ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

+3
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம் - Page 2 Empty பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா Thu Jun 12, 2014 4:03 pm

First topic message reminder :


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளை பார்வையிட சென்ற சப்.கலெக்டர், அவர்கள் நிலையைக் கண்டு மயக்கமுற்றார். இந்த மாணவிகள் பலாத்காரம் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக கற்பழிப்பு, கொலை , என உ.பி., அரசை உலுக்கி வருகிறது. நேற்று கூட ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு பெண் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார். பாடான் கிராமத்தில் நடந்தது போல் தற்போது 16 வயது பெண் ஒருவர் கற்பழித்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார். இது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 2 பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாழடைந்த மண்டபம்: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மாணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். மிரட்டி, 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். விவரம் தெரிந்ததும் விடுத நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரித்து வருகின்றனர். சில குளூ கிடைத்திருப்பதாவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் மாணவிகளை பார்த்து விசாரித்தார். மாணவிகளின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். இதனால் அவர் சற்று மனம் தளர்ந்து மயக்கமுறும் நிலைக்கு சென்றார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

பாதுகாப்பு இல்லை: இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய பாதுகாப்பு இல்லை . சரியான கேட் கூட இல்லாமல் இருந்தது. இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு நடந்து வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இங்கு வந்து போவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் இந்த விடுதி முன்பு கூடியுள்ளனர்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம் - Page 2 Empty Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா Mon Jun 16, 2014 4:55 am

பொள்ளாச்சி சிறுமிகள் பலாத்காரம்: 'கைதான நபர் ஒப்புதல் வாக்குமூலம்'

பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது செயலை ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவருடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

பொள்ளாச்சி, தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபை ஆலய (TELC) நிர்வாகத்தின் கீழ் 20 வருடங்களுக்கு மேலாக மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல், பாதுகாப்பு வசதிகள் இன்றி இயங்கி வந்த இந்த விடுதியில் 3 சிறுமிகள் உள்பட 14 வயதிற்குட்பட்ட 20 பேர் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சமூகவிரோதிகள் சிலர் விடுதிக்குள் புகுந்து, இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பல மணி நேரம் கழித்து விடுதி ஊழியர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012 (போஸ்கோ), 336 (A) சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லுதல் (procuration of minor girl), 506 (ii) கொலை மிரட்டல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு சிறுமி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

தேடப்பட்ட நபர் கைது..

இந்நிலையில், சிறுமிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும் வெள்ளிக்கிழமை 4 பேரை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். ரத்த மாதிரி மற்றும் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியாக, இன்று (சனிக்கிழமை) சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வால்பாறை, கக்கன்காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் வி.வீரன் (எ) வீராச்சாமியை (23) போலீஸார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் பணப்பாளையம். இவர் திருமணமானவர்.

கைதானவர் ஒப்புதல்...

போலீஸார் கூறுகையில், "புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வீராச்சாமி, அவரது நண்பர்கள் கோபிநாத் (23), அரவிந்த் (19) மூவரும், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியுள்ளனர். அங்கு மூவரில் வீராச்சாமி மட்டும் பிரிந்து சென்று விடுதி வளாகத்திற்குள் புகுந்துள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை எழுப்பி 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை கத்தியைக் காட்டி மிரட்டி, பாழடைந்த கட்டிடங்கள் வழியாக வணிக வளாகத்தின் மீது அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

விடுதி ஊழியர்கள் சிறுமிகளை தேடி வந்தபோது, வீராசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வியாழக்கிழமை முதல் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வீராசாமி பிடிபட்டார். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் வைத்து வீராச்சாமியிடம் விசாரணை நடைபெற்றது. அதில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்" என்றனர்.

நண்பர்கள் சிறையிலடைப்பு...

இந்நிலையில், வீராச்சாமியின் நண்பர்களான கோபிநாத், அரவிந்த ஆகியோர் மீது கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுதல் (392) பிரிவின் கீழ் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இன்று மாலை பொள்ளாச்சி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதி நிர்வாகம் மீது நடவடிக்கை

அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வந்ததால் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி ஜி.விஜயா பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் இ.பி.சுரேஷ்குமார், விடுதி நிர்வாகி பாக்கியநாதன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரி கொடுத்த அறிவிப்பை புறக்கணித்ததாக (188), உயிருக்கு ஆபத்து விளைவித்தல் (336), சட்டத்திற்கு புறம்பாக தங்க வைத்தது (342) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் திருச்சியில் இருந்த பாக்கியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று திருச்சியிலுள்ள டி.இ.எல்.சி தலைமை நிர்வாகத்தினர் பொள்ளாச்சியில் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாகத் தரப்பில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர்களது வருகை தள்ளிவைக்கப்பட்டது.


பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum