ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

2 posters

Go down

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Empty இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

Post by ayyasamy ram Sun Jul 13, 2014 12:29 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! QVcck3LmQEmoisFv44Um+E_1403605901
-
முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம்,
பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்
நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
-
சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு
தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில்
இத்தாவரம் மிகுதியாகக் காணப்பட்டதால்
இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி
பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
-
9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன்,
இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது
சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை
சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து,
வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை
சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
-
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர்
வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று
36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி
செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட
சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்
செய்தியை உறுதி செய்கிறது.
-
1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்0
மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை
காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற
வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல்
மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில்
காணலாம்.
-
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும்,
சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த
தோற்றத்தில் காணப்படுகிறது கோயில்.
கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார
தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத் தலம்
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை
கொண்டது.
-
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி,
மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார
கோயிலாக இருந்து, நாளடைவில் பிற
கோயில்களைப் போலவே இறைவியையும்
பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
-
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள்.
கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள
அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-
கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-
தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி,
தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள
பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
-
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி
விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று
இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்
பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை,
நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன்,
சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
-
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர்
என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர்
தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய்
காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள
வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு
வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில்
கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில்
திருமணம் நடந்தேறுகிறதாம்.
-
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின்
கனவில் தோன்றிய ஈசன், “உங்கள் தோட்டத்தில்
உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன்
கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என்
பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!’ என்றார்.
-
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட
தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து
வரும்படி கூறினார், அப்பெண்மணி.
-
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்
மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்
இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய்
முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும்.
அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே
இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப்
பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்து
விட்டு, அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும்
கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
-
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும்
உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும்
சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி
அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல்
ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச
ருத்ராபிஷேகமாகும்.
-
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும்
ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று
வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!
-

எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து
நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர்
செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில்
குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.
-
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை;
மாலை 5 முதல் இரவு 8 வரை.
-
தொலைபேசி: 044-2300360
-
——————————-
- வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
(குமுதம் பக்தி செய்திகள்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Empty Re: இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

Post by saski Sun Jul 13, 2014 6:18 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 103459460 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 3838410834 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 1571444738 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum