புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
11 Posts - 4%
prajai
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
9 Posts - 4%
Jenila
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_m10மழலைச் செல்வத்தின் மகிமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலைச் செல்வத்தின் மகிமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 09, 2014 6:38 pm

சின்னச் சின்ன அடி எடுத்து, சிங்கார நடை நடந்து, நமது செல்லக்கிளி "அம்மா' என்று அழைக்கும் போது.. மழலைச் செல்வத்தின் மகிமை புதிய கோணத்தில் புரிய தொடங்குமல்லவா!

உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க நடக்க 3-4 வயதில் தான் பாத வளைவுகள் தோன்றும். குழந்தை நன்கு நடக்க ஆரம்பிக்கும் வரை முழங்கால்ஞ்கள் வளைவாகத் தெரியும் அவைதானே நேராகும்.

குழந்தை ஒவ்வொரு திறனையும் கற்றுக் கொள்ள இயற்கை தரும் உந்துதல் மிகவும் முக்கியமானது. முக்கியமான வளர்ச்சிப் படிகளை குழந்தை அடைந்த பிறகு சுமார் 5 வயதிற்குள் மேல் இந்த உந்துதல் அதிகம் இருப்பதில்லை. எழுந்து நிற்கும் போது அல்லது நடக்க முயற்சிக்கும் போது தடுமாறி விழுவது இயற்கை. குழந்தையின் இடுப்புக்கு, முதுகெலும்புக்கு, கால்களுக்கு பேலன்ஸ் சரிவர இருக்காது. அதனால், நிலை தடுமாறும், முயற்சி செய்ய செய்ய இடுப்பு, முதுகு தசைகள் வலுபெற்று பேலன்ஸ் கிடைத்தபிறகு அடிக்கடி விழுவது குறைந்துவிடும். குழந்தை தானாக விழுந்தால் பெரிய காயங்கள் ஏதும் சாதாரணமாக ஏற்படாது. எதன் மீதாவது மோதினால் தான் காயம் ஏற்படும். அடிக்கடி விழுந்தால் உடனே பயந்து குழந்தையின் தலையை ஸ்கேன் செய்யத் தேவையில்லை. குழந்தை நடக்கும் இடங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே மிகவும் முக்கியம்.

"அப்பா, அம்மா, தாத்தா, அக்கா, மாமா' போன்ற குழப்பமில்லாத சுமார் 10 வார்த்தைகளையாவது குழந்தை பேச வேண்டும். ஓரிரண்டு வார்த்தைகளைச் சேர்த்து மழலையாக ஒரு வரி பேசலாம். என் மகள் பூமாவின் மழலைப் பேச்சுப் படி "மா, கா, தா' என்றால் "அம்மா, காய் தா' என்கிறாள் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஒரு மொழியை தான் முதலில் பழக்க வேண்டும். முதல் மொழி தாய் மொழியாக இருந்தால் குழந்தை மனதில் கலவரம் கம்மி. தன்னுடைய குழநதை ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகளைச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது குழந்தையின் மனதில் குழப்பம் தோன்றுகிறது. மன அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தை பேசுவதையே குறைத்துக் கொள்கிறது. வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டத்தில் யாவரும், ஒவ்வொரு வார்த்தைக்கும் தாய் மொழியில் அர்த்தப்படுத்தித் தான் பேசுகிறோம், புரிந்து கொள்கிறோம். குழந்தை பேச்சு ஒலியை, மொழியைப் புரிந்து கொள்ளும் முதல் படியில் இருக்கும்போது ஏன் அதன் மனதில் அலை அடிக்க வைக்க வேண்டும்? "இன்னொரு மொழி' என்ற கான்செப்ட்டே குறைந்த பட்சம் ஐந்து வயதில்தான் குழந்தைக்குப் புரியும்.

குழந்தை தன்னுடன் கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் கால கட்டமும் இதுதான். இது மூளை வளர்ச்சியின் ஒரு மைல்கல்!

தினமும் குளிக்க வைக்கலாம். இரண்டு வேளையும் குளிக்க வைக்கலாம். குளிர் காலத்தில் வெந்நீர் தேவை. வெயில் காலத்தில் பச்சைத் தண்ணீர் பயன்படுத்தலாம். ல்லது நீரை நல்ல வெய்யிலில் வைத்து இயற்கைச் சூட்டுடன் குளிக்க வைக்கலாம். வாரம் ஒருமுறை தலைக்கு ஊற்றிவிடலாம். வாரம் ஒரு தடவை நகம் வெட்டுவது கட்டாயம். இந்த அட்வைஸ் தாய்க்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். குடல் புழுக்களின் முட்டை தாயின் நக இடுக்குகளில் தங்கி குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது உள்ளே சென்றுவிடும். குழந்தை ஆசன வாய்ப் பகுதியைச் சொரிந்து கொண்டால், அடிக்கடி அந்த இடத்தில் கை வைத்தால் குடல் புழுவாக இருக்கலாம். சில சமயம் மலத்தில் சிறு புழுக்கள் வெளியாகும். பெண் குழந்தைக்குப் பிறப்பு உறுப்பில் கூட புழுக்களால் அரிப்பு ஏற்படலாம்.

குழந்தை தானாக உட்கார ஆரம்பிப்பதற்கு முன்னால் வாக்கரில் உட்கார வைக்கக் கூடாது. 8-9 மாதங்களில் உட்கார ஆரம்பிக்கும் போதுதான் இடுப்புக் குழி எலும்பு, முதுகு எலும்பு, அவற்றைச் சார்ந்த தசைகள் வலுவடைய ஆரம்பிக்கின்றன. இதற்கு முன்னால் வீட்டு மூலையில் அல்லது வாக்கரில் உட்கார வைப்பது, பிஞ்சில் பழுக்க வைப்பது போலத்தான். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த பிறகு நடை வண்டி கொடுத்தால் குழந்தைக்கு சரியான நடை எளிதில் வரும்.

உட்கார, நிற்க, நடக்க தாமதமாகும் குழந்தைகளுக்கு பயிற்சி தருவதற்கு வாக்கர் மிகவும் உதவும். நம் அவசரத்திற்காக குழந்தைக்கு தலை நின்றவுடன் வாக்கரில் உட்கார வைக்கக்கூடாது. குழந்தை 8 மாதத்தில் 8 அடி நடக்க வேண்டும் என்ற பழமொழியைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையை அக்குள்களில் பிடித்து கொண்டு தரையில் நிற்க வைத்தால் நிமிர்ந்து நின்று 2-3 அடி தானாக வைக்கும். குழந்தை தானாக நடக்க ஆரம்பிப்பது 8 மாதத்தில் அல்ல!

பாப்பா டிப்ஸ்!

குழந்தைகளிடம் தாய் மொழியில் நிறையப் பேசுங்கள். பாப்பாவுக்கு புரியுமோ இல்லையோ. பேசப் பேச அதன் கேட்கும் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும்.

குழந்தையைப் பராமரிப்பவர்கள் அனைவரும் பணியாட்கள் உட்பட நகம் வெட்டி, சுய சுத்தம் பராமரிக்க வேண்டும். இது குடல் புழுத் தொற்றைத் தடுக்கும்.

குறைந்த பட்சம் 10 வார்த்தைகளாவது குழந்தை பேச வேண்டும். 1-2 வார்த்தைகள் சேர்த்து ஒரு சில வரிகள் கூட பேச வரலாம்.

தன் குடும்பத்தினரை குழந்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வேற்று முகம் தெரிய வேண்டும். இந்த இரண்டிலும் ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.

பொம்மைகளை வைத்துக் கொண்டு சிறிது நேரமாவது தானாக அமைதியாக விளையாட வேண்டும்.

குழந்தையின் ஒரு வயதிற்குள் முக்கியமான பல தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் ஒரு வயது முடியும் போது போடப்பட்டு இருக்க வேண்டும்.

- டாக்டர் என் கங்கா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 10, 2014 2:40 pm

அனுபவமா மாமா அங்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 2:14 pm

நடனம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக