Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
First topic message reminder :
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1
ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.
சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது
இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.
அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.
நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1
ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.
சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது
இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.
அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.
நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 25
இதுவரையில் 7 வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 8-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கலாம். பொதுவாகவே 8-ம் வீடு என்பது துஸ்தானம் என்று கூறுவார்கள். 8-ம் வீட்டை வைத்து ஒருவரின் ஆயுள், தோல்விகள், துன்பங்கள், அகெளரவமான செயல்கள், தடைகள், அபகீர்த்தி ஆகியவற்றைக் கூறலாம். பெண்களுக்கு 8-ம் வீடென்பது மாங்கல்யஸ்தானம் ஆகும். ஒருபெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா அல்லது விதவையாக ஆவாளா என்றும் 8-ம் வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் ஆயுளைக் கூறும்போது 8-ம் வீட்டுடன் இலக்கினத்தையும், 3-ம் வீட்டையும் பார்த்துத்தான் கூறவேண்டும். அப்போதுதான் சரியாக வரும்.
இவைகளைத்தவிர மூதாதையர் சொத்துக்கள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். மற்றும் உயில்கள், இன்ஷ¥ரன்ஸ், பிராவிடண்ட் பண்டு (Provident Fund), Gratuity, ஆகியவைகள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
ஒருவருக்கு மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினாதிபதி 8-ல் இருந்தாலோ அல்லது 8-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ அவரின் மரணத்திற்கு அவரே காரணமாகிறார். ஒருவர் ஜாதகத்தில் 3-ம் வீட்டு அதிபர் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 3-ம் வீடு என்பது என்ன? 3-ம் வீடு குறுகிய பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே அவர் பயணம் செய்யும் போது மரணம் சம்பவிக்கலாம். 12-ம் வீட்டின் அதிபதி 8-ல் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது அயலூரினையோ அல்லது அயல் நாட்டைனையோ அல்லது மருத்துவமனையையோ குறிக்கிறது அல்லவா? ஆகவே அந்த இடத்தில் மரணம் சம்பவிக்கலாம். 9-ம் வீட்டுக்காரர் 8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட பயணம் செய்யும்போதோ அல்லது அயல் நாட்டிலோ மரணம் சம்பவிக்கலாம்.
மரணத்திப் பற்றிக் கூற முதலில் இவர் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல; இதற்குப் பல கணித முறைகள் இருக்கின்றன. அவைகளை நாம் இப்போது சொல்லிக் கொடுக்க இயலாது. பாடம் முழுவதையும் முடித்தபின் அவைகளைப் பார்ப்போம். 8-ம் வீடு ஜல ராசியில் வருமானால் ஒருவருக்கு நீரால் மரணம் வரக் கூடும். நெருப்பு ராசியாக வருமேயானால் நெருப்பால் அபாயமுண்டு. துர்மரணமும் சம்பவிக்கும்.
இதுவரையில் 7 வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 8-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கலாம். பொதுவாகவே 8-ம் வீடு என்பது துஸ்தானம் என்று கூறுவார்கள். 8-ம் வீட்டை வைத்து ஒருவரின் ஆயுள், தோல்விகள், துன்பங்கள், அகெளரவமான செயல்கள், தடைகள், அபகீர்த்தி ஆகியவற்றைக் கூறலாம். பெண்களுக்கு 8-ம் வீடென்பது மாங்கல்யஸ்தானம் ஆகும். ஒருபெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா அல்லது விதவையாக ஆவாளா என்றும் 8-ம் வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் ஆயுளைக் கூறும்போது 8-ம் வீட்டுடன் இலக்கினத்தையும், 3-ம் வீட்டையும் பார்த்துத்தான் கூறவேண்டும். அப்போதுதான் சரியாக வரும்.
இவைகளைத்தவிர மூதாதையர் சொத்துக்கள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். மற்றும் உயில்கள், இன்ஷ¥ரன்ஸ், பிராவிடண்ட் பண்டு (Provident Fund), Gratuity, ஆகியவைகள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.
ஒருவருக்கு மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினாதிபதி 8-ல் இருந்தாலோ அல்லது 8-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ அவரின் மரணத்திற்கு அவரே காரணமாகிறார். ஒருவர் ஜாதகத்தில் 3-ம் வீட்டு அதிபர் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 3-ம் வீடு என்பது என்ன? 3-ம் வீடு குறுகிய பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே அவர் பயணம் செய்யும் போது மரணம் சம்பவிக்கலாம். 12-ம் வீட்டின் அதிபதி 8-ல் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது அயலூரினையோ அல்லது அயல் நாட்டைனையோ அல்லது மருத்துவமனையையோ குறிக்கிறது அல்லவா? ஆகவே அந்த இடத்தில் மரணம் சம்பவிக்கலாம். 9-ம் வீட்டுக்காரர் 8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட பயணம் செய்யும்போதோ அல்லது அயல் நாட்டிலோ மரணம் சம்பவிக்கலாம்.
மரணத்திப் பற்றிக் கூற முதலில் இவர் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல; இதற்குப் பல கணித முறைகள் இருக்கின்றன. அவைகளை நாம் இப்போது சொல்லிக் கொடுக்க இயலாது. பாடம் முழுவதையும் முடித்தபின் அவைகளைப் பார்ப்போம். 8-ம் வீடு ஜல ராசியில் வருமானால் ஒருவருக்கு நீரால் மரணம் வரக் கூடும். நெருப்பு ராசியாக வருமேயானால் நெருப்பால் அபாயமுண்டு. துர்மரணமும் சம்பவிக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
பொதுவாக சனியானவர் எதையுமே மெதுவாகக் கொடுக்கக் கூடியவர். அவர் 8-ல் இருந்தால் ஆயுள் தீர்க்கமென்று கூறலாம். மரணமென்று வரும்போது மிகவும் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் கொல்வார். சிலர் வெகு நாட்கள் படுத்த படுக்கையாக இருப்பர். அவர்களுக்கெல்லாம் சனி 8-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருப்பார். குரு 8-ல் இருந்தால் மரணம் இயற்கையானதாக இருக்கும். கஷ்டப் படாமல் இறப்பர். செவ்வாய் இருந்தால் அது துர்மரணமாக இருக்கும். விபத்தில் காலமாகலாம். அதனால்தான் 8-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று கூறுகிறார்கள். பெரியம்மையால் முன்பெல்லாம் மரணமடைவார்கள் தெரியுமா? 8-ம் வீட்டுடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால் அம்மை நோயால் மரணம் சம்பவிக்கக் கூடும். ஒருவருக்கு நெருப்பு ராசி 8-ம் வீடாக வருகிறது எனக்கொள்ளுங்கள். அங்கு செவ்வாய் இருந்தால் செருப்பினாலோ அல்லது கலகங்களினாலோ அல்லது வெடிமருந்துகளினாலோ மரணம் சம்பவிக்கும். அதே வீடு ஜலராசியாகி அங்கு செவ்வாய் இருந்தால் நீரில் மூழ்கி மரணம் சம்பவிக்கும். பொதுவாக ஆயுளைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள C.G.ராஜன் அவர்கள் எழுதிய "ஜாதக ராஜ பாவ இருவாஷி - பாகம் நெ. 1 என்னும் ஆயுள் பாவம்" என்ற புத்தகத்தைப் படிக்கவும். நாம் எல்லவற்றையும் இங்கு எழுதிவிட முடியாது. அதில் விரிவாக மரணத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.
மரணம் என்பது ஒருவரின் வாழ்வின் முடிவில் வருவது. அதற்குமுன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே 8-ம் வீட்டின் மற்ற காரகத்துவங்களையும் பார்ப்போம். நாம் வியாபாரம் செய்கின்றோம் என்று கொள்ளுங்கள். ஒருவரிடம் வாங்கி மற்றொரு வருவரிடம் விற்பனை செய்கிறோம். நாம் வாங்குபவரையும், நம்மிடம் வாங்குபவரையும் குறிப்பது 7-வது வீடு. அவருடைய தனஸ்தானத்தைக் குறிப்பது 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீடு. 8-ல் நல்ல கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றும் 8-ல் பாப கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் வளமற்று இருக்குமென்றும் கூறலாம். நீங்கள் ஒருவருடன் கூட்டு வியாபரம் செய்ய விரும்புகிறீர்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் பாகஸ்தரைக் குறிப்பது 7-ம் வீடு. அவருடைய தனத்தைக் குறிப்பது 7-க்கு இரண்டாம் வீடாகிய 8-ம் வீடு. 8-ம் சுபக்கிரகங்கள் இருந்தால் அவர் இந்த கூட்டு வியாபாரத்தால் நன்மை பெறுவார் எனக் கொள்ளலாம். கெட்ட கிரகங்கள் இருந்தால் இந்த வியாபாரத்தால் அவருக்கு அனுகூலமில்லை எனக் கூறிவிடலாம்.
8-ம் வீடு என்பது இந்த பிரபஞ்சத்திலுள்ள மறைந்திருக்கும் உண்மைகளைக் குறிக்கிறது. அங்கு குருவோ அல்லது சனியோ ( இரண்டும் வேதாந்தத்தைக் குறிக்கின்ற கிரகங்கள்) இருக்குமேயானல் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்படுவார். புதனும் அப்படித்தான். புதன் மிகவும் புத்திசாலித்தனமான கிரகம் அல்லவா? 8-ல் புதனிருக்க அவரும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய முற்படுவார். ஜோதிட சாஸ்த்திரமும் பிரபஞ்ச ரகசியம் தானே. அதில் உள்ள ரகசியங்களையும் கண்டறிய முற்படுவார்.
4-வது வீடென்பது ஒருவரின் பூர்வீக சொத்தைக் குறிக்கிறது. அதில் சுபக்கிரகங்கள் இருந்தால் பூர்வீக சொத்துக் கிடைக்கும். எப்படி? ஒருவர் ஜாதகத்தில் 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 8-ம் வீடென்பது பூர்வீக சொத்தையும் குறிக்குமென்று கூறினோம். 9-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? 4-ம் வீடல்லவா? ஆகவே 4-ம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால் ஒருவருக்கு பூர்வீக சொத்துக் கிடைக்குமென்று கூறலாம்.
மரணம் என்பது ஒருவரின் வாழ்வின் முடிவில் வருவது. அதற்குமுன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே 8-ம் வீட்டின் மற்ற காரகத்துவங்களையும் பார்ப்போம். நாம் வியாபாரம் செய்கின்றோம் என்று கொள்ளுங்கள். ஒருவரிடம் வாங்கி மற்றொரு வருவரிடம் விற்பனை செய்கிறோம். நாம் வாங்குபவரையும், நம்மிடம் வாங்குபவரையும் குறிப்பது 7-வது வீடு. அவருடைய தனஸ்தானத்தைக் குறிப்பது 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீடு. 8-ல் நல்ல கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றும் 8-ல் பாப கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் வளமற்று இருக்குமென்றும் கூறலாம். நீங்கள் ஒருவருடன் கூட்டு வியாபரம் செய்ய விரும்புகிறீர்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் பாகஸ்தரைக் குறிப்பது 7-ம் வீடு. அவருடைய தனத்தைக் குறிப்பது 7-க்கு இரண்டாம் வீடாகிய 8-ம் வீடு. 8-ம் சுபக்கிரகங்கள் இருந்தால் அவர் இந்த கூட்டு வியாபாரத்தால் நன்மை பெறுவார் எனக் கொள்ளலாம். கெட்ட கிரகங்கள் இருந்தால் இந்த வியாபாரத்தால் அவருக்கு அனுகூலமில்லை எனக் கூறிவிடலாம்.
8-ம் வீடு என்பது இந்த பிரபஞ்சத்திலுள்ள மறைந்திருக்கும் உண்மைகளைக் குறிக்கிறது. அங்கு குருவோ அல்லது சனியோ ( இரண்டும் வேதாந்தத்தைக் குறிக்கின்ற கிரகங்கள்) இருக்குமேயானல் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்படுவார். புதனும் அப்படித்தான். புதன் மிகவும் புத்திசாலித்தனமான கிரகம் அல்லவா? 8-ல் புதனிருக்க அவரும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய முற்படுவார். ஜோதிட சாஸ்த்திரமும் பிரபஞ்ச ரகசியம் தானே. அதில் உள்ள ரகசியங்களையும் கண்டறிய முற்படுவார்.
4-வது வீடென்பது ஒருவரின் பூர்வீக சொத்தைக் குறிக்கிறது. அதில் சுபக்கிரகங்கள் இருந்தால் பூர்வீக சொத்துக் கிடைக்கும். எப்படி? ஒருவர் ஜாதகத்தில் 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 8-ம் வீடென்பது பூர்வீக சொத்தையும் குறிக்குமென்று கூறினோம். 9-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? 4-ம் வீடல்லவா? ஆகவே 4-ம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால் ஒருவருக்கு பூர்வீக சொத்துக் கிடைக்குமென்று கூறலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? தகப்பனார் தன் பணத்தை Shares, Securities போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது Investments - களைக் குறிக்கிறது. தகப்பனாரின் Investments - களைக் குறிப்பது எந்த வீடு? 9-ம் வீட்டிற்குப் பன்னிரண்டாம் வீடு. அதாவது 8-ம் வீடு. ஆக 8-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால் ஒருவர் தன் தகப்பனார் செய்து வைத்திருந்த Investments அவருக்குக் கிடைக்குமென்று கூறலாமல்லவா? ஆக 8-ம் வீட்டை துஸ்தானமென்று கூறி ஒதுக்குதல் எவ்வாறு பொருந்தும்? 8-ம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தால் அந்த கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறது என்று கூறி அந்த கிரகம் அந்த தசாகாலங்களில் நல்லதைச் செய்யாது என்று கூறுவார்கள். அந்த வாதம் சரியல்ல என்பது நமது வாதம். அதேபோல் ஒருவருக்கு 8-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் அவருடைய பிதுராஜித சொத்துக்கள் அழியக் கூடும்.
தாயாரைக் குறிப்பது 4-ம் வீடு. 5-ம் வீடென்பது லாட்டரி, ரேஸ், Speculation துறை ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் முன்பே எழுதி இருக்கிறோம். 4-ம் வீட்டிற்கு 5-ம் வீடு என்பது எது? 8-வது வீடு. ஆக ஒருவர் ஜாதகத்தில் 8-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 8-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது ஒருவரின் தாயாருக்கு லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணம் கிடைக்க வழியுண்டு. ஆக 8-ம் இடம் என்பது துஸ்தானமென்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 8-ம் வீட்டைப் பற்றிய மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தாயாரைக் குறிப்பது 4-ம் வீடு. 5-ம் வீடென்பது லாட்டரி, ரேஸ், Speculation துறை ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் முன்பே எழுதி இருக்கிறோம். 4-ம் வீட்டிற்கு 5-ம் வீடு என்பது எது? 8-வது வீடு. ஆக ஒருவர் ஜாதகத்தில் 8-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 8-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது ஒருவரின் தாயாருக்கு லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணம் கிடைக்க வழியுண்டு. ஆக 8-ம் இடம் என்பது துஸ்தானமென்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 8-ம் வீட்டைப் பற்றிய மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 26
எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.
2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.
3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.
4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.
5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.
7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.
9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.
எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.
2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.
3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.
4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.
5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.
7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.
9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகரின் இலக்கினம்
கன்னி; 4-ம் வீடான தனுசில் சந்திரன், புதன், சுக்கிரன். 5-ம் வீட்டில் கேது, சூரியன். 9-ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய், சனி. 11-ம் வீடான கடகத்தில் ராகு. 12-ம் வீடான சிம்மத்தில் கேது. தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டில 8-ம் வீட்டிற்குடைய செவ்வாயும், 6-ம் வீட்டிற்குண்டான சனியும், இரண்டு பாபிகள் இருப்பதைப் பாருங்கள். தகப்பனார் இவருக்கு விரோதி என்றே கூறலாம். இவருடைய நலனில் சிறிதும் அக்கரை காட்டாதவர்; தன்னுடய வெறுப்புக்களைத் தவிர வேறெதையுமே தன் மகனுக்குக் காட்டாதவர். இந்த ஜாதகர் முன் ஜென்மத்துப் பாபம் இப்படி ஒரு தகப்பனார் இவருக்கு வாய்த்திட்டார். 9-ம் வீடு மேற்படிப்பைக் குறிக்கிறது அல்லவா? மேற்படிப்பும் பாதிக்கப்படும். 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? நீண்ட பயணத்தின்போது பிரச்சனைகள் உறுவாகும். 9-ம் இடம் தர்மஸ்தானம் அல்லவா? அவர் செய்யும் தர்மங்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.
10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.
11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.
12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
கன்னி; 4-ம் வீடான தனுசில் சந்திரன், புதன், சுக்கிரன். 5-ம் வீட்டில் கேது, சூரியன். 9-ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய், சனி. 11-ம் வீடான கடகத்தில் ராகு. 12-ம் வீடான சிம்மத்தில் கேது. தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டில 8-ம் வீட்டிற்குடைய செவ்வாயும், 6-ம் வீட்டிற்குண்டான சனியும், இரண்டு பாபிகள் இருப்பதைப் பாருங்கள். தகப்பனார் இவருக்கு விரோதி என்றே கூறலாம். இவருடைய நலனில் சிறிதும் அக்கரை காட்டாதவர்; தன்னுடய வெறுப்புக்களைத் தவிர வேறெதையுமே தன் மகனுக்குக் காட்டாதவர். இந்த ஜாதகர் முன் ஜென்மத்துப் பாபம் இப்படி ஒரு தகப்பனார் இவருக்கு வாய்த்திட்டார். 9-ம் வீடு மேற்படிப்பைக் குறிக்கிறது அல்லவா? மேற்படிப்பும் பாதிக்கப்படும். 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? நீண்ட பயணத்தின்போது பிரச்சனைகள் உறுவாகும். 9-ம் இடம் தர்மஸ்தானம் அல்லவா? அவர் செய்யும் தர்மங்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.
10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.
11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.
12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
இனி 8-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.
சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.
செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.
புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.
குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.
சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.
சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;
ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.
கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.
இதுவரையில் 8-ம் வீட்டைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி அடுத்த பாடத்தில் 9-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.
சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.
செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.
புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.
குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.
சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.
சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;
ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.
கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.
இதுவரையில் 8-ம் வீட்டைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி அடுத்த பாடத்தில் 9-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 27
மிக முக்கியமானவீடான 9-ம் வீட்டைப், பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஒருவருடைய குருவைப் பற்றிக் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். பொதுவாக இதைப் பிதா ஸ்தானமென்றுதான் கூறுவோம். அதாவது ஒருவரின் தகப்பனாரை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். கிரகங்களில் சூரியனை வைத்து எப்படி தகப்பனாரைக் கூறுகின்றோமோ அதைப் போல் 9-ம் வீட்டை வைத்து தகப்பனாரைப் பற்றிக் கூறவேண்டும். ஒருவருடைய நீண்ட பயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் செய்கின்ற தர்மத்தையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 9-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் அவர் செய்கின்ற தருமங்கள் எல்லோராலும் போற்றப்படும். பாப கிரகங்கள் இருப்பின் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும். சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்தால் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.
5-ம் வீடும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றுதான் அழைக்கப் படுகிறது. 9-ம் வீடு போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆக திரிகோண ஸ்தானமான 5-ம் வீடும் 9-ம் வீடும் கெடாமல் இருந்தால் ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாமல்லவா? அதாவது சுபக் கிரகங்களான குரு, சந்திரன், புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்து அல்லது 9-ம் வீட்டைப் பார்த்தால் அவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாம். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றார் எனக் கூறலாம்.
9-ம்வீடு ஒருவரின் மத நம்பிக்கை, வேதாந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. குருவானவர் வேதாந்தத்தைக் குறிக்கும் கிரகம். 9-ம் வீட்டில் குரு இருந்தால் ஒருவர் மதம், வேதாந்தங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். சனி இருந்தாலும் அவ்வாறே மத சம்மந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கோவில்கள், சத்சங்கங்கள் மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். கல்லூரிக்கு மேற்பட்டப் படிப்பையும் குறிப்பது இந்த வீடுதான். இதில் சுப கிரகங்கள் இருந்து நடப்பு தசா, புக்திகளும் 9-ம் வீட்டைக் குறித்தால் அவர் கல்லூரிப் படிப்பிற்கு மேற்பட்டப் படிப்பைப் படிப்பார் எனக் கொள்ளலாம்.
சட்டப் படிப்பைக் குரிப்பதும் இந்த வீடுதான். (கிரகங்களில் குருவானவர் சட்டப் படிப்பைக் குறிப்பார்.) ஆன்மீக சிந்தனைகள், உபாத்தியாயர் தொழில், புரோஹிதம் தொழில் ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். தேவதைகளை வசியம் செய்தலையும் இந்த வீடுதான் குறிக்கும்.
மிக முக்கியமானவீடான 9-ம் வீட்டைப், பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஒருவருடைய குருவைப் பற்றிக் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். பொதுவாக இதைப் பிதா ஸ்தானமென்றுதான் கூறுவோம். அதாவது ஒருவரின் தகப்பனாரை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். கிரகங்களில் சூரியனை வைத்து எப்படி தகப்பனாரைக் கூறுகின்றோமோ அதைப் போல் 9-ம் வீட்டை வைத்து தகப்பனாரைப் பற்றிக் கூறவேண்டும். ஒருவருடைய நீண்ட பயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் செய்கின்ற தர்மத்தையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 9-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் அவர் செய்கின்ற தருமங்கள் எல்லோராலும் போற்றப்படும். பாப கிரகங்கள் இருப்பின் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும். சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்தால் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.
5-ம் வீடும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றுதான் அழைக்கப் படுகிறது. 9-ம் வீடு போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆக திரிகோண ஸ்தானமான 5-ம் வீடும் 9-ம் வீடும் கெடாமல் இருந்தால் ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாமல்லவா? அதாவது சுபக் கிரகங்களான குரு, சந்திரன், புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்து அல்லது 9-ம் வீட்டைப் பார்த்தால் அவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாம். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றார் எனக் கூறலாம்.
9-ம்வீடு ஒருவரின் மத நம்பிக்கை, வேதாந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. குருவானவர் வேதாந்தத்தைக் குறிக்கும் கிரகம். 9-ம் வீட்டில் குரு இருந்தால் ஒருவர் மதம், வேதாந்தங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். சனி இருந்தாலும் அவ்வாறே மத சம்மந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கோவில்கள், சத்சங்கங்கள் மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். கல்லூரிக்கு மேற்பட்டப் படிப்பையும் குறிப்பது இந்த வீடுதான். இதில் சுப கிரகங்கள் இருந்து நடப்பு தசா, புக்திகளும் 9-ம் வீட்டைக் குறித்தால் அவர் கல்லூரிப் படிப்பிற்கு மேற்பட்டப் படிப்பைப் படிப்பார் எனக் கொள்ளலாம்.
சட்டப் படிப்பைக் குரிப்பதும் இந்த வீடுதான். (கிரகங்களில் குருவானவர் சட்டப் படிப்பைக் குறிப்பார்.) ஆன்மீக சிந்தனைகள், உபாத்தியாயர் தொழில், புரோஹிதம் தொழில் ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். தேவதைகளை வசியம் செய்தலையும் இந்த வீடுதான் குறிக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
நீண்டபயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால் 9-ம் வீட்டின் தொடர்பு இன்றி அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதாவது 9-ம் வீட்டின் அதிபதி அல்லது 9-ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசா, புக்திகளில்தான் ஒருவர் வெளிநாடு செல்ல முடியும். ஒருவர் "உங்களிடம் நான் வெளிநாடு செல்ல முடியுமா?" எனக் கேட்கிறார் எனக் கொள்வோம். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வெளி நாடு செல்வது என்றால் என்ன?
1. நாம் இருக்கும் இடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.
2. நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. சற்றும் பழகாத முன், பின் தெரியாத இடத்தில் இருக்க வேண்டும். இவைதான் வெளிநாடு செல்லுதலைக் குறிக்கிறது.
நாம் தற்போது இருக்கும் வீட்டை/ நாட்டைக் குறிப்பது 4-ம் வீடு. அந்த வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு தான் இடம் பெயர்தலைக் குறிக்கிறது.
நீண்ட பயணம் மேற்கொள்ளுவதை 9-ம் வீடு குறிக்கிறது. சற்றும் பழகாத, முன் பின் தெரியாத இடத்திற்குச் செல்வதை 12-ம் வீடு குறிக்கிறது. ஆக 3, 9, 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திகாலங்களில்தான் ஒருவர் வெளி நாடு செல்ல முடியும். ஆக 9-ம் வீட்டின் உபயோகம் வெளிநாடு செல்ல எப்படிப் பயன் தருகிறது பார்த்தீர்களா?
சற்றும் முன்பின் தெரியாதவர்களையும் வெளி நாட்டவர்களையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் தனக்கு சொந்தத்தில் திருமணமாகுமா? அல்லது அந்நியத்தில் திருமணமாகுமா? எனக்கேட்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீடும் சந்திரனும் சம்மந்தப் பட்டால் தாயார் வழி உறவில் திருமணமாகுமென்று கூறலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் தகப்பனார் வழி உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். புதன் சம்மந்தப்பட்டால் தாய் மாமன் உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். 9-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டல் அந்நியத்தில் திருமணமாகும் எனக்கூறலாம். ஏன் அந்நிய நாட்டினராகக் கூட இருக்கலாம்.
1. நாம் இருக்கும் இடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.
2. நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. சற்றும் பழகாத முன், பின் தெரியாத இடத்தில் இருக்க வேண்டும். இவைதான் வெளிநாடு செல்லுதலைக் குறிக்கிறது.
நாம் தற்போது இருக்கும் வீட்டை/ நாட்டைக் குறிப்பது 4-ம் வீடு. அந்த வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு தான் இடம் பெயர்தலைக் குறிக்கிறது.
நீண்ட பயணம் மேற்கொள்ளுவதை 9-ம் வீடு குறிக்கிறது. சற்றும் பழகாத, முன் பின் தெரியாத இடத்திற்குச் செல்வதை 12-ம் வீடு குறிக்கிறது. ஆக 3, 9, 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திகாலங்களில்தான் ஒருவர் வெளி நாடு செல்ல முடியும். ஆக 9-ம் வீட்டின் உபயோகம் வெளிநாடு செல்ல எப்படிப் பயன் தருகிறது பார்த்தீர்களா?
சற்றும் முன்பின் தெரியாதவர்களையும் வெளி நாட்டவர்களையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் தனக்கு சொந்தத்தில் திருமணமாகுமா? அல்லது அந்நியத்தில் திருமணமாகுமா? எனக்கேட்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீடும் சந்திரனும் சம்மந்தப் பட்டால் தாயார் வழி உறவில் திருமணமாகுமென்று கூறலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் தகப்பனார் வழி உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். புதன் சம்மந்தப்பட்டால் தாய் மாமன் உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். 9-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டல் அந்நியத்தில் திருமணமாகும் எனக்கூறலாம். ஏன் அந்நிய நாட்டினராகக் கூட இருக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருகுலதெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் அனுகூலமாக உள்ளதா இல்லையா என்பது பற்றியும் நாம் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இயற்கையிலேயே உள்ள சுபக்கிரகங்கள் 9-ம் வீட்டில் இருந்தால் குலதெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். 9-ம் வீட்டின் அதிபதியும் நல்ல இடத்தில் இருப்பாரேயாகில் குல தெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். நல்ல இடமென்றால் கேந்திர ஸ்தானங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களிலோ அல்லது லாப ஸ்தானமான 11-ம் வீட்டிலோ இருந்தால் குலதெய்வம் கைகொடுக்கு மெனக் கூறலாம்.
3-ம் இடமானது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வெளியிடுதலைக் குறிக்கிறது. அதாவது பொழுது போக்கு அம்சமான புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் தான் குறிக்கிறது. ஆனால் 9-ம் இடமோ மதம் சம்மந்தமான புத்தகங்கள், ஆன்மீக சம்மந்தமான புத்தகங்கள், வெளிநாட்டு சம்மந்தமுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 9-ம்வீடு அதிபதியானவர் இலக்கினத்தையோ அல்லது சந்திரனையோ பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் செய்யும் பரிகாரகங்களுக்குப் பலன் இருக்கும். 9-ம் வீடு குலதெய்வத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே குல தெய்வத்தின் பக்கபலம் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்.
இதுவரையில் 9-ம் வீட்டைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொண்டீர்கள். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
3-ம் இடமானது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வெளியிடுதலைக் குறிக்கிறது. அதாவது பொழுது போக்கு அம்சமான புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் தான் குறிக்கிறது. ஆனால் 9-ம் இடமோ மதம் சம்மந்தமான புத்தகங்கள், ஆன்மீக சம்மந்தமான புத்தகங்கள், வெளிநாட்டு சம்மந்தமுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 9-ம்வீடு அதிபதியானவர் இலக்கினத்தையோ அல்லது சந்திரனையோ பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் செய்யும் பரிகாரகங்களுக்குப் பலன் இருக்கும். 9-ம் வீடு குலதெய்வத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே குல தெய்வத்தின் பக்கபலம் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்.
இதுவரையில் 9-ம் வீட்டைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொண்டீர்கள். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 28
9-ம் வீட்டைப் பற்றி ஓரளவிற்குச் சென்ற பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். 9-ம் வீட்டிற்குடைய கிரகம் இலக்கினத்தில் இருந்தால் பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். தெய்வ வழிபாடு நிரம்ப இருக்கும்.
9-ம் வீட்டதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் அயல் நாட்டுத் தொடர்பு மூலம் பணவரவு இருக்கும். தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.
3-ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரர், சகோதரிகளின் ஆதரவு இருக்கும். 4-ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள்.
5-ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்.
6-ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும். தகப்பனார் உடல் நிலை பாதிக்கக் கூடும்.
7-ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும். அந்நியத்திலிருந்து பெண் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும்.
8-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கண்டம் எனக் கொள்ளலாம். பிதாவின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.
9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து இருக்கும். தகப்பனார் சொத்துக்கள் ஸ்திரமாக இருக்கும்.
10-ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர். தகப்பனாருடைய சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும்.
11-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். தெய்வ காரியங்கள் வீட்டில் நிறைந்து இருக்கும். அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.
12-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கெடுதி உண்டாகும். தகப்பனாரின் சொத்துக்கள் நிலைக்காது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.
9-ம் வீட்டைப் பற்றி ஓரளவிற்குச் சென்ற பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். 9-ம் வீட்டிற்குடைய கிரகம் இலக்கினத்தில் இருந்தால் பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். தெய்வ வழிபாடு நிரம்ப இருக்கும்.
9-ம் வீட்டதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் அயல் நாட்டுத் தொடர்பு மூலம் பணவரவு இருக்கும். தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.
3-ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரர், சகோதரிகளின் ஆதரவு இருக்கும். 4-ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள்.
5-ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்.
6-ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும். தகப்பனார் உடல் நிலை பாதிக்கக் கூடும்.
7-ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும். அந்நியத்திலிருந்து பெண் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும்.
8-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கண்டம் எனக் கொள்ளலாம். பிதாவின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.
9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து இருக்கும். தகப்பனார் சொத்துக்கள் ஸ்திரமாக இருக்கும்.
10-ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர். தகப்பனாருடைய சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும்.
11-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். தெய்வ காரியங்கள் வீட்டில் நிறைந்து இருக்கும். அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.
12-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கெடுதி உண்டாகும். தகப்பனாரின் சொத்துக்கள் நிலைக்காது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 8 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்களும் ஜோதிடர் ஆகலாம் -தமிழ் மின்னூல்
» நீங்களும் ஸ்லிம் ஆகலாம்
» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
» நீங்களும் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் ஆகலாம்
» நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!
» நீங்களும் ஸ்லிம் ஆகலாம்
» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
» நீங்களும் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் ஆகலாம்
» நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|