Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
+5
டார்வின்
முனைவர் ம.ரமேஷ்
soplangi
பாலாஜி
சிவா
9 posters
Page 12 of 15
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
அதிக முறை வென்ற நாடுகள்
அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறையும், இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த முறை சீன நாட்டு ஜோசியங்களின்படி உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி கணிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறையும், இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த முறை சீன நாட்டு ஜோசியங்களின்படி உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி கணிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
போஸ்னியாவின் அறிமுக உலகக் கோப்பைத் தொடர் சோகத்துடன் 'ஓவர்'!
குயாபா, பிரேசில்: போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் முதல் உலகக் கோப்பைத் தொடர் ஒரு வழியாக முடிந்து விட்டது. அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவை நைஜீரியா அணி ஒரே ஒரு கோலில் தடுத்து நிறுத்தி விட்டது. பெரும் ஏமாற்றத்துடன் தனது முதல் தொடரை முடித்துள்ளது போஸ்னியா.
நைஜீரியாவுக்கு எதிரானது போட்டியில் நைஜீரிய அணியின் பீட்டர் ஓடெம்விங்கி போட்ட ஒரே ஒரு கோல் காரணமாக போஸ்னியா தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
நைஜீரியா கடைசியாக 1998 கோப்பைப் போட்டியில்தான் வேன்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இந்த நிலையில் தற்போது 98க்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குள் அர்ஜென்டினாவுடன் இணைந்து செல்லும் வாய்ப்பை நைஜீரியா பிரகாசப்படுத்தியுள்ளது.
தற்போது எப் பிரிவில் அர்ஜென்டினா 6 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்தில் 4 புள்ளிகளுடன் நைஜீரியா உள்ளது.
அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை நைஜீரியா எதிர்கொள்ளவுள்ளது. இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு நைஜீரியா தகுதி பெறும். மேலும் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தையும் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரா ஆனாலும் கூட அதற்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போஸ்னியா அணி தான் கலந்து கொண்ட முதல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி விட்டது.
குயாபா, பிரேசில்: போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் முதல் உலகக் கோப்பைத் தொடர் ஒரு வழியாக முடிந்து விட்டது. அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவை நைஜீரியா அணி ஒரே ஒரு கோலில் தடுத்து நிறுத்தி விட்டது. பெரும் ஏமாற்றத்துடன் தனது முதல் தொடரை முடித்துள்ளது போஸ்னியா.
நைஜீரியாவுக்கு எதிரானது போட்டியில் நைஜீரிய அணியின் பீட்டர் ஓடெம்விங்கி போட்ட ஒரே ஒரு கோல் காரணமாக போஸ்னியா தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
நைஜீரியா கடைசியாக 1998 கோப்பைப் போட்டியில்தான் வேன்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இந்த நிலையில் தற்போது 98க்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குள் அர்ஜென்டினாவுடன் இணைந்து செல்லும் வாய்ப்பை நைஜீரியா பிரகாசப்படுத்தியுள்ளது.
தற்போது எப் பிரிவில் அர்ஜென்டினா 6 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்தில் 4 புள்ளிகளுடன் நைஜீரியா உள்ளது.
அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை நைஜீரியா எதிர்கொள்ளவுள்ளது. இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு நைஜீரியா தகுதி பெறும். மேலும் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தையும் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரா ஆனாலும் கூட அதற்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போஸ்னியா அணி தான் கலந்து கொண்ட முதல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி விட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று பெல்ஜியம் அணியும் ரஷ்ய அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் மெர்டன்சுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவரால் கோலாக மாற்ற தவறினார். மறுபடியும் நான்காவது நிமிடத்தில் மெர்டன்ஸ் கோலை நோக்கி அடித்த பந்தை ரஷ்யாவின் இக்னாஷெவிச் சாதுர்யமாக தடுத்தார். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரஷ்யாவின் க்ளுஷாகோவுக்கு நடுவர் மஞ்சள் அட்டையை காண்பித்தார்.
முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் 53 சதவிகித நேரம் பந்து பெல்ஜியத்தின் வசம் இருந்தபோதும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னும் இரு அணிகளும் கோல் அடிக்க திணறின. இந்நிலையில் ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருந்த போது பெல்ஜியம் அணி வீரர் ஓரிகி அருமையான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.
இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் அடிக்க ஏதுவாக மூன்று நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இருந்த போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெல்ஜியம் அணி ரஷ்யாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பெல்ஜியத்தின் நடுக்கள ஆட்டக்காரரான ஹசார்டு தேர்வு செய்யப்பட்டார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று பெல்ஜியம் அணியும் ரஷ்ய அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் மெர்டன்சுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவரால் கோலாக மாற்ற தவறினார். மறுபடியும் நான்காவது நிமிடத்தில் மெர்டன்ஸ் கோலை நோக்கி அடித்த பந்தை ரஷ்யாவின் இக்னாஷெவிச் சாதுர்யமாக தடுத்தார். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரஷ்யாவின் க்ளுஷாகோவுக்கு நடுவர் மஞ்சள் அட்டையை காண்பித்தார்.
முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் 53 சதவிகித நேரம் பந்து பெல்ஜியத்தின் வசம் இருந்தபோதும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னும் இரு அணிகளும் கோல் அடிக்க திணறின. இந்நிலையில் ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருந்த போது பெல்ஜியம் அணி வீரர் ஓரிகி அருமையான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.
இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் அடிக்க ஏதுவாக மூன்று நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இருந்த போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெல்ஜியம் அணி ரஷ்யாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பெல்ஜியத்தின் நடுக்கள ஆட்டக்காரரான ஹசார்டு தேர்வு செய்யப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
கோல் மழையில் வெற்றி பெற்ற அல்ஜீரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொரிய அணியும் அல்ஜீரிய அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கொரிய அணியின் சி. ஒய். பார்க் பவுல் செய்தார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஸ்லிமானி முதல் கோலை அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.
அடுத்த 2வது நிமிடத்திலேயே அல்ஜீரியாவின் ஹாலிச்சி மற்றொரு கோலை அடித்தார். மீண்டும் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ட்ஜாபாவ் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது அல்ஜீரியா மூன்று கோல்களையும் கொரியா கோல் எதுவும் அடிக்காமலும் களத்தில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கொரிய அணியின் சன் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் கொடுத்தார்.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் பிராஹிமி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை 4 ஆக உயர்த்தினார். 72வது நிமிடத்தில் கொரியாவின் கூ அடித்த கோலால் அந்த அணியின் கோல் கணக்கு 2 ஆக உயர்ந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் கொரியா மேலும் எந்த ஒரு கோலும் அடிக்காததால் 4-2 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா வெற்றி பெற்றது. அல்ஜீரியாவின் முன் கள ஆட்டக்காரரான ஸ்லிமானி ஆட்ட நாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொரிய அணியும் அல்ஜீரிய அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கொரிய அணியின் சி. ஒய். பார்க் பவுல் செய்தார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஸ்லிமானி முதல் கோலை அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.
அடுத்த 2வது நிமிடத்திலேயே அல்ஜீரியாவின் ஹாலிச்சி மற்றொரு கோலை அடித்தார். மீண்டும் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ட்ஜாபாவ் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது அல்ஜீரியா மூன்று கோல்களையும் கொரியா கோல் எதுவும் அடிக்காமலும் களத்தில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கொரிய அணியின் சன் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் கொடுத்தார்.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் பிராஹிமி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை 4 ஆக உயர்த்தினார். 72வது நிமிடத்தில் கொரியாவின் கூ அடித்த கோலால் அந்த அணியின் கோல் கணக்கு 2 ஆக உயர்ந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் கொரியா மேலும் எந்த ஒரு கோலும் அடிக்காததால் 4-2 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா வெற்றி பெற்றது. அல்ஜீரியாவின் முன் கள ஆட்டக்காரரான ஸ்லிமானி ஆட்ட நாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலக கோப்பை கால்பந்தில் நைஜீரியா அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்தது.
ஒரு கோலில் முடிவு
உலக கோப்பை கால்பந்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நைஜீரியாவும், போஸ்னியாவும் மோதின.
உலக கோப்பையின் அறிமுக அணியான போஸ்னியா தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 21–வது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் கிடைத்திருக்க வேண்டியது. அந்த அணி வீரர் எடின் ஜிகோ அடித்த கோல் ‘ஆப்–சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். இதன் பின்னர் 23–வது நிமிடத்தில் போஸ்னியாவின் ஹாஜ்ரோவிச் அடித்த ஷாட்டை, நைஜீரியா கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமோ தடுத்து விட்டார்.
இப்படி போஸ்னியாவை துரதிர்ஷ்டம் துரத்த, 29–வது நிமிடத்தில் நைஜீரியாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது. சக நாட்டவர் எமானுவேல் எமானிக் கடத்தி கொடுத்த பந்தை, நைஜீரியாவின் பீட்டர் ஓடம்விங்கி கோலாக்கினார். இதன் மூலம் அதிக வயதில் உலக கோப்பையில் கோல் அடித்த நைஜீரிய வீரர் என்ற சிறப்பை ஓடம்விங்கி பெற்றார். அவருக்கு இப்போது வயது 32 ஆண்டு 341 நாட்கள் ஆகிறது.
பிற்பாதியில் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நின்ற போதிலும் கோல் ஏதும் விழவில்லை. கடைசி 3 நிமிடங்களில் போஸ்னியாவின் எடின் ஜிகோ அடுத்தடுத்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டுகளை நைஜீயா கீப்பர் என்யேமா கச்சிதமாக முறியடித்து நைஜீரியாவின் வெற்றியை 1–0 என்ற கணக்கில் உறுதிப்படுத்தினார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு...
‘சூப்பர் ஈகிள்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியா உலக கோப்பையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது 1998–ம் ஆண்டுக்கு பிறகு) பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் ஈரானிடம் டிரா செய்த நைஜீரியா தற்போது 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. நைஜீரியா தனது கடைசி லீக்கில் அர்ஜென்டினாவுடன் (25–ந்தேதி) மோதுகிறது. இதில் டிரா செய்தாலே 2–வது சுற்றை எட்டி விடலாம்.
புதுமுக அணியான போஸ்னியா தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்ததன் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டிருக்கிறது. போஸ்னியா கடைசி லீக்கில் ஈரானுடன் 25–ந்தேதி மோதுகிறது.
முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து 2–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கடைசி நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
ஒரு கோலில் முடிவு
உலக கோப்பை கால்பந்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நைஜீரியாவும், போஸ்னியாவும் மோதின.
உலக கோப்பையின் அறிமுக அணியான போஸ்னியா தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 21–வது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் கிடைத்திருக்க வேண்டியது. அந்த அணி வீரர் எடின் ஜிகோ அடித்த கோல் ‘ஆப்–சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். இதன் பின்னர் 23–வது நிமிடத்தில் போஸ்னியாவின் ஹாஜ்ரோவிச் அடித்த ஷாட்டை, நைஜீரியா கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமோ தடுத்து விட்டார்.
இப்படி போஸ்னியாவை துரதிர்ஷ்டம் துரத்த, 29–வது நிமிடத்தில் நைஜீரியாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது. சக நாட்டவர் எமானுவேல் எமானிக் கடத்தி கொடுத்த பந்தை, நைஜீரியாவின் பீட்டர் ஓடம்விங்கி கோலாக்கினார். இதன் மூலம் அதிக வயதில் உலக கோப்பையில் கோல் அடித்த நைஜீரிய வீரர் என்ற சிறப்பை ஓடம்விங்கி பெற்றார். அவருக்கு இப்போது வயது 32 ஆண்டு 341 நாட்கள் ஆகிறது.
பிற்பாதியில் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நின்ற போதிலும் கோல் ஏதும் விழவில்லை. கடைசி 3 நிமிடங்களில் போஸ்னியாவின் எடின் ஜிகோ அடுத்தடுத்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டுகளை நைஜீயா கீப்பர் என்யேமா கச்சிதமாக முறியடித்து நைஜீரியாவின் வெற்றியை 1–0 என்ற கணக்கில் உறுதிப்படுத்தினார்.
16 ஆண்டுகளுக்கு பிறகு...
‘சூப்பர் ஈகிள்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியா உலக கோப்பையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது 1998–ம் ஆண்டுக்கு பிறகு) பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் ஈரானிடம் டிரா செய்த நைஜீரியா தற்போது 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. நைஜீரியா தனது கடைசி லீக்கில் அர்ஜென்டினாவுடன் (25–ந்தேதி) மோதுகிறது. இதில் டிரா செய்தாலே 2–வது சுற்றை எட்டி விடலாம்.
புதுமுக அணியான போஸ்னியா தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்ததன் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டிருக்கிறது. போஸ்னியா கடைசி லீக்கில் ஈரானுடன் 25–ந்தேதி மோதுகிறது.
முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து 2–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கடைசி நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
* அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு போய் சேர்ந்துள்ளார். அங்கு அந்த நாட்டின் அதிபர் அப்துல் பட்டா அல் சிசியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ஈராக் உள்நாட்டுப்போர் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இட்ஜ்வி தீவில் இருந்து ஹோமா என்ற இடத்தை நோக்கி பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை, சூறாவளி காற்று காரணமாக இந்த படகு கிவு ஏரியில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 பேர் பலியாகி விட்டனர்.
* ஆப்கான் ஜனநாயகத்தில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த நாட்டுக்கான பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியா கட்டி தருகிறது. இந்த கட்டிடம் மொகலாய கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவையாக உருவாகி வருகிறது. கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கட்டிட பணி தாமதம் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் அடுத்த ஆண்டு டிசம்பரில்தான் முடியும் என தெரிய வந்துள்ளது.
* ஹாங்காங், 1997–ம் ஆண்டு முதல் சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இங்கு ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பொதுவாக்கெடுப்பு கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 6 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இட்ஜ்வி தீவில் இருந்து ஹோமா என்ற இடத்தை நோக்கி பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை, சூறாவளி காற்று காரணமாக இந்த படகு கிவு ஏரியில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 பேர் பலியாகி விட்டனர்.
* ஆப்கான் ஜனநாயகத்தில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த நாட்டுக்கான பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியா கட்டி தருகிறது. இந்த கட்டிடம் மொகலாய கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவையாக உருவாகி வருகிறது. கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கட்டிட பணி தாமதம் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் அடுத்த ஆண்டு டிசம்பரில்தான் முடியும் என தெரிய வந்துள்ளது.
* ஹாங்காங், 1997–ம் ஆண்டு முதல் சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இங்கு ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பொதுவாக்கெடுப்பு கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 6 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்ய 400 இணையதளங்களுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இணையதளங்களில் கால்பந்து போட்டியின் காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு சோனி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்யும் 400 இணைய தளங்களுக்கு தடைவிதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் எம்.எஸ்.எம்.(மல்டி ஸ்கிரீன் மீடியா) தனியார் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால் இணையதளங்கள் மூலம் வரம்பு மீறப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஐகோட்டின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காமேஷ்வர் ராவ், எம்.எஸ்.எம். நிறுவனம் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதித்துள்ளார். மேலும், இந்தியாவில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமைகளை மீறும் விதமாக மற்ற இணையதளங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்வதை கண்டுபிடித்தால் அதனை தடை செய்ய, இணைய சேவை வழங்குபவர்களுக்கு(ஐ.எஸ்.பி.) ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்ப பதிவாளருக்கு ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறிய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இத்தகைய துறைகளே, இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடமுடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை சோனி நிறுவனம் தனது 6 சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருகிறது. போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய சோனி நிறுவனம் முழு உரிமையும் பெற்றுள்ளது.
20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இணையதளங்களில் கால்பந்து போட்டியின் காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு சோனி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்யும் 400 இணைய தளங்களுக்கு தடைவிதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் எம்.எஸ்.எம்.(மல்டி ஸ்கிரீன் மீடியா) தனியார் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால் இணையதளங்கள் மூலம் வரம்பு மீறப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஐகோட்டின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காமேஷ்வர் ராவ், எம்.எஸ்.எம். நிறுவனம் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதித்துள்ளார். மேலும், இந்தியாவில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமைகளை மீறும் விதமாக மற்ற இணையதளங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்வதை கண்டுபிடித்தால் அதனை தடை செய்ய, இணைய சேவை வழங்குபவர்களுக்கு(ஐ.எஸ்.பி.) ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்ப பதிவாளருக்கு ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறிய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இத்தகைய துறைகளே, இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடமுடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை சோனி நிறுவனம் தனது 6 சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருகிறது. போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய சோனி நிறுவனம் முழு உரிமையும் பெற்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
போர்ச்சுக்கல்- அமெரிக்கா இடையிலான போட்டி டிரா
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் – அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. ஜி- பிரிவுக்கான முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த போர்ச்சுகலும், கானாவை வீழ்த்திய அமெரிக்காவும் மனஸ் நகரில் இன்று அதிகாலை விளையாடின. தோல்வி அடைந்தால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த போர்ச்சுகல் அணிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் போர்ச்சுகல் அணி முதல் பாதியின் முடிவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 64 மற்றும் 81-வது நிமிடங்களில் அமெரிக்கா கோல் அடித்து முன்னிலை பெற்றது.
அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் போர்ச்சுகல் இருந்தது. ஆனால் கடைசி 30 வினாடிகள் இருந்த நிலையில், வாரெலா கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்ததுடன், நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பில் போர்சுக்கல் அணியை நீடிக்கச் செய்தார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் – அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. ஜி- பிரிவுக்கான முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த போர்ச்சுகலும், கானாவை வீழ்த்திய அமெரிக்காவும் மனஸ் நகரில் இன்று அதிகாலை விளையாடின. தோல்வி அடைந்தால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த போர்ச்சுகல் அணிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் போர்ச்சுகல் அணி முதல் பாதியின் முடிவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 64 மற்றும் 81-வது நிமிடங்களில் அமெரிக்கா கோல் அடித்து முன்னிலை பெற்றது.
அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் போர்ச்சுகல் இருந்தது. ஆனால் கடைசி 30 வினாடிகள் இருந்த நிலையில், வாரெலா கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்ததுடன், நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பில் போர்சுக்கல் அணியை நீடிக்கச் செய்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
எங்களுடையது சிறந்த அணி அல்ல: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புதல்
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்று சமன் செய்ய மட்டுமே முடிந்த போர்ச்சுக்கல் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக ஒரு போதும் சொல்ல முடியாது என்று அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார் ரொனால்டோ. தகுதிச் சுற்று காலபந்தாட்டத்தில் ரொனால்டோ ஹேட்ரிக் கோல்களை அடித்து ஸ்வீடன் அணியை 3-2 என்று வீழ்த்தினார். இதனால்தான் நடப்பு உலகக்கோப்பைக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி தருணத்தில் ரொனால்டோ அளித்த அபாரமான பாஸ் மூலம் தான் சில்வஸ்டர் வரேலா கோலை அடித்து சமன் செய்தார்.
இந்த நிலையில் தன் அணி குறித்து ரொனால்டோ கூறியதாவது:
நாங்கள் உலக சாம்பியன்களாவோம் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது, நாம் நமது எல்லைகளை வரையறை செய்து கொள்ளவேண்டும். சில விஷயங்களை நம்மால் செய்ய முடியாது, வேகமாக ஓடுவது, இன்னும் தரத்தைக் கூட்டுவது போன்றவற்றை எங்களால் செய்ய முடியவில்லை. இப்போதைக்கு என்ன கூற விரும்புகிறேன் எனில், எங்களை விட சிறந்த அணிகளும் சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளார் ரொனால்டோ.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்று சமன் செய்ய மட்டுமே முடிந்த போர்ச்சுக்கல் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக ஒரு போதும் சொல்ல முடியாது என்று அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார் ரொனால்டோ. தகுதிச் சுற்று காலபந்தாட்டத்தில் ரொனால்டோ ஹேட்ரிக் கோல்களை அடித்து ஸ்வீடன் அணியை 3-2 என்று வீழ்த்தினார். இதனால்தான் நடப்பு உலகக்கோப்பைக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி தருணத்தில் ரொனால்டோ அளித்த அபாரமான பாஸ் மூலம் தான் சில்வஸ்டர் வரேலா கோலை அடித்து சமன் செய்தார்.
இந்த நிலையில் தன் அணி குறித்து ரொனால்டோ கூறியதாவது:
நாங்கள் உலக சாம்பியன்களாவோம் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது, நாம் நமது எல்லைகளை வரையறை செய்து கொள்ளவேண்டும். சில விஷயங்களை நம்மால் செய்ய முடியாது, வேகமாக ஓடுவது, இன்னும் தரத்தைக் கூட்டுவது போன்றவற்றை எங்களால் செய்ய முடியவில்லை. இப்போதைக்கு என்ன கூற விரும்புகிறேன் எனில், எங்களை விட சிறந்த அணிகளும் சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளார் ரொனால்டோ.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
Similar topics
» உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
Page 12 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|