Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 காமன்வெல்த் போட்டிகள்
5 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
2014 காமன்வெல்த் போட்டிகள்
First topic message reminder :
2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா
2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
Last edited by சிவா on Tue Jul 22, 2014 2:42 am; edited 1 time in total
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
இந்திய வீரர் காஷ்யப் தங்கம் வென்று சாதனை
காமன்வெல்த் பாட்மிண்டன் ஆட்டவர் ஒற்றைய போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில், 32 ஆண்டு கால காமன்வெல்த் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் காஷ்யப்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சிங்கப்பூரின் டெரீக் வாங்கை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில், காஷ்யப் 21-14, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். இது, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற 15-வது தங்கப்பதக்கம் ஆகும்.
இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான குருசாய்தத் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அதேவேளையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.
காமன்வெல்த் பாட்மிண்டன் ஆட்டவர் ஒற்றைய போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில், 32 ஆண்டு கால காமன்வெல்த் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் காஷ்யப்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சிங்கப்பூரின் டெரீக் வாங்கை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில், காஷ்யப் 21-14, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். இது, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற 15-வது தங்கப்பதக்கம் ஆகும்.
இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான குருசாய்தத் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அதேவேளையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
வரலாறு படைத்த தமிழக ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம்
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா - ஜோஷ்னா ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கப் பரிசை, முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2014 காமன்வெல்த் விளையாட்டில், மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
காமன்வெல்த் விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதை அறிந்தேன். தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா இருவரும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான சாதனைக்காக, தமிழக மக்கள் சார்பில் என் உளமாற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டில் நான் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் உங்கள் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்களுக்கும் உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் காலத்தில் தமிழகத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் நீங்கள் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வரலாறு படைத்தது தமிழக ஜோடி
முன்னதாக, காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இதன்மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது தீபிகா - ஜோஷ்னா ஜோடி.
தீபிகா - ஜோஷ்னா இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் தீபிகா - ஜோஷ்னா ஜோடி 11-6, 11-8 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜென்னி டங்காப் - லாரா மஸாரோ ஜோடியைத் தோற்கடித்தது.
கடந்த 1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்ட பிறகு, அதில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது அந்தக் குறையை தீபிகா - ஜோஷ்னா ஜோடி தீர்த்துள்ளது.
பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான ஜோஷ்னா, இப்போது தீபிகாவுடன் இணைந்து காமன்வெல்த்திலும் சாதித்திருக்கிறார்.
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா - ஜோஷ்னா ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கப் பரிசை, முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2014 காமன்வெல்த் விளையாட்டில், மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
காமன்வெல்த் விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதை அறிந்தேன். தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா இருவரும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான சாதனைக்காக, தமிழக மக்கள் சார்பில் என் உளமாற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டில் நான் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் உங்கள் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்களுக்கும் உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் காலத்தில் தமிழகத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் நீங்கள் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வரலாறு படைத்தது தமிழக ஜோடி
முன்னதாக, காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இதன்மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது தீபிகா - ஜோஷ்னா ஜோடி.
தீபிகா - ஜோஷ்னா இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் தீபிகா - ஜோஷ்னா ஜோடி 11-6, 11-8 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜென்னி டங்காப் - லாரா மஸாரோ ஜோடியைத் தோற்கடித்தது.
கடந்த 1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்ட பிறகு, அதில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது அந்தக் குறையை தீபிகா - ஜோஷ்னா ஜோடி தீர்த்துள்ளது.
பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான ஜோஷ்னா, இப்போது தீபிகாவுடன் இணைந்து காமன்வெல்த்திலும் சாதித்திருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
கிளாஸ்கோவில் இந்திய மல்யுத்த நடுவர் கைது |
காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில், வலுவான பாலியல் புகார் ஒன்றில், இந்திய மல்யுத்த போட்டி நடுவர் விரேந்தர் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில், இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விரு கைது நடவடிக்கைகள் குறித்தும் காமன்வெல்த் போட்டி அமைப்பு அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதாக, ஸ்காட்லாந்த் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
45 மற்றும் 49 வயது ஆன இரண்டு ஆண் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் தங்கியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.
முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கச்சிதமாக பயன்படுத்தி வெற்றி பெற்று தங்கத்தைத் தனதாக்கியது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி வீரர்களின் முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.
முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.
முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கச்சிதமாக பயன்படுத்தி வெற்றி பெற்று தங்கத்தைத் தனதாக்கியது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி வீரர்களின் முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.
முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
குத்துச்சண்டை போட்டியில் தேவேந்திரோ, சரிதாவுக்கு வெள்ளி
காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், சரிதா தேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் பேடி பர்ன்ஸ் 3-0 என்ற கணக்கில் இந்தியாவின் தேவேந்திரோ சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதனால் தேவேந்திரோவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
மகளிர் லைட் வெயிட் (57-60 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஷெல்லி வாட்ஸ் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சரிதா தேவியைத் தோற்கடித்தார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சரிதா.
காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், சரிதா தேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் பேடி பர்ன்ஸ் 3-0 என்ற கணக்கில் இந்தியாவின் தேவேந்திரோ சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதனால் தேவேந்திரோவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
மகளிர் லைட் வெயிட் (57-60 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஷெல்லி வாட்ஸ் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சரிதா தேவியைத் தோற்கடித்தார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சரிதா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
டேபிள் டென்னிஸ்: ஷரத் கமல் ஜோடிக்கு வெள்ளி
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-8, 7-11, 9-11, 5-11 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் நிங் காவ்-ஹூ லீ ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-8, 7-11, 9-11, 5-11 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் நிங் காவ்-ஹூ லீ ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
மகளிர் வட்டு எறிதல்: சீமாவுக்கு வெள்ளி
காமன்வெல்த் மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா அந்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கிருஷ்ணா பூனியா 5-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சீமா, தனது 4-வது முயற்சியில் 61.61 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2006 காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சீமா, 2010-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இப்போது 3-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கிருஷ்ணா பூனியா கடுமையாகப் போராடியபோதும் அவரால் 57.84 மீ. தூரத்துக்கு மேல் வட்டு எறிய முடியவில்லை. முன்னாள் உலக சாம்பியனான டேனி சாமுவேல்ஸ் (64.88 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் ஜேட் லாலி (60.48 மீ. தூரம்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
சஹானா ஏமாற்றம்
மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சஹானா குமாரி 1.86 மீ. தூரம் தாண்டியபோதும் அவரால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பினார்.
காமன்வெல்த் மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா அந்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கிருஷ்ணா பூனியா 5-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சீமா, தனது 4-வது முயற்சியில் 61.61 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2006 காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சீமா, 2010-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இப்போது 3-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கிருஷ்ணா பூனியா கடுமையாகப் போராடியபோதும் அவரால் 57.84 மீ. தூரத்துக்கு மேல் வட்டு எறிய முடியவில்லை. முன்னாள் உலக சாம்பியனான டேனி சாமுவேல்ஸ் (64.88 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் ஜேட் லாலி (60.48 மீ. தூரம்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
சஹானா ஏமாற்றம்
மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சஹானா குமாரி 1.86 மீ. தூரம் தாண்டியபோதும் அவரால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: 15 தங்க பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது இந்தியா
இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது.
இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே போல் 49 தங்கம், 42 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும், 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தையும் பிடித்தன.
இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது.
இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே போல் 49 தங்கம், 42 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும், 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தையும் பிடித்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|