புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சுயமுயற்சி I_vote_lcapசுயமுயற்சி I_voting_barசுயமுயற்சி I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமுயற்சி


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 28, 2014 12:42 pm

வெற்றிக்கோட்டைத் தொட ஒவ்வொருவருக்கும் தேவை “சுயமுயற்சி”.

நன்கு கற்றறிந்த விஞ்ஞானி ஒருவர் வண்ணத்துப் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட தனது நண்பரிடம் புழுநிலையில் உள்ள ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொடுத்தார்.

இந்தப்புழு அரிய அழகான வண்ணத்துப்பூச்சியாக வளரும் என்றும், அதைத் தொந்தரவு செய்யாமல் கவனமாகக் கண்காணித்து அதனுடைய வளர்ச்சியால் பல்வேறு நிலைகளைக் கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நண்பரும் அந்தப் புழுவை நன்கு கவனித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புழுக்கூட்டின் ஓடு மெதுவாக, மிக மெல்லியதாகி, எளிதில் வெளியே தெரியக்கூடியதாகியது.

அவரால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.

உள்ளே இருப்பது மெதுவாக அசையத் தொடங்கியது. இது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரத்தொடங்கி, அது அந்தக் கூட்டை விட்டு வெளியே வர முயற்சித்தது. வெளியே வர முட்டி மோதியது. அதை அவர் நன்கு உணர்ந்தார்.

அந்தக் கூட்டை உடைத்து உதவலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இறுதியாக, அடக்க முடியாத ஆர்வம் அவரைத் தூண்டியதால் அவர் ஒரு ஊசியால் அந்த ஓட்டின் மீது துளையிட்டார். சில விநாடிகளில், அவரது விஞ்ஞானி நண்பர் விவரித்திருந்ததைப் போலவே அழகான வண்ணத்துப் பூச்சி வெளியே வந்து காற்றில் பறந்து, பிறகு கீழே விழுந்தது. பிறகு ஒருபோதும் மறுபடியும் பறக்க முடியவில்லை.

பலமுறை, தனது இறகுகளைத் தூக்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால் வண்ணத்துப்பூச்சியால் பூமியின் மீது தவழத்தான் முடிந்தது.

வண்ணத்துப்பூச்சியை அதன் கூட்டில் இருந்து வெளியே கொண்டுவர உதவி செய்ததால் பறப்பதற்குத் தேவையான சக்தியை தனது இறக்கைகள் பெறுவதற்கான பலமான உறுதியினை அதற்குக் கிடைக்காமல் அவர் செய்துவிட்டதாக விஞ்ஞானி தன் நண்பரிடம் கூறினார்.

இந்த அழகான உயிரினத்துக்கு உதவி செய்தது அதற்கு அழிவை ஏற்படுத்தும் படியாக அமைந்துவிட்டது. இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே மனிதனுடைய அபிவிருத்திக்கு அவசியமான சுயஉதவி ஒரு உன்னத வரம். இந்த சுயஉதவி தான் அவர்களை சிறந்த, உயர்ந்த மனிதனாக்குகிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 28, 2014 12:43 pm

ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினரும் இன்று அந்த வண்ணத்துப்பூச்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போல ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பெற்றோர்களோ, உற்றார்களோ என்று ஏதோ ஒருவகையில் உதவிகள் பெறப்படுவதால் முயற்சியின் நோக்கம் அறியாதவர்களாகவே வாழ்கிறார்கள்.

பிறந்தது முதல் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இருப்பதால் எளிதாக வாழ்வை நடத்தி இனிதாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் பலரது வாழ்வின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதால் சுயமுயற்சியின் அவசியம் இளைஞர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.

நாம் ஒரு இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது தான் நமது உன்னதமான முயற்சியையும், கடினமான விடாமுயற்சியையும் மேற்கொள்கிறோம். இலக்கை எளிதாக எட்டிய போது வரும் பேரின்பத்தைவிட கடினப்பட்டு கிடைக்கும் பொழுதும், அதனால் பிறர் பயனடையும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை.

ஒரு செல்வந்தரின் மகன், தனது தந்தை விட்டுச் செல்லும் ஆஸ்திகளை கண்காணிப்பதை மட்டுமே தன் கண்ணான பணியாக செய்துவருவார். தனது முயற்சிகளைப் போட்டு ஒன்றை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் பெருக்கி அதனால் வரும் செல்வத்தை தனது சொந்த குடும்பத்திற்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த மனிதர் என ஊர் பேசும். ஆனால், அவரால் ஒரு சமுதாயம் பயனடைந்தால் அவருக்கு மட்டுமல்ல, அவர் குடும்பத்திற்கே அந்த சமுதாயம் தலை வணங்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாத உண்மை.

இன்றும் கூட சில இளைஞர்கள் தனது முன்னேற்றத்திற்கு ஊக்குவிக்க யாராவது ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தனது வாழ்வைச் சோம்பலாகக் கழித்து வாழ்வை வீணடிக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களால் வரும் பயனை அனுபவித்து காலம் தள்ளுகிறார்கள்.

லட்சியத்துக்கான கதவுகள் கண்ணுக்குப் புலப்படாதது ஏதோ ஒரு விதி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டக் கதவுகளை, தான்தான் திறக்க வேண்டும் என்று எவர் ஒருவர் முயற்சித்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்களையே சரித்திரங்கள் சித்தரிக்கும்.

தங்களது லட்சியங்களை சிறு சிறு கூறுகளாக வகுத்துக் கொண்டு, இதற்குள் இதை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பிறர் தயவை நாடாமல் முன்னுக்கு வரும் மனம் வேண்டும்.

அதிர்ஷ்டக் கதவிற்கு யாரும் இலவச நுழைவுச்சீட்டையோ, அனுமதியையோ தரத் தேவையில்லை. இளைஞர்கள் மட்டும் தான் அதற்கான விலையைத் தர வேண்டும். அந்த விலையை அவர்கள் தராவிட்டால் காலம் முழுவதும் வாயிலிலே காத்திருக்க வேண்டியது தான். சுயமுயற்சி என்னும் விலையை மட்டும் தந்தால் அதிர்ஷ்டக் கதவுகள் நிச்சயம் திறக்கும்.

செல்வராஜ் P.S.K
(தன்னம்பிக்கை இதழில்)






M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக