ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:02 am

அதாவது 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் புதன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்து குருவின் பார்வையும் இருக்குமேயாகில் அந்த ஜாதகர் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்குவர். இதுதான் இந்தப் பாடலின் பொருள். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற என்ன கிரக அமைப்புக்கள் வேண்டும் என்பதைப் பார்த்தீர்கள்.

நாம் இப்போது மற்றொறு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறோம். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லை; தாமதம் ஆகிறது எனக் கொள்ளுங்கள். உடனே அவர் எதாவது பரிகாரம் செய்யலாமா? எனக் கேள்வி கேட்ப்பார். பரிகாரம் செய்தால் அவர் திருமணம் ஆகிவிடும் என்பது அவர் எண்ணம். நாம் இப்போது இந்தப் பரிகாரத்தைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம். பரிகாரம் என்பது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகுமா? பரிகாரம் செய்தால் நாம் விருப்புவது எல்லாம் நடைபெறுமா? இதுதான் இந்தப் பாடத்தின் மிக்கியமான விவாதம் ஆகும்.

நாம் போன ஜென்மத்தில் செய்த காரியங்களின் பலனைத்தான் இப்போது இந்த ஜென்மத்தில் அனுபவித்து வருகிறோம். போன ஜென்மத்தில் நல்லவை செய்தோமேயானால் இந்த ஜென்மத்தில் நன்றாக இருப்போம். பாவங்கள் செய்தோமேயானால் அதற்கேற்ற பலனை அனுபவிப்போம். நாம் நல்லது செய்தோமா அல்லது தீயவை செய்தோமா என்பதை ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். நாம் செய்யும் பாபங்கள் பலவகைப் படும்.

1. மிகக் கொடூரமான பாபங்கள் செய்தோர்; இத்தகைய பாபங்கள் செய்தோருக்கு என்ன பரிகாரம் செய்தும் பலன் இருக்காது. எவ்வளவுதான் பணம் செலவழித்துப் பரிகாரங்கள் செய்தும் பலனே இருக்காது. கொலை, கொள்ளை செய்தோர், வயதான தாய், தந்தைகளைக் கைவிட்டோர் இம்மாதிரிக் குற்றங்கள் செய்தோர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவர்கள் செய்த பாபங்களுக்கு "துருத கருமம்" எனப் பெயர். போனஜென்மத்தில் செய்த பாபத்தின் பலனை இந்த ஜென்மத்தில் இவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தப் பாபங்களுக்கு என்ன பரிகாரம் செய்தும் பலனே இருக்காது. ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவன் பார்வையோ இருக்காது. அவர்கள் பார்த்தால்தான் செய்கின்ற பரிகாரங்களுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் சிலர் என்ன பரிகாரம் செய்தும் பலன்கள் கிடைப்ப தில்லை.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:02 am

2. சிலர் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் செய்து இருப்பர். அம்மாதிரிக் குற்றங்கள் செய்திருப்போருக்கு அவர்கள் செய்யக்கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். அவர்களுக்கு இலக்கினத்திற்கோ, சந்திரனுக்கோ அல்லது தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டுக்காரரின் பார்வையோ இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். இத்தகைய பாபங்களுக்கு "துருத-அத்ருத கருமம்" எனப்பெயர்.

3. சிலர் மிகச் சிறிதளவு குற்றங்கள் புரிந்திருப்பர். அச்செயல்களால் யாரும் பாதிக்கப்படாதிருந்திருப்பர். அவ்வாறு செய்த தவறுக்கு "அத்ருத கருமம்" எனப் பெயர். அவர்கள் எந்தவிதப் பரிகாரமும் செய்யாமலே அவர்களுக்கு அனுகூலமாகக் காரியங்கள் நடக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு இலக்கினத்திலோ, அல்லது சந்திரனுடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்காரரோ சேர்ந்திருப்பார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்துடனோ அல்லது சந்திரா இலக்கினத்துடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவனோ சேர்ந்திருப்பது அல்லது பார்ப்பது மிக நல்லது என்று தெரிகிறது அல்லவா? இப்போது நீங்கள் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து அவர் பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சொல்ல முடியும் அல்லவா? ஆகவே எல்லோருக்கும் பரிகாரங்கள் தேவையில்லை. மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:03 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 19


இந்தப் பாடத்தில் நாம் 4-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருந் தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கயோகம் உண்டு என்று கூறலாம்.

4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம். 4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார். சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எறிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை. 4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது. ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:03 am

சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். 4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான். காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

முதல் வீட்டில் : மிகுந்த படித்தவராக இருப்பர்.

இரண்டாம் வீட்டில் : தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும். கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பார்.

மூன்றாம் வீட்டில் : நான்காம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல; நான்காம் வீடு குறிக்கின்ற காரகத்துவங்களெல்லாம் சரியாக இருக்காது.

நான்காம் வீட்டில் : தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பார்.

5-ம் வீட்டில் : இவருடைய தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பார். மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பார்.

6-ம் வீட்டில் : முன்கோபியானவர். நல்ல எண்ணங்கள் இல்லாதவர்.

7-ம் வீட்டில் : வீடு, வாசலுடன் இருப்பவர். 7-ம் வீடு சராசியாக இருந்தால் வெளியூரிலும், ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளுரிலும் சம்பாத்தியம் செய்வர்.

8-ம் வீட்டில் : இது துஸ்தானம் அல்லவா? மறைவிடமும் ஆகும். செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம்.

9-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் மன நிறைவு உண்டாகும். தகப்பனாராலும் அனுகூலம்.

10-ம் வீட்டில் : அரசியலில் புகழ் பெறுவர். பலர் மதிக்கும் வண்ணம் வாழ்வர்.

11-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம்.

12-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம்.

இப்போது 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:03 am

சூரியன் : பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

சந்திரன் : சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.

செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.

புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.

ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.

கேது: தாயாரால் அனுகூலமில்லை; வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்;

4-ம் வீட்டின் மற்ற பலன்களை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:04 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 20


ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது என நாம் எழுதி இருந்தோம். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்த கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக் கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்தாத முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் 4-ம் இடம் சர ராசியாக இருந்து அதன் அதிபதியும் சரராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்குப் பல இடத்தில் வீடுகள் இருக்கும். இது வீட்டுயோகம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். வீடுயோகம் இல்லாதவர்களுக்கு 4-ம் வீட்டு அதிபர் சரராசியிலும், 4-ம் வீடு சர ராசியிலும் இருந்தால் அவர் பல வீடுகளில் வசிப்பர் எனக் கொள்ளலாம். ஸ்திர ராசியில் இருந்தால் ஒரே வீட்டில் வசிப்பர் எனக் கொள்ளலாம்.

4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.

ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:04 am

4-ம் வீட்டதிபதி பாவிகள் சம்மந்தமில்லாமல் கேந்திரஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோனைருந்தால் பந்துக்களை விரும்புபவனாக அந்த ஜாதகன் இருப்பான். 4-க் குடையவன் பாபக் கிரகத்துடன் சேர்ந்தாலும், பாபர்கள் வீட்டிலிருந்தாலும் நீச வீடு, சத்துருக்கள் வீட்டிலிருந்தாலும் பந்துக்களோடு சேர்ந்து இருக்க மாட்டான். 4-ம் வீடு படிப்பு ஸ்தானமல்லவா? 4-ம் வீட்டிற்குடையவனும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும், புதன் உச்ச ராசியில் இருந்தாலும் ஜாதகன் படிப்பு மிகுந்தவனாவான். நாம் ஏற்கனவே கூறிருக்கிறோம், நாலாம் இடம் என்பது கல்லூரிவரையிலான படிப்பு வரையிலும்தான். அதற்கு மேற்பட்ட படிப்பை 9-ம் வீட்டைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் புதன் கேந்திரஸ்தானங்களுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அதைத் தவிரவும் சுக்கிரன் 2 அல்லது 5 அல்லது 9-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான் ஜோதிடத்தில் வல்லவராக இருக்க முடியும். சரி! ஒருவர் கணிதத்தில் வல்லவராக இருக்க எந்த கிரகம் நன்றாக இருக்க முடியும். கணிதத்திற்கு அதிபதி புதன். அவர் ஜாதகத்தில் கெடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர் கணிதத்தில் வல்லவராக இருக்க முடியும். சட்டப் படிப்புப் படிக்க எந்த கிரகம் உதவும்? சட்டத்திற்குக் காரகன் குரு. அவர் ஜாதகத்தில் நல்ல விதமாக அமைந்தால்தான் ஒருவர் வழக்கறிஞ்கராக முடியும். இப்போது எல்லோரும் Engineering படிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்கு எந்த கிரகம் உதவி செய்யும்? Engineering படிப்பவர்களுக்குக் கணிதம் மிக முக்கியம். அவர்கள் Drawing, Plan போடுவதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அதிபதி புதன். இயந்திரங்களுக்கு அதிபதி செவ்வாய். கட்டிடத் தொழிலுக்கு அதிபதி செவ்வாய். புதனும், செவ்வாயும் படிப்பு சம்மந்தமான நாலாம் வீட்டுடனோ அல்லது 9-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் ஒருவர் Civil அல்லது Mechanical Engineer ஆக முடியும். Chemical - க்கு அதிபதிசுக்கிரன். அவரும் புதனும் சேர்ந்து ஒருவரை Chemical Engineer -ஆக ஆக்க முடியும். ஆதாவது படிப்பு ஸ்தானத்துடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் அவர் Chemical Engineer ஆக முடியும். சந்திரன் நீருக்கு அதிபதியல்லவா? அவரும் புதனும் Textile Engineer களை உருவாக்க முடியும். பூமியிலுள்ள கனி வளங்களைக் குறிப்பது சனி. பூமியைக் குறிப்பது செவ்வாய். சனி-செவ்வாய்-புதன் - இந்தச் சேர்க்கை Mines Engineer-ஐக் குறிக்கிறது.

சரி! மருத்துவராக எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும். சூரியனுக்குப் பெயர் தன்வந்திரி. அவர் படிப்பு ஸ்தானத்துடன் சமமந்தப் பட்டால்தான் ஒருவர் மருத்துவராக முடியும். இப்போது எந்தெந்த கிரக சேர்க்கை பெற்றால் ஒருவர் என்ன படிக்க முடியும் என்று தெரிந்து கொண்டீர்கள்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:05 am

சரி! ஒருவர் நான் இப்போது பட்டப் படிப்பு முடித்து விட்டேன். மேற்கொண்டு படிக்க முடியுமா? எனக் கேட்க்கிறார் எனக் கொள்ளுங்கள்? எப்படி பதில் சொல்வது? தற்போது நடக்கும் தசா, புக்திகளைப் பாருங்கள். அவை படிப்புக்கு உண்டான 4 அல்லது 9 அல்லது 11-ம் வீடுகளைக் குறித்தால் அவர் மேற்கொண்டு படிப்பார் எனக் கொள்ளலாம். குறிக்க வில்லை என்றால் அவருக்கு மேற்கொண்டு படிப்பு இல்லை எனக் கூறிவிடலாம். 4, 9 தானே படிப்பு ஸ்தானம். 11-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும் எனக் கேட்க்கலாம்? 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? உங்கள் ஆசைகளை நிறைவேற்றுகின்ற வீடு அல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய படிக்க வேண்டுமென்ற ஆசையும் நிறைவேற வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொண்டு பலன் சொல்லுங்கள்.

7-ம் வீடு என்பது களத்திரஸ்தானம் என்று முன்பே எழுதி இருக்கிறோம். அதைத் தவிர

ஒருவர் வியாபாரம் செய்வாரா அல்லது மாட்டாராஎன்றும் 7-ம் வீட்டைக் கொண்டுதான்

சொல்ல வேண்டும். நாம் வங்கியிடம் கடனுக்கு முயற்சி செய்கிறோம் எனக்

கொள்ளுங்கள். அந்த வங்கியைக் குறிப்பது 7-ம் வீடு. அதாவது நாம் யாருடனாவது

ஏதாவது Transaction வைத்துக் கொண்டால் அந்த நபரைக் குறிப்பது 7-ம் வீடு. ஒருவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் Scholarsship-க்கு முயற்சி செய்கிறார் எனக் கொள்ளுங்கள். Scholarship கொடுப்பது அந்தக் கல்வி நிலையம்தானே. அந்தக் கல்வி நிலையத்தைக் குறிப்பது 7-ம் வீடு. இதையெல்லாம் எதற்கு எழுதுகிறோம் என்றால் ஒருவர் Scholarship-ல் படிப்பாரா? என்ற கேள்வி எழுந்தால் எப்படி பதில் சொல்லுவது என்பதற்காகத்தான். சரி! கல்வி நிலையம் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது எனக்கொள்ளுங்கள். அதாவது அதற்கு வரவேண்டிய பணம் குறைகிறது என்பதுதானே பொருள். அதாவது அந்த அளவிற்கு அந்தக் கல்வி நிலையத்திற்குப் பண நஷ்டம் என்பதுதானே பொருள். அந்தப் பண நஷ்டத்தைக் குறிப்பது எந்த வீடு? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடுதான். ஆக 6-ம் வீடு என்பது உங்களுடன் Transaction வைத்து இருப்பவரின் நஷ்டத்தைக் குறிக்கிறது. 11-ம் வீடு உங்களின் லாபத்தைக் குறிக்கிறது. Scholarship கிடைத்தால் உங்களுக்கு லாபம் தானே! ஆக ஒருவர் "எனக்கு படிப்பதற்கு "ஸ்காலர்ஷிப்" கிடைக்குமா? என்று கேள்வி கேட்டால் 4ம் வீடு 6-ம் வீட்டுடனும் 11-ம் வீட்டுடனும் சம்மந்தம் உள்ளதா? எனப் பாருங்கள். அப்படி இருந்தால் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமெனப் பொருள்

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பாருங்கள். இவருக்கு மேல் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இலக்கினம் : மீனம், சந்திரன் மீனத்தில்;
3-ம் வீடான ரிஷபத்தில் கேது;
4-ம் வீடான மிதுனத்தில் சனி, சுக்கிரன்;
5-ம் வீடான கடகத்தில் சூரியன், புதன்;
6-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;
9-ம் வீடான விருச்சிகத்தில் ராகு;
12-ம் வீடான கும்பத்தில் குரு.

நவாம்சம்:

விருச்சிகத்தில் இலக்கினம்;

3-ம் வீடான மகரத்தில் ராகு, சூரியன்;
4-ம் வீடான கும்பத்தில் சந்திரன்;
6-ம் வீடான மேஷத்தில் சனி, குரு;
8-ம் வீடான மிதுனத்தில் சுக்கிரன்;
9-ம் வீடான கடகத்தில் கேது;
10-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;
12-ம் வீடான துலாத்தில் புதன்.

இவர் பிறந்தது 08-08-1974. இவர் ஸ்காலர்ஷிபில் மேற்படிப்புப் படித்தார். மேற்படிப்பிற்குண்டான 9-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில்; அந்தச் செவ்வாய் லாபாதிபதியான சனியால் பார்க்கப் படுகிறார். ஆக இவருக்கு மேற்படிப்புப் படிக்க Scholarship கிடைத்தது. இந்த ஜாதகத்தில் இன்னும் ஒரு வேடிக்கை இருக்கிறது. 7-ம் இடம் களத்திரஸ்தானம் அல்லவா? களத்திர ஸ்தானாதிபதி புதன் 5-ம் வீட்டில், 6-ம் வீட்டு அதிபனான சூரியனுடன் இருக்கிறார். கணவன் மனைவிக்குப் பிரிவை உண்டாக்கும் வீடு 6-ம் இடமல்லவா! ஏன்? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. ஆக7-ம் வீடு திருமணத்தைக் கொடுத்தால் 6-ம் வீடு பிரிவைக் கொடுக்கும். இவர் திருமணமாகி மனைவியைப் பிரிய வேண்டிய நிலை இருந்தது. சூரியன் யார்? அவர் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? ஆக இந்தப் பிரிவிற்கு அவர் தகப்பனாரே காரணமானார். வேடிக்கையைப் பார்த்தீர்கள? படிப்பிற்கு உதவி செய்த 6-ம் வீடு எப்படித் திருமண வாழ்க்கையில் விளையாடி விட்டது பார்த்தீர்களா?

ஒருகிரகம் சில காரியங்களுக்கு நல்லவராக இருப்பார். அதே சமயத்தில் வேறு சில காரியங்களுக்குத் தொந்தரவு கொடுப்பவராக இருப்பார். இதுதான் கிரகங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. நாம் இத்துடன் 4-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:05 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 21


நாம் இப்போது 5-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். 5-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? 5-ம் வீட்டைப் பூர்வ பண்ணிய ஸ்தானம் என்று கூறுவர். போன ஜென்மத்தில் ஒருவர் புண்ணியம் செய்தாரா அல்லது பாபம் செய்தாரா என்பதை இந்த வீட்டைக் கொண்டு தீர்மானிக்கலாம். பாப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இவைகள் 5-ம் வீட்டில் இருக்குமேயாகில் அவர் போன ஜென்மத்தில் பாபம் செய்தவர் எனக் கூறலாம். இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தீயரோடு சேராத புதன் ஆகியோர் 5-ம் வீட்டில் இருப்பார்களேயானால் அவர் பாபம் செய்யாதவர் எனக் கூறலாம். ஆக ஒருவர் முற்பிறவியில் பாபம் செய்தவரா அல்லது புண்ணியம் செய்தவரா என்பதை 5-ம் வீட்டைக் கொண்டு மேலே கூறியவற்றிலிருந்து தீர்மானிக்கலாம்.

அடுத்தது 5-ம் வீட்டைப் புத்திர ஸ்தானம் என்றழைப்பர். ஒருவருக்குக் குழந்தை பிறக்குமா அல்லது பிறக்காதா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு தீ£ர்மானம் செய்யலாம். புத்திரஸ்தானத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் ஆகியோர் இருந்தால் புத்திர நாசம் என்று கூறுவர். 5-ம் வீட்டில் சனி இருந்தால் "தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவர். அதாவது அவருக்குக் குழந்தைகள் யோகம் இல்லை என்று பொருள். ஆனால் சிலருக்கு 5-ம் பாவம் கெட்டிருந்தும் குழந்தைகள் யோகம் இருக்கும். அதற்குக் காரணத்தைப் பின்னால் பார்ப்போம். பொதுவாக 5-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் காதல் விவகாரத்தைக் குறிப்பதும் இந்த 5-ம் வீடுதான். 7-ம் வீட்டு அதிபதி 5-ம் வீட்டில் இருந்தாலும், 5-ஆம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தாலும் ஒருவர் காதல் திருமணம் செய்வர் என்று கூறலாம். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கும் வீடு அல்லவா? 5-ம் வீடு காதல் விவகாரத்தைக் குறிப்பதனால் 7-ம் வீடும், 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அது காதல் திருமணத்தில்தான் முடியும்.

கலை சம்மந்தப் பட்ட துறையையும் குறிப்பது இந்த வீடுதான். சினிமா, டிராமா, பாட்டு, நடிப்புப் போன்ற கலைத்துறைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது. 10-ம் வீட்டு அதிபர் சுக்கிரனாக இருந்து அவர் 5-ஆம் வீட்டில் இருந்தால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆக 5-ம் வீடு பொழுதுபோக்கு அம்சங்களையும் குறிக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்கள். 10-ம் வீடும் 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா Thu Jul 17, 2014 4:05 am

Speculation - துறையையும் குறிப்பது இந்த வீடுதான். லாட்டரி, ரேஸ், Cross-word Puzzle போன்றவற்றையும் குறிப்பது இந்த வீடுதான். ஒருவருக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்றும் இந்த வீட்டைவைத்து அறியலாம். எப்படி? 5-ம் வீட்டதிபர் 2-ம் வீட்டில் இருந்தால் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? 2-ம் வீட்டதிபர் 5-ம் வீட்டில் இருந்தாலும் இந்த மாதிரிப் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 5-ம் வீடு 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் பெரும் தொகை கிடைக்க வழியுண்டு. 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? ஆகையால் பெரும்தொகை கிடைக்க வழியுண்டு. 2-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் சிறிய தொகைதான் கிடைக்கும். ஏனெனில் 2-ம் வீடு தனவரவைத்தான் காட்டுகிறது. 11-ம் வீடு லாபத்தைக் காட்டுகிறது. 2-ம் வீட்டிற்கும் 11-ம் வீட்டிற்கும் உண்டான வித்தியாசத்தை இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?

ஒருவருடைய புத்திகூர்மையையும் குறிப்பது இந்த வீடுதான். கிரகங்களில் புதனும், வீடுகளில் 5-ம் வீடும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. ஒருவர் என்ன தெய்வத்தைத் தொழவேண்டும் என்பதையும் 5-ம் வீட்டை வைத்துக் கூறிவிடலாம். 5-ம் வீட்டில் என்ன கிரகம் இருக்கிறதோ அதை வைத்து நீங்கள் வழிபடவேண்டிய தெய்வத்தைக் கூறவேண்டும். எந்தெந்த கிரகத்திற்கு யார் அதிதேவதை என்று கீழே கொடுத்து இருக்கிறோம்.

கிரகம்அதிதேவதை
சூரியன்சிவன்
சந்திரன்பார்வதி
செவ்வாய்முருகன்
புதன்விஷ்ணு
குருதக்ஷ¢ணாமூர்த்தி
சுக்கிரன்லக்ஷ்மி
சனிசாஸ்தா
ராகுகாளி, துர்கை, கருமாரியம்மன்
கேதுவினாயகர், சண்டிகேஸ்வரர்


ஒருவருக்கு 5-ம் வீட்டில் கேது இருக்கிறது எனக் கொள்ளுங்கள்;அவர் வினாயகரை உபாசனை செய்ய வேண்டும். செவ்வாய் இருக்குமேயாகில் முருகனை வழிபட வேண்டும். இவ்வாறாக மேற்கூறிய தெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறாக 5-ம் வீட்டைக் கொண்டு ஒருவர் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று கூறலாம். மந்திர உச்சாடனம், வேதங்கள், மதநம்பிக்கை, இவற்றையெல்லாம் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். கேது ஞானகாரகன். 5-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அவருக்கு அவர் மதத்தின்மேல் தீவீர பக்தி இருக்கும். இப்போது 5-ம் வீட்டு அதிபர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால என்ன பலன் என்று அறிவோம்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 6 Empty Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum