புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10இது வாங்கினால் அது இலவசம்  Poll_m10இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10இது வாங்கினால் அது இலவசம்  Poll_m10இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10இது வாங்கினால் அது இலவசம்  Poll_m10இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10இது வாங்கினால் அது இலவசம்  Poll_m10இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10இது வாங்கினால் அது இலவசம்  Poll_m10இது வாங்கினால் அது இலவசம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வாங்கினால் அது இலவசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 07, 2014 4:45 pm


இன்று நம்மையெல்லாம் கிளுகிளுக்க வைக்கும் இனிமையான சொல் இலவசம்! இந்தச் சொல்லைக் கேட்டவுடனேயே சிலருக்கு மயிர்க் கூச்செறிகிறது. வாயெல்லாம் பல்லாகிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் நம் அரசியல் வாணர்கள் இன்று சக்கைப்போடு போடுகிறார்கள். இலவசம், அன்பளிப்பு என்று என்ன என்னவோ கொடுத்து மக்கள் வாக்குச்சீட்டை வாங்கிவிடுகிறார்கள்.

அரசியல் வாணருக்கு அடுத்தபடி வாணிகர்கள் வந்து நிற்கிறார்கள். சலவைக் கட்டி மூன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேயிலைத் தூள் வாங்கினால் கரண்டி இலவசம். கண்ணாடி வாங்கினால் சீப்பு இலவசம். புடவை வாங்கினால் சட்டை இலவசம்.

இதைப் பற்றி வீட்டிலே நான் பேசிக்கொண்டிருந்தபோது என் பேரன் கேட்டான்: "யானை வாங்கினால் குதிரை இலவசமாகத் தருவார்களா தாத்தா?" அதற்கு என் பேத்தி சொன்னாள், "யானை வாங்குபவர்களுக்குக் குதிரை எதற்கு? யானைமேல் வைக்கும் அம்பாரிதான் தருவார்கள்!" என்று.

எல்லா நாடுகளிலுமே மக்கள் இலவசம் என்றால் மயங்கத்தான் செய்கிறார்கள். Reader's Digest ஆங்கில மாத இதழ் நடத்துபவர்கள் ஒரு காலத்தில் தாங்கள் வெளியிடும் கொள்ளை விலைப் புத்தகங்களை விற்பதற்கு இந்த முறையைத்தான் கையாண்டார்கள். விலை உயர்ந்த ஒரு நூலை விற்கச் சிறிய நூல் ஒன்றை இலவசம் என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த இலவச நூலைப் புகழ்ந்து அவர்கள் பயன்படுத்தும் சொற்களைப் படித்தால் விற்பனை நூலைவிட இலவச நூல்தான் மிகவும் பயன் உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். அதை இலவசமாகப் பெறுவதற்காகவே விற்பனை நூலையும் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றும்.

இலவசமாக எதைக் கொடுத்தாலும் அங்கே மக்கள் மொய்ப்பதைக் காணலாம். 1950களில் சோவியத்து ஒன்றியத்துக்குப் போட்டியாக அமெரிக்கா பல வேலைகளை மேற்கொண்டது. ‘சோவியத்து நாடு' என்ற இலவச இதழுக்குப் போட்டியாக, அமெரிக்கச் செய்தி நிறுவனம் ‘அமெரிக்கன் ரிப்போர்ட்டர்' இதழ் நடத்தியதோடு பல்வேறு அமெரிக்க நூல்களையும் இலவசமாய் வழங்கியது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தின் வாசலில் ஒருமுறை ஆயிரக்கணக்கான அமெரிக்க நூல்களைக் கொண்டு வந்து குவித்தனர். இலவசம் யார் வேண்டுமானாலும் தேவையான நூல்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். நூல் பைத்தியமான நான் அங்குச் சென்றேன். கூட்டம் நெரிந்தது. வழியில் போவோர் எல்லாம் கூட்டத்துக்குள் முண்டியடித்துக்கொண்டு ஆளுக்கிரண்டு மூன்று நூல்களை எடுத்துச் சென்றனர். தேவையான நூலா, நல்ல நூலா என்று யாரும் பார்க்கவில்லை. நூல்களின் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்கள்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தனர். எனக்கு ஏற்பட்ட அருவருப்பில் நான் எந்த நூலையும் எடுத்துக் கொள்ளாமலேயே திரும்பிவிட்டேன்.

இப்படி இலவசத்துக்கும் அன்பளிப்புகட்கும் ஏங்கும் தன்மை இந்தக் காலத்தில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்திலும் தமிழகத்தில் புலவர்கள் இருந்தனர். மன்னர்களிடமிருந்து பரிசில் பெற்றனர். ஆயினும் அவர்கள் பரிசிலுக்காக ஏங்கித் தவிக்கவில்லை. பெருமிதத்தோடு வாழ்ந்தனர். தகுதி அறிந்து வழங்கிய பரிசில்களையே அவர்கள் ஏற்றனர். மன்னன் ஒருவன், தன் சிறப்பை உணராமல் எல்லாருக்கும் போலவே தனக்கும் ஒன்றை வீசி எறிந்தான் என்று அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியேறினாராம் ஒரு புலவர். அவர் அதோடு நிற்கவில்லை. வேறொரு மன்னன் தகுதியறிந்து கொடுத்த பரிசிலாகிய யானையைக் கொணர்ந்து முன்னைய மன்னனின் காவல் மரத்தில் கட்டிவைத்து விட்டுச் சென்றாராம்! அந்த மானவுணர்வும் மறவுணர்வும் எங்கே?

மலேசியா, சிங்கப்பூர் என்று நம் தமிழ் அறிஞர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். பணி முன்னிட்டுச் சென்று பெருமிதத்துடன் திரும்பி வருபவர்கள் பற்றி எந்தக் குறையும் இல்லை. வேறு சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாடுகளுக்குச் சென்றால் அங்கு வாழும் தமிழர்கள் நன்கு வரவேற்று விருந்தோம்புவார்கள், அன்பளிப்புகள் நிறைய வழங்குவார்கள் என்பதற்காகவே ஏதாவது ஒரு சாக்கில் அடிக்கடி அங்குச் சென்று வருகிறார்களாம்! சிலர் தாங்கள் எழுதிய குப்பை நூல்களுக்கு விலையைப் பலமடங்கு ஏற்றி அங்கே கொண்டு சென்று ஆயிரக்கணக்கான படிகளை விற்றுக் கொள்ளைப் பொருள் திரட்டி வருகிறார்களாம்!

செல்வர் ஒருவர் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் வான் கோழிப் பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கினார்கள். புலால் உண்ணாத ஒருவரும் ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டார். என்ன என்று வியப்புடன் கேட்டேன். "பக்கத்து வீட்டுக்காரருக்கு மலிவு விலைக்கு விற்றுவிடுவேன்" என்றாரே பார்க்கலாம்.

ம.இல. தங்கப்பா - கட்டுரையாளர் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 07, 2014 6:40 pm

//செல்வர் ஒருவர் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் வான் கோழிப் பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கினார்கள். புலால் உண்ணாத ஒருவரும் ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டார். என்ன என்று வியப்புடன் கேட்டேன். "பக்கத்து வீட்டுக்காரருக்கு மலிவு விலைக்கு விற்றுவிடுவேன்" என்றாரே பார்க்கலாம்.//

 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக