ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

2 posters

Go down

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Empty முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

Post by ayyasamy ram Sun Jun 29, 2014 12:14 pm


ஆண்கள் பெண்களின் வாழ்க்கையில்
விளையாடுவது தற்போது மிகவும் அதிகரித்து
வருகிறது. அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு
எப்போது மவுசு குறைவதில்லை.

முன்பு மிலிட்டரி மாப்பிள்ளை என்றாலே பயந்து
ஓடுவார்கள். இப்போது அரசாங்க பணி என்பதால்
அதற்கும் மவுசு அதிகமாகிவிட்டது. மிலிட்டரி
மாப்பிள்ளை ஒருவரிடம் சிக்கிய பெண்ணின்
கதை இது.

சேலம் அருகேயுள்ள கிராமத்துப் பெண் வைதேகி.
பெற்றோருக்கு ஒரே செல்லப்பெண். பெற்றோர்
விவசாய வேலை செய்தாலும் தன்னுடைய மகளை
பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்க வைத்திருந்தனர்.

வைதேகி வெளி உலகம் எதுவும் அறியாதவள்.
ராணுவத்தில் பணிபுரியும் அதே ஊரைச் சேர்ந்த
மோகனுக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்கள்.
நிச்சயம் செய்யப்பட்டுத் திருமண தேதியும்
முடிவானது. வருங்கா மனைவியிடம் பேச
செல்போன் ஒன்றை அவளுக்கு பரிசாக வழங்கிவிட்டு
ராணுவப் பணிக்குத் திரும்பினான்.

இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்தார்கள்.
ஆனால் மோகன் எதிர்பார்த்தது போல் காதல்
ரசம் சொட்டச் சொட்ட வைதேகிக்குப் பேச
தெரியவில்லை. பாவம் பள்ளிக்கூடம் விட்டால்
வீடு, வீடு விட்டால் பள்ளி என கட்டுக்கோப்பாக
வளர்ந்தவள். வருங்கால மனைவி இப்படி உலகம்
தெரியாதவளாக இருக்கிறாளே என்று தன்
மனதிற்குள்ளே ஆதங்கப்பட்டான்.

உடன் பணிபுரியும் சக ராணுவ வீரர்களின்
மனைவிகளை ஒப்பிடும்போது வைதேகி மிகவும்
தாழ்ந்த நிலையில் இருப்பதை உணர்ந்தான்.

மனதளவில் வெறுத்துப் போனான். ஆனால்
நிச்சயித்த திருமணத்தையும் நிறுத்த முடியாது.
பெற்றோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். வேறு
வழியில்லாமல் வைதேகியைத் திருமணம்
செய்தான்.

மனைவியை தான் பணிபுரிந்த காஷ்மீர் பகுதிக்கே
அழைத்து வந்தான். பக்கத்து ஊரை கேட்டால்கூட
சொல்லத் தெரியாத வைதேகி, காஷ்மீரைப்
பார்த்து வியந்து போனாள். புதுமணத் தம்பதி
பல இடங்களைச் சுற்றிப் பார்த்து ரசித்தனர்.
ஆனாலும் வைதேகி தன்னை இல்லற
வாழ்க்கைக்காகத் தயார் படுத்தத் தெரியாதவளாக
இருந்தாள்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான்
மோகன். மனைவியை அடித்துத் துன்புறுத்த
ஆரம்பித்தான். மொழி தெரியாத இடத்தில் தான்
படும் வேதனைகளை யாரிடமும் போய் சொல்வது
என்று தவித்தாள் வைதேகி. பெற்றோரிடம்
சொன்னால் கஷ்டப்படுவார்களே என்று
எல்லாவற்றையும் மறைத்துவிட்டாள். இந்நிலையில்
கர்ப்பமானாள்.

“குழந்தை வேண்டாம். எப்போதும் எனக்கு நீ மட்டும்
தான்’ என கருவைக் கலைக்க சொன்னான் மோகன்.
ஆனால் அதற்குச் செவிசாய்க்கவில்லை வைதேகி.

பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு ராணுவ வீரரின்
மனைவியிடம் விஷயத்தைச் சொன்னாள்.
மேலதிகாரிகளைச் சந்தித்து புகார் கொடுத்தால்
தீர்வு கிடைக்கும் என அந்தப் பெண் வழிகாட்டினாள்.
அப்படிச் செய்தால் தன்னை உயிருடனேயே கணவன்
விட்டு வைக்க மாட்டான் என்பது வைதேகிக்கு
நன்றாகவே தெரியும். எனவே பக்கத்து வீட்டாரின்
உதவியை நாடினார்.
-
கணவன் பணிக்குச் சென்ற நேரம் மூட்டை
முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு ரயிலில்
கிளம்பினாள். மூன்று நாள் பிரயாணம் செய்து
சொந்த ஊர் வந்து சேர்ந்தாள். மகள் திடீரென்று
கிளம்பித் தனியே வந்திருப்பதைப் பார்த்த பெற்றோர்,
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தார்கள்.
-
ஆரம்பத்தில் இருந்து நடந்த விஷயத்தை ஒன்று
விடாமல் பெற்றோரிடம் சொன்னாள் வைதேகி. ஏன்
இத்தனை நாளும் சொல்லாமல் மறைத்தாய் என்று
ஆதங்கப்பட்டார்கள். இதற்கிடையில் தன்னுடைய
உடைமை, பணத்தை எல்லாம் மனைவி திருடி
கொண்டு போய்விட்டதாக உள்ளூர் போலீசாரிடம்
பொய்ப் புகார் செய்தான் மோகன்.
-
வைதேகியின் பெற்றோர் அதே ஊரில் வசிக்கும்
மோகனின் குடும்பத்தாரிடம் போய் நியாயம்
கேட்டார்கள். “மிலிட்டரிக்காரன் என்றால் கொஞ்சம்
முரட்டுத்தனம் இருக்கத்தான் செய்யும். உன் மகள்
அனுசரித்துப் போக வேண்டியதுதானே?’ என மறு
கேள்வி கேட்டார்கள். இந்நிலையில் ஆண்
குழந்தைக்குத் தாயானாள் வைதேகி.
-
விடுமுறையில் ஊருக்கு வந்த கணவன் “இந்தக்
குழந்தை எனக்குப் பிறக்கவில்லை. என் மனைவி
நடத்தை கெட்டவள்’ என வீண் பழி சுமத்தினான்.
வைதேகி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். ஊரே
மோகனுக்கு எதிராக ஒன்று திரண்டது. நியாயம்
கேட்க வந்த வைதேகியின் தந்தையை அடித்து
உதைத்தான் மோகன்.

ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மோகனுக்கு
எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.
ராணுவ வீரரைக் கைது செய்து விசாரிக்கும்
அதிகாரம் எங்களுக்கு இல்லை என கைவிரித்தது
காவல்துறை.
-
விஷயம் மகளிர் ஆணையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டது. ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பஞ்சாயத்தாரும் சாட்சி சொல்லத் தயாராக
இருந்தனர். மோகன் பணியாற்றிய ராணுவத்
தலைமையகத்தில் அவர் மீது விசாரணை நடத்த
அனுமதி கோரப்பட்டது. ராணுவ குடியிருப்பில்
வசித்தவர்களிடம் விசாரணை நடத்தியதில்
மோகன் மேல் குற்றம் இருப்பது உறுதியானது.

அவர் மீது குற்ற விசாரணை நடத்த அனுமதி
வழஙகப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
வழக்கை இழுத்தடிப்பதற்கு உண்டான மறைமுக
வேலைகள் அத்தனையிலும் ஈடுபட்டான் மோகன்.
ஆனால் ஊர்க்காரர்கள் ஆணையத்தில் அளித்த
சாட்சியப்படி மோகன் குற்றவாளி என முடிவானது.

“வைதேகியுடன் இனி நான் வாழத் தயாரில்லை.
காரணம் இது எனக்கு பிறந்த குழந்தையில்லை’
என்பதை உறுதியாகச் சொன்னான் மோகன்.
வைதேகியும் குழந்தையும் மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தை
மோகனுடையதுதான் என்பது உறுதியானது.
வைதேகியுடன் சேர்ந்து வாழாவிட்டால்
மனைவிக்கும், குழந்தைக்கும் ஆகும் பராமரிப்புச்
செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு
தரப்பட்டது.

தீர்ப்பின் விவரம் ராணுவத் தலைமையகத்துக்கு
அனுப்பப்பட்டு பணத் தொகையைப் பெறவும்
ஏற்பாடு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர்
கீதாவிடம் பேசியபோது…
-
“திருமணம் செய்யும் ஆண், தன் மனைவி இப்படித்
தான் இருக்க வேண்டும் என பல கற்பனைகளை
மனதில் வளர்ப்பதுண்டு. ஆனால், அதில் ஏமாற்றம்
ஏற்படும்போது விரக்தியாகி மனைவியைத்
துன்புறுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வழக்கின்
சாரம்சம் இதுவே.
கிராமப்புற மாணவியருக்கு தற்போது பாலியல்
கல்வி கட்டாயம் அவசியம்.
நகரத்துப் பெண்களை பொறுத்துவரை செல்போன்,
இன்டர்நெட் என சிறுவயதிலே அனைத்தையும்
கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள்.
வைதேகி போன்ற கிராமத்துப் பெண்களைத்
திருமணம் செய்து கொடுக்கும் போது
பெற்றோர்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை.
வெளி நாட்டு மாப்பிள்ளை என்றோ, அரசுப் பணி
செய்கிறார் என்றோ அவசரப்பட்டு மணம் முடித்து
கொடுக்கவேண்டாம். ஆற அமர பல கோணங்களில்
விசாரித்து முடிவு செய்வது நலம்.

மோகனை இந்த
வழக்கின் உள்ளே கொண்டு வருவதற்கு நாங்கள்
அத்தனை போராட்டத்தைச் சந்தித்தோம்.

ஒரு வழியாக எங்கள் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி
கிடைத்தது. தற்போது கணவர் வழங்கும் பராமரிப்புத்
தொகையை வைத்துக் கொண்டு குழந்தையுடன்
பெற்றோர் வீட்டில் நிம்மதியாக வாழ்கிறார் வைதேகி.’
-
——————————————
- வனராஜன்
நன்றி: மங்கையர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Empty Re: முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

Post by Manik Sun Jun 29, 2014 1:44 pm

அனைத்திற்கும் காரணம் பெண் வீட்டார்தான்..........

எப்பொழுதும் பணம், வசதி, பெரிய இடம் என்று நல்ல மாப்பிள்ளையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பணம் இருக்கும் இடத்தில் கட்டிக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்

இனியாவது புரிந்து கொள்வார்களா பெண் வீட்டார்கள்

பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே

என்று முன்னோர்கள் சொன்னது இந்த விசயத்தில் சரியன்றோ.........................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum