Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
3 posters
Page 1 of 1
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
நல்ல தொடக்கம், முடிவு எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|