Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காடு - ஒரு அனுவபம்
+2
ayyasamy ram
M.M.SENTHIL
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏற்காடு - ஒரு அனுவபம்
நேற்று முன்தினம் 28.06.14 சனியன்று ஏற்காடு போக முடிவு செய்து கிளம்பினோம். மிக அருமையான சீதோஷ்ண நிலை. அங்கு சென்று வந்த அனுபவத்தை உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள ஆசை..
முதலில் ஏற்காடு பற்றி ஒரு கண்ணோட்டம்:
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.
முதலில் ஏற்காடு பற்றி ஒரு கண்ணோட்டம்:
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ
இங்கு விசேஷம்...!
-
அருகில் கிளியுர் நீர்வீழ்ச்சி உள்ளது
-
இங்கு விசேஷம்...!
-
அருகில் கிளியுர் நீர்வீழ்ச்சி உள்ளது
-
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
காலையில் ஐந்து மணிக்கு புறப்பட்டு ஏழு மணியளவில் அங்கு சென்று சேர்ந்தோம். நான் எனது மனைவி, மகள் மேலும் என்னிடம் பணி புரியும் இருவர் அவர்களின் நண்பர்கள் என்று மொத்தம் ஏழு பேர் சென்றோம். என்னிடம் பணி புரிபவர்களை வருடத்தில் ஒரு முறை இது போல் சுற்றுலா அழைத்து செல்வது எனது பழக்கம். அன்றைய ஒருநாள் எல்லாவித கவலைகளும் மறந்து, தொழில் பற்றிய எண்ணம் நானும் மறந்து (அந்த ஒரு நாள் மட்டுமே) ஜாலியாக (சரக்கு இல்லாமல்) சுற்றி வருவோம்.. இம்முறை ஏற்காடு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்..
தமிழ் நாட்டில் நல்ல வெயில் என்றாலும் நாங்கள் புறப்பட்டு போகும்போது மழை சாரல் இருந்தது, அது ஏற்காட்டில் நன்றாக தெரிந்து, நல்ல குளிர்.. அருமையான கிளைமேட்.. சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு.. ஒவ்வொன்றாக சுற்றுவோம் என்று முடிவெடுத்து நாங்கள் முதலில் சென்றது பக்கோடா பாயின்ட்..
இங்கு இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்தால் சேலம் மாநகரமே ஒரு அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கும்.. காலையில் நல்ல குளிரில் அங்கிருந்து கொண்டு கை, கால் நடுங்க சுற்றிலும் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இரவில் பார்த்தால் சேலம் முழுவதும் மின் ஒளி வெளிச்சத்தில் பயங்கர அழகாய் தெரியும்..,
தமிழ் நாட்டில் நல்ல வெயில் என்றாலும் நாங்கள் புறப்பட்டு போகும்போது மழை சாரல் இருந்தது, அது ஏற்காட்டில் நன்றாக தெரிந்து, நல்ல குளிர்.. அருமையான கிளைமேட்.. சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு.. ஒவ்வொன்றாக சுற்றுவோம் என்று முடிவெடுத்து நாங்கள் முதலில் சென்றது பக்கோடா பாயின்ட்..
இங்கு இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்தால் சேலம் மாநகரமே ஒரு அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கும்.. காலையில் நல்ல குளிரில் அங்கிருந்து கொண்டு கை, கால் நடுங்க சுற்றிலும் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இரவில் பார்த்தால் சேலம் முழுவதும் மின் ஒளி வெளிச்சத்தில் பயங்கர அழகாய் தெரியும்..,
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
அடுத்து லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் சில்ரன்ஸ் சீட்
இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும்.
அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளையும், மேட்டூர் அணை மற்றும் சேலத்தையும் நோக்கியவாறு அமைந்துள்ளன. கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மனி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்துகொண்டிருந்ததால் இந்த பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொலை நோக்கியில் நாம் நோக்கும் போது, மிகவும் தூரத்தில் உள்ளவைகளும் நமக்கு அடுத்து உள்ளதாய் தெரியும், மிகவும் அற்புதமான ஒரு இடம்., கோடை காலத்தில் இங்கு சென்றோமானால் வெகு நேரம் காத்திருந்து, வரிசையில் சென்றுதான் பார்க்க முடியும், நாங்கள் சென்றபோது ப்ரீயாக இருந்தது, அதிக நேரம் இங்கு செலவிட முடிந்தது..,
டெலஸ்கோப்பில் கீழே சேலத்தில் உள்ள மேட்டூர் டேம், டால்மியா, என அனைத்தையும் கண்ணருகே கொண்டு வந்து பார்த்தோம் செம அழகு. அருகிலேயே இருந்த ஜென்ட்ஸ் சீட் போக அங்கே இருந்து பசுமை நிறைந்த மலையை பார்க்க அழகிய கியூட் கவிதையாய் காட்சி தந்தது. நல்ல வியூ பாயின்ட்.
இவை அடிப்படையில் ஏற்காடு மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை பாறைகளின் தொகுப்பாகும்.
அந்த பாறைகள் இருக்கைகளை போல் அமைந்து மலை சாலைகளையும், மேட்டூர் அணை மற்றும் சேலத்தையும் நோக்கியவாறு அமைந்துள்ளன. கதைகளின் படி ஒரு ஆங்கிலேய பெண்மனி இந்த இடத்தில் அமர்ந்தவாறு சூரியன் மறையும் தருனத்தில் சுகமாக குளிர் காய்ந்து கொண்டு இயற்கையின் அழகான காட்சியை ரசித்துகொண்டிருந்ததால் இந்த பெயர் வந்தாகவும் கூறப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள தொலை நோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் பார்வையாளர்களின் வருகைக்கு தினமும் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொலை நோக்கியில் நாம் நோக்கும் போது, மிகவும் தூரத்தில் உள்ளவைகளும் நமக்கு அடுத்து உள்ளதாய் தெரியும், மிகவும் அற்புதமான ஒரு இடம்., கோடை காலத்தில் இங்கு சென்றோமானால் வெகு நேரம் காத்திருந்து, வரிசையில் சென்றுதான் பார்க்க முடியும், நாங்கள் சென்றபோது ப்ரீயாக இருந்தது, அதிக நேரம் இங்கு செலவிட முடிந்தது..,
டெலஸ்கோப்பில் கீழே சேலத்தில் உள்ள மேட்டூர் டேம், டால்மியா, என அனைத்தையும் கண்ணருகே கொண்டு வந்து பார்த்தோம் செம அழகு. அருகிலேயே இருந்த ஜென்ட்ஸ் சீட் போக அங்கே இருந்து பசுமை நிறைந்த மலையை பார்க்க அழகிய கியூட் கவிதையாய் காட்சி தந்தது. நல்ல வியூ பாயின்ட்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
படகு இல்லம் (போட்டிங் ஹவுஸ்)
இங்கு படகில் சவாரி செய்யலாம், என ஆசைப்பட்டு சென்றோம், ஆனால் அந்த ஏரியில் உள்ள நீரைப் பார்த்ததும், வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம், அழகான ஏரி இப்போது அசிங்கப் பட்டு விட்டது, ஆம்., முன்பெல்லாம் அதிலுள்ள நீரைப் பார்க்கும் போதே, நாம் படகு சவாரி போக ஆசை வரும், ஆனால் இப்போது அந்த நீர் மாசு பட்டு அதன் நிறம் மாறிக் கிடக்கிறது, (ஏற்காடு நிர்வாகமே கொஞ்சம் இதை கவனத்தில் கொண்டு சரியாக்கு, இல்லையில் ஏழைகளின் ஊட்டியில் படகு போக்குவரத்து, கொஞ்சம் மனதிற்கு நெருடலாய் அமையும்.)
படகு இல்லத்திற்கு நுழையும் வாயில் முன்பு, குதிரை ஏற்றம் செல்ல விருப்பமும், துணிவும் இருந்தால் உங்களுக்காகவே குதிரைகள் அதன் பாகனுடன் ரெடியாக இருக்கிறது, பத்து நிமிட பயணத்திற்கு இருநூறு முதல் வாங்குகிறார்கள்.. (இது ஆளுக்கு ஏற்றாற்போல் மாறும்)..
இங்கு படகில் சவாரி செய்யலாம், என ஆசைப்பட்டு சென்றோம், ஆனால் அந்த ஏரியில் உள்ள நீரைப் பார்த்ததும், வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம், அழகான ஏரி இப்போது அசிங்கப் பட்டு விட்டது, ஆம்., முன்பெல்லாம் அதிலுள்ள நீரைப் பார்க்கும் போதே, நாம் படகு சவாரி போக ஆசை வரும், ஆனால் இப்போது அந்த நீர் மாசு பட்டு அதன் நிறம் மாறிக் கிடக்கிறது, (ஏற்காடு நிர்வாகமே கொஞ்சம் இதை கவனத்தில் கொண்டு சரியாக்கு, இல்லையில் ஏழைகளின் ஊட்டியில் படகு போக்குவரத்து, கொஞ்சம் மனதிற்கு நெருடலாய் அமையும்.)
படகு இல்லத்திற்கு நுழையும் வாயில் முன்பு, குதிரை ஏற்றம் செல்ல விருப்பமும், துணிவும் இருந்தால் உங்களுக்காகவே குதிரைகள் அதன் பாகனுடன் ரெடியாக இருக்கிறது, பத்து நிமிட பயணத்திற்கு இருநூறு முதல் வாங்குகிறார்கள்.. (இது ஆளுக்கு ஏற்றாற்போல் மாறும்)..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
ஏற்காடு போனிங்களா லீவ் லெட்டர் தரவே இல்லயே?
முழுதும் எழுதி முடிங்க பிறகு வாசிக்கிறேன்
முழுதும் எழுதி முடிங்க பிறகு வாசிக்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
அண்ணா பூங்கா:
இது சிறுவர்களுக்கான ஏரியா, அதே சமயம் காதலர்களுக்கும் இதுதான் நல்ல ஏரியா. கூட்டம் கூட்டமாய் காணலாம் காதலர்களை. நாங்கள் செல்லும்போது இரண்டு ஜோடிகள் மட்டுமே..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து காதல் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென் பட்டாலும் இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் இல்லை. (உபயம் சரக்கடிக்கும் குடிமகன்கள்)
இது சிறுவர்களுக்கான ஏரியா, அதே சமயம் காதலர்களுக்கும் இதுதான் நல்ல ஏரியா. கூட்டம் கூட்டமாய் காணலாம் காதலர்களை. நாங்கள் செல்லும்போது இரண்டு ஜோடிகள் மட்டுமே..ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து காதல் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென் பட்டாலும் இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் இல்லை. (உபயம் சரக்கடிக்கும் குடிமகன்கள்)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
மான் பூங்கா:
மான் பூங்கா என்று பெயர் வைத்துக் கொண்டு, இங்கே செல்ல முப்பது ரூபாய் வாங்குகிறார்கள்.. ஆனால் உள்ளே இருப்பது என்னவோ மூன்றே மூன்று மான்கள் தான். மேலும், மயில், வெள்ளை எலி, வித விதமான புறாக்கள் ஆகியவற்றை காணலாம்.. இங்கு ஒரே நிமிடத்தில் போட்டோ எடுத்து கொடுக்கிறார்கள், அதுவும் சாவிக்கொத்தில் (கீ செயின்). நமது வீட்டினருடன் நின்று போட்டோ எடுத்து அதை கீ செயினில் அழகாக கட் செய்து கொடுக்கிறார்கள். இங்கு என்னை கவர்ந்தது ஒரு பெரிய மயில்தான்.. பெரிய தோகையுடன் அது கம்பீரமாய் நின்றது, மிகவும் ரசித்தேன்.
மேலும் குழந்தைகள் பார்த்து ரசிக்க யானை, டைனோசர், காண்டா மிருகம், சிங்கம் போன்ற விலங்குகளை நிறுவி உள்ளனர்.
மான் பூங்கா என்று பெயர் வைத்துக் கொண்டு, இங்கே செல்ல முப்பது ரூபாய் வாங்குகிறார்கள்.. ஆனால் உள்ளே இருப்பது என்னவோ மூன்றே மூன்று மான்கள் தான். மேலும், மயில், வெள்ளை எலி, வித விதமான புறாக்கள் ஆகியவற்றை காணலாம்.. இங்கு ஒரே நிமிடத்தில் போட்டோ எடுத்து கொடுக்கிறார்கள், அதுவும் சாவிக்கொத்தில் (கீ செயின்). நமது வீட்டினருடன் நின்று போட்டோ எடுத்து அதை கீ செயினில் அழகாக கட் செய்து கொடுக்கிறார்கள். இங்கு என்னை கவர்ந்தது ஒரு பெரிய மயில்தான்.. பெரிய தோகையுடன் அது கம்பீரமாய் நின்றது, மிகவும் ரசித்தேன்.
மேலும் குழந்தைகள் பார்த்து ரசிக்க யானை, டைனோசர், காண்டா மிருகம், சிங்கம் போன்ற விலங்குகளை நிறுவி உள்ளனர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
ரோஜாத் தோட்டம்:
ஏற்காட்டில் அதிக நேரம் நடந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொண்டே செல்ல வேண்டுமா? எனது சாய்ஸ் இந்த ரோஜாத் தோட்டம்தான்.. மிகவும் அற்புதமான ஒரு இடம், நல்ல குளிரில் அங்குள்ள அனைத்து வகை பூக்களையும் ரசித்துக் கொண்டு, குழந்தை குட்டியுடன் சுற்றி வர ஏற்ற இடம்.. பச்சைப் பசேல் என அங்குள்ள அனைத்து செடிகளும், மலர்களும் புல் தரையும் காண்போர் மனதை கவரும்.. பூக்களை பறிக்காதீர் என்ற எச்சரிக்கைப் பலகை இருப்பினும் சில குறும்புக்கார பசங்க பறிப்பதையும் பார்க்க முடிகிறது. கொஞ்ச தூரம் நடந்து விட்டு ஜாலியாய் அங்குள்ள ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடலாம்..
ஏற்காட்டில் அதிக நேரம் நடந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொண்டே செல்ல வேண்டுமா? எனது சாய்ஸ் இந்த ரோஜாத் தோட்டம்தான்.. மிகவும் அற்புதமான ஒரு இடம், நல்ல குளிரில் அங்குள்ள அனைத்து வகை பூக்களையும் ரசித்துக் கொண்டு, குழந்தை குட்டியுடன் சுற்றி வர ஏற்ற இடம்.. பச்சைப் பசேல் என அங்குள்ள அனைத்து செடிகளும், மலர்களும் புல் தரையும் காண்போர் மனதை கவரும்.. பூக்களை பறிக்காதீர் என்ற எச்சரிக்கைப் பலகை இருப்பினும் சில குறும்புக்கார பசங்க பறிப்பதையும் பார்க்க முடிகிறது. கொஞ்ச தூரம் நடந்து விட்டு ஜாலியாய் அங்குள்ள ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடலாம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏற்காடு - ஒரு அனுவபம்
(அன்பு மகள் நெஞ்சில் சாயும் தருணம், இதைவிட சந்தோசம் வேற என்னங்க வேண்டும்)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுற்றுச்சூழல் அறிஞர்களின்-ஏற்காடு இளங்கோ .
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» சேலம்: ஏற்காடு மலையில் உருவாகியுள்ள திடீர் நீர்வீழ்ச்சி
» விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.
» சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் கோடை விழா (புகைப்படங்கள்)
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» சேலம்: ஏற்காடு மலையில் உருவாகியுள்ள திடீர் நீர்வீழ்ச்சி
» விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.
» சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் கோடை விழா (புகைப்படங்கள்)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|