ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கவயலில் தவிக்கும் தமிழர்கள் - 'குடும்பத்தோடு சாவதைத் தவிர வேற வழி தெரியலை!'

Go down

தங்கவயலில் தவிக்கும் தமிழர்கள் - 'குடும்பத்தோடு சாவதைத் தவிர வேற வழி தெரியலை!' Empty தங்கவயலில் தவிக்கும் தமிழர்கள் - 'குடும்பத்தோடு சாவதைத் தவிர வேற வழி தெரியலை!'

Post by சிவா Fri May 30, 2014 3:32 am


உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தங்கச் சுரங்கம் உள்ள பகுதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல். அந்த தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது.

[noguest]'தங்கவயல் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை மூன்று மாதத்துக்குள் காலிசெய்ய வேண்டும்’ என்று பி.ஜி.எம்.எல் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தவரும், கோலார் தமிழ்ச் சங்கத் தலைவருமான கலையரசன், ''நான் 15 ஆண்டுகள் கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தேன். மூன்று ஷிஃப்ட்களாக வேலை நடக்கும். ஒரு ஷிஃப்ட்-க்கு குறைந்தது 2,500 பேர் வேலை பார்ப்போம். ஒரு மணி நேரத்துக்கு 10 ஆயிரம் அடி உள்ளே போக வேண்டும். உள்ளே ரொம்ப வெப்பம் என்பதால் துணிகளை கழற்றி வைத்துவிட்டு வெறும் கோவணத்தோடும், நிர்வாணமாகவும் தங்கப் பாறைகளை வெட்டி எடுப்போம். சுரங்கத்தின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாததால் விஷ ஜந்துக்கள் உள்ளே இருக்காது. ஆனால், கரப்பான் பூச்சிகள் அதிகம் இருக்கும். உடல் முழுவதும் ஊர்ந்துகொண்டே இருக்கும். கடப்பாறைகளால் தங்கப் பாறைகளில் துளைகள் போட்டு அதில் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளை சொருகி வெடிக்கச் செய்து தங்கப் பாறைகளை பிளந்து வெளியே கொண்டுவருவோம்.

இப்படி வேலை பார்க்கும்போது சுரங்கத்தில் விஷ வாயு தாக்கியும், விபத்துகள் ஏற்பட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் உள்ளேயே இறந்திருக்கிறார்கள். சுரங்கத்துக்குள் உள்ளே இறங்கிவிட்டால், திரும்பவும் மேலே வந்தால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம். தினம் தினம் மறுபிறவி எடுப்பதுபோலத்தான் இருக்கும்.

சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் சிலிகாஸ் என்ற நோயினால் அவஸ்தைப்படுவார்கள். அதாவது, சுரங்கத்துக்குள் வேலை பார்க்கும்போது ஆக்ஸிஜன் சரியாகக் கிடைக்காது என்பதால்... நுரையீரல், மூச்சுக்குழலில் ஓட்டை விழுந்துவிடும். வெளியே வந்ததும் கம்பெனியில் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள். எத்தனை ஓட்டைகள் இருக்கிறதோ அத்தனை ஓட்டைகளுக்கும் ஒரு ஓட்டைக்கு 100 ரூபாய் வீதம் சம்பளத்தோடு சேர்த்துத் தருவார்கள். இந்த சிலிகாஸ் நோயினால் சுமார் 4,736 பேர் இறந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட எங்களுக்கு வேலை உத்தரவாதமோ, ஓய்வூதியமோ, பிடி பணமோ எதுவும் தரவில்லை. குடிசை போட நிலம் மட்டும் கொடுத்தார்கள். ஆனால், அதையும் இப்போது காலிசெய்ய வேண்டும் என்று கம்பெனி நோட்டீஸ் அனுப்பிவருகிறது.

2001-ல் தங்கவயல் மூடப்பட்டு வேலை இழந்து குழந்தைகளோடு பட்டினி கிடந்தபோது, தமிழக முதல்வர் அம்மா தாயுள்ளத்தோடு ஒரு குடும்பத்துக்கு 30 கிலோ அரிசி வீதம் கொடுத்து எங்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதால், கர்நாடக அரசும் எங்களைக் கண்டுக்கொள்வது இல்லை. மத்திய அரசும் எங்களை மாற்றான் தாய் பிள்ளையாகப் பார்க்கிறது. இப்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதாலும், அம்மா தமிழகத்தில் அபார வெற்றி பெற்றிருப்பதாலும் எங்கள் நிலைமைகளை நாடாளுமன்றத்தில் பேசி எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்'' என்று கோரிக்கைவைத்தார்.

சகுந்தலா என்ற பெண்மணி, ''நாங்க நான்கு தலைமுறைகளா இங்கே இருக்கோம். எங்க பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும்... அங்கு எங்களுக்கு நிலமோ, சொத்துகளோ கிடையாது. என்னோட வீட்டுக்காரர் மணிசேகரன் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார். சிலிகாஸ் நோய் வந்து, எங்க குழந்தைங்க நாலு பேரும் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாரு. எனக்கு மிச்சம் இருக்கிறதே இந்த வீட்டு நிலம் மட்டும்தான். இப்போ இதையும் காலி செய்யச் சொல்றாங்க. இப்போ நாங்க எங்கே போறது சொல்லுங்க. எங்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டு உரிமை எல்லாம் இங்கேதான் இருக்குது. இந்த இடத்தை விட்டுப் போகச் சொன்னா, குடும்பத்தோடு சாவதைத் தவிர வேற வழி தெரியல!'' என்று கண்கலங்கினார்.

கோலார் தங்கவயல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், ''முதன்முதலில் பிரிட்டீஷ்காரர்கள் இந்த இடத்தில் தங்கப் பாறைகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். சுரங்கம் அமைத்து அந்தப் பாறைகளை வெட்டி எடுக்கக் கூலி தொழிலாளிகள் தேவைப்பட்டது. உயிருக்குப் பயந்துகொண்டு கன்னடர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. குடியாத்தம், வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், ஈரோடு போன்ற தமிழக மாவட்டங்களில் இருந்துதான் தொழிலாளிகள் தைரியமாக வேலைக்கு வந்தார்கள்.

சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசின் பொது நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டில் இந்தச் சுரங்கம் வந்தது. தங்கத்தின் மதிப்பைவிட தங்கம் வெட்டி எடுக்க செலவு அதிகம் ஆகிறது என்று கருதி, படிப்படியாக தொழிலாளர்களைக் குறைத்தது. கடைசியாக 2001-ல் சுரங்கத்தை தற்காலிகமாக மூடினார்கள். பிறகு நிரந்தரமாக சுரங்கத்தை மூடப்போவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு சென்றது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'தொழிலாளர்களுக்கு 100 சதவிகித வி.ஆர்.எஸ் பணம் கொடுக்க வேண்டும். வீடு அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். தொழிற்கூடங்களில் உள்ள கருவிகளையும் தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதன் பிறகு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு, இந்த நிறுவனத்தை குளோபல் டெண்டர் (உலக மைய ஏலம்) விடப்போவதாக அறிவித்தது. அதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது குளோபல் டெண்டர் விட, கம்பெனியின் மொத்த சொத்துகளையும் கையகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மூன்று தலைமுறைகளாக சுரங்கத்தில் வேலை பார்த்தவர்களை விரட்ட நோட்டீஸ் அனுப்புகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, ''கோலார் தங்கவயல் பகுதியில் உள்ள மக்களின் நிலையைப் பற்றி தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுபோக இருக்கிறேன். அம்மாவின் உத்தரவுக்குப் பிறகு கர்நாடக மாநில அ.தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.

பி.ஜி.எம்.எல் கம்பெனியின் சிறப்பு அதிகாரி புருஷோத்தமனிடம் பேசினோம். ''இது கேபினெட் எடுத்த முடிவு. எனக்கு மேலே உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால் இதுபற்றி நான் பேசக் கூடாது'' என்று மட்டும் சொன்னார்.

கோலார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் முனியப்பாவிடம் பேசியபோது, ''இதுபற்றி என் கவனத்துக்கு வரவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. நான் விசாரித்துப் பார்க்கிறேன். நிச்சயம் இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று அந்த மக்களின் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் மோடி அரசு, கோலார் தங்கவயல் மக்கள் பிரச்னையில் உடனடியாக அக்கறை காட்ட வேண்டியது அவசியம்... அவசரம்!

விகடன்[/noguest]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை
» லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்க கோரிக்கை
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்
» சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - ரொட்டி, கழிவறை நீர் மூலம் உயிர் வாழும் அவலம்
» கோலார் தங்கவயலில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum