Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
+3
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை கண்டது. இதையடுத்து தி.மு.க., தனது கட்சி அமைப்பில் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியி இருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ளார். கட்சியில் தன்னுடைய உழைப்பும் அர்பணிப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தலமைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
குடும்ப அரசியலில் இந்த குருவிக்கு என்ன வேலை? அதான் இப்படி ஒரு நிலைமைக்கு வந்துட்டாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
குஷ்பு பா.ஜனதாவில் சேர முடிவு?
சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக குஷ்பு திமுகவில் சேர்ந்ததிலிருந்தே திமுகவில் ஒருதரப்பில் அவரது வருகை கசப்புணர்வுடன் பார்க்கப்பட்டது.குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலேயே அவர்களது வீட்டு பெண்கள் மத்தியில் குஷ்பு வெறுப்புக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு, " திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் ( மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி வெளியானதும் திமுக இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே, குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் ஒன்றிற்கு திருச்சிக்கு சென்ற குஷ்பு, அங்குள்ள ஓட்டலில் வைத்து திமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்பும் வீசப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைந்தன. தாக்குதல் நடந்தபோது குஷ்பு கணவர் சுந்தர் சி. இல்லாத நிலையில், அவர்களது குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தை பெரிதுபடுத்தாத குஷ்பு, தனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். ஆனாலும் அப்போதிருந்தே குஷ்பு திமுகவில் ஓரம்கட்டப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் கருணாநிதியின் தலையீடால், திமுக மாநாடு போன்ற, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குஷ்பு அழைக்கப்பட்டார்.
ஆனால் இதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் விரும்பவில்லை எனக்கூறப்பட்டது. இதனிடையே நடந்தமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் தெரிவித்த கடும் எதிர்ப்பு மற்றும் வேட்பாளர் தேர்வு முழுவதும் அவரது விருப்பப்படியே அமைந்தது போன்ற காரணங்களால் அது நடக்காமல் போனது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அறிவிப்பு பட்டியலிலும் முதலில் குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்படாமல், பின்னர் கருணாநிதியின் தலையீட்டின் பேரிலேயே திமுகவின் முன்னணி பிரசாரகர்களின் லிஸ்டில் குஷ்பு இடம்பெற்று, அவரும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில்தான் கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மற்றும் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வி போன்றவை குஷ்புவை இனியும் திமுகவில் நீடிக்கவேண்டுமா? என்று யோசிக்க வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே அவர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுஷ்மா சுவராஜுக்கும், ஸ்மிருதி இரானிக்கும் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்போதே இது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தை உயரச்செய்தது.
இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதியைப்பற்றி சர்ச்சை எழுந்தபோது, " சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் டெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல் உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. திறமைதான் முக்கியம்; படிப்பு அல்ல" என்று இரானிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் குஷ்பூ. இதனால் அப்பொழுதே குஷ்பு பா.ஜனதாவில் சேரலாம் என செய்திகள் வெளியாகின.
தற்போது குஷ்பு திமுகவில் இருந்து விலகிவிட்டதால், அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. ஸ்மிருதி இரானி போன்ற நடிகைகள் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா போன்றவர்களுக்கு பா.ஜனதாவில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றை பார்க்கும்போது தாமும் பா.ஜனதாவில் சேர்ந்தால் தமக்கும் அரசியலில் நல்ல எதிர்காலம் அமையலாம் என்ற முடிவுக்கு குஷ்பு வந்திருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜனதாவிலும் மக்களை கவரும் ' மாஸ் லீடர்' இல்லை என்பதால் குஷ்புவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
மும்பையின் தோன்றி புகழ் சார் அணங்கு
பிம்பத்திரை ரசிகர் கனவுலக அரசி
ஏங்கித் தவித்திட்ட காளையர் கதறிட
சுந்தரை மணமிட்டு ஆன தமிழச்சி
திராவிட இயக்கம் தன்னில் இணைந்து
மேடை ஆயிரம் ஏறி முழங்கிட - உன்
தண்டமிழ் (!?!?) கண்ட கவிஞர் அனைவரும்
கூனிக் குறுகிட செம்மொழி வளர்த்தாய்.
கூர்செய் ஆப்பு நிச்சயம் ஆக
தேறவே மாட்டாய் எனவே தெளிந்து
தரவே இல்லை தேர்தலில் ஓரிடம்
அதற்கா அடைந்தாய் இத்தனை மூர்க்கம்?
ஊழல் வழக்கு பிள்ளை சண்டை
இருகொள்ளி (!?!?) தொல்லை இருண்ட அரசியல்
எதுவும் என்னை அசைத்திட்டதில்லை - ஆனால்
உன்னிக்கடிதம் உருக்கொலத்ததடி என்னை.
எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்
இதையும் தாங்க இருப்பில்லை துணிவு
இதுவும் நாடகம் எனவே சொல்லி
காட்டடி என்னிடம் கொஞ்சம் கனிவு.
பாணபத்திர ஓணாண்டி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
மேற்கோள் செய்த பதிவு: 1069386சிவா wrote:
மும்பையின் தோன்றி புகழ் சார் அணங்கு
பிம்பத்திரை ரசிகர் கனவுலக அரசி
ஏங்கித் தவித்திட்ட காளையர் கதறிட
சுந்தரை மணமிட்டு ஆன தமிழச்சி
திராவிட இயக்கம் தன்னில் இணைந்து
மேடை ஆயிரம் ஏறி முழங்கிட - உன்
தண்டமிழ் (!?!?) கண்ட கவிஞர் அனைவரும்
கூனிக் குறுகிட செம்மொழி வளர்த்தாய்.
கூர்செய் ஆப்பு நிச்சயம் ஆக
தேறவே மாட்டாய் எனவே தெளிந்து
தரவே இல்லை தேர்தலில் ஓரிடம்
அதற்கா அடைந்தாய் இத்தனை மூர்க்கம்?
ஊழல் வழக்கு பிள்ளை சண்டை
இருகொள்ளி (!?!?) தொல்லை இருண்ட அரசியல்
எதுவும் என்னை அசைத்திட்டதில்லை - ஆனால்
உன்னிக்கடிதம் உருக்கொலத்ததடி என்னை.
எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்
இதையும் தாங்க இருப்பில்லை துணிவு
இதுவும் நாடகம் எனவே சொல்லி
காட்டடி என்னிடம் கொஞ்சம் கனிவு.
பாணபத்திர ஓணாண்டி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
மன அழுத்தம் நீங்கினால் சரி...!
-
-
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
இதற்கு பெயர்தான் குஷ்பு பெயர்ச்சி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.
அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?
எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.
ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?
எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.
ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
அய்யய்யோ , இவர் விலகியதால் , DMK அஸ்தமனம் தான் !
ஒரு பெரும் தூணை, இப்படியா கடலில் தள்ளுவது .?
கிடைக்கும் செய்திகளை பார்த்தால் ,BJP இல் இணைகிறாராம்.
பாவம் !
ரமணியன்
ஒரு பெரும் தூணை, இப்படியா கடலில் தள்ளுவது .?
கிடைக்கும் செய்திகளை பார்த்தால் ,BJP இல் இணைகிறாராம்.
பாவம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்
» தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்
» தமிழருவி மணியன் கொங்கிரசில் இருந்து விலகல்
» செல்வராகவன் படத்தில் இருந்து யுவன் விலகல்
» சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி
» தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்
» தமிழருவி மணியன் கொங்கிரசில் இருந்து விலகல்
» செல்வராகவன் படத்தில் இருந்து யுவன் விலகல்
» சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|