ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

5 posters

Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by சிவா Wed Jul 09, 2014 1:56 am

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வரவேண்டும் என்ற தனது கனவை அப்துல் கலாம் வெளியிட்டுள்ளார்.

அப்துல் கலாம் புத்தகம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ‘எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆராய்ச்சி செய்து, அப்துல் கலாம் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

‘புதிய சுதந்திரமான லோக்பால் சட்டம் (தற்போதைய வடிவில் அல்ல) வர வேண்டும், அது, சுதந்திரமான ஊழல் கண்காணிப்பு ஆணையம், சுதந்திரமான சி.பி.ஐ., ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க வழி வகுக்க வேண்டும்’ என்ற தனது எதிர்பார்ப்பை இந்த புத்தகத்தில் அப்துல் கலாம் வெளிப்படுத்தி உள்ளார்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

இதே போன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான தனது எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:–

ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை நாட்டின் குறிப்பிட்ட தொகுதியில் இருந்து தாக்கல் செய்கிறார் என்றால், முதலில், அவர் இந்திய குடிமகன்தானா என்பதை ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள அட்டை அல்லது பிற வகை அடையாள அட்டை மூலமாக தேர்தல் அதிகாரி சோதிக்க வேண்டும், இப்படியே வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றி போலீஸ் ஆவணங்களிலிருந்தும், சொத்துகள் குறித்து நில அதிகாரிகளிடமிருந்தும், கல்வித்தகுதி பற்றி பல்கலைக்கழக பதிவேடுகளிலிருந்தும், வருமானம் குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் மூலமும், கடன் நிலவரம் குறித்து வங்கி ஆவணங்களிடமிருந்தும் கம்ப்யூட்டரை தட்டி விட்டு பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியின் கம்ப்யூட்டர் திரையில் வர வேண்டும்.

செல்போனில் ஓட்டு

அதைத் தொடர்ந்து அவரது வேட்புமனு தகுதி குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட வேண்டும்.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது தவிர்த்து, செல்போன் வைத்திருக்கிற வாக்காளர்கள், அதன் மூலம் தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, தங்களது தொகுதியில், விரும்புகிற வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

[thanks]தினத்தந்தி[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty Re: செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by Syed Sardar Wed Jul 09, 2014 3:40 am

இன்றைய காலத்தில் வாக்களிக்காமல் இருப்பது படித்தவர்களும், பணியில் உள்ளோரும், வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்போரும் தான்! செல்போனில் வாக்களிக்கும் காலம் வந்தால் வாக்கு விழுக்காடு கூடும் வாய்ப்புகள் உண்டு. ஒருவகையில் இது தலைகீழ் மாற்றங்களை கொண்டு வரும் (வோட்டு வங்கிகளை நம்பி, ஏழை எளியோரை வசப்படுத்தி வெற்றி நமதே என எண்ணும் வேட்பாளர்கள் வயிற்றில் புளி கரையும்!). கட்சிகளை விடுத்து நல்ல நபர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

நல்ல யோசனை ! மாறுமா காலம் ?
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty Re: செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by mmani15646 Wed Jul 09, 2014 8:28 am

செல்போனில் வாக்குப் பதிவு நல்ல யோசனை. ஆனால் அரசியலில் இப்போது இருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நில அபகரிப்பு, குற்றப் பிண்ணனி உடையவர்கள். குண்டர்களை வைத்து தங்கள் எதிரில் செல்போனில் வாக்குப் பதிவு செய்யவேண்டும் என மிரட்டி வெற்றிபெற்றுவிடுவார்கள். இல்லாவிடில் எல்லோருடைய செல்போனையும் பிடுங்கிக் கொண்டுபோய் தங்கள் கட்சிக்கு வாக்களித்துவிட்டுத் திருப்பித்தருவார்கள். இதனைத் தவிர்க்க வழிவகுக்க வேண்டும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty Re: செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by விஸ்வாஜீ Wed Jul 09, 2014 10:14 am

தலைவரின் கனவு சரியாக இருக்குமா என்று காலம் பதில் சொல்லும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty Re: செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by ராஜா Wed Jul 09, 2014 1:30 pm

மிக சிறந்த யோசனை , அப்துல் கலாம் ஐயா சொல்வது போல்

தேசிய அடையாள அட்டை மூலம் வாக்களிக்கும் நிலை வந்துவிட்டால் பணம் கொடுத்து அப்பாவி மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துகொண்டிருக்கும் அரசியல் வியாதிகளுக்கு சாவுமணி அடிக்கபட்டுவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Empty Re: செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum