புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:08 am

அன்று கால்பந்து வீராங்கனை... இன்று பெட்டி கடையில்! 10527333_705855312820902_1445886400567546305_n

அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கால் பந்து போட்டியை குதூகலமாக கண்டு களித்தும், கோப்பையை வென்ற ஜெர்மன் அணியின் பெருமைகளை வாய் வலிக்க பேசியும் முடித்தாயிற்று. ஆனால் இத்தகையை பெருமை வாய்ந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில், லீக் சுற்றுக்கு கூட இந்தியாவால் நுழைய முடியவில்லையே என்ற ஆதங்கம் அடிமனதில் ஓடியபடிதான் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை கண்டுகளித்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்...

ஏற்கனவே இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவமும், ஊக்கமும், நிதியுதவியும், தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பும் பிற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மற்றொரு உதாரணம்தான் அகில இந்திய அளவில் பல ஜூனியர், சீனியர் அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று, விருதுகளை வென்று, பின்னர் போதிய நிதியுதவியோ, அரசின் ஊக்கமோ கிடைக்காமல் போய் இன்று வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்மிதாவின் கதை.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஷ்மிதாவுக்கு தற்போது வயது 23. பள்ளியில் படித்தபோது தனது பள்ளியின் சார்பிலும், ஒடிசா மாநிலத்தின் சார்பிலும் பல ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். 2012 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் ஒடிசா சார்பில் பங்கேற்று வெற்றிக்கோப்பையை தட்டி, தான் சார்ந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர்.

இத்தகைய திறமை வாய்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் இன்றைய நிலை, வாழ்க்கையை ஓட்ட தனது கிராமத்தில் வெற்றிலை பாக்கு விற்கும் பெட்டிக்கடை வைத்து நடத்தும் அளவிற்கு உள்ளது. இவரது தந்தை ஒரு தினக்கூலி. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு புவனேஸ்வரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்தான் வசிக்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பங்காளதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். மேலும் பஹ்ரைனில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய அணியிலும் பங்கேற்று விளையாடி அணி வெற்றிபெற உதவி உள்ளார்.

ஆனால் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்று, மென்மேலும் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக வேண்டும் என்ற அவரது லட்சியத்தை அடைய முடியாத அளவிற்கு வறுமை அவரை முடக்கி போட்டுவிட்டது. அரசு தரப்பிலிருந்தோ அல்லது வேறு எந்த ஒரு தரப்பிலிருந்தோ ரஷ்மிதாவுக்கு உதவிக்கரம் நீளாத நிலையில், கூலித்தொழிலாளியான அவரது தந்தையும் மகளின் கனவுக்கு உதவ முடியாத கையறு நிலையில் தவிக்க, வேறு வழியில்லாமல் தனது கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டு தந்தையைப்போன்றே தினக்கூலி வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டுவிட்டு, குடும்ப வாழ்க்கையில் தனது கவனத்தை திருப்பிக்கொண்டுவிட்டார்.

கணவருக்கும் நிரந்தர வேலை இல்லாத நிலையில் குடும்ப செலவுகளை சமாளிக்க தனது வீட்டின் முன்புறம் சிறிய அளவிலான வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா.

ஆனாலும் அவரிடம் கால்பந்தாட்டம் மீதான பேரார்வம் குறையவில்லை. கால்பந்தாட்டம் குறித்து பேசினாலே ரஷ்மிதா கண்களிலும், முகத்திலும் ஆயிரம் வால்ட்ஸ் பல்பு மின்னுகிறது.

" கால்பந்தாட்டம் எனது ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று" என இன்னமும் அதன் மீதான ஆர்வம் குன்றாமல் பேசுகிறார் ரஷ்மிதா. அவர் கூறுவது உண்மைதான்..12 வயதிலேயே கால்பந்தாட்டத்தை விளையாட தொடங்கியவர் அல்லவா அவர். அவரது திறமையை கண்டறிந்து, சில கோச்சர்கள் தாமாக முன்வந்து கால்பந்தாட்டத்தின் நுணக்கங்களை ரஷ்மிதாவுக்கு முறையாக கற்றுக்கொடுத்து வளர்த்ததன் விளைவாக 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற AFC U-16 தகுதியாளர்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று திரும்பினார். இந்த போட்டியில் கலந்துகொள்ள சென்றதால், அவரால் தனது 10 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுத முடியாமல் போய்விட்டது. ஏனெனில் தேர்வு தேதியும், போட்டி தேதியும் ஒன்றாக அமைந்துபோனதுதான் காரணம் என்று அதனை நினைவு கூர்கிறார் ரஷ்மிதா.

ஆனால் அவரது இந்த தியாகத்திற்கு பலனில்லாமல் போகவில்லை. தனது மாநிலத்தில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து இந்திய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட தேசிய அணியிலும் இடம்பிடித்தார்.

ஆனால் விளையாட்டு விடுதியில் தொடர்ந்து தங்கியிருக்க தேவையான பணம் இல்லாத நிலையில், எந்த ஒரு உதவிக்கரமும் நீளாத சூழலில், அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் , அவரால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமலேயே போய்விட்டது.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகின பின்னர்தான், ரஷ்மிதாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சுதம் மராண்டி. தன்னால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமல் போனாலும், குறைந்தபட்சம் வறுமையிலிருந்தாவது மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா!

- பா. முகிலன் @ விகடன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 18, 2014 12:09 pm

வருத்தமான பகிர்வு ...

விளையாட்டு துறையில் வளராமல் எப்படி இந்தியா வல்லரசு கனவு காண்கின்றது என்று தெரியவில்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக