புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு திணறப் போகிறது...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 12, 2014 10:25 pm

மூச்சு திணறப் போகிறது... 5o6izlVaT0CeEx4j6WVX+2-8-2012_34517_l

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தில்லி அந்த அவப்பெயரை இப்போது பெறுவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. தில்லியின் காற்று அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிகிறது.

தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி நிர்வாகம் ஆகியவற்றுடன் இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளும் இந்த அறிக்கையின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். புது தில்லியின் சராசரி காற்று மாசு அளவு, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைவிடக் குறைவு என்பது அவர்களது வாதம். இப்படியொரு வாதத்தை முன்வைக்கும் அந்த அதிகாரிகள், எந்தவொரு நேரத்

திலும் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அசுத்தமாக இருந்ததே இல்லை என்று கூறுகிறார்களா என்றால் இல்லை.

சராசரி என்பது கணக்குக் காட்ட வேண்டுமானால் உதவலாம். மக்கள் சராசரியையா சுவாசிக்கிறார்கள்? எந்தவொரு கட்டத்திலும் காற்று மாசு உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அபாயகரமான அளவில் இருக்கக்கூடாது என்பதுதானே எதிர்பார்ப்பு!

காற்று மாசைப் பொருத்தவரை தில்லி முன்னிலை வகிக்கிறதா, பெய்ஜிங் முன்னிலை வகிக்கிறாதா என்பதல்ல பிரச்னை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக தில்லியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் அந்த அளவு அதிகரித்து வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது.

தில்லியைவிட மோசமாக இருந்த சீனாவின் பெய்ஜிங்கில் காற்று மாசு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட்டு, காற்று மாசின் அளவை படிப்படியாகக் குறைக்க அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

தில்லி அரசு இதுபற்றிக் கவலைப்படாமலே இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. இந்தியாவிலேயே முதல் முதலாக எரிவாயுவில் மட்டுமே பொது வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்திய மாநிலம் தில்லி மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாகவே தில்லியில் பேருந்துகள், லாரிகள் மட்டுமல்ல, வாடகைக் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது வாகனங்கள் அனைத்துமே எரிவாயுவில்தான் இயங்குகின்றன.

அத்துடன் நின்றுவிடாமல், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான தனியார், பொது வாகனங்களின் உரிமம் தில்லியில் புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதிலும் நிர்வாகம் கடுமையாக இருந்து வருகிறது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் "தில்லி மெட்ரோ ரயில் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. தில்லி மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயங்குகிறது என்றாலும், இதனால் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், வருடத்தில் ஒரு சில மாதங்

களைத் தவிர, ஏனைய மாதங்களில் தில்லியின் காற்று மாசு அளவு அதிகரித்து, காற்று மண்டலம் புகை மண்டிய நிலையில் காணப்படுகிறது.

தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பெரு நகரங்களிலும் சுற்றுப்புறக் காற்றில் காணப்படும் மாசு அதிகரித்து வருகிறது. அதிகரித்துவிட்ட நகர்ப்புற மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் காற்று மாசின் அளவு, நூறு விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிற உண்மையை யாரும் பேசுவதில்லை.

காற்று மாசின் விளைவால் ஏற்படும் மரணம் 2000இல் ஒரு லட்சமாக இருந்தது. அது 2010இல் ஆறு லட்சமாக அதிகரித்திருக்கிறது. காற்று மாசு விளைவிக்கும் சுகாதாரக் கேடுகளுக்கான மருத்துவச் செலவும் மிக அதிகம்.

இந்தியாவில் நல்ல தண்ணீர்தான் கிடைக்கவில்லை என்றால், இனிமேல் சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைக்காத நிலைமை ஏற்படக்கூடும். அதை எதிர்கொள்ளவும், காற்று அசுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்! (தினமணி தலையங்கம்)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 12, 2014 10:51 pm

நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Sep 06, 2014 10:37 pm

M.M.SENTHIL wrote:நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1063262

அய்யோ, நான் இல்லை நிஜம் இது தான் உண்மை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக