புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_m10கிரிக்கெட் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் செய்திகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 6:17 pm

First topic message reminder :

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர்.

வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஷில்லிங்போர்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேப்டன் மெக்கல்லம் இறங்கி 7 ரன்களில் சுலைமான் பென்னிடம் வீழ்ந்தார். 279/5 என்று ஆனது நியூசீலாந்து.

அதன் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு தலைவலி துவங்கியது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் சதம் எடுத்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் இணைந்தனர்.

மட்டைக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் இவர்கள் இருவரும் அபாரமாக ஆடினர். இதில் யாராவது ஒருவரை உடனடியாக வீழ்த்தியிருந்தால் 350 ரன்களுக்குள் நியூசீலாந்தை அடக்கியிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது.

அடுத்த 60 ஓவர்களுக்கு விக்கெட்டே விழவில்லை. ஜேம்ஸ் நீஷம் 107 ரன்களை விளாச, வாட்லிங் 89 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கையை விட்டுச் சென்றது.

கிறிஸ் கெய்ல் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இனி வெல்வது கடினம். மேலும் தோற்காமல் இருந்தால் சரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்ட 8வது வீரர் என்ற பெருமையை எட்டினார் ஜேம்ஸ் நீஷம். மொத்தம் 174.3 ஓவர்கள் வீசி நொந்து நூலானது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் டிம் சவுதீ இறங்கி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மெக்கல்லம் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பரிவு காட்டினார்.

அதன் பிறகு கெய்ல், போவெல் ஜோடி இறங்கி 9 ஓவர்களைத் தாக்குப் பிடித்து விக்கெட் இழக்காமல் 19 ரன்கள் எடுத்தனர்.

கெய்ல் 100வது டெஸ்ட்டில் சதம் எடுப்பாரா இன்று என்பதே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 2:16 am

வங்கதேச கிரிக்கெட் வீரர் மொகமட் அஷ்ரஃபுல்லுக்கு 8 ஆண்டுகள் தடை

வங்கதேச பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக நட்சத்திர பேட்ஸ்மென் மொகமட் அஷ்ரபுல் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

அவர் மேல் சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை 8 ஆண்டுகள் தடை செய்கிறோம் என்று இதனை விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார்.

இவர் மேலும் தனது தீர்ப்பில் ஒரு மில்லியன் டாக்கா, அதாவது 12,280 அமெரிக்க டாலர்கள், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் சிட்டகாங் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தனது அணி தோற்க அஷ்ரபுல் ஒரு மில்லியன் டாக்கா தொகையை லஞ்சமாகப் பெற்றதாக புகார் எழுந்தது.

பிறகு 10 நாட்கள் கழித்து பரிசால் பர்னர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியையும் அஷ்ரபுல் பிக்ஸ் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஜூன் 4, 2013 அன்று வெளியான செய்திகளின் படி அவர் ‘தேசத்திற்கு நான் இத்தகைய அநீதியைச் செய்திருக்கக்கூடாது, என்னை மன்னித்து விடுங்கள்’ என்றும் கூறியிருந்தார்.

நியூசிலாந்து முன்னாள் வீரர் லூ வின்சென் ட்டிற்கு 3 ஆண்டுகள் தடையும், இலங்கையின் கவுஷல் லொகுராச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டது.

அஷ்ரபுல் விளையாடிய டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஷிகாப் ஜிஷன் சவுத்ரிக்கு 10 ஆண்டுகள் தடையும், 2 மில்லியன் டாக்கா தொகையும் அபராதம் விதிக்கப்பட்டது.

மொகமட் அஷ்ரபுல் 17 வயதில் டெஸ்ட் சதம் எடுத்து 2001ஆம் ஆண்டு வங்கதேசத்தின் இளம் சத வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் பல சிறப்பான இன்னிங்ஸ்களை இவர் ஆடியதையும் மறக்க முடியாது. 2007 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இவரது ஆட்டம் இன்றும் பலரது நினைவுகளில் நிற்கும்.

வங்கதேசத்தினால் கொண்டாடப்பட்ட இவர் வங்கதேச பிரீமியர் லீக் இரண்டாவது தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதோடு சூதாட்டக்காரர்களுக்கும் உதவியிருக்கிறார். இதனை இவரே ஒப்புக் கொண்டும் விட்டார்.

தடை செய்யப்பட்ட இலங்கை வீரர் லொகுராச்சி 31 வயது வீரர். இலங்கைக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 20, 2014 12:52 am

3-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து: ஸ்டூவர்ட் பின்னி தொடர் நாயகன்

டாக்காவில் நடைபெற்ற இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பின்னி தேர்வு செய்யப்பட்டார்.

டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

இன்று மீண்டும் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பியது. மோர்டசா, அல் அமின் ஹுசைன் மற்றும் இளம் புயல் தஸ்கின் அகமட் ஆகியோர் இந்திய பேட்ஸ்மென்களுக்கு அதிக தொல்லைகளைக் கொடுத்தனர். ராபின் உத்தப்பா 5 ரன் எடுத்து மோர்டசாவின் மிகவும் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அல் அமின் ஹுசைன், ரஹானேயிற்கு இங்கிலாந்தில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக வீசினார். ஒரே ஓவரில் தொடர்ந்து 4 முறை பந்து அவரது மட்டையைக் கடந்து சென்றது. கடுமையாகத் தடுமாறினார் ரஹானே. இவர் வீசிய எழும்பிய பந்து ஒன்று லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுன்ஸ் ஆக ரஹானே லெக் திசையில் திருப்பி விட முயன்றார் ஆனால் பந்தோ மட்டையின் வெளி விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. 18 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ரஹானேயின் துன்பம் முடிவுக்கு வந்தது.

ராயுடுவுக்குத் துன்பம் கொடுக்க இளம் புயல் தஸ்கின் அகமட் வந்தார். பந்து உள்ளே வந்து எழும்பியது. அவரோ எளிதாக தேர்ட்மேன் திசையில் தட்டிவிடலாம் என்று ஆடினார் ஆனால் கூடுதல் பவுன்ஸினால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு முஷ்பிகுரிடம் கேட்ச் ஆனது.

மனோஜ் திவாரி வந்தார், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 2 ரன்களில் அல் அமின் ஹுசைன் பந்தை தேவையில்லாமல் தொட்டு 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 17/4.

கேப்டன் ரெய்னா இறங்கி அல் அமின் ஹுசைனின் ஒரே ஒவரில் 3 பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை ஊட்டினர். புஜாரா திணறியபடியே அவுட் ஆகாமல் இருந்தார் 37/4 என்ற நிலையில் மீண்டும் மழை வந்தது. பிறகு ஆட்டம் 40 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது.

ரெய்னா 25 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பந்து கையுறையில் பட்டு லெக் திசையில் கீப்பரிடம் செல்ல முஷ்பிகுர் அபாரமாக கேட்ச் பிடித்தார். புஜாரா கடைசியாக மோர்டசா பந்தை பவுண்டரி அடித்தார். சாஹா இறங்கி இரண்டு பவுண்டரிகளுடன் புத்துயிர் கொடுத்தார். இவரும் 16 ரன்களில் ஷாகிப் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

அடுத்ததாக 63 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த புஜாரா வேதனை முடிவுக்கு வந்தது. ஷாகிப் பந்து ஒன்று நன்றாகத் திரும்ப புஜாராவின் பின்னங்காலில் பட எல்.பி. ஆகி வெளியேறினார். கடைசியில் அன்று பவுலிங்கில் கலக்கிய ஸ்டூவர்ட் பின்னி இன்று 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்தியா 119/9 என்று முடிந்தது.

தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி கூறுகையில், “எனக்கு இந்த வாய்ப்பை அளித்த எனது அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை, ஆனால் இளம் வீரர்களாக இங்கு வந்து நிரூபித்துள்ளோம். இந்த ஆட்டத்தில் 140 ரன்களுக்குத் திட்டமிட்டோம், 140 ரன்கள் எடுத்தால் சவால் அளிக்கலாம்” என்றார்.

கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “அணியின் ஆட்டம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன், குறிப்பாக ஸ்டூவர்ட் பின்னி. இவர் மோகித் சர்மா, உமேஷ் யாதவுடன் இணைந்து சிறப்பாக வீசினார். இங்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஆட வந்தபோது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட் எங்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவார். இப்போது அவரது பந்து வீச்சைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் நல்ல திறமையைக் காண்பித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 20, 2014 12:53 am

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது - ஸ்டூவர்ட் பின்னி

4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை புரிந்த ஸ்டூவர்ட் பின்னி உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

வெற்றி இலக்கான 106 ரன்களை எடுக்க முடியமல் வங்கதேசம் நேற்று 58 ரன்களுக்குச் சுருண்டது. மோகித் சர்மா, பின்னி ஆகியோர் முறையே 4 மற்றும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பவுலிங் கிரீஸில் வைடாகச் சென்று பந்தை உட்புறமாக ஸ்விங் செய்ததில் நேற்று ஸ்டூவர்ட் பின்னிக்கு விக்கெட்டுகள் விழத்தொடங்கின. ஒரு சில பந்துகள் அதே கோணத்தில் உள்ளே வந்து பிறகு நேராகும் அல்லது வெளியே ஸ்விங் ஆகும். மனோஜ் பிரபாகர் வீசும் முறையை ஒத்திருந்தது பின்னி வீசிய முறை.

அவர் கூறியதாவது:

நேராக வீசி ஸ்விங் செய்வதே எனது பலம். அங்கு சூழ்நிலையும் ஸ்விங்கிற்குச் சாதகமாக இருந்தது. எனவே நான் சிறப்பாக வீசியதில் ஆச்சரியமில்லை, ஆனால் உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதினால் துவண்டு போய் விடவில்லை. ஆட்டத்தில் நாம் இல்லை என்ற உணர்வு வரவேயில்லை. இடைவேளையின் போது பேசினோம், குட் லெந்த்தில் வீசி சுலபமான ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் போதும் என்று ஆலோசனை செய்தோம் என்று கூறினார் ஸ்டூவர்ட் பின்னி.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 2:02 am

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் 6வது தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் தேதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி போட்டிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை எவ்வாறு அமையும் என்று தெரியாததால் அதனைக் கணக்கில் கொண்டு மைதானங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக ஐபிஎல் முதற்கட்ட போட்டிகள் நடைபெற்ற யு.ஏ.இ.யில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை நடத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது.

சுனில் கவாஸ்கரும் யு.ஏ.இ.-யில் போட்டிகளை நடத்த தனது தனிப்பட்ட விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 03, 2014 3:24 pm

சாம்பியன்ஸ் லீக் 20 தொடரா ... வரட்டும் எவ்வளவு மேட்ச் ஃபிக்சிங் புகார் வந்தாலும் ... நாங்க மேட்ச் பார்ப்பதை விட போவதில்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:13 am

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 342 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 319 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், பந்து சூப்பராக ‘ஸ்விங்’ ஆனதால், அதை கணித்து ஆட முடியாமல் சிரமப்பட்டனர். 4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் வெற்றிக்கு இன்னும் 214 ரன்கள் தேவை என்ற சூழலில் இங்கிலாந்து அணி இன்று பேட்டிங் செய்துவிளையாடியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை லார்ச்சில் மைதானத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார்.

1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது,
லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 2:14 am

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா ஆவேசமாகப் பந்து வீச இங்கிலாந்து 223 ரன்களுக்குச் சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி தழுவியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார். 1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது, லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டூவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி " லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டில் அற்புதமான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த செயல்பாட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 22, 2014 2:09 pm

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 11:03 pm


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரையும் கேப்டனையும் நீக்க வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பிளட்சர், கேப்டன் டோனி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

4 ஆவது மற்றும் 5ஆவது டெஸ்டில் இந்திய அணி 3 ஆவது நாளுக்குள் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. லண்டன் ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான நிலையில் தோல்வியடைந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் கண்ட கேவலமான தோல்வி இது. இதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்திலும், 1974 ஆம் ஆண்டில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியும் இந்திய அணியின் மிகவும் மோசமான டெஸ்ட் தோல்விகளாகும்.

இந்திய அணி தற்போது அடைந்துள்ள அவமானகரமான தோல்விக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறுகையில், “கடினமான லார்ட்ஸ் பிட்ச்சில் இந்திய அணி வென்ற பிறகு பயிற்சியாளர் பிளட்சர் என்ன செய்தார். அணியின் பிரச்சினையை தீர்க்கும் திறமை அவரிடம் இல்லை. பிளட்சர் பயிற்சியாளர் பதவியில் இருந்து செல்ல வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.

டோனி தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி நன்றாக பேட்டிங் செய்தாலும், கேப்டன் பதவியில் ஏன்? அவர் ஆட்ட நுணுக்கத்தை மாற்றி செயல்படவில்லை. பீல்டிங்கில் ‘தேர்டு மேனை’ நிறுத்தாததால் அந்த இடத்தில் பாதிக்கு மேல் ரன்கள் சென்றன.

அணி தேர்விலும் கேப்டன் சரியாக முடிவு எடுக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே அஸ்வினை அணியில் சேர்த்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் கூறுகையில், “கீப்பிங் மற்றும் கேப்டன் பதவியில் டோனியில் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

அவர் எப்பொழுதும் அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயங்கள் எப்பொழுதும் நடக்காது. எப்போதாவது ஒரு நேரம் தான் அதிசயம் நடக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா கூறுகையில், “இந்திய அணிக்கு பயிற்சியாளர் பிளட்சரின் பங்களிப்பு பெரிய ஜீரோ என்று நான் அடித்து சொல்வேன்“ என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், “பிளட்சர் அணிக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்கள் இந்திய அணியையும், வீரர்களையும் ஏளனம் செய்துள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.



கிரிக்கெட் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 19, 2014 11:19 pm

தொடரின் ஓபனிங் நல்லா இருந்தது ஆனா பினிஷிங் சரியில்லையே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக