புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
21 Posts - 81%
heezulia
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
1 Post - 4%
viyasan
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_m10சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:20 am


சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக் கோரிக்கை தொடங்கியது.

அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அவர் கூறியதாவது:–

வீட்டு வசதி

வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர்மயம் ஆக்கல் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, மக்களின் மகிழ்வான, வளமான, நலமான வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பிலும்; தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பிலும்; பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

குடிசைகள் அற்ற நகரங்கள்

1. திருச்சி மாவட்டம், நாவல்பட்டில், திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலை இணையும் பகுதியில் அமைந்துள்ள 68.82 ஏக்கர் நிலப்பரப்பில், 20 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக 690 மனைகளும், மத்திய வருவாய் பிரிவினருக்காக 475 மனைகளும், உயர் வருவாய் பிரிவினருக்காக 195 மனைகளும் உருவாக்கப்படும்.

2. தொலைநோக்குத் திட்டம்–2023–ஐ நிறைவேற்றும் முகத்தான், மைய மற்றும் மாநில அரசுகளின் குடிசைப்பகுதிகள் அற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களில் 825 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில், மைய அரசின் பங்கு 50 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும், பயனாளிகளின் பங்கு வீட்டு கட்டுமான செலவில் மட்டும் 10 சதவீதமும் இருக்கும். கடந்த ஆண்டு எனது உத்தரவின்படி கட்டிடப்பரப்பு 397 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்பின் கட்டுமானப் பரப்பு 400 சதுர அடியாக இருக்கும். மேலும், மின் விசிறிகள், மின் விளக்குகள் ஆகியவை பொருத்திக் கொடுக்கப்படும். இதுதவிர, அடிப்படை வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் வினியோகம், கழிவுநீர் அகற்று அமைப்புகள் மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

534 அடுக்குமாடி குடியிருப்பு

3. 1972–ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட 534 குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகவும், அவற்றை மீண்டும் கட்டித்தருமாறும் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையினை ஏற்று, நொச்சிக்குப்பம் திட்டப்பகுதியில் 534 அடுக்குமாடிக் குடியிருப்புகளை 48 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் மாநில நிதியுதவியின் கீழ் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுர அடி கட்டிட பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை, கழிப்பறை வசதிகளுடன், மின்சார விசிறி மற்றும் மின்சார விளக்குகள் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

இக்குடியிருப்புகளுக்கு தெரு மின் விளக்குகள், குழாய் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்று வசதிகள் அமைக்கப்படும். நியாய விலைக் கடைகள், பாலர் பள்ளிகள் போன்ற சமூக உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். கடலோரப் பகுதிகளுக்கான ஒழுங்குமுறை விதிகளின் படி ஒப்புதல், கலங்கரை விளக்க ஆணைக் குழுவின் ஒப்புதல் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்ட பின் இந்த குடியிருப்புகள் கட்டப்படும்.

விரிவடைந்த குடும்பங்களுக்கு

இக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் தங்களது விரிவாக்கப்பட்ட குடும்பங்களுக்கும் குடியிருப்புகள் கோரியதால் இக்குடியிருப்புகளை மீண்டும் கட்டும் பணிகளை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ள இயலவில்லை.

இந்த குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற குடும்பங்களுக்கு மட்டும் இந்த பகுதியில் கட்டப்பட உள்ள புதிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும். இவர்களது விரிவடைந்த குடும்பங்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்படும்.

புராதன நகரங்கள்

4. மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க இதுகாறும் 64 நகரங்கள் புராதன நகரங்கள் என அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புராதன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னர் ஒவ்வொரு புராதன நகரத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான மானியத்தொகை 2012–2013–ம் ஆண்டில் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 64 புராதன நகரங்களில் 60 புராதன நகரங்களுக்கு இதுகாறும் 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள புராதன நகரங்களான திருப்பரங்குன்றம், திருவட்டாறு, சுசீந்திரம் மற்றும் கொடுமுடி ஆகிய நகரங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தலா ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், திருமுருகன்பூண்டி, கழுகுமலை, சுவாமிமலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல் மற்றும் திருபுவனம் ஆகிய 6 நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மொத்தத்தில், இந்த 10 நகரங்களுக்கும் 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்னிறைவு பெற்ற குடியிருப்பு பகுதி

5. சென்னை பெருநகரப் பகுதிக்கான முதலாம் முழுமைத் திட்டத்தில் மறைமலைநகர் புதுநகர் திட்டம் ஒரு புதிய நகரமாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு, 1,915 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மறைமலை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பெருகி வரும் வீட்டு மனைத் தேவையைக் கருத்தில் கொண்டு, கடம்பூர் கிராமத்தில் உள்ள 222 ஏக்கர் நிலப்பரப்பை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தன்னிறைவு பெற்ற குடியிருப்பு பகுதியாக மாற்றி அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ், திறந்த வெளியிடம், பொது உபயோகப் பகுதிகள் மற்றும் சாலைப் பகுதிகளுடன் கூடிய உயர் தர வருவாய் பிரிவு, நடுத்தர வருவாய் பிரிவு, குறைந்த வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த வருவாய் பிரிவு ஆகியோருக்கான குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படும். கடம்பூர் கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய ஏரியை நீர் நிலையாகவே நிலை நிறுத்தி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொழுதுபோக்கு வசதிகளை அபிவிருத்தி செய்து, சுற்றுச்சூழல் சமன்படுத்தப்படும்.

8 மாடி கட்டிடம்

6. கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 63 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பல அடுக்குமாடி அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கட்டிடம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 840 சதுர அடி பரப்பளவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 3 அடித்தளங்கள், தொகுப்பு, 8 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக அமையும். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இந்த கட்டிடம் பயன்படும்.

சுரங்க நடைபாதைகள்

7. சென்னைப் பெருநகரப் பகுதியில் போக்குவரத்து அமைப்பினை மேம்படுத்தி நீடித்த நிலையான கட்டமைப்பினை அமைக்க உலக வங்கி நிதி உதவியுடன், மூன்றாம் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருகி வரும் வாகன போக்குவரத்தினால் பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள் சாலையினை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கடக்க, மேற்கண்ட ஆய்வில் பல சுரங்க நடைபாதைகள் தேவை என கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட சுரங்க நடைபாதைகளில், காமராஜ் சாலையில் காந்தி சிலை அருகில்; புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் தெரு; அயனாவரம்–கொன்னூர் நெடுஞ்சாலை; வடபழனி என்.எஸ்.கே. சாலை; கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி சாலை; அரும்பாக்கம் உள்வட்டச் சாலையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகில்; ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆலந்தூர் என மொத்தம் 7 இடங்களில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சுரங்க நடைபாதைகள், அடிப்படை கட்டமைப்பு நிதி அளிப்புடன் சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் கலந்தாலோசித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் முன்னுரிமை அடிப்படையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.

வேளச்சேரியில் அலுவலக வளாகம்

8. இரண்டாவது பெருந்திரள் துரித ரெயில் திட்டம், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் தென்னக ரெயில்வேயின் பெருநகர போக்குவரத்து ரெயில் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. 2–வது பெருந்திரள் துரித ரெயில் திட்டத்தில், மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய 9 ரெயில் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும், முடிக்கப்பட வேண்டிய சில இறுதிப் பணிகளுடன் இயங்கி வருகின்றன. இந்த திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கும் போதே, தமிழக அரசானது 2–வது பெருந்திரள் துரித ரெயில் திட்டத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையங்களின் மேல் உள்ள திறந்த வெளியினை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த திட்டம் தீட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உரிய கலந்தாய்வாளர்களையும், கட்டிடக்கலை வல்லுநர்களையும், வணிக கட்டிடங்களை திட்டமிடுவதற்காக நியமித்தது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கலை நுணுக்கத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பிரத்யேக வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் கொண்ட வணிக வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி துரித ரெயில் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வணிகப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒப்பந்த ஆவணங்கள் உள்ளடக்கிய விரிவான சாத்தியக்கூறு அறிக்கை கலந்தாலோசகர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், வேளச்சேரி ரெயில் நிலையத்தின் மேல் அலுவலக வளாகம் அமைப்பதற்கான, சாத்தியக்கூறு இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின்படி, வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்தின் மேல் 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பில், 2 தளம் கொண்ட அலுவலக வளாகம் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தலைமையிலான இந்த அரசின் நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதி, அரசு அலுவலகங்களின் அலுவலக வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி

[note]தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த வீடுகளைத் தாராளமாக வாங்கலாம் [/note]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக