Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோச்சடையானும் என் ஏளனப் பார்வையும்! - சினிமா பித்தன்
3 posters
Page 1 of 1
கோச்சடையானும் என் ஏளனப் பார்வையும்! - சினிமா பித்தன்
ரஜினி படம் பார்ப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. முதற் காரணம்...
ரஜினி.
"ஒரு பொம்மை படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்குச் செல்ல வேண்டாம். ட்ரைலர் பார்க்கையில்- கார்ட்டூன் நெட்வொர்க்கில் போடப்பட்ட பாண்டவாஸ் படம்கூட இதைவிட நன்றாக அமைந்திருந்ததே!"
"ஒரு குறும்படம் கூட இயக்காமல் முதல் படத்துலையே ரியல் டைம் மோஷன் கேப்சர் அணுகுமுறையை யாராவது கையாளுவார்களா?"
"இப்படிப்பட்ட விஷப் பரீச்சைக்கு சூப்பர் ஸ்டார் இரையாகப் போகிறார்... இதை வேறு தியேட்டரில் பார்த்துத்தான் உணர வேண்டுமா?"
"ஹாலிவுட்டில் அவதார், 3௦௦ போன்ற படங்கள் பார்த்திருக்கிறோமே... இதைத் தாண்டியுமா கோச்சடையான் ஈர்க்கப் போகிறது?"
இப்படிப் பல கேள்விகள் கோச்சடையான் பார்க்க வேண்டாம் என்று மனதில் அஸ்திவாரம் போட்டது.
கடைசியில் படம் வெளியாகிவிட்டது. முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் என்று தோன்றுகையில் கேள்விகளால் மனதில் தொடுத்து அமைக்கப்பட்ட வேலி, ரஜினி என்ற காந்தச் சக்தியால் சுக்கு நூறாக உடைந்து திரையரங்கின் வாசலுக்கு இழுத்துச் சென்றது.
திரையரங்கிற்கு நேரடியாக சென்று கடைசி நிமிடத்தில் எப்படியாவது அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கிப் பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி பார்க்க நேர்ந்தது.
இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்?
நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு 'உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்' என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது.
நண்பன் ஆதியின் படையில் தளபதியாக கைகோக்கிறார் ரஜினி. அப்போ இது மீண்டும் ஒரு தளபதியா என்று யோசித்தால் அந்த எண்ணத்திற்கு அப்படியே ஒரு முட்டுக்கட்டை போட்டு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை டேக் டைவர்ஷன் எடுக்கிறது.
கோச்சடையான் வரலாறு சார்ந்த படம்தான். ஆமாம். நம் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பார்த்து வரும் அதே ரத்தம், அதே பழி, அதே வேட்டை. குடியிருந்த கோயில் தொடங்கி சிலம்பாட்டம் வரை பார்த்து பழக்கப்பட்ட அதே பழிவாங்கும் படம் தான் கோச்சடையானும். இருப்பினும், அப்படங்களுடன் இக்கதையை சரித்திரத்துடன் இணைத்ததிலும் அதற்கு ரஜினியை புகுத்தியதிலும், ஆனிமேஷனில் டெலிவர் செய்த விதத்திலும் தான் கோச்சடையான் வேறுபடுகிறது.
முதல் காட்சியில் ரஜினி அறிமுகம் செய்யப்படும்போது எத்தனை உத்வேகம் இருக்கிறதோ அதே உத்வேகம் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. மீண்டும் கூறினால் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை. முற்றிலுமாக ரஜினியின் திரை ஆளுமையை அறிந்து கொண்டு, ரசிகர்களையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லும் வண்ணம் திரைக்கதை அமைத்ததில் சபாஷ் போடா வைக்கிறார் இவர்.
குதிரைப் படைகளில் புகுத்தப்பட்ட சக்கரம் போலத்தான் ரஹ்மானின் இசை இப்படத் திரைக்கதைக்கு. குதிரை எப்படி வளைகிறதோ அதற்கு ஏற்றார் போல் அத்தனை வளைவுகள் பயணத்திற்க்கேற்றார் போல் புதிய புதிய பாதைகள் அமைத்தது சுவாரசியத்தில் அமர வைக்கிறது. படத்தில் குறிப்பிடப்படாத மற்றொரு கதையாசிரியர், வசனகர்த்தா வைரமுத்து. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் பாடல்கள் படத்தின் ஜீவனாக இப்படத்தில் தோன்றியது.
நாசர்: ரானா இனி உனக்கு வாய்ப்புகள் அமையாது
ரஜினி: என் அன்பு மன்னா, வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாசர்: பகல் கனவு காணாதே
ரஜினி: இனி உறங்கினால் தானே கனவு கண்டிட?
ரஜினி: என் அன்பு மன்னா, வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாசர்: பகல் கனவு காணாதே
ரஜினி: இனி உறங்கினால் தானே கனவு கண்டிட?
இப்படி இரண்டாம் பாதியில் எதுகை மோனை குன்றாது ரஜினி பேசும் வசனங்கள் மயிர் கூச்சல் பெற வைக்கிறது.
ரஜினியின் நேசியாக 'கோச்சடையான்' திருப்தி தந்திருக்கிறது என்றால் தீபிகா படுகோனை விழுந்து விழுந்து ரசித்த கலாரசிகனுக்கு கோச்சடையான் கொஞ்சம் இல்லை... பலத்த ஏமாற்றத்தை தான் தருகிறது. ஜாக்கி ஷராஃப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் இவர்களை நன்கு சித்தரித்தவர்கள், நாகேஷை மீட்டுக் கொணர்ந்து வந்தவர்கள் தீபிகா படுகோனையும் நன்கு காட்டியிருக்கலாம். பக்ஷே அது மட்டும் பெரிய ஏமாற்றம் சாரே.
கதாப்பாத்திரங்களின் உடையலங்காரம், வாளின் ஓசையேது மூங்கிலின் ஓசையேது என்று ஒவ்வொரு பொருளுக்குரிய சப்தத்தை துள்ளியமாக பதிவு செய்த ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பு, நிழற்படங்களின் வண்ணங்கள் படத்தின் இன்னபிற சிறப்பு அம்சங்கள். அக்மார்க் ரஜினி படம் பார்க்கின்ற எபஃக்ட்டினை வசனங்கள் அளித்துள்ளது.
ஹாலிவுட் ஆனிமேஷன் படங்கங்களில் எல்லாம் கதாப்பாத்திரத்தின் விழிகளை எல்லாம் எப்படி தத்ரூபகமாக சித்தரித்து இருப்பார்கள் இங்கே எல்லாரின் விழிகளும் ஒரே போலத் தானே இருக்கிறது, படம் சில இடங்களில் இருளோ எனத் தோன்றியது, கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் இப்படி எத்தனையோ கேள்விகள் தொடுத்து ஏளனம் செய்யலாம். ஆனால் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்.டி.ராஜசேகர், ரசூல் பூக்குட்டி, சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராஃப் இவர்களை வைத்துக் கொண்டு இதே கதையுடன் ஒரு கமர்சியல் படம் இயக்கி இருந்தால் பாலிவுட் ஓவர்சீஸ் வரை விற்று ஏகத்துக்கு லாபம் பார்த்திருக்கலாம். இதற்கு மாறாக முதற் படத்திலேயே பல ஜாம்பவான்களை வைத்து இந்தியன் சினிமாவில் புதுமையாக ஒரு பிரம்மாண்ட மோஷன் பிக்சர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தைரியம் நம்முள் எத்தனை பேருக்கு வரும்.
இன்று திருவிளையாடல் தருமியை போன்ற ஒப்பனையுடன் நாகேஷை மீட்டுக் கொணர்ந்ததை பார்க்கும் போது அப்படியே நெகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. இனி பிராட்பிட்டினை ஹாலிவுட்டிலிருந்து இறக்கி ஆல்தோட்ட பூபதி பாட்டிற்கு குத்தாட்டம் போட வைக்கலாம், துப்பாக்கி பார்ட்-2விற்கு லியோநார்டோ டிகாப்ரியோவை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ன கெட்டு விடப் போகிறது யார் கேட்கப் போகிறார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையும் இணைத்து தளபதி போன்ற ஒரு கதையை அமைத்து நடிக்கச் செய்யலாம். இனி காலத்தால் அழியாத கலைஞர்களை நமது சந்ததியினரையும் அறிய வைக்கலாம். இந்த எண்ணங்கள் இந்தியக் கலைஞர் பலருள் தோன்றிட கோச்சடையான் வித்திட்டுள்ளது.
நம் ஊரில் குழந்தைகளுக்கு மட்டும் தான் அனிமேஷன் படம் என்ற பிம்பத்தையும் கோச்சடையான் சிதைத்துள்ளது. ரஜினி தனது ஸ்டைலுடன் முறையாக பரதம் பயின்று ஆடினால் இத்தனை நன்றாக இருக்குமா என்ற யோசனையும் கடந்து அற்புதமாக அமைந்துள்ளது கோச்சடையான் ஆடும் சிவதாண்டவம்.
சௌந்தர்யா தனது தந்தையை எப்படிப்பட்ட சிம்ம சொப்பனமாக கண்டுள்ளார் எப்படி எல்லாம் பார்க்க நினைக்கிறார் என்பதை ரஜினி, ஷோபனா இணையும் ஆடல் காட்சி பிரதிபலித்தது. இயக்குனரை கடந்து ஒரு மகளால்தான் தான் விரும்பும் அப்பாவை இப்படி பிரதிபலிக்க முடியும்.
'வாழ்வை வென்றாய் வையம் சென்றாய் எல்லை உனக்கில்லை தலைவா' என்ற வைரனின் வரிகளுக்கு ஏற்ப என்றும் அழியாத சொப்பனமாய் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் அவதரித்துள்ளார்.
ஏளனப் பார்வையுடன்தான் திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் ஏளனப்பட்டதென்னவோ என் பார்வைதான். கோச்சடையான்... ஆனிமேஷனில் வரலாறு கலந்த மசாலா ஷம்போ மஹாதேவ்!
Tags: #கோச்சடையான் #ரஜினி #அனிமேஷன் #கே.எஸ்.ரவிக்குமார்
Re: கோச்சடையானும் என் ஏளனப் பார்வையும்! - சினிமா பித்தன்
எனக்கு மிகவும் பிடித்தமான படம்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Similar topics
» குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
» தருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்!
» காதல் பித்தன்
» அவள் விழியும் எனது பார்வையும்..
» பார்வையும் பதிவுகளும்: சமஷ்டியா தனிநாடா
» தருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்!
» காதல் பித்தன்
» அவள் விழியும் எனது பார்வையும்..
» பார்வையும் பதிவுகளும்: சமஷ்டியா தனிநாடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|