ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரப்பான் நோய்

Go down

கரப்பான் நோய் Empty கரப்பான் நோய்

Post by சிவா Thu Jun 19, 2014 5:48 am

இன்றைய மக்கள் தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தகைய தோல் நோய்களுள் ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

கரப்பான் நோய்க்கான காரணங்கள்

கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும். இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம்.

பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது. இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக தொடர்ந்து குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

தோல் அரிப்பு மிக அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருக்கும். பெரும்பாலும் இவை முகம், கழுத்து, மார்பு, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் மடக்கும் பகுதிகளில் அதிகமாக காணப்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் தோல் வறண்டும், மிகவும் தடித்தும் காணப்படும். கறுத்தும் காணப்படும். ஒரு சிலருக்கு லேசாக வேர்க்குரு போன்ற குருக்கள் காணப்படும். அவை உடைந்துவிட்டால் நீர் போன்று திரவம் கசியும்.

கரப்பான் நோயின் வகைகள்

பொதுவாக கரப்பான் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வறண்ட கரப்பான்
2. நீர் வடியும் கரப்பான்


வயதைப் பொறுத்து இந்நோய் 3 வகையாகவும் பிரிக்கலாம்.

· கைக்குழந்தைகளுக்கு வருவன
· குழந்தைகளுக்கு வருவன
· பெரியவர்களுக்கு வருவன


கைக்குழந்தைகளுக்கு வருவன

2 முதல் 3 மாத குழந்தைகளுக்கு இந்நோய் உண்டாகக் கூடும்.

பொதுவாக குழந்தைகளின் இரு கன்னங்களிலும் உண்டாகும். மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும். மருந்தால் இந்நோய் குணமானாலும் வளர்ந்த பிறகு திரும்பவும் இதேமாதிரியோ அல்லது ஆஸ்துமா, அடிக்கடி தும்மல் போன்று வேறுவிதமாகவோ பாதிக்க ஆரம்பிக்கும். இது அலர்ஜி நோயாகவே மாறக்கூடும்.

குழந்தைகளுக்கு வருவன

ஒரு வயதைக் கடந்த பிறகு கூட இந்நோய் வரக்கூடும். இதிலும் அரிப்பு ஒன்றே பிரதானமாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட பகுதி வறண்டும், தடித்தும், கறுத்தும் காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் குறையக்கூடும்.

பெரியவர்களுக்கு வருவன

பெரும்பாலும் இவர்கள் இவ்வகை கரப்பானால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். வெகு சிலருக்கே பெரிய வயதில் கால் பகுதிகளில் திடீரென தோன்றக்கூடும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோலில் மிகுந்த அரிப்பு உண்டாகும். தோல் தடித்தும் கறுத்தும் காணப்படும். பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலம் வந்ததும் இந்நோய் மாயமாய் மறையும். திரும்பவும் பனிக்காலம் வந்ததும் தோன்றும்.

பரவும் வகை

இந்நோய் ஒரு தொற்றுவியாதி அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலமோ இது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரவாது. இந்நோய் பரம்பரை வழியாக தாய் தந்தையரிடமிருந்து குழந்தை களுக்கும் வரக்கூடும்.

தடுக்கும் வழி

இந்நோய் பரம்பரையாக வரக்கூடும் என இருந்தாலும் அல்லது ஒருமுறை வந்து குணமான பின் திரும்ப வராமல் தடுக்க சில தடுப்பு வழிகளை மேற்கொள்ளலாம்.

· எந்த உணவுப் பொருளை உட்கொள்ளும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த கரப்பான் வராமல் தடுக்க விரும்பினால் எவ்வளவுக்கெவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வரவேண்டும். ஏனெனில் தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

· சோப்புகள், ஷாம்புகள், அழகு சாதன திரவியங்கள், கிரீம்கள் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இயற்கைப் பொருட்களான சீயக்காய், பச்சைப்பயறு, மூலிகை குளியல் தூள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

· உடலை இறுக்காத, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.

செய்யக்கூடாதவை

· கடும் வெயில், கடும் பனிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

· வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்ட இடங்களில் சொறியக்கூடாது.

உணவு முறைகள்

· பச்சைக் காய்கறி, கீரைகள், புளிப்பில்லாத பழங்கள், பொருட்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· நல்ல தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் குடிக்க வேண்டும்.

· புதியதாக தயார் செய்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை

· பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது.

· புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

· அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

கரப்பன் நோய்க்கு கை வைத்தியம்

கருக்கிலை சாறு - 16 பங்கு
மஞ்சள் தூள் - 1 பங்கு
நல்லெண்ணெய் - 8 பங்கு

இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி, இந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினம் இருவேளை தடவி வர கரப்பானின் பாதிப்புகள் குறையும்.

புதினா இலை சாற்றை கரப்பான் நோயுள்ள தோலின் மீது பூசினால் நோயின் தாக்கம் குறையும்.

கார்போகரிசியை தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர கரப்பான் நோய் குணமாகும்.

வேப்பம்பட்டை மற்றும் வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வர நோயின் தாக்கம் குறையும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» கரப்பான் பூச்சி-எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum