ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்

Go down

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் Empty வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்

Post by ayyasamy ram Wed Jun 18, 2014 6:18 am



8-ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரண்மனையை ஆக்கிரமித்த ஆங்கிலப் படையின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்தவர், வீரமங்கை குயிலி. இது சிவகங்கையை வேலுநாச்சியார் மீட்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

விடுதலைப் போராளி குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழக அரசு வேலு நாச்சியாருக்கு அமைத்துள்ள மணிமண்டபத்தில் குயிலுக்கும் நினைவுத் தூணை அமைத்துள்ளது.

1772-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி ஆங்கில கம்பெனி படைக்கும் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவருக்கும் காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் மன்னரும், அவரது இளையராணியுமான கௌரி நாச்சியாரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து பட்டத்து ராணியான வேலு நாச்சியார் ஆங்கில படையிடமிருந்து சிவகங்கையை மீட்க கொல்லங்குடியிலிருந்து தப்பி, திண்டுக்கல்லை அடுத்த விருப்பாட்சியில் கோபால நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தார்.

நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் விருப்பாட்சிக்குச் சென்று வேலு நாச்சியாரைச் சந்திக்க வேண்டும் என சிவகங்கையில் அறிவிக்கப்பட்டது. இளம் பெண்ணான வீரம் செறிந்த குயிலியின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆண், பெண் என்ற பேதமின்றி விருப்பாட்சிக்குச் சென்றனர்.

போர்க் களத்தில் பெண்களின் பங்கினை உருவாக்கும் புரட்சிக் கருத்தைக் கொண்ட வேலு நாச்சியார் அப் படைக்கு நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு, நம்பிக்கை, வீரம் நிறைந்தவரைத் தேர்வு செய்யும் வகையில் தலைமையைத் தேடியபோது இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற குயிலியை பெண்கள் படையின் தளபதியாகத் தேர்வு செய்தார்.

திண்டுக்கல்லில் இருந்த ஹைதர் அலியிடம் படை உதவிகளைப் பெற்ற வேலு நாச்சியார் 1780-இல் பெரும் படையுடன் சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப் புறப்பட்டார். மூன்று பிரிவுகளாக படைகளை அனுப்பி போரிட்டதில், சிவகங்கையைத் தவிர்த்து மற்ற பகுதிகளை வேலு நாச்சியார் மீட்டார். சிவகங்கை அரண்மனை ஆங்கிலேயர் வசம் இருந்தது. இதனை மீட்க குயிலி ஒற்றனைப் போல செயல்பட்டு, தசரா விழாவில் பெண்களுக்கு அரண்மனையில் உள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை ராணியிடம் கூறி பெண்கள் படையினருடன் கோயிலுக்குச் செல்வதைப் போலச் சென்று போரிடலாம் என யோசனை தெரிவித்தார்.

பெண்கள் படையுடன் பக்தர்களைப் போல நுழைந்த குயிலியின் படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத ஆங்கிலேயப் படைத் தளபதி, அரண்மனையில் இருந்த ஆயுத கிட்டங்குகளில் உள்ள துப்பாக்கிகளைக் கொண்டு விடுதலை போராளிகள் மீது தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார். வெறும் வாள்களையும், வளரிகளையும் கொண்டு போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த குயிலி அரண்மனை ஆலயத்தில் விளக்கேற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிட்டங்கியில் குதித்து அவற்றை அழித்து தானும் மறைந்தார். குயிலின் தியாகத்தால் சிவகங்கை மீட்கப்பட்டது வரலாறு.

இழந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட வேலு நாச்சியாருக்கு சிவகங்கையில் தமிழக அரசு மணிமண்டபத்தை அமைத்து வருகிறது. இந்த மணிமண்டபத்தில் விடுதலைப் போராளியான குயிலியின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு நினைவுத் தூணையும் அரசு இங்கு அமைத்துள்ளது.

பணிகள் நிறைவுற்ற நிலையில் உள்ள வேலு நாச்சியார் மணிமண்டபமும், குயிலிக்கான நினைவுத் தூணும் விரைவில் திறக்கப்பட உள்ளன.

========

நன்றி: தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சி கோவிலில் வழிபட்ட விடுதலைப் புலி போராளி
» வீரமங்கை வேலு நாச்சியார்
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
»  வீர மங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்ண்டாடப்படும்
» பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum