ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!

Go down

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Empty உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!

Post by சிவா Sat May 31, 2014 7:06 am



உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள  நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  UP%20village
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் 7 பேர் வழக்கு பதிவு செய்தனர்.

2 காவலர்கள் பணி நீக்கம்

மேலும், அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்‌ஷாபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3 வது குற்றவாளி கைது


இந்நிலையில் குற்றவாளிகள் 7 பேரில் சர்வேஸ் மற்றும் பப்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அவதேஷ் யாதவ் என்ற 3வது குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கை வாபஸ் பெறுமாறு தாக்குதல்

இதனிடையே, புகாரை வாபஸ் வாங்குமாறு குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, அச்சிறுமிகளின் தாயாரை வீடு புகுந்து தாக்கியதில் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.  இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனால் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதிஉ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Rajnath%20singh%20%282%29 ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.

விளக்கம் கேட்ட மத்திய அரசு

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நடந்த சம்பவம் குறித்து  அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து  உ.பி. அரசும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை


இதனிடையை பிரேத பரிசோதனை அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

'குற்றத்துக்கு துணைபோன போலீஸ்'


 இதனிடையே கொல்லப்பட்ட சகோதரிகளில் ஒருவரது தந்தை அளித்துள்ள பேட்டியில், " சிறுமிகள் இருவரும் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு போய் சேரவில்லை; அவர்களை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்றுள்ளதாக அச்சிறுமிகளின் சகோதரன் வந்து சொன்னான்.

இதனையடுத்து கடத்தி சென்றதாக தெரியவந்தவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, கடத்தியது உண்மைதான் என்றும், அவர்களை தாங்கள்தான் தங்களது பிடியில் வைத்திருப்பதாகவும், ஆனால் விடுவிக்க முடியாது என்றும் திமிராகவும் சொன்னார்கள். அப்போது அவர்களுடன் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரும் உடன் இருந்தார்.

நாங்கள் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த உடனேயே போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால், அவர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்" என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒரு பலாத்காரம்

இதனிடையே மேற்கூறிய சம்பவம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நீங்குவதற்குள், உ.பி.யில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது.  ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதி அசாம்கார். இங்குள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் 3 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா.

தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட படாயூன் பகுதியும் சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ள தொகுதியாகும். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி வென்ற 5 தொகுதிகளில் படாயூனும் ஒன்று.

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Rape%20protest%281%29
வெடித்தது போராட்டம்

இவ்வாறு முலாயம் சிங் குடும்பத்தினர் செல்வாக்காக உள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்ற சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் பலாத்கார சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Mulayamsingh%2825%29பலாத்கார தடுப்பு சட்டத்தை எதிர்த்தவர் முலாயம்

சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டபோது முலாயம் சிங் யாதவ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்." பையன்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அதற்காக அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பது எப்படி சரியாகும்?. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

தினமும் 10 பலாத்காரம்: போலீஸ் ஐ.ஜி. ஒப்புதல்


இதனிடையே உ.பி. மாநிலத்தில் தினமும் சராசரியாக 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநில போலீஸ் ஐ.ஜி. ஆஷிஸ் குப்தா கூறியுள்ளது, அரசின் கையாலாகாததனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில்  ஐ.ஜி.யின் இந்த பேட்டியால் முதலமைச்சர் அகிலேஷ் கடும் கோபமடைந்துள்ளார்.

 'ரேப் க்ரைசிஸ் செல்':  மத்திய அரசு அதிரடி


இந்நிலையில் உ.பி. பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீஸாரின் மெத்தன போக்கு குறித்து எழுந்துள்ள உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!  Menaka%281%29கண்டனங்களை தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக " ரேப் க்ரைசிஸ் செல்' ( Rape crisis cell) என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை



மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினர்,  குற்றவாளிகள் முலாயம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறாது என அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் மேனகா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியால் அகிலேஷ் ஆவேசம்

இந்நிலையில் ஐ.ஜி.யின் மேற்கூறிய பேட்டி,  மத்திய அரசு தலையிடும் அளவுக்கு சென்ற, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு  நிலை போன்றவற்றால், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விழி பிதுங்கிபோய் உள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது," நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்தானே...? பாதுகாப்பாக உணருகிறீர்களா?" என ஆவேசமுடன் பதிலளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் பெற்ற அபார வெற்றியை தொடர்ந்து, அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா காய்நகர்த்தி வரும் நிலையில், அகிலேஷின் இந்த பக்குவமில்லாத அணுகுமுறையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கும் இதே ரீதியில் சென்றால்,  அடுத்த சட்டசபை தேர்தல் வரைக்குமாவது சமாஜ்வாதி அரசு ஆட்சியில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum