ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

3 posters

Go down

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Empty 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

Post by சிவா Mon Jun 23, 2014 5:14 pm

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 25 அடி உயரத்தில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் 2015 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி மற்றும் கிரானைட் கற்களால் பிரமாண்ட சுவர், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியில் இருந்து, விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் உடைந்து விபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது. இதில் ஒரு ஊழியர் காயம் அடைந்துள்ளார். 4 குளிர்சாதன பெட்டிகள் உடைந்துள்ளன. இது தொடர்பாக டில்லியில் உள்ள விமான நிலைய உயரதிகாரிகள் மற்றும் அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Empty Re: 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 23, 2014 5:43 pm

யாரு தலையிலும் விழலேன்னா சரி தானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Empty Re: 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

Post by M.M.SENTHIL Mon Jun 23, 2014 11:26 pm

நல்ல பதில் சொல்லியிருக்காங்க. எப்படி, அப்படி கட்டினார்கள் கொத்தனார்கள் ஒரு கிரானைட் கல்லை சிமெண்டால் ஒட்ட வைக்க தெரியாமல்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Empty Re: 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

Post by சிவா Sun Jun 29, 2014 2:39 am


சென்னை விமான நிலையக் கூரை 21 ஆவது முறையாக இடிந்து விழுந்தது

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர்.

பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்த பின் 21 ஆவது முறையாக விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால், விமான நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளும், பணியாளர்களும் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Empty Re: 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum