புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_lcapநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_voting_barநீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:14 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 8


சென்ற பாடத்தில் ராசிச் சக்கரம் போடக் கற்றுக் கொண்டீர்கள். அடுத்ததாக நாம் நவாம்சம் போடத் தெரிந்து கொள்ள வேண்டும். நவாம்சம் இல்லாமல் நாம் பலன் சொல்ல முடியாது. அதாவது துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. நவாம்சம் மட்டும் அல்ல; வேறு சில சக்கரங்களும் போட வேண்டும். அவைகள் எல்லாம் போட்டால் தான் நாம் துல்லியமகப் பலன் சொல்ல முடியும். அவைகள் எல்லாம் என்ன சக்கரங்கள் ?

1. நவாம்சம்
2. பாவம்
3. திரேக்காணம்
4. ஓரை
5. திரிசாம்சம்
6. சப்தாம்சம்
7. சஷ்டியாம்சம்.


இவைகளையெல்லாம் போட்டால் நாம் இன்னும் துல்லியமாகப் பலன் சொல்லலாம்.

ஆனால் எல்லோரும் எல்லாச் சக்கரங்களையும் போடுவதில்லை. நவாம்சம் மட்டும் தான் போடுகின்றனர். நாமும் இப்போதைக்கு நவாம்சம் மட்டும் போடக் கற்றுக் கொடுப்போம். முதலில் நவாம்சம் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நவாம்சம் என்பது ஒன்பது அம்சம் என்று பெயர். அதாவது ராசியிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் ஒன்பதாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் எப்படி ஒன்பதாகப் பிரிப்பது?

மிகவும் எளிது. ஒரு ராசிக்கு அல்லது வீட்டிற்கு ஒன்பது நட்சத்திரப் பாதம் அல்லவா ? ஒவ்வொரு நட்சத்திரப் பாதமும் ஒவ்வொரு பாகம் ஆகும். பார்த்தீர்களா! எப்படி மிக எளிதாகப் பிரித்து விட்டோம்.

நாம் முன்பு கணித்த ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இலக்கினம் முதல் ஒன்பது கிரகங்களை நாம் ராசியில் போட்டிருந்தோம். இந்த ஒன்பது கிரகங்களும், மற்றும் இலக்கினமும் எதாவது ஒரு நட்சத்திரத்தின் மேல் தான் சஞ்சாரம் செய்துகொண்டு இருக்க வேண்டும் அல்லவா? இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த விஷயங்களையெல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிரக நிலைகளை 17-ம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் சூரியனைப் பாருங்கள். ஆடி 29-ம் தேதி 12 நாழிகை 28 வினாழிகைக்கு ஆயில்யம் 4-ம் பாதத்தில் இருக்கிறார். ஆடி 32-ம் தேதி 40 நாழிகை 35 வினாழிகைக்கு அவர் மகம் 1-ம் பாதத்திற்குச் செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில்தான் இருக்கிறார். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதி மாலை 5-00 மணி. அதாவது உதயாதி நாழிகை 27 வினழிகை 25க்கு அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். சூரியனின் நட்சத்திரப் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.

சந்திரனின் நட்சத்திரப் பாதத்தை 5-ம் பாடத்திலேயே கண்டு பிடித்து விட்டோம். அதாவது மிருகசீரிஷம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். இது திருகணிதப்படி. வாக்கியப்படி திருவதிரை 2-ம் பாதம் எனக் கண்டுபிடித்தோம்.

அடுத்தது செவ்வாய். அவர் ஆடி 23-ம் தேதி 16 நாழிகை 01 வினாழிகையில் இருந்து கேட்டை 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். ஆக செவ்வாயின் நட்சத்திரப் பாதம் கேட்டை ஆகும்.

அடுத்தது புதன் ஆகும். அவர் ஆடி 29-ம் தேதி 43 நாழிகை 47 வினாழிகையில் இருந்து 31-ம் தேதி 28 நாழிகை 42 வினாழிகை முடிய மகம் 2-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆக புதனின் நட்சத்திரப் பாதம் மகம் இரண்டு.

அடுத்தது குரு. அவர் ஆடி 15-ம் தேதி முதல் அதாவது 55நாழிகை 22 வினாழிகையில் இருந்து 32-ம் தேதி 37 நாழிகை 17 வினாழிகை முடிய திருவாதிரை 2-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆக குருவின் நட்சத்திரப் பாதம் திருவாதிரை இரண்டு.

அடுத்தது சுக்கிரன். அவர் ஆடி 29-ம் தேதி 28 நாழிகை 28 வினாழிகையில் இருந்து ஆடி 32-ம் தேதி 19 நாழிகை 18 வினாழிகை முடிய புனர்ப்பூசம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். ஆக சுக்கிரனின் நட்சத்திரப் பாதம் புனர்ப்பூசம் 1-ம் பாதம்.

அடுத்து வருபவர் சனி. அவர் ஆடி 2-ம் தேதியிலிருந்து அதாவது 23 நாழிகை 18 வினாழிகையில் இருந்து ரோகிணி 3-ம் பாதத்தில் இருக்கிறார். அப்படியானால் சனியின் நட்சத்திரப் பாதம் ரோகிணி 3.

கடைசியாக வருபவர்கள் ராகு, கேது. ஆடி 27-ம் தேதி 58 நாழிகை 9 வினாழிகையிலிருந்து திருவாதரை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதே போன்று கேது அதே தேதியிலிருந்து மூலம் 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

இப்போது நவாகிரகங்களின் நட்சத்திரப் பாதத்தைத் தெரிந்து கொண்டீர்கள். நாம் இப்போது இலக்கினம் எந்த நட்சத்திரப் பாதத்தில் வருகிறது எனக்கண்டு பிடிக்க வேண்டும். இது பஞ்சாங்கத்தில் கிடைக்காது. நாம் இலக்கினம் எப்படிக் கண்டு பிடித்தோம் என்பதைப் பாருங்கள். அதாவது போன பாடத்தைப் பாருங்கள்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:14 am

நாம் இலக்கினம் மகரம் எனப் போட்டிருந்தோம். அதாவது உதயாதி நாழிகை 26-51-ல் இருந்து 31-36 முடிய மகர இலக்கினம். இந்த இடைப்பட்ட காலமான 4 நாழிகை 45 வினாழிகையில் மகர இலக்கினம் வருகிறது. இந்த 4 நாழிகை 45 வினாழிகை ஒன்பது நட்சத்திரப் பாதங்களைக் கொண்டது அல்லவா? அப்படியானால் ஒரு நட்சத்திரப்பாதத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

நாலு நாழிகை 45 வினாழிகையைநாழிகை ஆக்குங்கள். 285 வினாழிகை வரும். இதை ஒன்பதால் வகுங்கள். 285 / 9 = 32 நாழிகை சுமாராக. அப்படியனால் 9 பாதங்களும் எவ்வளவு நேரத்தில், எப்படி கடக்கப் படுகின்றன வென்று கீழே பாருங்கள்.

மகரத்தில் உத்திராடம் 2, 3, 4, பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, பாதங்கள், அவிட்டம் 1, 2 பாதங்கள். மொத்தம் 9 பாதங்கள். இந்த 9 பாதங்களும் கீழ்க்கண்டவாறு கடக்கப் படுகின்றன.

மகர இலக்கினம் (சென்ற பாடத்தைப் பாருங்கள்) ஆரம்பம் :26.51 நாழிகை
உத்திராடம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
உத்திராடம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
உத்திராடம் 4-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 1-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 3-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
திருவோணம் 4-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
அவிட்டம் 1-ம் பாதத்தை கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
அவிட்டம் 2-ம் பாதத்தைக் கடக்க ஆகும் நேரம்0.32 நாழிகை
 31.40


அன்று குழந்தை பிறந்த நேரம் 27 நாழிகை 25 வினாழிகை. அது உத்திராடம் 3-ம் பாதத்தில் வருகிறது. ஆகவே இலக்கினத்தின் நட்சத்திரப்பாதம் உத்திரடம் 3-ம் பாதமாகும். இப்போது இலக்கினம் மற்றும் 9 கிரகங்களின் நட்சத்திரப் பாதம் கண்டுபிடிக்கும் முறையைத் தெரிந்து கொண்டீர்கள். நட்சத்திரப் பாதத்தைக் கீழ்க் கண்டவாறு அட்டவணைப் படுத்துங்கள். அது நவாம்சம் போட உபயோகமாக இருக்கும்.

கிரகங்கள்நட்சத்திரம்பாதம்.
இலக்கினம்உத்திராடம்3-ம் பாதம்
சூரியன்ஆயில்யம்4-ம் பாதம்
சந்திரன்மிருகசீரிஷம்1-ம் பாதம்
செவ்வாய்கேட்டை3-ம் பாதம்
புதன்மகம்2-ம் பாதம்
குருதிருவாதரை2-ம் பாதம்
சுக்கிரன்புனர்ப்பூசம்1-ம் பாதம்
சனிரோகிணி3-ம் பாதம்
ராகுதிருவாதிரை1-ம் பாதம்
கேதுமூலம்3-ம் பாதம்


நவாம்சம் போடும் முறை

முதலில் 27-நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டவாறு 3- பகுதியாக எழுதிக் கொள்ளுங்கள். இந்த மாதிரியாகப் பிரித்து எழுதுவது மிக முக்கியம்.

123
அஸ்வினிமகம்மூலம்
பரணிபூரம்பூராடம்
கார்த்திகைஉத்திரம்உத்திராடம்
ரோகிணிஹஸ்தம்திருவோணம்
மிருகசீரிஷம்சித்திரைஅவிட்டம்
திருவாதிரைஸ்வாதிசதயம்
புனர்ப்பூசம்விசாகம்பூரட்டாதி
பூசம்அனுஷம்உத்திரட்டாதி
ஆயில்யம்கேட்டைரேவதி


27-நட்சத்திரங்களையும் 3 பகுதிகளாகப் பிரித்து எழுதி இருக்கிறோம். முதல் 9-நட்சத்திரங்களான அஸ்வனி முதல் ஆயில்யம் வரை முதல் 4 ராசிகளில் அடக்கம். அடுத்த 9 நட்சத்திரங்களான மகம் முதல் கேட்டை வரை சிம்மம் முதல் விருச்சிகம் உள்ள 4 ராசிகளில் அடக்கம். கடைசி 9 நட்சத்திரங்களான மூலம் முதல் ரேவதி முடிய தனுசு முதல் மேஷம் முடிய அடக்கம்.

எந்த ஒரு கிரகமாவது அஸ்வனி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் நவாம்சத்தில் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது பரணி, பூரம், பூராடத்தில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது கார்த்திகை, உத்திரம், உத்திராடமில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்திலிருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் மீனத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்திலிருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் கடகத்த்¢ல் போடுங்கள்.

எந்த கிரகமாவது மிருகசீரிஷம், சித்தரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் துலாமில் போடுங்கள்.
4-ம் பாதத்திலிருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது திருவாதரை, ஸ்வாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தல் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் மேஷத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்திலிருந்தால் ரிஷபத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்திலிருந்தால் மிதுனத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் கடகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் சிம்மத்தில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் கன்னியில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் துலாமில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் விருச்சிகத்தில் போடுங்கள்.

எந்த கிரகமாவது ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இருந்தால்

1-ம் பாதத்தில் இருந்தால் தனுசில் போடுங்கள்.
2-ம் பாதத்தில் இருந்தால் மகரத்தில் போடுங்கள்.
3-ம் பாதத்தில் இருந்தால் கும்பத்தில் போடுங்கள்.
4-ம் பாதத்தில் இருந்தால் மீனத்தில் போடுங்கள்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:15 am

என்ன நவாம்சம் எப்படி போடுவது என்று தெரிந்து கொண்டீர்களா ? மேலே சொன்ன விஷயத்தைக் கொண்டு நவாம்சம் கணித்தால் அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Pic9


இப்போது நவாம்சம் போடக் கற்றுக் கொண்டீர்கள். இன்னும் ஜனன கால இருப்பு திசை போடவேண்டும். போட்டுவிடால் ஜாதகக் கணிதம் முடிந்து விட்டது. அப்புறம் பலன் தான் சொல்லவேண்டும்.

நாம் திருக் கணிதப்படி ஜாதகம் கணித்து விட்டோம். சிலர் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி எப்படி நவாம்சம் போடுவது எனக் கேட்க்கலாம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 9-ம் பக்கத்தைப் பாருங்கள். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதிக்கு உதயாதி நாழிகை 27-25க்கு கிரக நிலைகள். சூரியனின் சாரம் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

சூரியன் ஆடி 28-ம் தேதி 34-03க்கே ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு வந்து ஆவணி 1-ம் தேதி 03-00 நாழிகை முடிய அங்கே இருக்கிறார். அம்ச இலக்கினம் மீனம் என்று பஞ்சாங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். ஆக சூரியனை அம்சத்தில் மீனத்தில் போடுங்கள்.

அடுத்தது செவ்வாய். ஆடி 22 முதல் ஆவணி 1-ம் தேதி முடிய மூலம் 1-ல் இருக்கிறார். நவாம்சம் மேஷம் எனப் போட்டு இருக்கிறார்கள். மேஷத்தில் செவ்வாயைப் போடுங்கள். இவ்வாறே ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:15 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 9


நமது இந்து மதம் மறு பிறவியை வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவிற்கு இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம். இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நல்லது செய்தவர் இந்த ஜென்மத்தில் நல்லதை அனுபவிப்பார். பாவங்கள் செய்தவர் அதற்கு ஏற்றார் போல் கஷ்டங்களை அனுபவிப்பார். இதுதான் ஊழ்வினை என்பது. இதைப் பற்றி சிலப்பதிகாரம் விளக்கமாகவே கூறுகிறது.

1. கோவலனுக்கு ஏன் அத்தகைய மரண தண்டனை அளிக்கப் பட்டது? அவன் என்ன பாவம் செய்தான் ?

2. கற்பிற் சிறந்த கண்ணகிக்கு இந்த விதவைக் கோலம் தேவை தானா ? கணவனே கதியென்றிருந்த அவளுக்கு இந்த நிலை வேண்டுமா ?

3. மதுரை நகருக்கு இந்தக் கோலம் ஏன் ? அது தீப் பற்றி எறிவானேன் ?

இதற்கெல்லாம் சிலப்பதிகாரம் அளிக்கும் விடை "ஊழ்வினை".

கோவலன் இப்பிறவியில் நல்லவனாய் வாழ்ந்தான். சென்ற பிறவியில் ஓர் வணிகனின் மேல் பொய்க்குற்றம் சாட்டி அவன் கொலையாவதற்குக் காரணமாய் இருந்தான். கண்ணகி இப்பிறவியில் பத்தினிப் பெண்தான். ஆனால் சென்ற பிறவியில் பத்தினிப் பெண்கள் நூற்க வேண்டிய சில நோம்பினை அவள் நூற்கவில்லை. அதனால் இப்பிறவியில் அவள் கைம்மை அடைய வேண்டியதாயிற்று. மதுரைக்கு எறிந்து சாம்பல் ஆக வேண்டும் என்ற சாபம் இருந்தது. இக்காரணங்களால்தான் கோவலன் கொலை செய்யப்பட்டான்; கண்ணகி விதவை ஆனாள்; மதுரை தீப்பிடித்து எறிந்தது. போன ஜென்மத்துத் தவறுகள், பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை.

அதே போன்று போனஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கு இப்பிறவியில் நல்ல பிறப்பு; நற்பயன்கள். போன ஜென்மத்தில் ந்ல்லது செய்தோமா இல்லயா என்பதை ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். 5-ம் வீட்டையும், 9-ம் வீட்டையும் வைத்துக் கூறிவிடலாம். மேற்கூறிய வீடுகளில் நல்ல கிரகங்கள் இருக்குமேயாகில் ஒருவர் போனஜென்மத்தில் நல்லவை செய்து இருக்கிறார் எனக் கொள்ளலாம்.பாவ கிரகங்கள் இருந்தால் அவர் பாவம் செய்தவர் எனக் கொள்ளலாம்.

இவைகளை எதற்கு எழுதுகிறோம் என்றால் ஜாதகத்தில் ஜெனன கால இருப்பு தெசை கணிக்க வேண்டும். ஜெனன காலத்தில் என்ன தெசை, என்ன புக்தி எவ்வளவு இருக்கிறது எனக் கணக்கிட வேண்டும்.அதைப் போட்டு விட்டால் ஜாதகம் பூர்த்தியாகிவிடும். ஒரு ஆத்மா போன பிறவியில் செவ்வாய் தெசையில் மரணம் ஆகி இருந்தால் மறுபிறவி எடுக்கும் போது அதே செவ்வாய் தெசையில் தான் பிறக்கும். அதாவது போன ஜென்மத்தில் விட்டுச் சென்ற தெசையில் இந்த ஜென்மத்தில் பிரயாணத்தைத் துவக்குகின்றது.

நாம் நமது ஜாதகத்தில் ஜனன கால இருப்பு தெசையைக் கணிப்போம். ஜனன கால இருப்பு தெசை கணிக்க சந்திரனின் நிலை தான் முக்கியம். சந்திரன் எங்கு இருக்கிறார் எனப் பாருங்கள். நமது ஜாதகத்தில் மிருகசீரிஷத்தில் இருக்கிறார். எந்தந்த நட்சத்திரத்தில் இருந்தால் என்ன தசை ஆரம்பம் ஆகும் என்பதைப் பட்டியல் போட்டுக்
காட்டியிருக்கிறோம்.

ஜனன காலத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம்ஆரம்பகால தசை
1. அஸ்வனி, மகம், மூலம்கேது தசை
2. பரணி, பூரம், பூராடம்சுக்கிர தசை
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரிய தசை
4. ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்சந்திர தசை
5. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்செவ்வாய் தசை
6.திருவாதரை, ஸ்வாதி, சதயம்ராகு தசை
7.புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதிகுரு தசை
8.பூசம், அனுஷம், உத்திரட்டாதிசனி தசை
9.ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன் தசை




நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:15 am

நமது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மிருகசீரிஷம் ஆகும். ஆகவே இருப்பு தசை செவ்வாய் ஆகும். சந்திரன் ஆயில்யத்திலிருந்தால் என்ன தெசை ஆரம்பமாகும்? சொல்லுங்கள் பார்ப்போம்? புதன் தெசை ஆரம்பமாகும்.

சரி! ஒவ்வொரு தசையும் எவ்வளவு வருஷம் நடை பெறும். கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள்.







சூரிய தசை :6 வருஷங்கள்
சந்திர தசை :10 வருஷங்கள்
செவ்வாய் தசை :7 வருஷங்கள்
ராகு தசை :18 வருஷங்கள்
குரு தசை :16 வருஷங்கள்
சனி தசை :19 வருஷங்கள்
புதன் தசை :17 வருஷங்கள்
கேது தசை :7 வருஷங்கள்
சுக்கிர தசை :20 வருஷங்கள்
மொத்தம் :120 வருஷங்கள்


மனிதனுடைய ஆயுளின் அளவு மொத்தம் 120 வருஷங்கள் என ஜோதிடம் கூறுகிறது. மேலே ஒவ்வொரு கிரகத்திற்கும் எவ்வளவு வருஷம் எனக் கூறி இருக்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான சூரியனுக்கு ஏன் ஆறு வருஷங்கள், சுக்கிரனுக்கு ஏன் 20 வருஷங்கள், எதன் அடிப்படையில் வருஷங்கள் பகிர்ந்து அளிக்கப் பட்டன என்று காரணம் எதுவும் கிரந்தங்களில் காணப்படவில்லை. ஆகவே நாமும் காரணங்கள் எதுவும் கேட்க்காமல் மேற்கூறிய வருஷங்களை அப்படியே கையாளுவோம்.

ஜனன கால இருப்பு தெசை கண்டுபிடிக்க சந்திரனின் நட்சத்திரப்பாதம் தெரிந்து இருக்க வேண்டுமென்று கூறியிருந்தோம். இப்போது நீங்கள் 5-ம் பாடத்திற்குச் செல்ல வேண்டும். சந்திரனின் மிருகசீரிஷத்தில் ஆத்தியந்த பரமநாழிகை 57நாழிகை 34 வினாழிகை என்று கூறி இருந்தோம். அதில் சந்திரன் 4 நாழிகை14 வினாழிகை சென்று விட்டதெனவும் எழுதி இருந்தோம். அந்தப் பாடம் ஞாபகம் இல்லாதவர்கள் திரும்பவும் ஒருமுறை படிக்கவும்.

சந்திரனின் ஆத்தியந்த பரம நாழிகை 57-34
மிருக சீரிஷத்தில் சந்திரன் சென்ற தூரம் 4-14
மிருக சீரிஷத்தில் சந்திரன் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 53-20

ஜனன கால இருப்புதிசை என்பது ஒரு நட்சத்திரத்தில் சந்திரன் எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமோ அதுவே இருப்பு தெசை என்பதாகும். புரிகிறதா? புரிவது போலவும் இருக்கிறது அதே சமயம் புரியாதது போலவும் இருக்கிறது. இல்லையா?



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:16 am

சரி! நாம் இப்போது இருப்பு தெசையைக் கண்டு பிடிப்போம். அப்போது எல்லாம் விளங்கி விடும்.

மிருக சீரிஷம் நட்சத்திரத்திற்கு ஆரம்ப தெசை செவ்வாய் என்றும் அது 7 வருஷம் என்றும் எழுதி இருந்தோம் அல்லவா.

அதாவது மொத்தம் ஆத்தியந்த பரம நாழிகைக்கு வருஷங்கள் .. 7 ஆகும். அதில் சந்திரன் 4 நாழிகை 14 வினாழிகை கடந்து விட்டது. கடக்க வேண்டியது 53 நழிகை 20 வினாழிகை ஆகும். மீதமுள்ள 53 நழிகை 20 வினாழிகைக்கு எவ்வளவு வருஷங்கள் எனக் கண்டு பிடியுங்கள். நாம் கீழே கண்டு பிடித்துள்ளோம் பாருங்கள்.

57 நாழிகை 34 வினழிகையை நாழிகை ஆக்குங்கள். அது 3424 வினாழிகை வரும். கடக்கவேண்டிய தூரமான 53 நாழிகை 20 வினாழிகையை வினாழிகை ஆக்குங்கள். அது 3200 வினாழிகை வரும்.

(3200 / 3424 ) x 7 = 6 ஆண்டுகள் 06 மாதம் 15 நாட்கள் வரும்.

என்ன புரிந்ததா? திரும்பத்திரும்பப் படியுங்கள். புரியும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:16 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 10


சென்ற பாடம் வரை ஜாதகம் எப்படிக் கணிப்பது என்று கற்றுக் கொண்டீர்கள். இனி பலன் எப்படிச் சொல்வது என்று கற்றுக் கொடுக்கப் போகிறோம். 12 வீடுகளையும் 9 கிரகங்களையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம். கவனமாகப் படியுங்கள்.

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:16 am

5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:17 am

9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

மற்றவை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:17 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 11


சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தைப் பார்த்தோம். அத்துடன் 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம். நாம் இந்தப் பாடத்திலிருந்து பலன் சொல்வதைப் பார்ப்போம். முதல் வீடான இலக்கினத்தைப் பார்ப்போம். முதல் வீட்டின் பலனை அதன் அதிபதியை வைத்தும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூற வேண்டும். இந்த ஜாதகம் No. 1 -ஐப் பாருங்கள்.





நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Pic10


இந்த ஜாதகத்தில் இலக்கினாதிபதியான குரு 11-ம் வீட்டில் இருக்கிறார். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம். இலக்கினாதிபதி 11-ம் வீட்டில் இருப்பது அவர் வாழ்வில் பெறப்போகும் உயர்வைக் காட்டுகிறது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டில் வாழ்கிறார். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்கிறார். இலக்கினத்தில் புதன் இருக்கிறார். புதன் ஒருவருக்கு அறிவு கூர்மையைக் கொடுக்கும் கிரகமல்லவா ? புதன் இருப்பதால் அவர் Phd வரைப் படித்து இருக்கிறார். இலக்கினத்திலுள்ள புதன் இவருக்கு நல்ல அறிவைக் கொடுத்து இருக்கிறார். இந்த 2-ம் எண் உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். இலக்கினாதிபதி 3-ம் வீட்டில் இருக்கிறார். 3-ம் வீடு உபஜெயஸ்தானம் என்றழைக்கப் படும். 3-ம் வீட்டில் குரு இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வர். இலக்கினத்தில் செவ்வாய் இருந்தால் தலையில் காயம் ஏற்பட்டு அதனால் வடு உண்டாகும். இலக்கினம் என்பது தலையைக் குறிக்கிறது அல்லவா? அதேபோல் செவ்வாய் ரணம், காயங்களை எல்லாம் கொடுப்பவர் அல்லவா? அதேபோல் இவருக்கும் தலையில் காயம் பட்டு வடு உண்டாகி இருக்கிறது.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Pic11


நாம் பல ஜாதகங்களை அதாவது இலக்கினத்தில் செவ்வாய் உள்ள ஜாதகங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். ஒருவர் Motor Cycle-ல் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால் சென்ற லாரி மண்ணுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அடித்த காற்றில் மணல் பறந்து வந்து கண்ணில் விழுந்ததாம். அவர் நிலை தடுமாறி கீழேவிழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாம். அடுத்தவர் ஒரு பெண்மணி. அவர் மாடியில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். அவரின் குழந்தை படியில் இறங்கச் சென்றது. குழந்தையைப் பிடிக்கச்சென்ற இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். தலையில் காயம். வடு ஏற்பட்டு இருக்கிறார். அடுத்தவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். Fan கழன்று தலையில் விழ பெரிய அளவில் காயம் பட்டு இருக்கிறது. ஆக செவ்வாய் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுக் காயம் ஏற்படும். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இதே போல் ஜாதகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலக்கினாதிபதி இலக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். அதாவது அது அவருக்குச் சொந்த வீடு அல்லவா? நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர். 2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர். 2-ம் இடம் வாக்குஸ்தானம் அல்லவா ? சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர். 3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது அல்லவா? அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது. 4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர்.

5-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக