Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடி மாத ராசி பலன்கள் !
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆடி மாத ராசி பலன்கள் !
First topic message reminder :
மேஷம்: எதிலும் முதலிடத்தை பிடிக்க விரும்புபவர்களே! முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! முற்போக்குச் சிந்தனையால் சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. ராசிக்கு 6ல் ராகு நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். 12வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோயில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4ல் குருவும், சூரியனும் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும்.
சிலர் வீடு மாற வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, ஒவ்வாமை, தொற்று, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது.
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது, பங்குதாரர்களை மாற்றுவது போன்ற விஷயத்தில் அவசர முடிவு வேண்டாம்.
வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிக வேலைகள் இருக்கும் நாட்களில் வேலையாட்கள் விடுப்பில் செல்வார்கள். புரோக்கரேஜ், கட்டிட உதிரி பாகங்கள், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
சில முக்கிய பொறுப்புகளை தருவார்கள். ஆனால், சக ஊழியர்களால் அலைச்சலும், பிரச்னைகளும் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
விவசாயிகளே! இயற்கை உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துங்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 26, 31, ஆகஸ்ட் 1, 2, 3, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: சென்னை - சிங்கபெருமாள்கோவில் தலத்தில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
மேஷம்: எதிலும் முதலிடத்தை பிடிக்க விரும்புபவர்களே! முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! முற்போக்குச் சிந்தனையால் சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. ராசிக்கு 6ல் ராகு நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். 12வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோயில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4ல் குருவும், சூரியனும் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும்.
சிலர் வீடு மாற வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, ஒவ்வாமை, தொற்று, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது.
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது, பங்குதாரர்களை மாற்றுவது போன்ற விஷயத்தில் அவசர முடிவு வேண்டாம்.
வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிக வேலைகள் இருக்கும் நாட்களில் வேலையாட்கள் விடுப்பில் செல்வார்கள். புரோக்கரேஜ், கட்டிட உதிரி பாகங்கள், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
சில முக்கிய பொறுப்புகளை தருவார்கள். ஆனால், சக ஊழியர்களால் அலைச்சலும், பிரச்னைகளும் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
விவசாயிகளே! இயற்கை உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துங்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 26, 31, ஆகஸ்ட் 1, 2, 3, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்: சென்னை - சிங்கபெருமாள்கோவில் தலத்தில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆடி மாத ராசி பலன்கள் !
கும்பம்: கொள்கை கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம் என எதிலும் மிதமாக இருப்பவர்களே! கடந்த ஒரு மாத காலமாக ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து பலவிதங்களிலும் அல்லல்படுத்திய சூரியன் இப்போது 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகள் நீங்கும். 6ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆனால், 7ந் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறுசிறு வாகன விபத்துகளும் ஏற்படக்கூடும்.
23ந் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே கேது நிற்பதால் பணப்பற்றாக்குறை இருக்கும். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் அதிக மாகும். சின்னச் சின்ன வீண் பழிகள் வரக்கூடும். ராசிக்கு 8ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் கூடி வரும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரிடம் இருந்த கோபமும் விலகும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் இருந்து விடுபடுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முக்கிய பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓரளவு குறையும். பிரச்னை கொடுத்த பங்குதாரரை நீக்குவீர்கள். இரும்பு, பெயின்ட், கட்டுமானப் பொருட்கள், உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். ஆனால், 6ம் வீட்டில் குரு நிற்பதால் உங்களுக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுவார்கள்.
உங்கள் மீது பழிகளை சுமத்தவும் முயற்சி செய்வார்கள். உஷாராக இருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சக ஊழியர்களால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கலைத்துறையின் புதிய கலைஞர்களே, வயது குறைவான கலைஞர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். யதார்த்தமான உங்களுடைய படைப்புகள் பலராலும் பாராட்டப் படும்.
விவசாயிகளே! கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற தோட்டப் பயிர்களால் ஆதாயம் உண்டாகும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 20, 27, 28, 29, 30, ஆகஸ்ட் 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 31ந் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 1 மற்றும் 2ந் தேதி மாலை 6 மணி வரை பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்: மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் எனும் தலத்தில் அருளும் பைரவரை தரிசியுங்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
23ந் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே கேது நிற்பதால் பணப்பற்றாக்குறை இருக்கும். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் அதிக மாகும். சின்னச் சின்ன வீண் பழிகள் வரக்கூடும். ராசிக்கு 8ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் கூடி வரும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரிடம் இருந்த கோபமும் விலகும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் இருந்து விடுபடுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முக்கிய பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓரளவு குறையும். பிரச்னை கொடுத்த பங்குதாரரை நீக்குவீர்கள். இரும்பு, பெயின்ட், கட்டுமானப் பொருட்கள், உணவு, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். ஆனால், 6ம் வீட்டில் குரு நிற்பதால் உங்களுக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுவார்கள்.
உங்கள் மீது பழிகளை சுமத்தவும் முயற்சி செய்வார்கள். உஷாராக இருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சக ஊழியர்களால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். கலைத்துறையின் புதிய கலைஞர்களே, வயது குறைவான கலைஞர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். யதார்த்தமான உங்களுடைய படைப்புகள் பலராலும் பாராட்டப் படும்.
விவசாயிகளே! கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற தோட்டப் பயிர்களால் ஆதாயம் உண்டாகும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 20, 27, 28, 29, 30, ஆகஸ்ட் 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 31ந் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 1 மற்றும் 2ந் தேதி மாலை 6 மணி வரை பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்: மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் எனும் தலத்தில் அருளும் பைரவரை தரிசியுங்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆடி மாத ராசி பலன்கள் !
மீனம்: தர்மத்திற்கு தலை வணங்குபவர்களே! தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்க நினைப்பீர்கள். உங்களுடைய ராசிநாதனான குருபகவான் 5ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். 5ம் வீட்டிலேயே சூரியன் நிற்பதால் தூக்கம் குறையும்.
அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். ராசியிலேயே கேது நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் ஒவ்வாமை, தொற்று வரக்கூடும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும். உங்களுடைய தவறுகளை மனைவி சுட்டிக் காட்டினால், ஆத்திரப்படாதீர்கள். வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
பிரபல யோகாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து அஷ்டமத்தில் மறைந்து நிற்பதால் உடன் பிறந்தவர்களுடன் பகை வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடப்பதால் வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை அறவே ஒதுக்கிவிடுவது நல்லது.
கன்னிப் பெண்களே! பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அவர்களின் ஆலோசனைகளெல்லாம் ஆத்திரத்தை வரவழைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். போட்டித் தேர்வுகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஆர்டர், ஏஜென்சி எடுப்பீர்கள். மருந்து, ரசாயனம், எரிபொருள், இரும்பு, மரம், கல் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதை குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் வெதும்புவீர்கள். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாறுவார். சக ஊழியர்களுடன இருந்து வந்த மனப்போர் நீங்கும். அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். என்றாலும் 8ல் செவ்வாய் நிற்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும். அயல்நாடு செல்லும் யோகமும் உண்டாகும்.
விவசாயிகளே! தண்ணீர் பிரச்னை தீரும். பக்கத்து நிலக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 20, 23, 24, 25, 29, 30, 31, ஆகஸ்ட் 1, 7, 8, 9, 10, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 2ந் தேதி மாலை 6 மணி முதல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பழைய பிரச்னைகள் தலைதூக்கும்; நிதானம் காக்கவேண்டும்.
பரிகாரம்: சுவாமிமலை முருகனை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். ராசியிலேயே கேது நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் ஒவ்வாமை, தொற்று வரக்கூடும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும். உங்களுடைய தவறுகளை மனைவி சுட்டிக் காட்டினால், ஆத்திரப்படாதீர்கள். வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
பிரபல யோகாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து அஷ்டமத்தில் மறைந்து நிற்பதால் உடன் பிறந்தவர்களுடன் பகை வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடப்பதால் வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை அறவே ஒதுக்கிவிடுவது நல்லது.
கன்னிப் பெண்களே! பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அவர்களின் ஆலோசனைகளெல்லாம் ஆத்திரத்தை வரவழைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். போட்டித் தேர்வுகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஆர்டர், ஏஜென்சி எடுப்பீர்கள். மருந்து, ரசாயனம், எரிபொருள், இரும்பு, மரம், கல் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதை குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் வெதும்புவீர்கள். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாறுவார். சக ஊழியர்களுடன இருந்து வந்த மனப்போர் நீங்கும். அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். என்றாலும் 8ல் செவ்வாய் நிற்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரும். அயல்நாடு செல்லும் யோகமும் உண்டாகும்.
விவசாயிகளே! தண்ணீர் பிரச்னை தீரும். பக்கத்து நிலக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வெற்றிப் பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 20, 23, 24, 25, 29, 30, 31, ஆகஸ்ட் 1, 7, 8, 9, 10, 16.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 2ந் தேதி மாலை 6 மணி முதல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பழைய பிரச்னைகள் தலைதூக்கும்; நிதானம் காக்கவேண்டும்.
பரிகாரம்: சுவாமிமலை முருகனை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆடி மாத ராசி பலன்கள் !
படிச்சவங்க அவங்களுக்குள்ள பரிகாரத்தை
செஞ்சுடுங்க...!
-
வெளியூர் கோயிலுக்கு போக முடியாதவங்க
உள்ளூர் கோயிலிலும் பரிகாரம் நிறைவேற்றலாம்...
-
செஞ்சுடுங்க...!
-
வெளியூர் கோயிலுக்கு போக முடியாதவங்க
உள்ளூர் கோயிலிலும் பரிகாரம் நிறைவேற்றலாம்...
-
Re: ஆடி மாத ராசி பலன்கள் !
உண்மையில் இந்த பக்கம் வலைதளமும் அதில் கிடைக்கும் விஷயங்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளதோடு ஆச்சர்ய படவும் வியக்கவும் வைக்கிறது...
askannan- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/07/2014
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ராசி பலன்கள்
» ஆடி மாத ராசி பலன்கள் !
» ராசி பலன்கள்
» தை மாத ராசி பலன்கள் !
» ஐப்பசி மாத ராசி பலன்கள் !
» ஆடி மாத ராசி பலன்கள் !
» ராசி பலன்கள்
» தை மாத ராசி பலன்கள் !
» ஐப்பசி மாத ராசி பலன்கள் !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|