புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
7 Posts - 4%
prajai
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
16 Posts - 4%
prajai
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10அரசரை வென்ற புளியம்பழம் Poll_m10அரசரை வென்ற புளியம்பழம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசரை வென்ற புளியம்பழம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:51 am


ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலகத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவருக்கு ஆசை. அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே அவருக்கு ஆசை. அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தார்கள். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து விடுவார்கள்.

இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச் சிறந்த உடைகள் அவரிடம் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்துவிட்டது.

அதேபோல உலகிலே மிகச் சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார் ராஜா. உடனே அவருடைய மந்திரிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த சாப்பாடுகளையும் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தார்கள். சில நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்துவிட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்துவிட்டது. மிகச் சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகு நாட்கள் நிற்க முடியவில்லை.

ஆசைராஜாவுக்கு இப்போது எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிகள் கவலை கொண்டார்கள். உடனே நாடெங்கும் முரசு கொட்டி ஆசைராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் செய்துக் கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். கூடவே பாதி நாட்டையும் தருவதாக அறிவிப்பு செய்தார்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தார்கள். ஒவ்வொருத்தரும் விதவிதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப் பொருட்கள், கலைப் பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தார்கள். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள்.

அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்துட்டார். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான். ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான்.

அவனும் என்னவெல்லாமோ யோசித்துப் பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவரசியைக் கல்யாணம் முடிக்க முடியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான்.

அதைப் பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு..” என்று கேட்டாள். கடைசியில் அவன் பாட்டியிடம் தன் கவலையைச் சொன்னான்.

அவனுடைய பாட்டியும், “ அட லூசுப் பயலே, இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக் கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்று முன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டுவந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? ” என்று கேட்டார்கள்.

அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிகளும் ருசித்தார்கள்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கல்யாணம் செய்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளிய மரங்களை நட்டு வளர்த்தார். அதன் பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கிவிட்டது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக