Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
+2
T.N.Balasubramanian
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
First topic message reminder :
தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். மேலும் உறவினர்களுக்கு அனுப்புபோவதாகவும், பல லட்சம் கேட்டும்,தொந்தரவு செய்துள்ளனர். இது பற்றி முத்து மனைவி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பெண் வீட்டில் ரெய்டு: புகாரின் பேரில இரண்டு நாட்களுக்கு முன் வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தியும், சரவணன் மற்றும் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகிவிட்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார்,இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா,வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ ., ஆணிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சோதனையில், முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
[note]இந்தச் செய்தியின் முழு விபரங்களை பின்னர் தருகிறேன்[/note]
தேவகோட்டை: சிவகங்கை,தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவான பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேவகோட்டை அருகே கன்னங்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி, கடந்த 2011 ல் கல்லுாரி படிக்கும் போது, தன்னை , அவருடை தோழி தேவகோட்டை அண்ணாச்சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி 36, அவரின் நண்பர்கள் கண்ணங்கோட்டை சரவணன் உட்பட சிலர் அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு முதலில் 'சிடி' அனுப்பியுள்ளனர். மேலும் உறவினர்களுக்கு அனுப்புபோவதாகவும், பல லட்சம் கேட்டும்,தொந்தரவு செய்துள்ளனர். இது பற்றி முத்து மனைவி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
பெண் வீட்டில் ரெய்டு: புகாரின் பேரில இரண்டு நாட்களுக்கு முன் வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தியும், சரவணன் மற்றும் முக்கிய புள்ளிகள் தலைமறைவாகிவிட்டனர். நேற்று இரவு டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார்,இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா,வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ ., ஆணிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சோதனையில், முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
[note]இந்தச் செய்தியின் முழு விபரங்களை பின்னர் தருகிறேன்[/note]
Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...'
பெரிய இடத்துக் குடும்பப் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் தேவகோட்டையில் சிக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அந்த நெருக்கம் ஹோட்டல் வரை சென்றிருக்கிறது. அந்த இளைஞரோ அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். அது தெரிந்தும் காதல் மயக்கத்தில் பத்மா கண்டு கொள்ளவில்லை. அதுதான் தற்போது வினையாகியிருக்கிறது.
பத்மாவுக்கு தற்போது வேறு இடத்தில் திருமணமாகிவிட்டது. பத்மாவின் புகுந்த வீடு வசதியான குடும்பம். பத்மாவின் காதலனோ தன் வசம் இருந்த வீடியோவையும், போட்டோக்களையும் காட்டி பத்மாவை மிரட்ட ஆரம்பித்துள்ளான். பத்மாவும் பயத்தில் பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்க... மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் பணம் கொடுப்பதை பத்மா நிறுத்த... போட்டோக்களையும் வீடியோவையும் நண்பர்களுக்குப் படையல் போட்டிருக்கிறார் அந்த இளைஞர். பத்மாவின் போட்டோ, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஜெயந்தி என்ற புரோக்கர் ஒருவர் கைக்குப்போக... அவரும் பத்மாவை மிரட்டி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடும் என்று தன் கணவரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருக்கிறார் பத்மா. பதறிப்போன கணவரோ, போலீஸுக்குப் போனார்.
தேவகோட்டை டி.எஸ்.பி. பொன்.கார்த்திக் குமாரை இவர்கள் சந்தித்துள்ளார்கள். தங்கள் பெயர் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஜெயந்தியை குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
ஜெயந்தியைப் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ஜெயந்தி பற்றி எங்களுக்குப் புகார் வந்ததும் சாதாரணமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்களை தனக்கு தெரிந்த இளைஞர்களுடன் பழக வைப்பது. அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது ஆபாச படம் எடுப்பது, அந்த ஆண்களிடம் இருந்து பணம் கறப்பது, அந்தப் பெண்களை மிரட்டி விபசாரத்தில் தள்ளுவது என்பதை ரெகுலராக செய்து வந்திருக்கிறார். சில அரசியல் பிரமுகர்கள் குடும்பப் பெண்களாக வேண்டும் என்று கேட்பதால், இந்த விவகாரத்தில் சிக்கும் பெண்களை அவர்களுக்கு விருந்து வைப்பாள். 'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...’ - இதுதான் ஜெயந்தியின் மிரட்டும் டெக்னிக்.
அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவிதான் ஜெயந்தியின் பண டீலிங்கை கவனிப்பவர். இதுவரை 14 பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அவருக்காகத் தொடர்ந்து படம் எடுத்து வந்த சரவணன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இவர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து போன் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். ஜெயந்தி சிக்கினால் பல அரசியல் புள்ளிகளும், முக்கியப் பிரமுகர்களும் மாட்டுவார்கள் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்'' என்று சொல்கிறார்கள்.
நீதிமன்ற அனுமதியுடன் ஜெயந்தியின் வீட்டை உடைத்து போலீஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டுக்குள் இருந்து 40 சி.டி-க்கள், மூன்று செல்போன்கள், ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தேவகோட்டை டி.எஸ்.பி பொன்.கார்த்திக் குமாரிடம் பேசினோம். ''பாதிக்கப்பட்டப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தோம். இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள். இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியாகச் சொன்னார்.
காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அபுதாஹிர் @ ஜூனியர் விகடன்
பெரிய இடத்துக் குடும்பப் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் தேவகோட்டையில் சிக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அந்த நெருக்கம் ஹோட்டல் வரை சென்றிருக்கிறது. அந்த இளைஞரோ அதை செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். அது தெரிந்தும் காதல் மயக்கத்தில் பத்மா கண்டு கொள்ளவில்லை. அதுதான் தற்போது வினையாகியிருக்கிறது.
பத்மாவுக்கு தற்போது வேறு இடத்தில் திருமணமாகிவிட்டது. பத்மாவின் புகுந்த வீடு வசதியான குடும்பம். பத்மாவின் காதலனோ தன் வசம் இருந்த வீடியோவையும், போட்டோக்களையும் காட்டி பத்மாவை மிரட்ட ஆரம்பித்துள்ளான். பத்மாவும் பயத்தில் பணத்தைக் கொடுக்க ஆரம்பிக்க... மிரட்டல் தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் பணம் கொடுப்பதை பத்மா நிறுத்த... போட்டோக்களையும் வீடியோவையும் நண்பர்களுக்குப் படையல் போட்டிருக்கிறார் அந்த இளைஞர். பத்மாவின் போட்டோ, அந்த வட்டாரத்தில் இருக்கும் ஜெயந்தி என்ற புரோக்கர் ஒருவர் கைக்குப்போக... அவரும் பத்மாவை மிரட்டி விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடும் என்று தன் கணவரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருக்கிறார் பத்மா. பதறிப்போன கணவரோ, போலீஸுக்குப் போனார்.
தேவகோட்டை டி.எஸ்.பி. பொன்.கார்த்திக் குமாரை இவர்கள் சந்தித்துள்ளார்கள். தங்கள் பெயர் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஜெயந்தியை குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
ஜெயந்தியைப் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். 'ஜெயந்தி பற்றி எங்களுக்குப் புகார் வந்ததும் சாதாரணமாகத்தான் விசாரிக்க ஆரம்பித்தோம். அவரைப் பற்றி கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சியாக இருந்தது. அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்தப் பெண்களை தனக்கு தெரிந்த இளைஞர்களுடன் பழக வைப்பது. அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது ஆபாச படம் எடுப்பது, அந்த ஆண்களிடம் இருந்து பணம் கறப்பது, அந்தப் பெண்களை மிரட்டி விபசாரத்தில் தள்ளுவது என்பதை ரெகுலராக செய்து வந்திருக்கிறார். சில அரசியல் பிரமுகர்கள் குடும்பப் பெண்களாக வேண்டும் என்று கேட்பதால், இந்த விவகாரத்தில் சிக்கும் பெண்களை அவர்களுக்கு விருந்து வைப்பாள். 'பணம் கொடு... இல்லைன்னா படுக்கைக்குப் போ...’ - இதுதான் ஜெயந்தியின் மிரட்டும் டெக்னிக்.
அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவிதான் ஜெயந்தியின் பண டீலிங்கை கவனிப்பவர். இதுவரை 14 பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். அவருக்காகத் தொடர்ந்து படம் எடுத்து வந்த சரவணன் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். இவர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து போன் வர ஆரம்பித்திருக்கிறது. ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். ஜெயந்தி சிக்கினால் பல அரசியல் புள்ளிகளும், முக்கியப் பிரமுகர்களும் மாட்டுவார்கள் என்பதால் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்'' என்று சொல்கிறார்கள்.
நீதிமன்ற அனுமதியுடன் ஜெயந்தியின் வீட்டை உடைத்து போலீஸார் சோதனையிட்டனர். அவரது வீட்டுக்குள் இருந்து 40 சி.டி-க்கள், மூன்று செல்போன்கள், ஒரு ஃபிலிம் ரோல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தேவகோட்டை டி.எஸ்.பி பொன்.கார்த்திக் குமாரிடம் பேசினோம். ''பாதிக்கப்பட்டப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தோம். இதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது முதல் கட்டமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடிய சீக்கிரம் இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள். இதில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியாகச் சொன்னார்.
காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அபுதாஹிர் @ ஜூனியர் விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
காதலிப்பது தவறு இல்லை. காதல் என்ற போர்வையில் இதுபோன்ற நயவஞ்சகர்களிடம் சிக்கி பெண்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Re: ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
ஆபாச பட வழக்கு தொடர்பாக தே.மு.தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பசுமதிபிரியா. இவரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தேவகோட்டை அண்ணாசாலையில் வசிக்கும் ஜெயந்தி (வயது 36), கண்ணங்கோட்டை சரவணன் (30) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் ஜெயந்தி போலீசில் சிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு பெற்று ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சிடி, மொபைல், பிலிம் ரோல் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சிவகங்கை செசன்ஸ் கோர்ட்டில் ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்று தேவகோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தினமும் காலை கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் கைது
இந்தநிலையில், ஏற்கனவே புகார் கொடுத்த பசுமதி பிரியாவின் மாமியாரான, கண்ணங்கோட்டை ஆறுமுகம் மனைவி தவமணியை (59) ஜெயந்தியும், சரவணனும், தன்னிடம் போலீசில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் ஜெயந்தி, சரவணன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமைச் சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஜெயந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டதேவியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் ராம்குமார் (32) கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுதாவை (26) தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்ணங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பசுமதிபிரியா. இவரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, தேவகோட்டை அண்ணாசாலையில் வசிக்கும் ஜெயந்தி (வயது 36), கண்ணங்கோட்டை சரவணன் (30) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் ஜெயந்தி போலீசில் சிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு பெற்று ஜெயந்தியின் வீட்டு பூட்டை உடைத்து சோதனையிட்டனர். சிடி, மொபைல், பிலிம் ரோல் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சிவகங்கை செசன்ஸ் கோர்ட்டில் ஜெயந்தி, சரவணன் ஆகிய இருவரும் முன்ஜாமீன் பெற்று தேவகோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தினமும் காலை கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் கைது
இந்தநிலையில், ஏற்கனவே புகார் கொடுத்த பசுமதி பிரியாவின் மாமியாரான, கண்ணங்கோட்டை ஆறுமுகம் மனைவி தவமணியை (59) ஜெயந்தியும், சரவணனும், தன்னிடம் போலீசில் ஏன் புகார் கொடுத்தீர்கள் என கேட்டு, மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் ஜெயந்தி, சரவணன் ஆகியோர் மீது பெண் வன்கொடுமைச் சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஜெயந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டதேவியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் ராம்குமார் (32) கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுதாவை (26) தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
» அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை
» அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை
» அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|