புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
21 Posts - 3%
prajai
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசரை வென்ற புளியம்பழம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:51 am


ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலகத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவருக்கு ஆசை. அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே அவருக்கு ஆசை. அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தார்கள். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து விடுவார்கள்.

இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச் சிறந்த உடைகள் அவரிடம் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்துவிட்டது.

அதேபோல உலகிலே மிகச் சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார் ராஜா. உடனே அவருடைய மந்திரிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த சாப்பாடுகளையும் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தார்கள். சில நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்துவிட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்துவிட்டது. மிகச் சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகு நாட்கள் நிற்க முடியவில்லை.

ஆசைராஜாவுக்கு இப்போது எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிகள் கவலை கொண்டார்கள். உடனே நாடெங்கும் முரசு கொட்டி ஆசைராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் செய்துக் கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். கூடவே பாதி நாட்டையும் தருவதாக அறிவிப்பு செய்தார்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தார்கள். ஒவ்வொருத்தரும் விதவிதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப் பொருட்கள், கலைப் பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தார்கள். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள்.

அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்துட்டார். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான். ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான்.

அவனும் என்னவெல்லாமோ யோசித்துப் பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவரசியைக் கல்யாணம் முடிக்க முடியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான்.

அதைப் பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு..” என்று கேட்டாள். கடைசியில் அவன் பாட்டியிடம் தன் கவலையைச் சொன்னான்.

அவனுடைய பாட்டியும், “ அட லூசுப் பயலே, இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக் கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்று முன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டுவந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? ” என்று கேட்டார்கள்.

அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிகளும் ருசித்தார்கள்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கல்யாணம் செய்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளிய மரங்களை நட்டு வளர்த்தார். அதன் பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கிவிட்டது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக