புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவரசம் பீப்பீ - விமர்சனம்
Page 1 of 1 •
நடிகர் : கௌரவ், பிரவீன், வசந்த்
நடிகை : வர்ஷினி
இயக்குனர் : ஹலிதா சமீம்
இசை : அருள்தேவ்
ஓளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா
நடிகை : வர்ஷினி
இயக்குனர் : ஹலிதா சமீம்
இசை : அருள்தேவ்
ஓளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா
பசங்க, கோலிசோடா படங்களின் வரிசையில் மீண்டும் பசங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பூவரசம் பீப்பீ.
ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு ஆண்டு விடுமுறையை ஜாலியாக பொழுதை போக்குகிறார்கள் மூன்று நண்பர்கள்(கபில்தேவ், ஆண்டனா, வேணுக்கண்ணா). ஒருநாள் திடீரென்று ஊரில் அடை மழை பெய்கிறது. இந்த நேரத்தில் சலவை தொழிலாளியின் மனைவியை சில அடையாளம் தெரியாத நபர்கள் பலாத்காரம் செய்வதை இந்த சிறுவர்கள் தொலைவில் இருந்து பார்க்கிறார்கள். மறுநாள் அந்த பெண் ஆற்றங்கரையில் பிணமாக கிடக்க, உண்மை தெரியாத ஊர் மக்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டதாக நம்பி விடுகிறார்கள். ஆனால், அந்த பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்த மூன்று சிறுவர்கள் கொலையாளிகளைக் கண்டுபிடித்து, உண்மையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? இதனால் சிறுவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருகிறதா? என்பதே படத்தின் மீதிக் கதை.
தேவையற்ற பரபரப்பை கூட்டாமல் போதுமான படபடப்புடன் இடைவேளை வரை சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டு செல்கிறது இந்த கில்லி பயல்களின் சாகசங்கள். ஆனால் அதற்குப்பிறகு எப்.எம். ரேடியோ சீன்கள் அதிகம் ஆக்ரமிப்பதால் விறுவிறுப்பு குன்ற துவங்குகிறது. மற்ற தமிழ் படங்களைப்போலவே பள்ளிக்கால காதலை காட்டி இருப்பது திருஷ்டி. அதே சமயம் தனது தோழிக்காக மரத்தில் காத்தாடிகளை கட்டும் வேணுவின் அன்பு ரசனை.
படத்தின் கதாநாயகர்களாக வலம்வரும் கௌரவ் (வேணுகண்ணா), பிரவீன் (ஆண்டனா), வசந்த் (கபில்தேவ்) மூன்று பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கிறது. சிறுமியாக வரும் வர்ஷினி (லாலிபப்) முகபாவனைகளில் பெரிய நடிகளை மிஞ்சிவிட்டார் அப்படி ஒரு எக்ஸ்பிரஷன்.
மற்றும் காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.
மனோஜ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக மழை காட்சிகளிலும் இறுதிகட்ட காட்சிகளிலும் பிரமிக்க வைக்கிறார் கேமரா மேன் மனோஜ். அருள்தேவின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் படத்திற்கு வலுசேர்க்கிறது.
புதுமுக இயக்குனராக வந்திருக்கும் ஹலிதா சமீம்மின் கதையும், திரைக்கதையும் ஒரு அனுபவசாலியை போல் காட்சியளிக்கிறது. ஆனால் வசனத்தில் சற்று கவனம் செலுத்திருக்கலாமா என தோன்றுகிறது, முகத்தை சுளிக்க வைக்கும் ஒரு சில வசனங்கள்.
மொத்ததில் இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறமையும், தவறை தட்டி கேட்க வயது முக்கியமல்ல என்பதையும் அருமையாக சொல்லியிருக்கும் படம் இந்த பூவரசம் பீப்பீ.
பூவரசம் பீப்பீ விமர்சனம் - இந்து டாக்கீஸ் குழு
கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். இங்கிருந்து நகரில் சென்று படிக்கும் ஐந்து பேர் கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பத்து, பன்னிரெண்டு வயதினர். இவர்களில் முதல் மூன்று சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கொட்டும் மழையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் வன்முறைக் குற்றத்தை நேரடியாகப் பார்க்கிறார்கள். மிருகத்தனமான இந்தச் செயலால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். ஆனால், ஆற்று வெள்ளத்தில் அந்தப் பெண் பலியாகிவிட்டதாக ஊர் நம்புகிறது. ஆனால் அது ஆற்றின் குற்றமல்ல, குற்றத்தை இழைத்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. சரியான ஆதாரத்துடன் அவர்களை போலீஸில் சிக்க வைக்க இந்தக் குழு என்ன செய்தது என்பதுதான் திரைக்கதை.
குற்றப் பின்னணி கொண்ட கதையைக் குழந்தைகளுடன் இணைத்து அதை த்ரில்லராக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் கவனத்தைக் கவர்கிறார். தங்களிடம் கிடைக்கும் பழைய ராணுவ ரேடியோ ஒன்றை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தக் குற்றத்தை அம்பலப்படுத்தும் திட்டமும் அதைத் திரையில் காட்டியிருக்கும் விதமும் புதுமை, விறுவிறுப்பு. சிறார்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று சித்தரித்த விதத்தைப் பாராட்டலாம். கூகிள் உட்படப் பல அம்சங்களும் திரைக்கதையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
குடிகாரரின் பையன் படும் வேதனையைச் சித்தரித்த விதம் மனதைத் தொடுகிறது. +2 மாணவன் பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் மறைத்து எடுத்துவரும்போது, அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வயிற்றைக் கிழித்துக்கொள்ள, “நான் செத்தாலும் பரவாயில்லை... பாட்டில் குத்திச்சுன்னு சொல்லிடாதீங்கடா, எங்க அப்பாவுக்கு பெரிய அவமானம்” என்று அவன் கெஞ்சும் காட்சியில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதேபோல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனமாகக் காய் நகர்த்திச் சமூக விரோதிகளை போலீஸில் சிக்க வைப்பதில் படம் சுவையாக நகர்த்தப்படுகிறது.
பதின்பருவத்தின் தொடக்கத்தில் காலடி வைக்கும் சிறார்கள் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நிற்பவர்கள். இவர்களைத் திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கையாளும்போது ஒரு இயக்குநர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.
விடலைப் பருவக் குறுகுறுப்பு என்பதைத் தாண்டி, வயது வந்தவர்களுக்கான காதல் உணர்ச்சிகளைக் கொண்டவர்களாகவே இந்தப் படத்தில் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். வயது வந்தவர்கள் காதல் விவகாரங்களில் நடந்துகொள்ளும் விதத்தையே இவர்களும் பின்பற்றுவதாகக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஹலிதா ஷமீம். இப்படி முழுக்க முழுக்க வயதுக்கு வந்தவர்களின் பார்வையுடன் விடலைச் சிறுவர்களைச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
கதையுடன் கொஞ்சமும் தொடர்பற்ற இந்து - இஸ்லாமியக் கலவரம் ஒன்றை அனிமேஷன் குறும்படம்போல சித்தரித்திருப்பதும் தேவையற்ற திணிப்பு. அனாவசியமான பல காட்சிகளால் படம் தொய்வடைவதைத் தவிர்த்திருக்கலாம்.
விறுவிறுப்பான திரைக்கதை, மனோஜ் பரமஹம்சாவின் தரமான ஒளிப்பதிவு, சிறுவர்களின் முதிர்ச்சியான நடிப்பு, புத்துணர்ச்சியுடன் ஒலிக்கும் அருள்தேவின் இசை, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டத் தக்க அம்சங்களாகக் குறிப்பிடலாம். திரைக்கதையைக் கையாண்ட விதமும் நன்று. ஆனால், பெண் இயக்குநருக்கான தனி அடையாளம் எதையும் பார்க்க முடியவில்லை.
வளரிளம் பருவச் சிறுவர்களை வயதுக்கு மீறிய குணங்களைக் கொண்டவர்களாக, பிஞ்சில் பழுத்தவர்களாகச் சித்தரிப்பது அதிகரித்துவருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான ‘பூவரசம் பீப்பீ’யும் இந்த வகைக்குள் அடங்கும் படம்தான்.
கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். இங்கிருந்து நகரில் சென்று படிக்கும் ஐந்து பேர் கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பத்து, பன்னிரெண்டு வயதினர். இவர்களில் முதல் மூன்று சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கொட்டும் மழையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் வன்முறைக் குற்றத்தை நேரடியாகப் பார்க்கிறார்கள். மிருகத்தனமான இந்தச் செயலால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். ஆனால், ஆற்று வெள்ளத்தில் அந்தப் பெண் பலியாகிவிட்டதாக ஊர் நம்புகிறது. ஆனால் அது ஆற்றின் குற்றமல்ல, குற்றத்தை இழைத்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. சரியான ஆதாரத்துடன் அவர்களை போலீஸில் சிக்க வைக்க இந்தக் குழு என்ன செய்தது என்பதுதான் திரைக்கதை.
குற்றப் பின்னணி கொண்ட கதையைக் குழந்தைகளுடன் இணைத்து அதை த்ரில்லராக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் கவனத்தைக் கவர்கிறார். தங்களிடம் கிடைக்கும் பழைய ராணுவ ரேடியோ ஒன்றை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தக் குற்றத்தை அம்பலப்படுத்தும் திட்டமும் அதைத் திரையில் காட்டியிருக்கும் விதமும் புதுமை, விறுவிறுப்பு. சிறார்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று சித்தரித்த விதத்தைப் பாராட்டலாம். கூகிள் உட்படப் பல அம்சங்களும் திரைக்கதையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
குடிகாரரின் பையன் படும் வேதனையைச் சித்தரித்த விதம் மனதைத் தொடுகிறது. +2 மாணவன் பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் மறைத்து எடுத்துவரும்போது, அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வயிற்றைக் கிழித்துக்கொள்ள, “நான் செத்தாலும் பரவாயில்லை... பாட்டில் குத்திச்சுன்னு சொல்லிடாதீங்கடா, எங்க அப்பாவுக்கு பெரிய அவமானம்” என்று அவன் கெஞ்சும் காட்சியில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதேபோல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனமாகக் காய் நகர்த்திச் சமூக விரோதிகளை போலீஸில் சிக்க வைப்பதில் படம் சுவையாக நகர்த்தப்படுகிறது.
பதின்பருவத்தின் தொடக்கத்தில் காலடி வைக்கும் சிறார்கள் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நிற்பவர்கள். இவர்களைத் திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கையாளும்போது ஒரு இயக்குநர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.
விடலைப் பருவக் குறுகுறுப்பு என்பதைத் தாண்டி, வயது வந்தவர்களுக்கான காதல் உணர்ச்சிகளைக் கொண்டவர்களாகவே இந்தப் படத்தில் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். வயது வந்தவர்கள் காதல் விவகாரங்களில் நடந்துகொள்ளும் விதத்தையே இவர்களும் பின்பற்றுவதாகக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஹலிதா ஷமீம். இப்படி முழுக்க முழுக்க வயதுக்கு வந்தவர்களின் பார்வையுடன் விடலைச் சிறுவர்களைச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
கதையுடன் கொஞ்சமும் தொடர்பற்ற இந்து - இஸ்லாமியக் கலவரம் ஒன்றை அனிமேஷன் குறும்படம்போல சித்தரித்திருப்பதும் தேவையற்ற திணிப்பு. அனாவசியமான பல காட்சிகளால் படம் தொய்வடைவதைத் தவிர்த்திருக்கலாம்.
விறுவிறுப்பான திரைக்கதை, மனோஜ் பரமஹம்சாவின் தரமான ஒளிப்பதிவு, சிறுவர்களின் முதிர்ச்சியான நடிப்பு, புத்துணர்ச்சியுடன் ஒலிக்கும் அருள்தேவின் இசை, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டத் தக்க அம்சங்களாகக் குறிப்பிடலாம். திரைக்கதையைக் கையாண்ட விதமும் நன்று. ஆனால், பெண் இயக்குநருக்கான தனி அடையாளம் எதையும் பார்க்க முடியவில்லை.
திரைக்கதை உள்ளிட்ட பல அம்சங்கள் கவர்ந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் சிறுவர்களைப் பொருத்தியிருப்பதால் பூவரசம் பீப்பீயின் ஒலியை ரசிக்க முடியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவரசம் பீப்பீ - தினத்தந்தி விமர்சனம்
கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய மூன்று பேரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். மூன்று பேரும் ஒரு மழை பெய்யும் மாலைப்பொழுதில் ஆற்றில் குளித்து விளையாடுகிறார்கள். அப்போது, தூரத்தில் நான்கு பேர் ஒரு பெண்ணை பலவந்தமாக மறைவான இடத்துக்கு தூக்கி வருகிறார்கள். அங்கு அவளை கற்பழித்து கொன்று, உடலை ஆற்றில் வீசி விடுகிறார்கள். இதை மூன்று சிறுவர்களும் பார்த்து விடுகிறார்கள். மறுநாள் காலை போலீஸ் வருகிறது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, நடந்தது ஒரு விபத்து என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட பெண், ஒரு சலவை தொழிலாளி. அவளுடைய கணவர் ஊனமுற்றவர். ஒரு மகள் இருக்கிறாள். கொலையாளிகள் நான்கு பேரையும் போலீசில் சிக்க வைக்க மூன்று சிறுவர்களும் ஆதாரங்களை தேடுகிறார்கள். அவர்களை பயமுறுத்தினால், குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
முதலில், ஒரு பெண்ணின் சடலம் போல் பொம்மையை தயார் செய்து ஆற்று வெள்ளத்தில் மிதக்க விடுகிறார்கள். அதைப்பார்த்து கொலையாளிகள் மிரளுகிறார்கள். அடுத்து, அந்த நான்கு பேரையும் பேய் துரத்துவது போல் ‘செட்–அப்’ செய்து பயமுறுத்துகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகள் யார்–யார்? என்ற உண்மை வெளிப்படுகிறது.
அடுத்தகட்டமாக, மூன்று சிறுவர்களும் ‘பீப்பீ எப்.எம்.’ என்ற ரேடியோ மூலம் கொலையை பற்றியும், கொலையாளிகள் பற்றியும் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். கொலையாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்படுகிறார்கள்.
கவுரவ், பிரவீன், வசந்த் மூன்று பேரும் பொருத்தமான தேர்வு. இவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளும், பிறகு சமாதானமாகி நட்பு மேலும் இறுகுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. அவர்களின் காதல்தான் முகம் சுளிக்க வைக்கிறது.
சிறுவர்கள் மூன்று பேரும் பொம்மையை கயிற்றில் கட்டி, பேய் போல் நடக்க வைப்பதும், அதைப்பார்த்து கொலையாளிகள் நான்கு பேரும் மிரண்டு ஓட்டம் பிடிப்பதும், திகில். சலவை தொழிலாளியின் அடையாள குறியீடை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதும், ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை பயன்படுத்தி குற்றவாளிகளை படம்பிடிப்பதும், அவர்களின் பேச்சை பதிவு செய்வதும், சூப்பர் டெக்னிக்.
மிலிட்டரி தாத்தா ராணுவ ரேடியோவை எப்படி தன் வீட்டுக்குள் கொண்டுவர முடியும்? என்ற ‘லாஜிக்’ இடித்தாலும், அந்த ரேடியோதான் கதைக்கு திருப்பமாக அமைகிறது.
கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய சிறுவர்களுடன் வர்ஷினி, அகல்யா என்ற சிறுமிகளும் நடித்து இருக்கிறார்கள். வில்லன்களில், காளி ஒருவரை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்.
இடிமுழக்கத்துடன் கூடிய பெருமழையை பதிவு செய்த விதத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் அருள்தேவும், பளிச். ஹலிதா ஷமீம் டைரக்டு செய்து இருக்கிறார். மூன்று சிறுவர்கள் மூலம் ஒரு குற்ற பின்னணி கதையை விறுவிறுப்பாக சொல்லியிருப்பதுடன், சிறுவர்களின் பிரச்சினைகளையும் மிக தெளிவாக அலசி இருக்கிறார், டைரக்டர்.
சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட கதை.
கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய மூன்று பேரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். மூன்று பேரும் ஒரு மழை பெய்யும் மாலைப்பொழுதில் ஆற்றில் குளித்து விளையாடுகிறார்கள். அப்போது, தூரத்தில் நான்கு பேர் ஒரு பெண்ணை பலவந்தமாக மறைவான இடத்துக்கு தூக்கி வருகிறார்கள். அங்கு அவளை கற்பழித்து கொன்று, உடலை ஆற்றில் வீசி விடுகிறார்கள். இதை மூன்று சிறுவர்களும் பார்த்து விடுகிறார்கள். மறுநாள் காலை போலீஸ் வருகிறது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, நடந்தது ஒரு விபத்து என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட பெண், ஒரு சலவை தொழிலாளி. அவளுடைய கணவர் ஊனமுற்றவர். ஒரு மகள் இருக்கிறாள். கொலையாளிகள் நான்கு பேரையும் போலீசில் சிக்க வைக்க மூன்று சிறுவர்களும் ஆதாரங்களை தேடுகிறார்கள். அவர்களை பயமுறுத்தினால், குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
முதலில், ஒரு பெண்ணின் சடலம் போல் பொம்மையை தயார் செய்து ஆற்று வெள்ளத்தில் மிதக்க விடுகிறார்கள். அதைப்பார்த்து கொலையாளிகள் மிரளுகிறார்கள். அடுத்து, அந்த நான்கு பேரையும் பேய் துரத்துவது போல் ‘செட்–அப்’ செய்து பயமுறுத்துகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகள் யார்–யார்? என்ற உண்மை வெளிப்படுகிறது.
அடுத்தகட்டமாக, மூன்று சிறுவர்களும் ‘பீப்பீ எப்.எம்.’ என்ற ரேடியோ மூலம் கொலையை பற்றியும், கொலையாளிகள் பற்றியும் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். கொலையாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்படுகிறார்கள்.
கவுரவ், பிரவீன், வசந்த் மூன்று பேரும் பொருத்தமான தேர்வு. இவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளும், பிறகு சமாதானமாகி நட்பு மேலும் இறுகுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. அவர்களின் காதல்தான் முகம் சுளிக்க வைக்கிறது.
சிறுவர்கள் மூன்று பேரும் பொம்மையை கயிற்றில் கட்டி, பேய் போல் நடக்க வைப்பதும், அதைப்பார்த்து கொலையாளிகள் நான்கு பேரும் மிரண்டு ஓட்டம் பிடிப்பதும், திகில். சலவை தொழிலாளியின் அடையாள குறியீடை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதும், ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை பயன்படுத்தி குற்றவாளிகளை படம்பிடிப்பதும், அவர்களின் பேச்சை பதிவு செய்வதும், சூப்பர் டெக்னிக்.
மிலிட்டரி தாத்தா ராணுவ ரேடியோவை எப்படி தன் வீட்டுக்குள் கொண்டுவர முடியும்? என்ற ‘லாஜிக்’ இடித்தாலும், அந்த ரேடியோதான் கதைக்கு திருப்பமாக அமைகிறது.
கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய சிறுவர்களுடன் வர்ஷினி, அகல்யா என்ற சிறுமிகளும் நடித்து இருக்கிறார்கள். வில்லன்களில், காளி ஒருவரை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்.
இடிமுழக்கத்துடன் கூடிய பெருமழையை பதிவு செய்த விதத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் அருள்தேவும், பளிச். ஹலிதா ஷமீம் டைரக்டு செய்து இருக்கிறார். மூன்று சிறுவர்கள் மூலம் ஒரு குற்ற பின்னணி கதையை விறுவிறுப்பாக சொல்லியிருப்பதுடன், சிறுவர்களின் பிரச்சினைகளையும் மிக தெளிவாக அலசி இருக்கிறார், டைரக்டர்.
சிறுவர்களின் காதலும், அவர்கள் சம்பந்தப்பட்ட காதல் பாடலும் தேவையா? அந்த காட்சிகளை கத்தரித்து இருந்தால், படத்தின் நீளமும் குறைந்திருக்கும். ஒரு கருத்துள்ள படத்தை பார்த்த திருப்தியும் கிடைத்திருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
ரா.ரா3275 wrote:ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
படம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது ரா.ரா!
பெரிய பட்ஜெட்டில் படங்களெல்லாம் இதுபோன்ற சாதாரண பட்ஜெட் படங்களிடம் தோற்றுப் போவது மக்களின் ரசனை மாற்றத்தைக் குறிக்கிறது. பாராட்டப்பட வேண்டிய மாற்றம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1067825சிவா wrote:ரா.ரா3275 wrote:ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
படம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது ரா.ரா!
பெரிய பட்ஜெட்டில் படங்களெல்லாம் இதுபோன்ற சாதாரண பட்ஜெட் படங்களிடம் தோற்றுப் போவது மக்களின் ரசனை மாற்றத்தைக் குறிக்கிறது. பாராட்டப்பட வேண்டிய மாற்றம்!
கண்டிப்பாக சிவா.மணிவண்ணன் சார் சின்னப்படம் பெரியபடம்கறது பட்ஜெட்ல இல்ல.சப்ஜெக்ட்ல இருக்குன்னு.அது உண்மைதான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|