவள் விருப்பப்படி அமைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாங்கள் சொல்வதைக் கேட்டு, தகுதியான கணவரைத் தேர்ந்தெடுப்பதில், எங்கள் அறிவுரையையும் ஏற்றுக் கொள்வாள் என நம்புகிறேன்..
அது மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறது.
ரமோட்ஸ்வே ஒரு நிம்மதி பெருமூச்சுடன் சொன்னாள்.
ஆமாம், நான் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்..
அதன் பிறகு, உயர்ந்த வெள்ளை மதிற்சுவர்கள் சூழப்பட்ட பட்டேலின் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் ரமோட்ஸ்வே, நந்திராவைப் பற்றி நினைத்துக் கொள்வாள். அவளை இப்போது நன்கு தெரியுமாதலால் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பங்கள் நேரலாம் என்றும் எதிர்பார்த்தாள்.
அப்படியரு வாய்ப்பு கிடைக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. பிரசிடென்ட் ஹோட்டல் வராந்தாவில், ஒரு சனிக்கிழமை காலை காபியை ரமோட்ஸ்வே அருந்திக் கொண்டிருந்த சமயம், யாரோ அவளது தோளைத் தொட்ட மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்த போது, நந்திரா, பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனுடன் நின்று கொண்டிருந்தாள். அந்த இளைஞன், சிரித்த முகமாக, நல்லவனாகத் தோன்றினான்.
ரமோட்ஸ்வே, நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..
ரமோட்ஸ்வே, நந்திராவின் கைகளைப் பற்றிக் குலுக்கினாள். அந்த இளைஞன், இவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
இது என்னுடைய சிநேகிதன். நீங்கள் இவனைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்..
இளைஞன் முன்னே வந்து, கைகளை நீட்டினான்...
நான் ஜாக் என்றான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 12
----------------------------------------------------------------
ப ட்டேலின் வழக்கு நினைவுக்கு வரும்போதெல்லாம், நந்திரா தன்னையும் சேர்த்து ஏமாற்றியதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வாள் ரமோட்ஸ்வே. இந்தக் காலத்துப் பெண்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வாள்.
வழக்கு முடிந்த மூன்றே நாட்களில் பட்டேல் அவளுக்கு பணத்தை செட்டில் செய்தார். ரமோட்ஸ்வே, 2,000 புலாக்களுக்கு பில்லும், செலவுகளுக்கு என்று தனியாக ஒரு தொகையும் குறிப்பிட்டு அனுப்ப, மறு தபாலிலேயே பணம் வந்து விட்டது. ரமோட்ஸ்வேக்கு இது மிகவும் வியப்பாக இருந்தது. அவ்வளவு பெரிய தொகையை, கொஞ்சம் கூடத் தயங்காமல் சந்தோஷமாக பட்டேல் கொடுத்தது அவளால் நம்ப முடியாததாக இருந்தது. மனசுக்குள், மிக அதிகமாக வாங்கி விட்டோமோ என்கிற குற்ற உணர்வும் இருந்தது.
சிலருக்கு இதுபோன்ற குற்ற உணர்வு மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இப்படியெல்லாம் எந்த உறுத்தலுமே இருக்காது. சிலர் தான் செய்த சிறு தவறுக்கெல்லாம் மிகவும் வருத்தமும் வேதனை யும் அடைவார்கள். சிலர் பெரிய பொய் பித்தலாட்ட வேலை களைச் செய்தும் கூட, நிம்மதியாக துளிக்கூட அலட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். ரமோட்ஸ்வேயிடம் வந்த எம்மா பெக்வானே முதல் வகுப்பைச் சேர்ந்தவள். ரமோட்ஸ்வே யின் கணவன் நோட் மொகோடி இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன்.
எம்மா பெக்வானே, துப்பறியும் நிறுவனத்துக்கு வந்தபோது, மிகவும் கலங்கிப் போயிருந்தாள். ரமோட்ஸ்வே இதுபோன்று ரொம்பவும் பயந்த சுபாவமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நல்ல திடமான தேநீர் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். அதுபோல ஒரு கோப்பை தேநீரைக் கொடுத்துவிட்டு, அவள் பேசுவதைக் கேட்க ஆயத்தமானாள். எவனாவது ஒரு மோசமானவனைப் பற்றின விஷயமாகத்தான் இருக்கும். அதற்கான அறிகுறிகள் எல்லாம் இருந்தன. என்னவாக இருக்கலாம்? ஆண்பிள்ளையின் முரட்டுத் தனமான தீய நடத்தையாகத்தான் இருக்க வேண்டும். வேறென்னவாக இருக்க முடியும்?
என் கணவர் மிகப் பெரிய குளறுபடி செய்து விட்டார். அதற்காக நான் மிகவும் வெட்கப்பட்டு வருந்துகிறேன்..
தான் நினைத்த மாதிரிதான்.. ரமோட்ஸ்வே தலையை அசைத்தாள்.
ஆண்களே இப்படித்தான். மோசமான காரியங் களைச் செய்து விடுவார்கள். எல்லா மனைவிகளும்தான் கவலைப்படுகிறார்கள். நீ மட்டும் இல்லை..
பெக்வானே பெருமூச்செறிந்தாள்..
ஆனால், என் கணவர் மிக பயங்கரமான வேலை யைச் செய்திருக்கிறார். மிக மிக பயங்கரமானது..
ரமோட்ஸ்வே திடுக்கிட்டாள். ஒருவேளை அவள் கணவர் யாரையேனும் கொலை செய்து விட்டாரோ.. வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்றச் சொல்கிறாளோ.. அப்படியென்றால், அவள் ஒருபோதும் துணை போக மாட்டாள்.
அப்படி என்ன பயங்கரமான காரியம்? ரமோட்ஸ்வே கேட்டாள். பெக்வானே தலை குனிந்தாள்.
அவர் ஒரு காரைத் திருடி விட்டார்..
ரமோட்ஸ்வே நிம்மதியுடன் பெருமூச்சு விட்டாள்.
கார் திருட்டு என்பது மிகச் சாதாரணமான ஒன்றுதான். ஊரில் கணவன்மார்கள் திருடிய காரை பெருமையுடன் ஓட்டிச் செல்லும் மனைவிகள் ஏராளம். ரமோட்ஸ்வேயால் அப்படி இருக்க முடியாது. பெக்வானேயும் அப்படித்தான் எனத் தோன்றியது அவளுக்கு.
அவர் திருடியதாக உன்னிடம் கூறினாரா? உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?
பெக்வானே, இல்லை என தலையசைத்தாள்.
ஒருவர் தனக்குக் கொடுத்ததாகக் கூறினார். அந்த மனிதரிடம் இரண்டு பென்ஸ் கார்கள் இருந்ததாம். அவருக்கு ஒன்றுதான் தேவைப்பட்டதாம்..
ரமோட்ஸ்வே சிரித்தாள்.
இந்த ஆண்கள் நம்மை முட்டாளாக்கப் பார்க் கிறார்கள்.. நாமென்ன வடிகட்டின முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா..
அப்படித்தான் தோன்றுகிறது.. என்றாள் பெக்வானே.
ரமோட்ஸ்வே ஒரு பென்சிலை எடுத்து கிறுக்க ஆரம்பித்தாள். தன்னையறியாமல் கிறுக்கிய கிறுக் கலைப் பார்க்கும்போது ஒரு காரை வரைந்திருப்பது தெரிந்தது. அவள், பெக்வானேயைப் பார்த்துக் கேட்டாள்.. நீ மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று நான் கூற வேண்டுமா? அதைத்தான் நீ எதிர் பார்க்கிறாயா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
பெக்வானே சிறிது யோசித்தாள்.
இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன்..
அப்படியானால்..
காரை, திரும்ப அதன் சொந்தக்காரரிடமே கொடுத்து விட வேண்டும்..
ரமோட்ஸ்வே நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
அப்படியானால், போலீஸுக்குப் போக வேண்டும் என்கிறாயா.. உன் கணவரைக் காட்டிக் கொடுக்கப் போகிறாயா..?
இல்லை. நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. கார், அதனுடைய சொந்தக்காரரிடம் போய்ச் சேர வேண்டும்.. போலீஸுக்குத் தெரியாமல். கார் அதனுடைய சொந்தக்காரரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது என்பது கடவுளுக்குத் தெரிந்தால் போதும்..
ரமோட்ஸ்வே, தன்னுடைய வாடிக்கையாளரைப் பார்த்தாள். அதுதான் மிகச் சரியான முடிவு என்றும் அவளுக்குத் தோன்றியது. கார், அதனுடைய இடத்தை அடைந்து விட்டால் பெக்வானே மனம் நிம்மதியடைந்து விடும். அதேசமயம், அவள் கணவனையும் இழக்க மாட்டாள்.
ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட மிக புத்திசாலித்தனமான முடிவு என்றே அவளுக்குத் தோன்றியது.
அதற்கு ஏன் என்னிடம் வந்தாய்? நான் என்ன செய்ய முடியும்?
பெக்வானே தயங்காமல் கூறினாள்..
அந்த கார் யாருடையது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். பின், அந்த காரை என் கணவரிடமிருந்து திருடி, அதன் சொந்தக்காரரிடம் சேர்ப்பித்து விட வேண்டும். இதுதான் நான், உங்களிடம் எதிர் பார்ப்பது..
அன்று மாலை காரில் திரும்பி வரும்போது, பெக்வானேவுக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றே ரமோட்ஸ்வேக்கு தோன்றியது. ஒப்புக் கொண்டு விட்டாள். இனி வேறு வழியில்லை. ஆனால் அது, அத்தனை சுலபமான காரியமாகத் தோன்றவில்லை. போலீஸுக்குத் தெரிவித்தால் வேலை சுலபமாகும். ஆனால், போலீஸுக்குப் போக முடியாத நிலை.
பெக்வானேவின் கணவனை போலீஸிடம் ஒப்படைத்து விட்டால், எல்லாம் முடிந்துவிடும். ஆனால், பெக்வானே அதை விரும்பவில்லையே! ரமோட்ஸ்வேக்கு அவளுடைய வாடிக்கையாளர்கள்தான் முக்கியம். ஆதலால், வேறு ஏதேனும் வழி கண்டு பிடிக்க வேண்டியதுதான்..
மாலை நேரம் கோழிக்கறி, பூசணிக்காய் உணவுக்குப் பிறகு, ரமோட்ஸ்வே மட்கோனிக்கு போன் செய் தாள்.
திருட்டு பென்ஸ் கார்கள் எங்கேயிருந்து இங்கே வருகின்றன என்று தெரியுமா?
எல்லைப்புறத்திலிருந்துதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
மட்கோனி கூறினார்.
தென் ஆப்பிரிக்காவில் அவற்றைத் திருடி, இங்கே கொண்டு வந்து, என்ஜின் நம்பரை அழித்து விட்டு, புதிதாக பெயின்ட் அடித்து விடுவார்கள். அல்லது, ஜாம்பியாவுக்கு அனுப்பி விடுவார்கள். இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஏன்.. எங்கள் எல்லோருக்குமே தெரியும்.
எனக்கு அது தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், இப்படியெல்லாம் மாற்றப்பட்ட பிறகு அந்த காரை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?
மட்கோனி சற்றே தாமதித்தார்..
காரின் சீரியல் நம்பர், பானட் அடியிலோ, வண்டியின் கீழ்புறத்திலோ இருக்கும். கவனமாகப் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம்
உங்களுக்குத் தெரியும் அல்லவா? எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்...
மட்கோனி பெருமூச்சு விட்டார். திருட்டு கார் சமாசாரங்கள் அவருக்குப் பிடிக்காத ஒன்று. அதில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது என அவர் எண்ணினார். ஆனால், இந்த உதவி கேட்பவள் ரமோட்ஸ்வே ஆயிற்றே! ஒரேயரு பதில்தான் தர முடியும்.
எங்கே எப்போது என்று சொல்..
மறுநாள் மாலை அவர்கள் பெக் வானேவின் தோட்டத்துக்குள் நுழைந் தார்கள். முன்னாலேயே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நாய்கள் கட்டப் பட்டு இருந்தன. பெக்வானேவின் கணவன், அவனுக்காக சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டிருந்த உணவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
மட்கோனி காரின் அடியில் நுழைந்து, தன்னுடைய டார்ச் வெளிச்சத்தில் உள்ளே பார்த்தார். ரமோட்ஸ்வே தானும் உதவிக்கு, கீழே வந்து பார்ப்பதாகத்தான் கூறினாள். ஆனால், அவள் மிகவும் பருமனாக இருப்பதால் உள்ளே நுழைவது சாத்தியமில்லாத காரியம் என்று மட்கோனிக்குத் தோன்றியதால் அவள் உதவியை மறுத்தார். பத்து நிமிடங்கள் கழித்து ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட நம்பருடன் அவர்கள் இருவரும் பூனை மாதிரி பெக்வானே வீட்டுத் தோட்டத்திலிருந்து வெளியேறி, தெருவில் நிறுத்தியிருந்த வெள்ளை நிற காருக்குள் நுழைந்தனர்.
இது மாத்திரம் போதுமா.. இதிலிருந்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்களா? - ரமோட்ஸ்வே கேட்டாள்.
ஆமாம். அவர்களுக்குத் தெரியும்..
அவரை, அவர் வீட்டு வாசலில் இறக்கி விட்டு, இருட்டில் கையசைத்து விடை பெற்றாள் ரமோட்ஸ்வே. அவர் செய்த இந்த உதவிக்கு நிச்சயம் பதிலுதவியை அவள் செய்வாள்.
அந்த வாரக் கடைசியில் ரமோட்ஸ்வே, அவளுடைய சிறிய காரை எடுத்துக் கொண்டு எல்லைப்புறத்திலுள்ள ஊரான மாஃபிகெங்குக்குச் சென்று, நேரே ரயில்வே உணவகத்துக்குச் சென்றாள். ஒரு உள்ளூர் பத்திரிகையை வாங்கி, ஜன்னல் அருகிலுள்ள மேஜையில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள். ஒன்றும் நல்ல செய்தி கிடைக்கவில்லை. அலுப்புடன் பத்திரிகையை வைத்து விட்டு, சுற்றியுள்ள சக வாடிக்கையாளர்களை பார்வை யால் மேய்ந்தாள்.
ரமோட்ஸ்வே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
அவள் சட்டென நிமிர்ந்துப் பார்த்தாள். பழைய பில்லி பிலானி. சற்று வயதாகி விட்டதைத் தவிர, வேறு மாற்றமில்லை. அவன், மொச்சுடி பள்ளியில் மேஜை அருகில் அமர்ந்து கனவு கண்டபடி இருந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது அவளுக்கு.
அவள், ஒரு பெரிய கோப்பை காபியும், கொறிப்பதற்கு இனிப்பு பன்னும் வாங்கிக் கொடுத்து, தன்னுடைய தேவையை விளக்கினாள்.
இந்த நம்பருடைய கார் யாருடையது என்று கண்டு பிடிக்க வேண்டும் பில்லி. நீ போலீஸில் இருப்பதால், உன்னால் அது சுலபமாக முடியும் என்றே நினைக் கிறேன்..
மட்கோனியினால் எழுதப்பட்ட அந்தத் துண்டுக் காகிதத்தை பில்லி பிலானி யிடம் கொடுத்தாள் ரமோட்ஸ்வே.
நீ கண்டுபிடித்தவுடன் அதன் சொந்தக்காரரிடமோ, இன்ஷூரன்ஸ் கம்பெனியிடமோ விவரத்தைச் சொல்லி காபரோன் நகரத்துக்கு அழைத்து வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை பார்க்கலாம். அவர்கள் செய்ய வேண்டி யது எல்லாம், தென் ஆப்பிரிக்க நம்பர் உள்ள அந்த காரின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை கொண்டு வந்தால் போதும். அந்த காரை அவர்கள் ஓட்டிச் செல்லலாம்.
பில்லி பிலானி ஆச்சரியத்துடன் கேட்டான்..
ஒன்றும் கொடுக்க வேண்டாமா.. சும்மாதானா?
ஒன்றும் தர வேண்டியதில்லை. ஒரு பொருளை அதன் சொந்தக்காரரிடம் சேர்ப்பதுதான் நோக்கம்.. அவ்வளவுதான். இதை நீ நம்புகிறாயா?
கண்டிப்பாக.. கண்டிப்பாக..
பில்லி உடனடியாகப் பதிலளித்தான்.
மேலும் பில்லி, நீ போலீஸ்காரன் என்பதை மறந்து விட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்த வரையில், நீ யாரையும் கைது செய்ய வேண்டி யிருக்காது.
சின்ன கைதுகூட கிடையாதா? - அவன் ஏமாற்றத் துடன் கேட்டான்.
அதுகூட கிடையாது..'
ரமோட்ஸ்வே அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
பிலானி அடுத்த நாள் போன் செய்தான்.
திருட்டு போன வண்டிகளின் பட்டியலில் இருந்து அந்த காரைக் கண்டுபிடித்து விட்டேன் ரமோட்ஸ்வே.. அதற்கு இன்ஷூரன்ஸ் கம்பெனி நஷ்ட ஈடு கொடுத் திருக்கிறது. கார் திரும்ப கிடைத்தால், அவர்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். அவர்கள் கம்பெனி ஆள் ஒருவனை எல்லைக்கு அனுப்பி காரை எடுத்துப் போவார்கள்..
நல்லது..
ரமோட்ஸ்வே, செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணிக்கு காபரோனில் உள்ள அங்காடி வாயிலில் நம்பர் பிளேட்டுடன் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறினாள்.
செவ்வாய்க்கிழமை காலை ஐந்து மணி சுமாருக்கு பெக்வானேவின் வீட்டுக்குச் சென்றாள். முந்தின இரவே அவர்கள் ஏற்பாட்டின்படி கார் சாவிகளை படுக்கை அறை ஜன்னலுக்கு வெளியே பெக்வானா தூக்கி எறிந்திருந்தாள். முன்பே, பெக்வானே ரமோஸ்வேயிடம், தன் கணவன் ஆழ்ந்து உறங்குவான் என்றும் காலை ஆறு மணிக்கு முன் எழுந்திருக்க மாட்டான் என்றும் கூறியிருந்தாள்.
காரை எடுத்து, வெளியே செல்லும் சத்தம் அவனுக்குக் கேட்க வாய்ப்பில்லை. எட்டு மணி நேரம் வரையில் கார் பறிபோன விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்த பின்போ -
கூப்பிடு போலீஸை..
பெக்வானேதான் கிறீச்சிட்டாள்.
ஆனால், அவள் புருஷனோ தயங்கினான்.
பிறகு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் - இப்படிப் பூசி மெழுகினான்.
அவள், அவனை நேராகக் கண்களுக்குள் பார்த்தாள். அவன் கூசி நெளிவது அவளுக்குத் தெரிந்தது. அவன் தவறுதான் செய்திருக்கிறான் என்று ஆரம்பத்திலிருந்தே அவள் நினைத்தது சரிதான்.
தான் திருடிய கார், பறிபோய் விட்டது என்று அவனால் போலீஸில் கூறமுடியாது.
திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்.
அன்று மாலை, அவள் ரமோட்ஸ்வேயைப் பார்த்து நன்றி கூறினாள்.
எனக்கு இப்போது ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. இனிமேல் அவர் செய்த தவறுக்கு நான் தூக்கமில்லாமல் இரவு முழுக்க அல்லாட வேண்டாம்..
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு இது ஒரு பாடமாகக் கூட இருக்கும். சுவையான பாடம்.. என்றாள் ரமோட்ஸ்வே
அவர் இனிமேல் இதுபோல் செய்ய மாட்டார். உங்களுக்கு நம் பழமொழி தெரியுமில்லையா.. ஓரிடத்தில் இடி விழுந்தால் மறுபடி அதே இடத்தில் தாக்காது என்று..
பெக்வானே சிரித்தாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 13
----------------------------------------------------------------
ஜீ ப்ரா டிரைவ்வில் உள்ள ரமோட்ஸ்வேயின் வீடு 1968-ல் கட்டப்பட்டது. கடைகள், அரசாங்கக் கட்டடங்கள் என்று ஊர் அப்போதுதான் கொஞ்சம் விரிவடைய ஆரம்பித்திருந்தது.
ரமோட்ஸ்வேக்கு தன் வீட்டைப் பற்றி மிகவும் கர்வம் உண்டு. வீட்டு விலையெல்லாம் யானை விலை, குதிரை விலை என்று எகிறி, நேர்மையாக உழைத்துச் சம்பாதிப்பவர்களால் வாங்க முடியாத நிலை ஏற்படு வதற்கு முன்பே, அவள் அந்த வீட்டை வாங்கியது பெரிய அதிர்ஷ்டம் என்றே நினைத்தாள்.
வெராந்தாவுக்கு அடுத்து பெரிய கூடம்.. அங்கிருந்த பெரிய ஜன்னல் வழியாக தோட்டத்துப் புல்வெளியைப் பார்க்கலாம். ஜன்னலுக்கு எதிரே, மிகவும் பெரிதாக ஒரு கனப்பு அடுப்பு.. அதன் மீது தன்னுடைய உயர் ரக சைனா கோப்பைகளையும் ராணி எலிசபெத்தின் படம் போட்ட தேநீர் கோப்பைகளையும் வைத்திருந்தாள். சுவரில் பங்க்வோட்டோ நகரத் தலைவர் ஸர் ஸிரிட்ஸ் காமாவின் புகைப்படம்.. அவர், ரமோட்ஸ்வேயைப் பார்த்துச் சிரிப்பது போல.. ஏன், ராணி எலிசபெத்துக்குக் கூட போட்ஸ்வேனா மக்களைப் பற்றி நிறைய தெரியும். அவர்களை ராணி மிகவும் விரும்புவார்.
ஆனால், ரமோட்ஸ்வே மிக உயர்வாக நினைத்தது அறுபது வயதில் எடுக்கப்பட்ட அவளுடைய தந்தையின் புகைப்படத்தைதான்.
ரமோட்ஸ்வே மிகவும் யதார்த்தமானவள்.. இருந்தபோதிலும், புகைப்படத்தில் இருக்கும் அவள் தந்தை சிரித்தபடி, தன்னைப் பார்த்து என் அருமை மகளே.. நீ ரொம்பவும் நன்றாக முன்னேறியிருக்கிறாய். உன்னைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று சொல்வது போன்ற அவளுடைய கற்பனைகளைத் தடுக்க முடிவதில்லை.
அப்பாவையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு, காபரோனைச் சுற்றிக் காட்டி, அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை எல்லாம் காட்டினால்.. அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்!
ரமோட்ஸ்வேயும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். அவளுடைய துப்பறியும் நிறுவனம், அவளுடைய வீடு எல்லாம் அவளுக்குத் தேவைக்கு மேலேயே கிடைத்திருப்பதாக அவள் எண்ணினாள். எப்படி யெல்லாம் காலங்கள் மாறுகின்றன என்பதை அவள் உணர்ந்துதான் இருந்தாள்.
நோட் மொகோடியை மணம் செய்தபோது, சொல்லத் தெரியாத துக்கம், அவளை கறுப்பு நாயைப் போலத் தொடர்ந்து வந்ததைப் போல அவள் உணர்ந்தாள். இப்போது அது இல்லை.
தந்தையின் பேச்சையோ அல்லது அத்தையின் அறிவுரைகளையோ கேட்டிருந்தால், நோட்டை அவள் மணந்திருந்த மாட்டாள். அவ்வளவு துன்பத் தையும் அனுபவித்திருக்க மாட்டாள். அவள் கேட்க வில்லை. இருபது வயதுக்குரிய தலைக்கனமும் பிடிவாதமும் திமிரும் ஏராளமாகவே அவளுக்குள் இருந்தது. எல்லாம் எனக்கு தெரியும் என்கிற அகம் பாவமும் கூட. இம்மாதிரி கண்மூடித்தனமாக நடக்கும் இளைஞர்கள் உலகத்தில் ஏராளமாகவே இருக்கின்றனர். அவளுடைய அப்பாவுக்கு ஆரம்பத்திலிருந்தே நோட்டைப் பிடிக்கவில்லை. அதை அவர், நேரடியாகக் கூறவும் செய்தார். அதற்குப் பதிலாக அவள், அழுதபடி.. அவன் ஒருவன்தான் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வான் என்று கூறினாள்.
அவன் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள மாட்டான். உன்னை அடித்து, பலவிதத்திலும் துன்புறுத்து வான். அவனுக்கு தன்னைப் பற்றிய நினைவுதான் நிறைய.. அவனது தேவைதான் அவனுக்கு முக்கியம். இதுபோன்ற மனிதர்களை, நான் சுரங்கத்தில் வேலை செய்யும்போது பார்த்திருக்கிறேன்.. அப்படிப்பட்ட ஆசாமிதான் அவனும்.
அவள் தலையசைத்து மறுத்தபடி அறையிலிருந்து வெளியே ஓட, அவர் மெல்லிய குரலில் அவளை அழைத்தார். அந்தக் குரல் இப்போதும் அவள் செவிகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிப்பதுண்டு. ஒரு நல்ல அன்பான மனிதரை, அவளை அரவணைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்று அல்லும் பகலும் நினைத்து வாழ்ந்தவரை, அவள் ரொம்பவே காயப்படுத்தி விட்டாள். பழைய காலத்தை அழித்து விட்டு, புதிதாக, தவறில்லாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
நான் கூட அப்படி நினைத்ததுண்டு மட்கோனி, அவளது கோப்பையில் தேநீரை நிரப்பியவாறு கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - மொழிபெயர்ப்பு மின்னூல்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|