புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 15 of 15 •
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நேற்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்பட்டது!
காயம் காரணமாக நெய்மார் விலகல்: பிரேசில் அணிக்கு பின்னடைவு
உலக கோப்பை கால்பந்து போட்டியில், கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இன்னும் சில வாரங்கள் அவர் தேறி வர ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முக்கிய வீரரான நெய்மார் இந்த போட்டித்தொடரில் 4 கோல் அடித்துள்ளார். நெய்மார் காயம் காரணமாக விலகியுள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்று பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்தார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில், கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இன்னும் சில வாரங்கள் அவர் தேறி வர ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முக்கிய வீரரான நெய்மார் இந்த போட்டித்தொடரில் 4 கோல் அடித்துள்ளார். நெய்மார் காயம் காரணமாக விலகியுள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்று பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசில் அணி கேப்டன் நம்பிக்கை
--
பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா கூறுகையில், ‘நெய்மார் எங்கள் அணியில் மிகவும் முக்கியமான வீரர். நாங்கள் அவரை அதிகம் நம்பி இருந்தோம். இந்த சூழ்நிலையிலும் கோப்பையை வெல்லும் திறமை எங்கள் அணிக்கு உள்ளது. நெய்மாருக்காக இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் எங்கள் அணி மேலும் சிறப்பான ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உத்வேகம் அளிக்கும்’ என்று சொன்னார்.
-
--
பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா கூறுகையில், ‘நெய்மார் எங்கள் அணியில் மிகவும் முக்கியமான வீரர். நாங்கள் அவரை அதிகம் நம்பி இருந்தோம். இந்த சூழ்நிலையிலும் கோப்பையை வெல்லும் திறமை எங்கள் அணிக்கு உள்ளது. நெய்மாருக்காக இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் எங்கள் அணி மேலும் சிறப்பான ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உத்வேகம் அளிக்கும்’ என்று சொன்னார்.
-
என் கனவு முடிந்துவிடவில்லை: உடைந்துபோன நெய்மார் உருக்கம்
முதுகில் காயமேற்பட்டு உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், தனது கனவு முடிந்து விடவில்லை என்று கூறியுள்ளார்.
தனது அணியினர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் தனது கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
இது பற்றி பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
”என் கனவு முடிந்து விடவில்லை, அது விளையாட்டில் இடையூறு கண்டுள்ளது அவ்வளவே, எனது அணியினர் உலகக் கோப்பையை வெல்லும் எனது கனவை நிறைவேற்றுவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.
உலகக் கோப்பை இறுதியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை” என்று நெய்மார் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டார் குரலில் அழுகையுடன் கூடிய தடுமாற்றம் இருந்தது.
“கடவுளின் விருப்பம் பிரேசில் சாம்பியன் ஆவது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நான் அவர்களுடன் இருப்பேன், பிரேசில் நாடே கொண்டாடும் அந்தத் தருணத்தில் நானும் அவர்களுடன் இருப்பேன்” என்றார் நெய்மார்.
குளோபோ தொலைக்காட்சி இந்த வீடியோவை ஒளிபரப்பியபோது பிரேசில் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் பெருகியதாக பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதுகில் காயமேற்பட்டு உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், தனது கனவு முடிந்து விடவில்லை என்று கூறியுள்ளார்.
தனது அணியினர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் தனது கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
இது பற்றி பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
”என் கனவு முடிந்து விடவில்லை, அது விளையாட்டில் இடையூறு கண்டுள்ளது அவ்வளவே, எனது அணியினர் உலகக் கோப்பையை வெல்லும் எனது கனவை நிறைவேற்றுவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.
உலகக் கோப்பை இறுதியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை” என்று நெய்மார் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டார் குரலில் அழுகையுடன் கூடிய தடுமாற்றம் இருந்தது.
“கடவுளின் விருப்பம் பிரேசில் சாம்பியன் ஆவது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நான் அவர்களுடன் இருப்பேன், பிரேசில் நாடே கொண்டாடும் அந்தத் தருணத்தில் நானும் அவர்களுடன் இருப்பேன்” என்றார் நெய்மார்.
குளோபோ தொலைக்காட்சி இந்த வீடியோவை ஒளிபரப்பியபோது பிரேசில் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் பெருகியதாக பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிக கோல் அடித்து உலக சாதனை படைத்தார் க்ளோஸ்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் வீரர் க்ளோஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.
பிரேசிலுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் க்ளோஸ் தனது 16 கோலை அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஒருவர் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் க்ளோஸ்
பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் 15 கோல்கள் அடித்தது தான் சாதனையாக இருந்து வந்தது. க்ளோஸ் நான்காவது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார் என்பது குறி்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் வீரர் க்ளோஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.
பிரேசிலுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் க்ளோஸ் தனது 16 கோலை அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஒருவர் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் க்ளோஸ்
பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் 15 கோல்கள் அடித்தது தான் சாதனையாக இருந்து வந்தது. க்ளோஸ் நான்காவது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார் என்பது குறி்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்லவேண்டும்: நெய்மார் விருப்பம்
முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு வெளியேறிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
”விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார் நெய்மார்.
ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது.
இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டீனா வென்றால் இது 3வது உலகக் கோப்பையாகும்.
இதற்கிடையே மெஸ்ஸியை நெதர்லாந்து அணி அன்று சாதுவாக வைத்திருந்தது. நாங்களும் அவருக்காக சில சிறப்பு உத்திகளை வைத்திருக்கிறொம் என்று ஜெர்மனி அணியின் உதவி பயிற்சியாளர் கூறியுள்ளார்.
முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு வெளியேறிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
”விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார் நெய்மார்.
ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது.
இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டீனா வென்றால் இது 3வது உலகக் கோப்பையாகும்.
இதற்கிடையே மெஸ்ஸியை நெதர்லாந்து அணி அன்று சாதுவாக வைத்திருந்தது. நாங்களும் அவருக்காக சில சிறப்பு உத்திகளை வைத்திருக்கிறொம் என்று ஜெர்மனி அணியின் உதவி பயிற்சியாளர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றிட 20 ஆண்டுகள் காத்திருக்கும் இந்திய ரசிகர்
ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர்.
புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
.“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் எனது நண்பர்கள் அந்த விஸ்கி பாட்டிலை ஏலம் விடுமாறு கூறி வருகின்றனர்” என்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. ஆனால் அந்த முறை பிரேசிலிடம் தோற்றது ஜெர்மனி. ஜெர்மனியின் இந்தத் தோல்விக்குப் பிறகு தான் குடிப்பதையே நிறுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முறை ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று கூறும் அவரது வீடு கால்பந்து வீரர்களின் போஸ்டர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அவரது வீட்டில் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர்.
ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர்.
புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
.“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் எனது நண்பர்கள் அந்த விஸ்கி பாட்டிலை ஏலம் விடுமாறு கூறி வருகின்றனர்” என்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. ஆனால் அந்த முறை பிரேசிலிடம் தோற்றது ஜெர்மனி. ஜெர்மனியின் இந்தத் தோல்விக்குப் பிறகு தான் குடிப்பதையே நிறுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முறை ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று கூறும் அவரது வீடு கால்பந்து வீரர்களின் போஸ்டர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அவரது வீட்டில் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.
அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:–
நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை.
அர்ஜென்டினா மக்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருந்தது. கோல் அடிக்க கிடைத்த 3 வாய்ப்புகள் தவற விட்டுவிட்டோம். இதனால் அதிக கோபம்தான் வருகிறது.
ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் உலக கோப்பையை வெல்வது பெரிய விஷயம். சிறுவயது கனவு நனவாகும் மகிழ்ச்சியே ஆகும். அது என்றும் மனதில் இருந்து நீங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.
அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:–
நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை.
அர்ஜென்டினா மக்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருந்தது. கோல் அடிக்க கிடைத்த 3 வாய்ப்புகள் தவற விட்டுவிட்டோம். இதனால் அதிக கோபம்தான் வருகிறது.
ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் உலக கோப்பையை வெல்வது பெரிய விஷயம். சிறுவயது கனவு நனவாகும் மகிழ்ச்சியே ஆகும். அது என்றும் மனதில் இருந்து நீங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசிலுக்கு பிபா பாராட்டு
உலக கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பான முறையில் நடத்தியதாக பிரேசிலை, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) பாராட்டி இருக்கிறது. இது குறித்து சர்வதேச கால்பந்து சங்க தலைவர் செப் பிளாட்டர் கருத்து தெரிவிக்கையில்,
‘இந்த உலக கோப்பை போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி தரமானதாகவும், உத்வேகம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்த உலக கோப்பை ஆட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்று பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு 10-க்கு 9.25 மார்க் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரேசில் அதிபர் டில்மா ரோசெப்பும், ‘மிகவும் அழகான உலக கோப்பை போட்டியில் இதுவும் ஒன்றாகும். பிரேசில் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பான முறையில் நடத்தியதாக பிரேசிலை, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) பாராட்டி இருக்கிறது. இது குறித்து சர்வதேச கால்பந்து சங்க தலைவர் செப் பிளாட்டர் கருத்து தெரிவிக்கையில்,
‘இந்த உலக கோப்பை போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி தரமானதாகவும், உத்வேகம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்த உலக கோப்பை ஆட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்று பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு 10-க்கு 9.25 மார்க் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரேசில் அதிபர் டில்மா ரோசெப்பும், ‘மிகவும் அழகான உலக கோப்பை போட்டியில் இதுவும் ஒன்றாகும். பிரேசில் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 5,064 பேர் கைது
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தன. இந்தப் போட்டிகளுக்கான சூதாட்டப் போட்டிகளில் ஈடுபட்டதற்காக 5,064 பேரைக் கைது செய்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இது மிகவும் அதிகம் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.கடந்த மாதம் 12ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து 4,679 போட்டியாளர்களுடன் 258 புக்கிகளும், 127 பந்தய சீட்டு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு அவர்கள் நாட்டுப் பணமதிப்பில் 2000 பாட்டும், இரண்டு ஆண்டுகள் முடிய சிறைத் தண்டனையும் கிடைக்கக்கூடும்.ஆனால் பெரும் தொகை சம்பந்தப்பட்ட குற்றங்கள் தவிர மற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று காவல்துறைத் தலைவர் சன்டவிட் ராம்சுத் தெரிவித்தார்.
இதுதவிர 2000க்கும் மேற்பட்ட கால்பந்து சூதாட்ட இணையதளங்கள் மூடப்பட்டன என்றும் அவர் கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளின்போது 3,800 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
தாய்லாந்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பை நடத்திவரும் ராணுவம் சமூக ஒழுங்கை மேம்படுத்தும்விதமாக அங்கு நடைபெற்றுவந்த பல சூதாட்டங்களை ஏற்கனவே தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தன. இந்தப் போட்டிகளுக்கான சூதாட்டப் போட்டிகளில் ஈடுபட்டதற்காக 5,064 பேரைக் கைது செய்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இது மிகவும் அதிகம் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.கடந்த மாதம் 12ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து 4,679 போட்டியாளர்களுடன் 258 புக்கிகளும், 127 பந்தய சீட்டு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு அவர்கள் நாட்டுப் பணமதிப்பில் 2000 பாட்டும், இரண்டு ஆண்டுகள் முடிய சிறைத் தண்டனையும் கிடைக்கக்கூடும்.ஆனால் பெரும் தொகை சம்பந்தப்பட்ட குற்றங்கள் தவிர மற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று காவல்துறைத் தலைவர் சன்டவிட் ராம்சுத் தெரிவித்தார்.
இதுதவிர 2000க்கும் மேற்பட்ட கால்பந்து சூதாட்ட இணையதளங்கள் மூடப்பட்டன என்றும் அவர் கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளின்போது 3,800 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
தாய்லாந்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பை நடத்திவரும் ராணுவம் சமூக ஒழுங்கை மேம்படுத்தும்விதமாக அங்கு நடைபெற்றுவந்த பல சூதாட்டங்களை ஏற்கனவே தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 15
|
|