Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
+7
விமந்தனி
ஜாஹீதாபானு
பாலாஜி
ayyasamy ram
M.M.SENTHIL
சிவா
soplangi
11 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
First topic message reminder :
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
எம்.எச். வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு; தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம்
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார். மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் அங்கு சென்ற சர்வதேச விசாரணைக் குழுவுடன், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார். மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் அங்கு சென்ற சர்வதேச விசாரணைக் குழுவுடன், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு மலேசிய பிரதமருக்கு மோடி கடிதம்
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், அவர் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த சம்பவத்தில் உலகமெங்கும் எழுந்துள்ள சீற்றம் நியாயமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரியான சூழ்நிலையை கண்டறிவதற்கு நடத்துகிற விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது’’ என கூறி உள்ளார்.
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 201407200814006259_Modi-writes-to-Malaysian-PM-over-MH17-crash-says-outrage_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201407200814006259_Modi-writes-to-Malaysian-PM-over-MH17-crash-says-outrage_SECVPF.gif)
அந்தக் கடிதத்தில், அவர் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த சம்பவத்தில் உலகமெங்கும் எழுந்துள்ள சீற்றம் நியாயமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரியான சூழ்நிலையை கண்டறிவதற்கு நடத்துகிற விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது’’ என கூறி உள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17–ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.
தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.
கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வவீடியோவாக் எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து உத்த்யோக பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 201407221351063840_Malaysia-Airlines-plane-crash-shows-moment-rebel-fighter_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201407221351063840_Malaysia-Airlines-plane-crash-shows-moment-rebel-fighter_SECVPF.gif)
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.
தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.
கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வவீடியோவாக் எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து உத்த்யோக பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகள், மலேசியாவிடம் ஒப்படைப்பு
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகளை மலேசியாவிடம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று ஒப்படைத்து விட்டனர்.
உலக நாடுகள் வலியுறுத்தல்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. தீர்மானம்
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கறுப்பு பெட்டிகள் ஒப்படைப்பு
இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.
மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
உடல்களும் ஒப்படைப்பு
இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டு, அதில் பலியானவர்களில் சுமார் 200 பேரது உடல்கள் அடங்கிய பைகள், ரெயில் மூலம் டன்ட்ஸ்க் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன்பட்டுள்ளனர். இதை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்திடம் ஒப்படைக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்; சம்பவ இடத்தில் விசாரணை குழுவினரை தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பதை கிளர்ச்சியாளர்கள் ஏற்று, அதில் முன்னேற்றம் காணச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகளை மலேசியாவிடம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று ஒப்படைத்து விட்டனர்.
உலக நாடுகள் வலியுறுத்தல்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. தீர்மானம்
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கறுப்பு பெட்டிகள் ஒப்படைப்பு
இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.
மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
உடல்களும் ஒப்படைப்பு
இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டு, அதில் பலியானவர்களில் சுமார் 200 பேரது உடல்கள் அடங்கிய பைகள், ரெயில் மூலம் டன்ட்ஸ்க் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன்பட்டுள்ளனர். இதை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்திடம் ஒப்படைக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்; சம்பவ இடத்தில் விசாரணை குழுவினரை தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பதை கிளர்ச்சியாளர்கள் ஏற்று, அதில் முன்னேற்றம் காணச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி - Page 7 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மனிதாபிமானம் கொள்ள வேண்டிய நிலையிலும்
மனிதாபிமானதடதைகடக் கொலலும் மனிதர்களை என்னவென்று சொல்வது . . .
மனிதாபிமானதடதைகடக் கொலலும் மனிதர்களை என்னவென்று சொல்வது . . .
lakshanika1@gmail.com- பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|