ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவை வலியுறுத்தாத பௌத்தம்

2 posters

Go down

துறவை வலியுறுத்தாத பௌத்தம் Empty துறவை வலியுறுத்தாத பௌத்தம்

Post by சிவா Sun Jun 29, 2014 1:46 am


வாராணசியில் அந்தக் காலத்தில் யசன் என்ற செல்வந்த இளைஞன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை பிடிக்காமல் போய், ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் புத்தரைச் சந்தித்தான். புத்தரைப் பார்த்தவுடன் அவரது சக்தியால் கவரப்பட்டான். பௌத்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க புத்தர் அவனிடம் அறிவுறுத்தினார். துறவியாகி பௌத்த சங்கத்தில் அவன் சேர்ந்தான்.

அவனைத் தேடி வந்த அவனது தந்தையும் புத்தரைச் சந்தித்துச் சீடராக மாறினார். ஆனால், அவர் வீட்டையும் குடும்பத்தையும் துறந்துவிடவில்லை. பின்னர் அவர்களுடைய வீட்டுக்குச் சென்ற புத்தரின் போதனையைக் கேட்டு, அவரது மனைவியும் யசனின் மனைவியும்கூடப் புத்தரின் சீடர்கள் ஆகினர்.

தனது சீடர்கள் அனைவரும் துறவிகளாகவும், சந்நியாசினிகளாகவும் ஆக வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தவில்லை. அதற்கான ஆர்வமும் பக்குவமும் சிலருக்கே இருக்கும் என்று அவர் நம்பினார். தான் கற்பித்த நெறிமுறைகளின்படி வாழ்ந்தாலே போதும் என்று புத்தர் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவர்கள் புத்தரின் சாதாரணச் சீடர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இந்தச் சீடர்களும் பௌத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை மதித்து நடந்தனர்.

சங்கமும் சீடர்களும்

பௌத்தச் சங்கம் வளர வேண்டும் என்று புத்தர் நினைத்தார். தனது போதனைகளை உலகம் முழுவதும் விளக்கவும் பரப்பவும் பயிற்சி பெற்ற, கட்டுப்பாடான அமைப்பாக பௌத்த சங்கத்தை அவர் உருவாக்கினார். பல துறவிகளைச் சந்தித்துப் பேசி, பௌத்தச் சங்கத்தில் அவர்களைச் சேர்த்தார்.

அவர்களில் ஒருவர்தான் அக்னியை வழிபட்டு வந்த காசியபர். பின்னாளில் மகாகாசியபர் என்று பெயர் பெற்று, புத்தரை அடுத்துப் பௌத்தச் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவரே. காசியபருடன் அவரது 500 சீடர்களும் சங்கத்தில் சேர்ந்தனர். பின் காசியபரின் இரண்டு சகோதரர்களும் 300, 200 பேருடன் சங்கத்தில் சேர்ந்தனர்.

ராஜகிரகம்

இப்படிச் சேர்ந்த தன் தொண்டர்களான பிட்சுகளுடன் மகத நாட்டுத் தலைநகரான ராஜகிரகத்தை புத்தர் சென்றடைந்தார். அப்போது மகத நாட்டை ஆண்டவர் பிம்பிசாரர். தனது சபையுடன் எதிர்கொண்டு புத்தருக்கு பிம்பிசாரர் மரியாதை செய்தார்.

அவர்களுக்குப் புத்தர் உபதேசம் செய்தார். பிம்பிசாரரும் அவருடன் வந்தவர்களும் புத்தரின் மாணவர்கள் ஆகினர். நீங்களும் உங்கள் சீடர்களும் என் அரண்மனைக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று புத்தரை அழைத்தார் பிம்பிசாரர். அந்த அழைப்பை ஏற்று சென்ற புத்தரை உயர்ந்த மேடையில் அமர்த்தி, தானே உணவும் பரிமாறினார்.

பிறகு "என் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக வேணுவனப் பூங்காவைத் தர விரும்புகிறேன்" என்று புத்தரிடம் பிம்பிசாரர் சொன்னார். புத்தர் அதை ஏற்றுக்கொண்டார். தனது முதல் மடத்தை அங்கே அமைத்தார். புத்த மடங்களுக்கு விகாரம் என்று பெயர். புத்தருக்கும் அவரது சீடர்களுக்கும் தியானம், ஞானம் பெறும் இடங்களாக விகாரங்கள் அமைந்தன.

பொதுவாக மழைக்காலத்தில் துறவிகள் பயணம் செல்லாமல் மூன்று மாதங்களுக்குக் கோயில் களிலோ, ஆசிரமங்களிலோ தங்குவது வழக்கமாக இருந்தது. அந்த ஓய்வு காலத்துக்குப் பௌத்தப் பிட்சுகள் விகாரங் களைப் பயன்படுத்தினர்.

தொகுப்பு: ஆதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துறவை வலியுறுத்தாத பௌத்தம் Empty Re: துறவை வலியுறுத்தாத பௌத்தம்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 29, 2014 11:50 am

துறவை வலியுறுத்தாத பௌத்தம் 1571444738 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum