Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
4 posters
Page 1 of 1
அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு விதித்தனர் பா.ஜ., - எம்.பி.,க்கள்
கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாமின், 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஏழு இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ், மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது, 'அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என்பது தான்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, வடகிழக்கு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட, நரேந்திர மோடி, றுவங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவேன்' என, அறிவித்தார். அதனால் தான், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ.,வுக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதிக, எம்.பி.,க்கள் கிடைத்தனர். இதனால், தேர்தல் வாக்குறுதி படி, இந்த விவகாரத்தை, அசாம் மாநில, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. றுவங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என, பா.ஜ., அறிவித்துள்ளது; இதற்கு, மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது.பல ஆண்டுகளாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள, லட்சக்கணக்கான வங்கதேசத்தவர், வெளியேறுவார்களா அல்லது விரட்டி அடிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் கவலை
சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் முன்னர் தலையிட்டுள்ளது. வங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கத் தவறிய, வடகிழக்கு மாநிலங்களை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், றுவங்கதேசத்தவர் ஊடுருவல் பிரச்னை, நம் நாட்டின் மீது எடுக்கப்படும் படையெடுப்பு' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.ரேஷன் கார்டுஅண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய வர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத, அசாம், திரிபுரா போன்ற மாநில அரசுகள், ஊடுருவியவர்களுக்கு ரேஷன் கார்டு, அங்கீகார அட்டை போன்ற பல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இதனால், கட்டுப்பாடின்றி நாள்தோறும் ஏராளமானோர் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
பிரச்னைக்கு காரணம் என்ன?
*உலகின் ஏழ்மை நாடுகளில் ஒன்றான, வங்கதேசத்திலிருந்து, பிழைப்புக்காக, தினமும் ஆயிரக்கணக்கான வங்க தேசத்தவர், அண்டை நாடான நம் இந்தியாவின், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர்.
*அசாமில் மட்டும், 20 லட்சம் வங்கதேசத்தவர் உள்ளதாக கூறப்படுகிறது.
*இந்த கும்பலுடன், இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற நினைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், நேபாளம் வழியாக, வங்கதேசம் சென்று, அங்கிருந்து, இந்திய மாநிலங்களுக்குள் நுழைந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.
*இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் வங்கதேசத்தவர், அசாமின் பூர்வபழங்குடியினத்தவரான, 'போடோ' இன மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுடன், போடோ பழங்குடியினர் மோதலில் ஈடுபடுவதால், அடிக்கடி கலவரம் நிகழ்கிறது.
*வங்கதேசத்திற்கும், இந்திய மாநிலங்களுக்கும் நீண்ட எல்லை இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், வடகிழக்கு மாநிலங்கள் தடுமாறுகின்றன; சில மாநிலங்கள், அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்த தவறுகின்றன.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடி
அசாம் மாநில காங்கிரஸ் அரசு, சட்டவிரோத குடியேறியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது; அதற்காக, காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை, கண்டும் காணாமல் உள்ளது. இந்த மாநிலத்தின் பெருமையாக விளங்கும் காண்டாமிருகங்களை காப்பாற்ற தவறிவிட்டது, காங்கிரஸ் அரசு. வங்கதேசத்தவரை காப்பாற்ற, காண்டாமிருகங்களை பலி கொடுக்கிறது.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில், சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் ஊடுருவிய வங்கதேசத்தவர் விவகாரம், தேசிய பிரச்னை. எனவே, இதை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது, அரசியல் அல்லது எங்கள் கட்சி பிரச்னை அல்ல.
கிரண் ரிஜிஜு,மத்திய உள்துறை இணையமைச்சர் ,அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விரட்டும் பணியை, பா.ஜ., இளைஞர் அணியினர், இன்னும், 15 நாட்களில் மேற்கொள்வர். இதன் முதற்கட்டமாக, 'அசாமை விட்டு வெளியேறுங்கள்' என, வேண்டுகோள் விடுக்கப்படும். இதற்காக, 15 நாட்கள் காத்திருப்போம். அதன்பின், வீடுவீடாக சோதனை நடத்துவோம். வேலை அளிக்க வேண்டாம் என மக்களை வலியுறுத்துவோம்.
காமாஹ்யா பிரசாத் தாஷா,பாரதிய ஜனதா எம்.பி.,
அசாமிலிருந்து வங்கதேசத்தவரை ?வளியேற்றும் எங்கள் நடவடிக்கை பற்றி, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசும், இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால், வங்கதேசத்தவரை விரட்டியே தீருவோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களாக தானாக வெளியேறினால் நல்லது; இல்லையேல், வெயேற்றுவோம்.
சர்பானந்தா சோனோவால்,மத்திய அமைச்சர், அசாம் மாநில, பா.ஜ., தலைவர்
தினமலர்
கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாமின், 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஏழு இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ், மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது, 'அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என்பது தான்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, வடகிழக்கு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட, நரேந்திர மோடி, றுவங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவேன்' என, அறிவித்தார். அதனால் தான், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ.,வுக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதிக, எம்.பி.,க்கள் கிடைத்தனர். இதனால், தேர்தல் வாக்குறுதி படி, இந்த விவகாரத்தை, அசாம் மாநில, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. றுவங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என, பா.ஜ., அறிவித்துள்ளது; இதற்கு, மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது.பல ஆண்டுகளாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள, லட்சக்கணக்கான வங்கதேசத்தவர், வெளியேறுவார்களா அல்லது விரட்டி அடிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் கவலை
சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் முன்னர் தலையிட்டுள்ளது. வங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கத் தவறிய, வடகிழக்கு மாநிலங்களை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், றுவங்கதேசத்தவர் ஊடுருவல் பிரச்னை, நம் நாட்டின் மீது எடுக்கப்படும் படையெடுப்பு' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.ரேஷன் கார்டுஅண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய வர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத, அசாம், திரிபுரா போன்ற மாநில அரசுகள், ஊடுருவியவர்களுக்கு ரேஷன் கார்டு, அங்கீகார அட்டை போன்ற பல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இதனால், கட்டுப்பாடின்றி நாள்தோறும் ஏராளமானோர் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
பிரச்னைக்கு காரணம் என்ன?
*உலகின் ஏழ்மை நாடுகளில் ஒன்றான, வங்கதேசத்திலிருந்து, பிழைப்புக்காக, தினமும் ஆயிரக்கணக்கான வங்க தேசத்தவர், அண்டை நாடான நம் இந்தியாவின், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர்.
*அசாமில் மட்டும், 20 லட்சம் வங்கதேசத்தவர் உள்ளதாக கூறப்படுகிறது.
*இந்த கும்பலுடன், இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற நினைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், நேபாளம் வழியாக, வங்கதேசம் சென்று, அங்கிருந்து, இந்திய மாநிலங்களுக்குள் நுழைந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.
*இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் வங்கதேசத்தவர், அசாமின் பூர்வபழங்குடியினத்தவரான, 'போடோ' இன மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுடன், போடோ பழங்குடியினர் மோதலில் ஈடுபடுவதால், அடிக்கடி கலவரம் நிகழ்கிறது.
*வங்கதேசத்திற்கும், இந்திய மாநிலங்களுக்கும் நீண்ட எல்லை இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், வடகிழக்கு மாநிலங்கள் தடுமாறுகின்றன; சில மாநிலங்கள், அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்த தவறுகின்றன.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடி
அசாம் மாநில காங்கிரஸ் அரசு, சட்டவிரோத குடியேறியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது; அதற்காக, காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை, கண்டும் காணாமல் உள்ளது. இந்த மாநிலத்தின் பெருமையாக விளங்கும் காண்டாமிருகங்களை காப்பாற்ற தவறிவிட்டது, காங்கிரஸ் அரசு. வங்கதேசத்தவரை காப்பாற்ற, காண்டாமிருகங்களை பலி கொடுக்கிறது.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில், சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் ஊடுருவிய வங்கதேசத்தவர் விவகாரம், தேசிய பிரச்னை. எனவே, இதை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது, அரசியல் அல்லது எங்கள் கட்சி பிரச்னை அல்ல.
கிரண் ரிஜிஜு,மத்திய உள்துறை இணையமைச்சர் ,அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்
அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விரட்டும் பணியை, பா.ஜ., இளைஞர் அணியினர், இன்னும், 15 நாட்களில் மேற்கொள்வர். இதன் முதற்கட்டமாக, 'அசாமை விட்டு வெளியேறுங்கள்' என, வேண்டுகோள் விடுக்கப்படும். இதற்காக, 15 நாட்கள் காத்திருப்போம். அதன்பின், வீடுவீடாக சோதனை நடத்துவோம். வேலை அளிக்க வேண்டாம் என மக்களை வலியுறுத்துவோம்.
காமாஹ்யா பிரசாத் தாஷா,பாரதிய ஜனதா எம்.பி.,
அசாமிலிருந்து வங்கதேசத்தவரை ?வளியேற்றும் எங்கள் நடவடிக்கை பற்றி, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசும், இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால், வங்கதேசத்தவரை விரட்டியே தீருவோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களாக தானாக வெளியேறினால் நல்லது; இல்லையேல், வெயேற்றுவோம்.
சர்பானந்தா சோனோவால்,மத்திய அமைச்சர், அசாம் மாநில, பா.ஜ., தலைவர்
தினமலர்
Re: அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
M.M.SENTHIL wrote:போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.
Re: அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
நல்ல முடிவு மோடி ஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு
மேற்கோள் செய்த பதிவு: 1067900கோ. செந்தில்குமார் wrote:M.M.SENTHIL wrote:போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.
நன்றி. இந்தியன் மட்டுமே இன்னும் ஏமாளியாய் இருக்கிறான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை
» 770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!
» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
» மதுபானம் கள்ளை விட நல்லவை என நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் கெடு
» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
» 770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!
» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
» மதுபானம் கள்ளை விட நல்லவை என நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் கெடு
» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|