Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
+5
டார்வின்
முனைவர் ம.ரமேஷ்
soplangi
பாலாஜி
சிவா
9 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலகக் கோப்பைக் கால்பந்து ஜி-பிரிவு அணிகளில் சுவாரசியம் என்னவெனில் இந்தப் பிரிவில் உள்ள 4 அணிகளும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய அணிகள்.
அதேபோல் பி-பிரிவு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய அணிகள்.
ஜி-பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, யு.எஸ். ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்க்கும்போது இந்தப் பிரிவிலிருந்து ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் சுலபமாக இறுதி-16 சுற்றுக்கு முன்னேறும் என்று கூறிவிடலாம் போல் தெரிகிறது.
ஆனால் கானா, யு.எஸ். அணிகள் அதனை அவ்வளவு சுலபமாக்கிவிடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளைச் சந்தித்துள்ள ஜெர்மனி அணி இந்த முறை பிரேசிலில் லத்தீன் அமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தின் முன் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும், அவ்வளவு சுலபமாக ஜெர்மனியை வெளியேற்றிவிட முடியாது.
காரணம் பயிற்சியாளர் ஜோகிம் லூ ஒரு அருமையான உத்தி வகுப்பாளர். 4-2-3-1 என்ற முறையில் மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பவர். அதாவது ஒரு பேக்கி, 3 பேர் பாதுகாப்பு அரண், 2 பேர் இடது மற்றும் வலது விங்குகளைக் கவனித்துக் கொள்ள முன் களத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட 4 வீரர்கள். இதுதான் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லூவின் உத்திவகுப்பு.
பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் மற்றும் சேமி கேதிரா, நடுக்களத்தில் சுறுசுறுப்பாக இயங்க, மெசுட் ஓசில், தாமஸ் முல்லர் ஆகியோர் முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டுவார்கள். இவர்கள் தவிர ஜூலியன் டிராக்ஸ்லர், மத்தியாஸ் ஜிண்டர், மரியோ கோட்ஸே, கிறிஸ்டோப் கிரேமர், ஆந்த்ரே ஷுயெர்லி, லுகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இவர்கள் தவிர மிக முக்கியமான மிரோஸ்லாவ் க்ளோஸ் என்ற நட்சத்திர ஸ்ட்ரைக்கர் உள்ளார். இவர் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதனையான 15 கோல்கள் சாதனையை எட்ட க்ளோஸிற்கு இன்னும் ஒரு கோல்தான் உள்ளது. பலமாகவே தெரிந்தாலும் தடுப்பு வீரர்கள் மட்டத்தில் ஜெர்மனி பலவீனமான அணியாகவே திகழ்கிறது. சமீபத்திய தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஸ்வீடனுக்கு எதிராக 2 போட்டிகளில் 7 கோல்களை வாங்கியுள்ளனர். ஆனால் மொத்தமாக 10 போட்டிகளில் 9-இல் வென்றுள்ளனர்.
அதேபோல் பி-பிரிவு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய அணிகள்.
ஜி-பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, யு.எஸ். ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்க்கும்போது இந்தப் பிரிவிலிருந்து ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் சுலபமாக இறுதி-16 சுற்றுக்கு முன்னேறும் என்று கூறிவிடலாம் போல் தெரிகிறது.
ஆனால் கானா, யு.எஸ். அணிகள் அதனை அவ்வளவு சுலபமாக்கிவிடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளைச் சந்தித்துள்ள ஜெர்மனி அணி இந்த முறை பிரேசிலில் லத்தீன் அமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தின் முன் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும், அவ்வளவு சுலபமாக ஜெர்மனியை வெளியேற்றிவிட முடியாது.
காரணம் பயிற்சியாளர் ஜோகிம் லூ ஒரு அருமையான உத்தி வகுப்பாளர். 4-2-3-1 என்ற முறையில் மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பவர். அதாவது ஒரு பேக்கி, 3 பேர் பாதுகாப்பு அரண், 2 பேர் இடது மற்றும் வலது விங்குகளைக் கவனித்துக் கொள்ள முன் களத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட 4 வீரர்கள். இதுதான் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லூவின் உத்திவகுப்பு.
பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் மற்றும் சேமி கேதிரா, நடுக்களத்தில் சுறுசுறுப்பாக இயங்க, மெசுட் ஓசில், தாமஸ் முல்லர் ஆகியோர் முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டுவார்கள். இவர்கள் தவிர ஜூலியன் டிராக்ஸ்லர், மத்தியாஸ் ஜிண்டர், மரியோ கோட்ஸே, கிறிஸ்டோப் கிரேமர், ஆந்த்ரே ஷுயெர்லி, லுகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இவர்கள் தவிர மிக முக்கியமான மிரோஸ்லாவ் க்ளோஸ் என்ற நட்சத்திர ஸ்ட்ரைக்கர் உள்ளார். இவர் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதனையான 15 கோல்கள் சாதனையை எட்ட க்ளோஸிற்கு இன்னும் ஒரு கோல்தான் உள்ளது. பலமாகவே தெரிந்தாலும் தடுப்பு வீரர்கள் மட்டத்தில் ஜெர்மனி பலவீனமான அணியாகவே திகழ்கிறது. சமீபத்திய தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஸ்வீடனுக்கு எதிராக 2 போட்டிகளில் 7 கோல்களை வாங்கியுள்ளனர். ஆனால் மொத்தமாக 10 போட்டிகளில் 9-இல் வென்றுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
போர்ச்சுக்கல்:
போர்ச்சுக்கல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ நினைவுதான் அனைவருக்கும் வரும். அவருடன் பெபே, ஜோவா மௌட்டின்ஹோ ஆகியோரும் உள்ளனர்.
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளது போர்ச்சுக்கல். போர்ச்சுக்கல் அணியில் ஸ்ட்ரைக்கர், உத்தி வகுப்பது, உத்வேகம் அளிப்பது அனைத்துமே களத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருக்கிறது. இது அவரது ஆட்டத்தைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.
யூரோ 2012 அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி போர்ச்சுக்கல்.
கானா:
2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றதால் கானா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உறுதி. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்திய கானா அதற்கு அடுத்த உலகக் கோப்பையில் ஒரு அடி முன்னேறி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்த முறை உலகின் 2 மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக குரூப் மட்டத்தைத் தாண்டுவதே அரிதுதான் என்று கூறலாம். அனுபவமிக்க அணியான கானா, நல்ல பார்மில் உள்ளது. அதிக வெற்றிகளை ஆப்பிரிக்க போட்டிகளில் பெற்றுள்ளது. மேலும் மிகேல் எஸியன் அணிக்குத் திரும்பியுள்ளதும் அந்த அணிக்குப் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.எஸ்:
தொடர்ந்து 7வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது யு.எஸ். 1930ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முடிவில் 3ஆவது இடம் பிடித்த யு.எஸ். அணி 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தகுதி பெற்று வருகிறது. 2002ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்குமா யு.எஸ். என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
போர்ச்சுக்கல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ நினைவுதான் அனைவருக்கும் வரும். அவருடன் பெபே, ஜோவா மௌட்டின்ஹோ ஆகியோரும் உள்ளனர்.
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளது போர்ச்சுக்கல். போர்ச்சுக்கல் அணியில் ஸ்ட்ரைக்கர், உத்தி வகுப்பது, உத்வேகம் அளிப்பது அனைத்துமே களத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருக்கிறது. இது அவரது ஆட்டத்தைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.
யூரோ 2012 அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி போர்ச்சுக்கல்.
கானா:
2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றதால் கானா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உறுதி. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்திய கானா அதற்கு அடுத்த உலகக் கோப்பையில் ஒரு அடி முன்னேறி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்த முறை உலகின் 2 மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக குரூப் மட்டத்தைத் தாண்டுவதே அரிதுதான் என்று கூறலாம். அனுபவமிக்க அணியான கானா, நல்ல பார்மில் உள்ளது. அதிக வெற்றிகளை ஆப்பிரிக்க போட்டிகளில் பெற்றுள்ளது. மேலும் மிகேல் எஸியன் அணிக்குத் திரும்பியுள்ளதும் அந்த அணிக்குப் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.எஸ்:
தொடர்ந்து 7வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது யு.எஸ். 1930ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முடிவில் 3ஆவது இடம் பிடித்த யு.எஸ். அணி 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தகுதி பெற்று வருகிறது. 2002ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்குமா யு.எஸ். என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கத் தயாராகும் பாலியல் தொழிலாளிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பாலியல் தொழிலாளி ஒருவர் கூறும்போது, “நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில், இத்தொழிலுக்கு வந்தேன். பொதுவாக கேளிக்கை விடுதிகளுக்கு இரவில் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலமே போதிய பணம் சம்பாதித்துவிடுவோம்.
இந்த முறை கால்பந்து போட்டியை காண கூடுதலாக வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்பதால், அடுத்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பணம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரைப் போன்று வறுமையின் காரணமாக இத்தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, ஆடம்பரமான வாழ்க்கைக்காக தவறான பாதையில் சென்ற பெண்களையும் பெலோ ஹாரிஸான்டே நகரில் நாம் பார்க்கலாம்.
இவர்கள் அனைவரும் தங்களின் பணத்தேவைக்காக இப்போது எதிர்நோக்கியிருப்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத்தான். இந்நகரில் உள்ள 23 பாலியல் தொழில் கூடங்களில் வசிக்கும் 2,000 பாலியல் தொழி லாளிகள், மும்முரமாக ஆங்கில மொழியை பயின்று வருகின்றனர். இவர்களுக்கென்று அதே பகுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதெல் லாம் எதற்காக என்கிறீர்களா? மினெயிரோ மைதானத்தில் நடை பெறவுள்ள போட்டிகளை காண வரும் ஆங்கில மொழி பேசும் ரசிகர்களுடன் (வாடிக்கையாளர் கள்) நன்கு பழகி பணம் சம்பாதிப்பதற்குத்தான்.
இப்படி வெளிப்படையாக மொழிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வரும் இவர்கள் மீது அரசு ஒன்றும் நடவடிக்கை எடுக்காதா என்று நீங்கள் கேட்கலாம். பிரேஸிலில் 2000-ம் ஆண்டிலிருந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. பலர் தங்களுக் குள் இணைந்து சங்கம்வைத்துச் செயல்படுகின்றனர்.
பாலியல் தொழில் கூடங்களைத் தவிர, மசாஜ் நிலையங்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி தரும் ஓட்டல்கள் உள்ளிட்டவையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தொழிலில் ஈடுபடும் வியேரா என்பவர், பிற வணிக நிறுவனங்களுக்கு இணையாக, “எங்களிடம் வரும் கால்பந்து ரசிகர்கள், கிரெடிட் கார்டுகள் மூலமும் கட்டணத்தைத் தரலாம்” என்று அறிவித்துள்ளார்.
என்னதான் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டா லும், அதை ரத்து செய்யக்கோரும் குரல்களும் ஒலிக்காமல் இல்லை. அங்குள்ள தொழிற்சங்கங் களின் பெண் உறுப்பினர்கள் பலர், இத்தொழிலுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தரகர்கள், பாலியல் தொழில் விடுதிகளின் உரிமையா ளர்களால், இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். அவர்களை மீட்க அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவிக் கின்றனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் 12-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளை காண வெளிநாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்து 70 ஆயிரம் ரசிகர்கள் பிரேஸிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்பந்து விளையாட்டின் மீது தங்களின் உயிரையே வைத்திருக்கும் பிரேஸில் ரசிகர்களுக்கு, உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தங்கள் நாட்டில் நடக்கிறதென்றால், கேட்கவா வேண்டும்? மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்நாட்டு ரசிகர்கள், போட்டி தொடங்கும் நாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டில் உள்ள 10 லட்சம் பாலியல் தொழிலாளிகளும் போட்டியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
பெலோ ஹாரிஸான்டே நகரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பாலியல் தொழிலாளி ஒருவர் கூறும்போது, “நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில், இத்தொழிலுக்கு வந்தேன். பொதுவாக கேளிக்கை விடுதிகளுக்கு இரவில் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மூலமே போதிய பணம் சம்பாதித்துவிடுவோம்.
இந்த முறை கால்பந்து போட்டியை காண கூடுதலாக வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்பதால், அடுத்த ஒரு மாத காலத்தில் ஏராளமான பணம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரைப் போன்று வறுமையின் காரணமாக இத்தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, ஆடம்பரமான வாழ்க்கைக்காக தவறான பாதையில் சென்ற பெண்களையும் பெலோ ஹாரிஸான்டே நகரில் நாம் பார்க்கலாம்.
இவர்கள் அனைவரும் தங்களின் பணத்தேவைக்காக இப்போது எதிர்நோக்கியிருப்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத்தான். இந்நகரில் உள்ள 23 பாலியல் தொழில் கூடங்களில் வசிக்கும் 2,000 பாலியல் தொழி லாளிகள், மும்முரமாக ஆங்கில மொழியை பயின்று வருகின்றனர். இவர்களுக்கென்று அதே பகுதியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதெல் லாம் எதற்காக என்கிறீர்களா? மினெயிரோ மைதானத்தில் நடை பெறவுள்ள போட்டிகளை காண வரும் ஆங்கில மொழி பேசும் ரசிகர்களுடன் (வாடிக்கையாளர் கள்) நன்கு பழகி பணம் சம்பாதிப்பதற்குத்தான்.
இப்படி வெளிப்படையாக மொழிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வரும் இவர்கள் மீது அரசு ஒன்றும் நடவடிக்கை எடுக்காதா என்று நீங்கள் கேட்கலாம். பிரேஸிலில் 2000-ம் ஆண்டிலிருந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. பலர் தங்களுக் குள் இணைந்து சங்கம்வைத்துச் செயல்படுகின்றனர்.
பாலியல் தொழில் கூடங்களைத் தவிர, மசாஜ் நிலையங்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு அனுமதி தரும் ஓட்டல்கள் உள்ளிட்டவையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தொழிலில் ஈடுபடும் வியேரா என்பவர், பிற வணிக நிறுவனங்களுக்கு இணையாக, “எங்களிடம் வரும் கால்பந்து ரசிகர்கள், கிரெடிட் கார்டுகள் மூலமும் கட்டணத்தைத் தரலாம்” என்று அறிவித்துள்ளார்.
என்னதான் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டா லும், அதை ரத்து செய்யக்கோரும் குரல்களும் ஒலிக்காமல் இல்லை. அங்குள்ள தொழிற்சங்கங் களின் பெண் உறுப்பினர்கள் பலர், இத்தொழிலுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தரகர்கள், பாலியல் தொழில் விடுதிகளின் உரிமையா ளர்களால், இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். அவர்களை மீட்க அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவிக் கின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
ரொனால்டோவிற்கு காயம் ஏற்படுத்தியது நான்தான்: கானா மந்திரவாதி
போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்ததற்கு தனது மந்திரமே காரணம் என்று கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.
நானா க்வாகு போன்சாம் என்ற இந்த நபர் தன்னைத்தானே மந்திரவாதி என்று அழைத்துக் கொள்பவர். இவரது பெயருக்கு ‘Devil of Wednesday' என்று அர்த்தமாம்.
இவர் போர்ச்சுக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் காயம் உண்டாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததாக ஏஞ்செல் எஃப்.எம். ரேடியோவுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
இந்த சுயநியமன மந்திரவாதி அதில் கூறியதாவது:
"நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது மந்திர சக்திகளை ஏவி விட்டேன், நான் இதில் மிகவும் உண்மையாக ஈடுபட்டேன், கடந்த வாரம் 4 நாய்களைத் தேடினேன், அதன் மூலம் 'காவிரி கபம்" என்ற ஒரு ஆவியை உருவாக்கினேன்.
அவரால் இந்தக் காயங்களிலிருந்து மீள முடியாது ஏனெனில் இது உடல் ரீதியானது அல்ல மந்திரத்தால் விளைந்தது. நான் 4 மாதங்களுக்கு முன்பே கூறினேன், ரொனால்டோவை நான் கண்காணித்து வருகிறேன் என்று, உலகக்கோப்பை போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று.
கானா அணிக்கு எதிராக அவர் விளையாடக்கூடாது என்று நான் முன்பே முடிவெடுத்து விட்டேன்.
இன்று அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, நாளை தொடையில் ஏற்படும், மறுநாள் வேறு ஒரு இடத்தில் என்று காயம் மேலும் மேலும் வலுக்கும்"
இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிரிவு ஜி-யில் உள்ள கானா, போர்ச்சுக்கல் அணிகள் ஜூன் 26ஆம் தேதி மோதுகிறது.
போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்ததற்கு தனது மந்திரமே காரணம் என்று கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.
நானா க்வாகு போன்சாம் என்ற இந்த நபர் தன்னைத்தானே மந்திரவாதி என்று அழைத்துக் கொள்பவர். இவரது பெயருக்கு ‘Devil of Wednesday' என்று அர்த்தமாம்.
இவர் போர்ச்சுக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் காயம் உண்டாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததாக ஏஞ்செல் எஃப்.எம். ரேடியோவுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
இந்த சுயநியமன மந்திரவாதி அதில் கூறியதாவது:
"நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது மந்திர சக்திகளை ஏவி விட்டேன், நான் இதில் மிகவும் உண்மையாக ஈடுபட்டேன், கடந்த வாரம் 4 நாய்களைத் தேடினேன், அதன் மூலம் 'காவிரி கபம்" என்ற ஒரு ஆவியை உருவாக்கினேன்.
அவரால் இந்தக் காயங்களிலிருந்து மீள முடியாது ஏனெனில் இது உடல் ரீதியானது அல்ல மந்திரத்தால் விளைந்தது. நான் 4 மாதங்களுக்கு முன்பே கூறினேன், ரொனால்டோவை நான் கண்காணித்து வருகிறேன் என்று, உலகக்கோப்பை போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று.
கானா அணிக்கு எதிராக அவர் விளையாடக்கூடாது என்று நான் முன்பே முடிவெடுத்து விட்டேன்.
இன்று அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, நாளை தொடையில் ஏற்படும், மறுநாள் வேறு ஒரு இடத்தில் என்று காயம் மேலும் மேலும் வலுக்கும்"
இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிரிவு ஜி-யில் உள்ள கானா, போர்ச்சுக்கல் அணிகள் ஜூன் 26ஆம் தேதி மோதுகிறது.
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
1958 உலகக் கோப்பை கால்பந்து– பீலே அறிமுகம்
ஸ்வீடனில் 1958-ல் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை போட்டியில்தான் கால்பந்து ஜாம்பவானான பிரேசிலின் பீலே முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கினார்.
இறுதி ஆட்டத்தில் பீலே அடித்த இரு கோல்கள் உதவியுடன் பிரேசில் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பை போட்டியை முதல்முறையாக ஸ்வீடன் நடத்தியது. முதல்முறையாக சர்வதேச அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டியும் இதுதான்.
பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. பிரேசில் அணியில் 17 வயதான பீலே இடம் பெற்றிருந்தார். எனினும் தொடக்கத்தில் அவர் களமிறக்கப்படவில்லை. பிரேசில் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்த முதல் போட்டி இதுதான்.
இதையடுத்து பிரேசில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே கோல் அடித்தார். உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த முதல் கோல் அது. மேலும் அந்த ஒரு கோல் மட்டுமே அப்போட்டியில் அடிக்கப்பட்டதால், அதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
போட்டியை நடத்திய நாடான ஸ்வீடன், மேற்கு ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றன.
மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஸ்வீடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் – பிரேசில் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை அபாரமா வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. பீலே ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு ஆட்டத்தில் பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது.
பிரேசில் அணிக்காக கடைசி நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்தார். இதில் இரு கோல்கள் இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டன. இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி 16 கோல்களைப் போட்டது. அந்த அணிக்கு எதிராக வெறும் 4 கோல்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
ஸ்வீடனில் 1958-ல் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை போட்டியில்தான் கால்பந்து ஜாம்பவானான பிரேசிலின் பீலே முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கினார்.
இறுதி ஆட்டத்தில் பீலே அடித்த இரு கோல்கள் உதவியுடன் பிரேசில் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பை போட்டியை முதல்முறையாக ஸ்வீடன் நடத்தியது. முதல்முறையாக சர்வதேச அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டியும் இதுதான்.
பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. பிரேசில் அணியில் 17 வயதான பீலே இடம் பெற்றிருந்தார். எனினும் தொடக்கத்தில் அவர் களமிறக்கப்படவில்லை. பிரேசில் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்த முதல் போட்டி இதுதான்.
இதையடுத்து பிரேசில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே கோல் அடித்தார். உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த முதல் கோல் அது. மேலும் அந்த ஒரு கோல் மட்டுமே அப்போட்டியில் அடிக்கப்பட்டதால், அதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
போட்டியை நடத்திய நாடான ஸ்வீடன், மேற்கு ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றன.
மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஸ்வீடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் – பிரேசில் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை அபாரமா வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. பீலே ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு ஆட்டத்தில் பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது.
பிரேசில் அணிக்காக கடைசி நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்தார். இதில் இரு கோல்கள் இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டன. இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி 16 கோல்களைப் போட்டது. அந்த அணிக்கு எதிராக வெறும் 4 கோல்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இதுவரை அதிகபட்சமாக 7 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி 6 முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று, அதில் 4 முறை சாம்பியன் ஆகியுள்ளது. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் 2010-ம் ஆண்டுதான் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அப்போது உலகக் கோப்பையையும் வென்றது.
1958 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 35
மொத்த கோல்கள் - 126
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.60
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,68,000
டாப் ஸ்கோர்
ஜஸ்ட் பான்டெய்ன் (பிரான்ஸ்) - 13 கோல்கள்
பீலே (பிரேசில்) - 6 கோல்கள்
ஹெல்முட் ரான் (மேற்கு ஜெர்மனி) - 6 கோல்கள்
பீட்டர் மெக்பார்லெண்ட் (வடக்கு அயர்லாந்து) - 5 கோல்கள்
1958 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 35
மொத்த கோல்கள் - 126
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.60
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,68,000
டாப் ஸ்கோர்
ஜஸ்ட் பான்டெய்ன் (பிரான்ஸ்) - 13 கோல்கள்
பீலே (பிரேசில்) - 6 கோல்கள்
ஹெல்முட் ரான் (மேற்கு ஜெர்மனி) - 6 கோல்கள்
பீட்டர் மெக்பார்லெண்ட் (வடக்கு அயர்லாந்து) - 5 கோல்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலகக் கோப்பை: ரஷிய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள 23 பேர் கொண்ட ரஷிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த தடுப்பாட்டக்காரர் செர்ஜி இக்னேஷேவிச், மிட்பீல்டர் ரோமன் ஷிரோகோவ், முன்கள வீரர் அலெக்சாண்டர் கெர்ஸாகோவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணி விவரம்:
கோல் கீப்பர்கள்: இகர் அகின்பீவ், யூரி லோடிஜின், செர்ஜி ரிஷிகோவ்.
பின்களம்: வேஸிலி பெரேஸுட்ஸ்கை, செர்ஜி இக்னேஷேவிச், ஜார்ஜ் ஷென்னிகோவ், விளாடிமிர் கிரானாட், அலெக்ஸி கோஸ்லோவ், ஆன்ட்ரேய் யெஸ்சென்கோ, டிமிட்ரி கோம்பரோவ், ஆன்ட்ரேய் செமினோவ்.
நடுகளம்: இகர் டெனிசோவ், யூரி ஷிர்கோவ், ஆலன் ஷேகோவ், ரோமன் ஷிர்கோவ் டெனிஸ் குளூஷாகோவ், விக்டர் பெய்ஸுலின், ஓலெக் ஷாடோவ்.
முன்களம்: அலெக்சாண்டர் கெர்ஸாகோவ், அலெக்ஸி இயோனோவ், அலெக்சாண்டர் கோகோரின், மேக்ஸிம் கனுன்னிகோவ், அலெக் சாண்டர் சமேதோவ்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள 23 பேர் கொண்ட ரஷிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த தடுப்பாட்டக்காரர் செர்ஜி இக்னேஷேவிச், மிட்பீல்டர் ரோமன் ஷிரோகோவ், முன்கள வீரர் அலெக்சாண்டர் கெர்ஸாகோவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணி விவரம்:
கோல் கீப்பர்கள்: இகர் அகின்பீவ், யூரி லோடிஜின், செர்ஜி ரிஷிகோவ்.
பின்களம்: வேஸிலி பெரேஸுட்ஸ்கை, செர்ஜி இக்னேஷேவிச், ஜார்ஜ் ஷென்னிகோவ், விளாடிமிர் கிரானாட், அலெக்ஸி கோஸ்லோவ், ஆன்ட்ரேய் யெஸ்சென்கோ, டிமிட்ரி கோம்பரோவ், ஆன்ட்ரேய் செமினோவ்.
நடுகளம்: இகர் டெனிசோவ், யூரி ஷிர்கோவ், ஆலன் ஷேகோவ், ரோமன் ஷிர்கோவ் டெனிஸ் குளூஷாகோவ், விக்டர் பெய்ஸுலின், ஓலெக் ஷாடோவ்.
முன்களம்: அலெக்சாண்டர் கெர்ஸாகோவ், அலெக்ஸி இயோனோவ், அலெக்சாண்டர் கோகோரின், மேக்ஸிம் கனுன்னிகோவ், அலெக் சாண்டர் சமேதோவ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
அசத்தல் ‘கீப்பர்’ அன்டோனியோ
உலக கோப்பை அரங்கில் சாதனை வீரராக திகழ்ந்தார் மெக்சிகோ அணியின் அன்டோனியோ கார்பஜல், 85. கடந்த 1950ல் நடந்த உலக கோப்பை தொடரில், பிரேசில் அணிக்கு எதிராக இளம் கோல்கீப்பராக களமிறங்கினார். பின் 1962ல் செக்கோஸ்லோவாக்கியா அணிக்கு எதிராக இவரது துடிப்பான செயல்பாடு கைகொடுக்க, மெக்சிகோ அணி உலக கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக ஐந்து உலக கோப்பையில்(1950, 54, 58, 62, 66) விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை 32 ஆண்டுகளுக்கு பின், ஜெர்மனி வீரர் மத்தாயஸ்(1982–98) சமன் செய்தார். மெக்சிகோ அணிக்காக 48 போட்டியில் விளையாடிய கார்பஜல், உலக கோப்பை அரங்கில் 11 போட்டியில் பங்கேற்றார். கடந்த 1966ல் ஓய்வு பெற்ற இவர், பல்வேறு கிளப் அணிகளுக்கு மானேஜராக செயல்பட்டார்.
‘சீனியர்’ அணி
பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளில் மூத்த வீரர்களை கொண்ட அணியாக அர்ஜென்டினா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 28.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில், இளம் அணியாக கானா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 24.
உலக கோப்பை அரங்கில் சாதனை வீரராக திகழ்ந்தார் மெக்சிகோ அணியின் அன்டோனியோ கார்பஜல், 85. கடந்த 1950ல் நடந்த உலக கோப்பை தொடரில், பிரேசில் அணிக்கு எதிராக இளம் கோல்கீப்பராக களமிறங்கினார். பின் 1962ல் செக்கோஸ்லோவாக்கியா அணிக்கு எதிராக இவரது துடிப்பான செயல்பாடு கைகொடுக்க, மெக்சிகோ அணி உலக கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக ஐந்து உலக கோப்பையில்(1950, 54, 58, 62, 66) விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை 32 ஆண்டுகளுக்கு பின், ஜெர்மனி வீரர் மத்தாயஸ்(1982–98) சமன் செய்தார். மெக்சிகோ அணிக்காக 48 போட்டியில் விளையாடிய கார்பஜல், உலக கோப்பை அரங்கில் 11 போட்டியில் பங்கேற்றார். கடந்த 1966ல் ஓய்வு பெற்ற இவர், பல்வேறு கிளப் அணிகளுக்கு மானேஜராக செயல்பட்டார்.
‘சீனியர்’ அணி
பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளில் மூத்த வீரர்களை கொண்ட அணியாக அர்ஜென்டினா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 28.
இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில், இளம் அணியாக கானா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 24.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
கால்பந்து தரவரிசை ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்
சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியன் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜெர்மனி அணி 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 1300 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த போர்ச்சுகல் ஓரிடம் பின்தங்கி 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதுவரை 4-வது இடத்தில் இருந்த பிரேசில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
ஆர்ஜெண்டீனா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு வந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து அணியும் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளது.உருகுவே அணி 7-வது இடத்தில் உள்ளது. கொலம்பியா 3 இடங்கள் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது. இத்தாலிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து ஓரிடம் முன்னேறி 10-வது அணியாக உள்ளது.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியன் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜெர்மனி அணி 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 1300 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த போர்ச்சுகல் ஓரிடம் பின்தங்கி 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதுவரை 4-வது இடத்தில் இருந்த பிரேசில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
ஆர்ஜெண்டீனா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு வந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து அணியும் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளது.உருகுவே அணி 7-வது இடத்தில் உள்ளது. கொலம்பியா 3 இடங்கள் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது. இத்தாலிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து ஓரிடம் முன்னேறி 10-வது அணியாக உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.
ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.
2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும்.
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.
ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.
2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
Page 3 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|