Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
+3
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளை பார்வையிட சென்ற சப்.கலெக்டர், அவர்கள் நிலையைக் கண்டு மயக்கமுற்றார். இந்த மாணவிகள் பலாத்காரம் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக கற்பழிப்பு, கொலை , என உ.பி., அரசை உலுக்கி வருகிறது. நேற்று கூட ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு பெண் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார். பாடான் கிராமத்தில் நடந்தது போல் தற்போது 16 வயது பெண் ஒருவர் கற்பழித்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார். இது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 2 பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாழடைந்த மண்டபம்: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மாணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். மிரட்டி, 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். விவரம் தெரிந்ததும் விடுத நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரித்து வருகின்றனர். சில குளூ கிடைத்திருப்பதாவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் மாணவிகளை பார்த்து விசாரித்தார். மாணவிகளின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். இதனால் அவர் சற்று மனம் தளர்ந்து மயக்கமுறும் நிலைக்கு சென்றார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
பாதுகாப்பு இல்லை: இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய பாதுகாப்பு இல்லை . சரியான கேட் கூட இல்லாமல் இருந்தது. இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு நடந்து வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இங்கு வந்து போவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் இந்த விடுதி முன்பு கூடியுள்ளனர்.
தினமலர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். குற்றவாளிகளுக்கு மிக கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
ரொம்ப மோசம் ..............இவங்களை எல்லாம்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
அரசுக்கு இட்லி விர்பதர்க்கும் மதுக்கடை நடத்த்துவதர்க்கே நேரம் கிடைக்கவில்லை பிறகு இது போல விடுதிகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்த எப்படி நேரம் கிடைப்பது .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
anikuttan wrote:அரசுக்கு இட்லி விர்பதர்க்கும் மதுக்கடை நடத்த்துவதர்க்கே நேரம் கிடைக்கவில்லை பிறகு இது போல விடுதிகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்த எப்படி நேரம் கிடைப்பது .
அருமையாகக் கூறியுள்ளீர்கள் நண்பா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
வெட்கக்கேடு
இம்மாதிரி நடக்க அரசு விடலாமா..
இம்மாதிரி நடக்க அரசு விடலாமா..
சம்பத்- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் பலாத்கார சம்பவம் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது 5 பேரை பிடித்து விசாரணை
பொள்ளாச்சியில் மாணவிகள் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.இதையொட்டி 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் தங்கி படித்து வந்த 10 வயது மற்றும் 11 வயது பள்ளி மாணவிகள் 2 பேர் கடந்த 11–ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர்.
விடுதியில் இருந்த மாணவிகளை காணாதது குறித்து சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தேடியபோது, அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்தகாயங்களுடன் சுருண்டு கிடந்தனர்.
தீவிர சிகிச்சை
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அந்த மாணவிகள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
விடுதிக்கு சீல்
தொடர்ந்து சமூக நலத்துறை, வருவாய்த்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி அந்த விடுதி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு தங்கி படித்து வந்த மாணவ– மாணவிகள் கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தையொட்டி குழந்தை பாலியல் தடுப்புச்சட்டம், கடத்திச் சென்று கற்பழித்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 தனிப்படை
மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் கட்டமாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். அப்போது பொள்ளாச்சி சி.டி.சி.மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (24) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அடையாளம் காட்டிய மாணவிகள்
தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரித்தனர். அதில், வால்பாறையை சேர்ந்த வீரன் என்கிற வீராசாமியும் (வயது 23) அவரது நண்பரும், சம்பவம் நடந்த அன்று இரவு மது அருந்திவிட்டு சம்பந்தப்பட்ட விடுதிக்கு செல்கிறோம் என்று கூறியதாக கோபிநாத் போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் வீராசாமியின் புகைப்படத்தை கோபிநாத்திடம் இருந்து பெற்றனர். பின்பு அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அந்த மாணவிகளிடம் வீராசாமியின் புகைப்படத்தை காண்பித்து விசாரணை நடத்தினர்.
ஆண்மை பரிசோதனை
மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண்வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.
பின்பு அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் போலீசார் நேற்று மாலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.போலீசார் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.இதற்கிடையில் போலீஸ் தேடியதில் மேலும் ஒருவர் சிக்கினார்.இதன் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– சந்தேகப்படும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பாதிப்புக்கு உள்ளான மாணவிகளிடம் காட்டியதில் முக்கிய துப்பு கிடைத்து உள்ளது.இதன் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஒருவர் சிக்காமல் இருக்கிறார்.அதில் ஒருவரின் புகைப்படத்துடன் விசாரித்து வருகிறோம்.அவர் பிடிபட்டால் இந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆறுதல்
இந்த நிலையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை பொள்ளாச்சி சென்றார். பின்னர் சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேவுடன், கலெக்டர் அந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த கலெக்டர் நிருபர்களிடம் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் தற்போது நலமாக உள்ளனர். முதல்–அமைச்சர் அறிவித்த நிதியுதவி வங்கியில் அந்த மாணவிகளின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டு விடுவார்கள்’ என்றார்.
சப்–கலெக்டர் உத்தரவு
இதற்கிடையே, பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அனைத்து மாணவ– மாணவிகள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதாக உள்ளதா? என்று ஆய்வு நடத்த சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன் முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ., சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் கிரி உள்பட அ.தி.மு.க.வினர் சென்றனர்.
பொள்ளாச்சியில் மாணவிகள் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.இதையொட்டி 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் தங்கி படித்து வந்த 10 வயது மற்றும் 11 வயது பள்ளி மாணவிகள் 2 பேர் கடந்த 11–ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர்.
விடுதியில் இருந்த மாணவிகளை காணாதது குறித்து சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தேடியபோது, அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்தகாயங்களுடன் சுருண்டு கிடந்தனர்.
தீவிர சிகிச்சை
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அந்த மாணவிகள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
விடுதிக்கு சீல்
தொடர்ந்து சமூக நலத்துறை, வருவாய்த்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி அந்த விடுதி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு தங்கி படித்து வந்த மாணவ– மாணவிகள் கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தையொட்டி குழந்தை பாலியல் தடுப்புச்சட்டம், கடத்திச் சென்று கற்பழித்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 தனிப்படை
மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் கட்டமாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். அப்போது பொள்ளாச்சி சி.டி.சி.மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (24) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அடையாளம் காட்டிய மாணவிகள்
தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரித்தனர். அதில், வால்பாறையை சேர்ந்த வீரன் என்கிற வீராசாமியும் (வயது 23) அவரது நண்பரும், சம்பவம் நடந்த அன்று இரவு மது அருந்திவிட்டு சம்பந்தப்பட்ட விடுதிக்கு செல்கிறோம் என்று கூறியதாக கோபிநாத் போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் வீராசாமியின் புகைப்படத்தை கோபிநாத்திடம் இருந்து பெற்றனர். பின்பு அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அந்த மாணவிகளிடம் வீராசாமியின் புகைப்படத்தை காண்பித்து விசாரணை நடத்தினர்.
ஆண்மை பரிசோதனை
மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண்வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.
பின்பு அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் போலீசார் நேற்று மாலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.போலீசார் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.இதற்கிடையில் போலீஸ் தேடியதில் மேலும் ஒருவர் சிக்கினார்.இதன் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– சந்தேகப்படும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பாதிப்புக்கு உள்ளான மாணவிகளிடம் காட்டியதில் முக்கிய துப்பு கிடைத்து உள்ளது.இதன் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஒருவர் சிக்காமல் இருக்கிறார்.அதில் ஒருவரின் புகைப்படத்துடன் விசாரித்து வருகிறோம்.அவர் பிடிபட்டால் இந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆறுதல்
இந்த நிலையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை பொள்ளாச்சி சென்றார். பின்னர் சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேவுடன், கலெக்டர் அந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த கலெக்டர் நிருபர்களிடம் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் தற்போது நலமாக உள்ளனர். முதல்–அமைச்சர் அறிவித்த நிதியுதவி வங்கியில் அந்த மாணவிகளின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டு விடுவார்கள்’ என்றார்.
சப்–கலெக்டர் உத்தரவு
இதற்கிடையே, பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அனைத்து மாணவ– மாணவிகள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதாக உள்ளதா? என்று ஆய்வு நடத்த சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன் முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ., சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் கிரி உள்பட அ.தி.மு.க.வினர் சென்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்
விடுதி மாணவிகள் கற்பழிப்பு விவகாரம்: தலைமறைவான பாதிரியார் திருச்சியில் பதுங்கல்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. தேவாலய நிர்வாகமே விடுதியை நடத்தி வந்தது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியிருந்தனர்.
இவர்களில் 10 மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேர் கடந்த புதன்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 6 தனிப் படை அமைக்கப் பட்டது.
பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்து ராஜன் தலைமையில் செயல்பட்ட தனிப் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கற்பழிப்பு குற்றவாளியான வால்பாறையைச் சேர்ந்த வீராசாமி(வயது 23) என்பவனை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவன் தான் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைதான வீராசாமியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு மூலம் பெறப்பட்டது. அவை வீடியோவில் பதிவு செய்யப் பட்டது. ‘கஞ்சா போதையில் இருந்த நான் விடுதிக்குள் சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என்று வீராசாமி தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான்.
வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் வீரா சாமியை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
டி.இ.எல்.சி. தேவாலய நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த மாணவர்கள் விடுதி சட்டத்துக்கு புறம்பாக அனுமதியில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் செயல்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து கோவை மாவட்ட சமூக நலத் துறை குழந்தைகள் நலக்காப்பாளர் விஜயா கொடுத்த புகாரின் பேரில் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன், வார்டன் சுரேஷ்குமார் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் வார்டன் சுரேஷ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரம் பூதாகர மானதும் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன் தலைமறைவாகி விட்டார். அவர் இப்போது திருச்சியில் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. தேவாலய நிர்வாகமே விடுதியை நடத்தி வந்தது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியிருந்தனர்.
இவர்களில் 10 மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேர் கடந்த புதன்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 6 தனிப் படை அமைக்கப் பட்டது.
பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்து ராஜன் தலைமையில் செயல்பட்ட தனிப் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கற்பழிப்பு குற்றவாளியான வால்பாறையைச் சேர்ந்த வீராசாமி(வயது 23) என்பவனை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவன் தான் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைதான வீராசாமியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு மூலம் பெறப்பட்டது. அவை வீடியோவில் பதிவு செய்யப் பட்டது. ‘கஞ்சா போதையில் இருந்த நான் விடுதிக்குள் சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என்று வீராசாமி தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான்.
வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் வீரா சாமியை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
டி.இ.எல்.சி. தேவாலய நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த மாணவர்கள் விடுதி சட்டத்துக்கு புறம்பாக அனுமதியில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் செயல்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து கோவை மாவட்ட சமூக நலத் துறை குழந்தைகள் நலக்காப்பாளர் விஜயா கொடுத்த புகாரின் பேரில் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன், வார்டன் சுரேஷ்குமார் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் வார்டன் சுரேஷ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரம் பூதாகர மானதும் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன் தலைமறைவாகி விட்டார். அவர் இப்போது திருச்சியில் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேலம் அருகே இட்லி சாப்பிட்ட மாணவ- மாணவிகள் மயக்கம்
» காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
» தங்க ரதப் பணிகளை பார்வையிட்ட ஜயேந்திரர்
» பழநி - பொள்ளாச்சி ரயில் சேவை துவக்கம்
» திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்
» காப்பக மாணவிகள் பாலியல் பலாத்காரம்: நிர்வாகிக்கு 14 ஆண்டு சிறை
» தங்க ரதப் பணிகளை பார்வையிட்ட ஜயேந்திரர்
» பழநி - பொள்ளாச்சி ரயில் சேவை துவக்கம்
» திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|