Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
+7
விமந்தனி
ஜாஹீதாபானு
பாலாஜி
ayyasamy ram
M.M.SENTHIL
சிவா
soplangi
11 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
First topic message reminder :
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
இவர்கள் உள் நாட்டு பிரச்சினையில் 300 பேரை பலி வாங்கி உள்ளனர்.
அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்... இந்த சம்பவத்தை செய்தவர்கள்
கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் .
அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்... இந்த சம்பவத்தை செய்தவர்கள்
கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும் .
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மலேசியா ஒரு வலுவான நாடாக இருந்திருந்தால் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அறிக்கை விடுவது மட்டுமே தனது வேலை என்பது டன் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளது கேவலமான செயல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மலேசியாவிற்கு சிங்கபூர் பர்மா தாய்லாந்த் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
வளைகுடா நாடுகளில் ஒரு நாட்டுக்கு பிரச்சினை என்றால் மற்ற நாடுகள் குரல் கொடுக்கும் அது போல நடந்தால் உண்டு.
மலேசிய அரசாங்கம் இது பெரிய விஷயமாக ஆக்க வேண்டும்.
வளைகுடா நாடுகளில் ஒரு நாட்டுக்கு பிரச்சினை என்றால் மற்ற நாடுகள் குரல் கொடுக்கும் அது போல நடந்தால் உண்டு.
மலேசிய அரசாங்கம் இது பெரிய விஷயமாக ஆக்க வேண்டும்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
இதில் மலேசிய பிரதமர் நஜிப் ராசக்கின் ஒன்றுவிட்ட
பாட்டி ஸ்ரீ சிதி அமிர்ரக் என்பவரும் பலியாகினார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
'ரஷியா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி' உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
'ரஷியா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி' செய்யப்படுகிறது என்று உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும். இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஓ.எஸ்.சி.இ. (ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு) குழு விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணை குழு சென்றது. அவர்கள் அப்பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்ய முயன்றுள்ளனர். அதற்கு கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணைக்குழுவை அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செல்லவிடவில்லை. அதையும் மீறி அவர்கள் சென்றபோது கிளர்ச்சியாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன. அனுமதி அளிக்க கிளர்ச்சியாளர்கள் மறுத்ததை அடுத்து விசாரணைக் குழுவினர் அங்கிருந்து திரும்பிவிட்டனர்.
விமானம் விழுந்து கிடக்கும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர். இதனால் விசாரணைக் குழுவினர் முழுமையான விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலேசியா குழுவும் கீவ் சென்றுள்ளது. இந்நிலையில் மலேசியா பிரதமர் நஜிப் ராசக் இவ்விவகாரம் தொடர்பாக ரஷியா அதிபர் புதினுடன் பேசியுள்ளார். அவர், முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று புதினிடம் கோரிக்கை வைத்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ரஷியாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ரஷியா உதவியுடன் சர்வதேச குற்றத்தின் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மலேசிய விமானத்தில் 6 எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் தான் சென்றனர்
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்க 6 பிரதிநிதிகள் மட்டுமே சென்றதாகவும், 100 பேர் சென்றதாக வந்த தகவல், தவறு என்றும் தெரியவந்துள்ளது.
20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இம்மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவித்தது.
ஆனால், சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற 6 பிரதிநிதிகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிலர் மட்டுமே, எம்.எச் 17 விமானத்தில் சென்றதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐ.நா.வின் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு தலைவர், மிச்சேல் சிதிபே, தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்க 6 பிரதிநிதிகள் மட்டுமே சென்றதாகவும், 100 பேர் சென்றதாக வந்த தகவல், தவறு என்றும் தெரியவந்துள்ளது.
20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இம்மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவித்தது.
ஆனால், சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற 6 பிரதிநிதிகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிலர் மட்டுமே, எம்.எச் 17 விமானத்தில் சென்றதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐ.நா.வின் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு தலைவர், மிச்சேல் சிதிபே, தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
கிளர்ச்சியாளர்கள் உதவியுடன் ரஷ்யா 38 சடலங்களை அழித்தது உக்ரைன் அரசு குற்றசாட்டு
கீவ்
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்துக்கு அடையாளம் காணப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் , ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் பக் என்னும் நவீன ரக ஏவுகணையை கொடுத்திருப்பதாகவும், அந்த ஏவுகணை 28 கிமீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் இந்த கருத்தை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. இதனால் மலேசிய விமானம் MH17ஐ சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிற நிலையில், சம்பவத்தை தொடர்ந்து ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் விவாதித்தது தொடர்பான ஒலிப்பதிவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள், ‘உக்ரைன் ராணுவ விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி விட்டனர். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அது பயணிகள் விமானம் என்று’ என அவர்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும்.
* விமான விழுந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரினா திபுனோவா (வயது 65) எனபவர் கூறுகையில் பெருத்த ஊளை சத்தம் கேட்டது . அதை தொடர்ந்து தனது வீட்டின் மேற்கூரையை உடைத்து மழைபோல் சடலங்கள் விழ தொடங்கியது. இன்னும் ஆடை இல்லாத ஒரு பெண் சடலம் தனது வீட்டிற்குள் இன்னும் உள்ளது என கூறினார்.மேலும் ஒரு சடலம் தனது படுக்கையில்; வந்து விழுந்ததாக கூறினார். நிபுண்ர்கள் வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆங்காங்கே வயல் வெளீகளில் சடலங்கள் விழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* சம்பவ நடந்த இடத்தில் யாரும் எதையும் தொடக்கூடாது என சர்வதேச விசாரணை குழு கூறி இருந்தது. இருந்த போதிலும் ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்கள் சம்பவ இடத்தில் 38 சடலங்களை அப்புறபடுத்தி உள்ளனர் அப்போது அவர்கள் விமான விபத்துக்கான சாட்சியங்களை அழித்து உள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
* சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி வால்டிமர் புதின் ஒபாமாவுக்கும் ஐநாசபை பிரதிநிதிகளுக்கும் மலேசிய விமான சுட்டு வீழ்த்தபட்டது குறித்த அறிக்கையை அனுப்பி உள்ளார்.
* விமான விழுந்த இடத்தில் ஆய்வு நடத்த சென்ற சர்வதேச ஆய்வாளர்களை அந்த பகுதியில் குடிபோதையில் மற்றும் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்களால் தடுக்கபடுகின்றனர்.
* பிரிட்டன் ஜான் ஆல்டர் ( வயது 63) எனபவர் சடல் உள்பட பல சடலங்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
கீவ்
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்துக்கு அடையாளம் காணப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் , ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் பக் என்னும் நவீன ரக ஏவுகணையை கொடுத்திருப்பதாகவும், அந்த ஏவுகணை 28 கிமீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் இந்த கருத்தை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. இதனால் மலேசிய விமானம் MH17ஐ சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிற நிலையில், சம்பவத்தை தொடர்ந்து ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் விவாதித்தது தொடர்பான ஒலிப்பதிவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும்.
* சம்பவ நடந்த இடத்தில் யாரும் எதையும் தொடக்கூடாது என சர்வதேச விசாரணை குழு கூறி இருந்தது. இருந்த போதிலும் ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்கள் சம்பவ இடத்தில் 38 சடலங்களை அப்புறபடுத்தி உள்ளனர் அப்போது அவர்கள் விமான விபத்துக்கான சாட்சியங்களை அழித்து உள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
* விமான விழுந்த இடத்தில் ஆய்வு நடத்த சென்ற சர்வதேச ஆய்வாளர்களை அந்த பகுதியில் குடிபோதையில் மற்றும் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்களால் தடுக்கபடுகின்றனர்.
* பிரிட்டன் ஜான் ஆல்டர் ( வயது 63) எனபவர் சடல் உள்பட பல சடலங்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது - ஆஸ்திரேலியா
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். இவ்விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சர்வதேச விசாரணை நடத்த வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையே உக்ரைன் பகுதியில் சண்டை நிறுத்தத்திற்கு ரஷியா அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகளின் தலைவர்களை ஆத்திரம் அடை செய்துள்ளது.
விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பணிகளும் பலியாகினர். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், "இந்த கோர சம்பவத்தின் பின்னால் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இருக்கின்றனரா என்ற கேள்விக்கு ரஷியா பதில் அளிக்க வேண்டும்" என்றார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆதரவாளர்கள் உள்ள பகுதியிலே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரஷியாவே பெரும்பாலான ஆயுதங்களை வழங்குகிறது. என்று டோனி அப்பாட் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து துக்கம் அனுசரிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டுள்ளது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். இவ்விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சர்வதேச விசாரணை நடத்த வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையே உக்ரைன் பகுதியில் சண்டை நிறுத்தத்திற்கு ரஷியா அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகளின் தலைவர்களை ஆத்திரம் அடை செய்துள்ளது.
விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பணிகளும் பலியாகினர். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், "இந்த கோர சம்பவத்தின் பின்னால் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இருக்கின்றனரா என்ற கேள்விக்கு ரஷியா பதில் அளிக்க வேண்டும்" என்றார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆதரவாளர்கள் உள்ள பகுதியிலே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரஷியாவே பெரும்பாலான ஆயுதங்களை வழங்குகிறது. என்று டோனி அப்பாட் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து துக்கம் அனுசரிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
மீண்டும் நடந்த இவ்விமான விபத்தை ஜீரணிக்கவே முடியாது... கொந்தளிக்கும் உறவினர்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தங்களால் ஜீரணத்துக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளனர் மலேசியர்கள். காணாமல் போன எம்ஹெச்370 விமானத்தினால் ஏற்பட்ட வடுவே இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் இப்படி மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
295 பேர் உயிரிழ்ந்துள்ள இந்த சம்பவத்தால், ஏற்கனவே நடைபெற்ற மலேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். நாங்கள் பட்ட வேதனையை தற்போது இந்த 295 பேரின் குடும்பத்தினரும் அனுபவிப்பார்களே என்று வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்களுக்கு பதவியில் இருப்பவர்கள் தக்க பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கொந்தளித்து போய் உள்ளனர். இது பற்றிய டுவிட்டர் செய்தியில், "நாம் அனுபவித்த துன்பத்தினை அனுபவிக்கும் 295 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான் நம்முடைய உறவினர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தங்களால் ஜீரணத்துக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளனர் மலேசியர்கள். காணாமல் போன எம்ஹெச்370 விமானத்தினால் ஏற்பட்ட வடுவே இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் இப்படி மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
295 பேர் உயிரிழ்ந்துள்ள இந்த சம்பவத்தால், ஏற்கனவே நடைபெற்ற மலேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். நாங்கள் பட்ட வேதனையை தற்போது இந்த 295 பேரின் குடும்பத்தினரும் அனுபவிப்பார்களே என்று வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்களுக்கு பதவியில் இருப்பவர்கள் தக்க பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கொந்தளித்து போய் உள்ளனர். இது பற்றிய டுவிட்டர் செய்தியில், "நாம் அனுபவித்த துன்பத்தினை அனுபவிக்கும் 295 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான் நம்முடைய உறவினர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|