புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:37 pm

மேஷம்: எதிலும் முதலிடத்தை பிடிக்க விரும்புபவர்களே! முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! முற்போக்குச் சிந்தனையால் சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. ராசிக்கு 6ல் ராகு நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். 12வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோயில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4ல் குருவும், சூரியனும் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும்.

சிலர் வீடு மாற வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, ஒவ்வாமை, தொற்று, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது.

மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது, பங்குதாரர்களை மாற்றுவது போன்ற விஷயத்தில் அவசர முடிவு வேண்டாம்.

வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிக வேலைகள் இருக்கும் நாட்களில் வேலையாட்கள் விடுப்பில் செல்வார்கள். புரோக்கரேஜ், கட்டிட உதிரி பாகங்கள், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

சில முக்கிய பொறுப்புகளை தருவார்கள். ஆனால், சக ஊழியர்களால் அலைச்சலும், பிரச்னைகளும் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தப் பாருங்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! இயற்கை உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துங்கள். புதிதாக ஆழ்குழாய் அமைப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 26, 31, ஆகஸ்ட் 1, 2, 3, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - சிங்கபெருமாள்கோவில் தலத்தில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:38 pm

ரிஷபம்: போராடும் குணம் உடையவர்களே! கலைக் கண்ணோட்டத்துடன் எல்லாவற்றையும் காண்பவர்களே! பிரிந்து கிடப்பவர்களை ஒன்று திரட்டும் சக்தி உடையவர்களே! உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆனால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கலும் வரும். வீடு கட்டுவது, வாங்குவதில் அவசரம் வேண்டாம். சொத்து வாங்குவதாக இருந்தால் தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

சகோதரக்காரகனும், சப்தமாதிபதியுமான செவ்வாய் சனியுடன் சேர்ந்து 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி, மூச்சுத் திணறல் வரக்கூடும். மனைவியுடன் வாக்குவாதங்களும், ஈகோ பிரச்னைகளும் வரும். மனைவிவழி உறவினர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தன-பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்ததைத் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்வி பெற விசா கிடைக்கும்.

என்றாலும் ராகு 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், பயணங்களும் அதிகரிக்கும். குரு 3ல் மறைந்திருப்பதால் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், புதிய முயற்சிகள் தடைபட்டு முடிவடையும்.

மாணவ - மாணவிகளே! பொது அறிவுத் திறன், மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். சந்தை நிலவரத்தை கண்காணித்து அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள், வெளி மாநிலத்தில் உள்ளவர்களால் ஆதாயமடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மருந்து, ரசாயனம், பெட்ரோ-கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

கன்னடம், ஹிந்தி பேசக் கூடிய பங்குதாரர் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது. உத்யோக ஸ்தானாதிபதி சனி உச்சமாகி வலுவடைந்திருப்பதால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய சம்பளப் பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். சிலருக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வேலை கூடிவரும். மேற்கொண்டு உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள குறுகிய கால கோர்ஸில் சேர்ந்து படித்து முன்னேறுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலம் லாபம் பார்ப்பீர்கள். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். சவுக்கு, கரும்பு போன்றவற்றால் ஆதாயமடைவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 26, 27, 28, 30, ஆகஸ்ட் 3, 6, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 7, 8, 9ந் தேதி காலை 9 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து அன்னதானம் செய்யுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:38 pm

மிதுனம்: நெருக்கடி நேரத்திலும் பதட்டப்படாமல் பணியாற்றுபவர்களே! நகைச்சுவையாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! வித்தியாசமாக யோசித்து வெற்றி பெறுபவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து வேலைச்சுமையையும், மனஇறுக்கத்தையும், காரியத் தடைகளையும், குடும்பத்தில் சலசலப்புகளையும் உண்டாக்கிய சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் முன்கோபம் குறையும். முடியும் தருவாயில் வந்து முடியாமல் போன சில காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும்.

எதிர்ப்புகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்து கசப்புணர்வுகள் விலகும். ஆனால், சூரியன் 2ல் அமர்ந்திருப்பதால் கண், காது, தொண்டை வலி வந்து நீங்கும். பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவும் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்களுடைய ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் அடிமனதிலிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும்.

உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துபோகும். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். 4ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்காக பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

மாணவ-மாணவிகளே! ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர்கள் ஆதரிப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வரன் அமையும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பக்குவப்படாத வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். 10ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆனால், வேலை அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது, அதற்கான ஊதிய உயர்வோ, சலுகைகளோ கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். உத்யோக ஸ்தானத்தை குருவும் பார்த்துக் கொண்டிருப்பதால் உத்யோகத்தில் உயர்வு உண்டு. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும்.

விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். காய், கனிகள் மூலமாக லாபம் வரும். எதிர்பாராத சந்திப்புகளும், செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 19, 20, 27, 28, 29, 30, ஆகஸ்ட் 5, 6, 7, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 9ந் தேதி காலை 9 மணி முதல் 10, 11ந் தேதி காலை 11 மணி வரை பதறாமல் பக்குவமாக செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: கும்பகோணம் - ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகையை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:39 pm

கடகம்: தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! எல்லா செயல்களுக்கும் காரண காரியம் கற்பித்து பேசுபவர்களே! பகுத்தறிவால் அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களை ஆட்சி செய்பவர்களே! உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குரு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உடல் சோர்வு, அசதி வந்து நீங்கும். உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். மாற்றுவழி தேடுவீர்கள். ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் வாயுக் கோளாறால் வயிற்று வலி, நெஞ்சு வலி வந்துபோகும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டிலும் கழிவுநீர் குழாய் அடைப்பு, மின் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கவனமாக இருங்கள். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 23ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் புதன் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். தைரியம் பிறக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிய முனைவீர்கள். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல் வரும். ஷேர் மூலமாக பணம் வரும். கேது 9ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோயில் விழாக்களிலும் முதல் மரியாதை கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது, அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படியுங்கள். விளையாடும்போது கவனம் தேவை. சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும்.

அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர் களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். வாகன உதிரி பாகங்கள், துரித உணவுகள், மூலிகை வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வீர்கள்.

ஆனால், உங்கள் ரசனைக்கேற்ற இடம் அமையாமல் போகும். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக நினைப்பீர்கள். மரியாதைக் குறைவாக சின்னச் சின்ன சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். வேலைபளுவும் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டியது வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! நிலப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பக்கத்து நிலக்காரரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தையும், அவசரப் போக்கையும் தவிர்க்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 20, 22, 23, 29, 30, ஆகஸ்ட் 1, 3, 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 11ந் தேதி காலை 11 மணி முதல் 12, 13ந் தேதி மதியம் 2 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:39 pm

சிம்மம்: மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவளாதவர்களே! முதல் முயற்சியிலேயே எதையும் முடிக்க விரும்புபவர்களே! உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டிலேயே சனி அமர்ந்திருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். கோபம் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும்.

கணவன்-மனைவிக்குள் மனப்போரும் ஆரம்பமாகும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 12ல் மறைந்து கிடப்பதால் உங்கள் உள்மனதில் ஒருவிதமான அலட்சியம் வரும். ஜெயிப்போமோ, ஜெயிக்க மாட்டோமோ என்ற சந்தேகமும் அடிக்கடி ஏற்படும். உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ம் வீட்டில் சனியுடன் முடங்கிக் கிடப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாயார் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும். வேலை ஆக வேண்டுமென்றால் வருகிறார்கள், வேலை ஆனபிறகு கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள் என்றெல்லாம் நினைத்து கோபப்படுவீர்கள். ராசிக்கு 8ல் கேது நிற்பதால் வருங்காலம் பற்றிய பயம் வரும். ஆன்மிகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள்.

மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து, பிறகு இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஸ்டேஷனரி, துணி, வாகன வகைகளால் லாபம் வரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் அண்டை மாநிலம், வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சிலருக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். நெல், கோதுமை வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களை சிலர் விமர்சித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 25, ஆகஸ்ட் 1, 2, 3, 9, 10, 11, 12, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 17, 18, 19ந் தேதி காலை 10 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 13ந் தேதி மதியம் 2 மணி முதல் 14, 15ந் தேதி மாலை 5.30 மணி வரை முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி, பகையைத் தவிருங்கள்.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு குடையும் செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:39 pm

கன்னி: சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத நீங்கள் அன்புக்கு அடிமையாவீர்கள். போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருப்பீர்கள். ராசிக்குள்ளேயே ராகு வந்தமர்ந்திருப்பதால் ஒருவித படபடப்பு இருக்கும். கடந்த காலத்தைப்போல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோமோ என்றெல்லாம் அச்சப்படாதீர்கள். 7ம் வீட்டில் கேது நிற்பதால் உங்களுடைய உள்மனது உங்களை சரியாக வழி நடத்தும். உங்களையும் அறியாமல் உங்களுக்கு சில விஷயங்களெல்லாம் புரிய வரும்.

ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், குருவும் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். மருந்து, மாத்திரை அளவு குறையும். அழகும் இளமையும் கூடும். வாடியிருந்த முகம் மலரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால், ஏழரைச் சனி தொடர்ந்து கொண்டிருப்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம்.

பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சளித் தொந்தரவால் தொண்டை வலிக்கும். மாணவ-மாணவிகளே! விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட தேர்வை எழுதி வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சிக்காக நீங்கள் செய்யும் தொண்டால் தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்கள் ரசனைக்கேற்ற இடத்திற்கு கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் இதமாகப் பேசி வேலையை முடிப்பீர்கள். உங்களுக்கு முழு சுதந்திரம் தரக்கூடிய பங்குதாரர் அறிமுகமாகுவார். ஷேர், ஸ்பெகுலேஷன், மருந்து, கட்டுமானப் பொருட்களாலும் லாபம் அதிகரிக்கும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யுமளவிற்கு லாபம் கூடிக் கொண்டே போகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்து போன பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையெல்லாம் ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் சரிந்த செல்வாக்கை சரி செய்து மீண்டும் வலுவாக அமர்வீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு முழு ஆதரவு தருவார்கள். சிலருக்கு இடமாற்றம் நினைத்தபடி அமையும். எதிர்பார்த்தபடி புது வேலையும்
கிடைக்கும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பயிர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்திக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 24, 25, 26, 30, ஆகஸ்ட் 3, 5, 6, 7, 8, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19ந் தேதி காலை 10 மணி முதல் 20, 21ந் தேதி மாலை 3.30 வரை மற்றும் ஆகஸ்ட் 15ந் தேதி மாலை 5.30 முதல் 16 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருப்புவனத்தில் அருளும் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்றளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:40 pm

துலாம்: துவண்டுபோய் வருபவர்களின் சுமைதாங்கிகளே! பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே! உள்ளத்தில் அழுதாலும், உதட்டால் சிரிப்பவர்களே! உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் 6ந் தேதி வரை ராசிக்கு 9ம் வீட்டிலேயே நிற்பதால் உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். தடைபட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ராசிக்கு 10ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் சிலருக்கு வேலை கிடைக்கும்.

ஆனால், வேலை சம்பந்தமாக உறுதிப் பத்திரங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். உங்களுடைய ராசியிலேயே செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். அவ்வப்போது அலுத்துக் கொள்வீர்கள். ஒருவித சலிப்பும் வந்து நீங்கும். உங்கள் ஜாதக அமைப்புப் படிதான் உங்களுக்கு எல்லாமே அமையும். அப்படி யிருக்கும்போது எதுவும் சரியாக அமையவில்லையென்று ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள்? கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளை வளர விடாதீர்கள். ஏழரைச்சனி இருப்பதால் உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் மோதல் வரும்.

மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வந்து விலகும். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள். ஆறாம் வீட்டில் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுவார்கள். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, மரம், செங்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

தகுதி வாய்ந்த அனுபவமிக்க வேலையாட்களை கூடுதல் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்வீர்கள். 10ம் வீட்டில் சூரியனும், குருவும் நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அதிகாரிகளால் ஏமாற்றப்படுகிறோமோ என்றெல்லாம் குழம்புவீர்கள். உங்களைவிட வயதில், தகுதியில் குறைந்தவர்களுக்கு கீழ் வேலைபார்க்க வேண்டியுள்ளதே என்று நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

நிறுவனம் விதித்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற கவலையும் வந்து நீங்கும். ஆனால், இந்த மாதத்தின் பிற்பகுதியில் உத்யோகத்தில் அமைதி நிலவும். நேரடி அதிகாரி உங்களுக்கு உதவாவிட்டாலும் அதற்கு மேலுள்ள அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் வேறு சிலரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை பெரிதுபடுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமான அணுகுமுறை தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 28, 29, 30, ஆகஸ்ட் 6, 7, 8, 10, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 21ந் தேதி மாலை 3.30 மணி முதல் 22, 23 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: திருவள்ளூர் தலத்தில் அருளும் வீரராகவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு நீர்மோரும், பானகமும் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:40 pm

விருச்சிகம்: விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! இதயத்திலிருந்து பேசுபவர்களே! எதிலும் நடுநிலை தவறாதவர்களே! மற்றவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி திருத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் குரு அமர்ந்து உங்க ளுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உங்களுக்குச் சாதகமாக புதனும், சுக்கிரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள்.

வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும் கணவன்-மனைவிக் குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும்.

உடன்பிறந்தவர்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும்.
ஒவ்வாமை, தொற்று, கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். ஆனால், அதே நேரத்தில் அவர்களால் பெருமை தரக்கூடிய சம்பவங்களும் நிகழும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். இசை, ஓவியப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்லவேலை கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பர். சகாக்களைப்பற்றி குறை கூறாதீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொள்வீர்கள். புதிய பங்கு தாரர்களை சேர்ப்பீர்கள். அவர்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அடிக்கடி விடுப்பில் செல்லும் வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள்.

ரியல் எஸ்டேட், பதிப்பகம், கெமிக்கல், மூலிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தர்ம சங்கடங்களெல்லாம் நீங்கும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சக ஊழியர்களுடனான மோதல் போக்கு மாறும். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். நிர்வாகத் திறமையும் கூடும்.

கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிப்பால் உற்சாகமடைவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். சீமந்தம், காது குத்து என வீடு களைகட்டும். விவேகமான முடிவுகளால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 19, 20, 21, 22, 29, 30, 31, ஆகஸ்ட் 1, 7, 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 24, 25 மற்றும் 26ந் தேதி காலை 10 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த குழந்தைக்கு இயன்றளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:41 pm

தனுசு: காலச்சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறிக் கொள்பவர்களே! அழுத்தமான கொள்கையாலும், ஆழமான பேச்சாலும் அடுத்தவர் மனதில் இடம்பிடிப்பவர்களே! ராசிக்கு லாப வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நட்பு வட்டம் விரியும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்கு கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உறவினர்களின் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் குரு 8ல் மறைந்திருப்ப தால் செலவுகள் அதிகமாகும். ஆனால், குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் செலவுக்கேற்ற வரவும் உண்டு.

குருவுடன் சூரியனும் நிற்பதால் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பூமி, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். ஆனால், செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீடு மனை வாங்கும்போது மூல பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

மாணவ-மாணவிகளே! மொழித்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி நடந்து கொள்வீர்கள். கவிதை, இலக்கிய போட்டிகளில் கலந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளே! அதிகம் உழைக்க வேண்டியது வரும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள். ராசிக்கு சாதகமாக சுக்கிரனும், புதனும் இருப்பதால் வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உணவு, லாட்ஜிங், கல்வி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

பங்குதாரர்களின் போக்கு மாறும். சந்தையில் உங்கள் புகழ், கௌரவம் கூடும். புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். 10ல் ராகு நிற்பதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைபார்க்க வேண்டியது வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் மறைமுகமாக உங்கள் திறமையை சோதித்துப் பார்ப்பார்கள். அதில் வெற்றியடைவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பு கிட்டும்,

விவசாயிகளே! வங்கிக் கடனுதவி கிட்டும். எண்ணெய் வித்துகள், கனி, பூ வகைகளால் ஆதாயமடைவீர்கள். வாய்க்கால் சண்டை ஓயும். பணிவால் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 22, 23, 24, 25, 31, ஆகஸ்ட் 1, 2, 3, 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 26ந் தேதி காலை 10 மணி முதல் 27 மற்றும் 28ந் தேதி இரவு 9.30 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பனை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 11, 2014 7:41 pm

மகரம்: எங்கும் எப்போதும் உண்மையையும், யதார்த்தத்தையும் விரும்பும் நீங்கள் பரந்த மனசுக்கு சொந்தக்காரர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதவர்கள். அடுத்தவரின் அந்தரங்க விஷயங்களை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள். உங்களுடைய ராசியை நேருக்கு நேராக குரு பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வாக்கு, வருமானம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். ஆனால், 6ந் தேதி வரை உங்கள் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்துபோக வாய்ப்பிருக்கிறது. 7ந் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 23ந் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலை கிடைக்கும். கேது 3ம் வீட்டில் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். ராகு 9ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால், தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். உங்கள் ராசிநாதனான சனி வலுவடைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களையெல்லாம் தீர்த்து வைப்பீர்கள். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பற்று வரவு உயரும். வி.ஐ.பிகளின் உதவியால் புகழ் பெற்ற நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும்.

மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலெட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவுவார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். ரிலீசுக்காக காத்திருந்த உங்களது படைப்பு வெளியாகும்.

விவசாயிகளே! அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். டிராக்டர், கலப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 19, 25, 26, ஆகஸ்ட் 3, 4, 6, 7, 12, 13, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 28ந் தேதி இரவு 9.30 மணி முதல் 29, 30 மற்றும் 31ந் தேதி காலை 9 மணி வரை புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சியை தரிசித்து விட்டு வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நட்டுப் பராமரியுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக