புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 1:33 pm


விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.

சிதறிய முஸ்லிம் வாக்குகள்

மோடியின் வெற்றிவாய்ப்புகுறித்து முஸ்லிம்கள் கவலைப்பட்டதும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இருந்த சாத்தியமும் இயற்கைதான். ஆனால், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பெரும்பாலான தொகுதிகளில்கூட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும், பா.ஜ.க. எதிர்ப்பின் அடையாளமான அவர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறிப்போய் அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். சான்றாக, உத்தரப் பிரதேசத்தின் மீரட், மொராதாபாத், சம்பல் போன்ற பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ள, பா.ஜ.க. எளிதாக வெற்றிபெற்றுள்ளது.

கூடுதலாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பா.ஜ.க-வில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம்களும் தோல்வி கண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் கட்சியிலிருந்து ஒருவர் வென்றது மட்டுமே விதிவிலக்கு. தவிர, தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதும் தெரியவருகிறது. வாரணாசியில் ஷியா முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. இவை விதிவிலக்குகள்தானே தவிர, பொதுவான நிலவரமாகக் கருத முடியாது.

தேர்தல் முறையின் கோளாறு

தேசிய ஜனநாயகக் கூட்டணி அபாரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், மொத்த வாக்குகளில் வெறும் 31% வாக்குகளிலேயே பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று 336 இடங்களைப் பெற்றுவிட்டது. ஆக, வாக்குகள் சிதறியதே பா.ஜ.க-வின் மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதாலேயே பா.ஜ.க-வின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதத் தேவையில்லை.

மூன்று விஷயங்கள்

எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க. வெற்றி கண்டாயிற்று. இப்போது முஸ்லிம்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அலச முனையும்போது, காவிப் பரிவாரத்தின் முக்கிய கோஷங்கள் மூன்று நினைவுக்கு வருகின்றன - ராம ஜென்மபூமி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்

சினை ஆகியவை. இவற்றில் ராம ஜென்மபூமி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்ற இரண்டு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையில் எடுக்க முடியும். ஆனால், எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. குறைந்தபட்சம் மாநிலங்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதவரை அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த நடவடிக்கையிலும் பா.ஜ.க. இறங்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்குவார்களோ என்று இஸ்லாமிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். இப்போதைக்கு இது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் உள்ள வாசகங்களைத் திருத்துவது சாத்தியமே இல்லை.

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஒரு பள்ளி

வாசலில் பயான் (சொற்பொழிவு) ஆற்றிய இமாம் ஒருவர், “இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கி, சிலுவைப் போர்களையும், மங்கோலியர்களின் தாக்குதல்களையும் தாங்கி வளர்ந்தது. அன்று சந்தித்த சோதனைகளைவிட புதிதாகச் சோதனைகள் எதுவும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.எல்லாம் அல்லாவின் நாட்டப்படியே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளைக் கண்டு இஸ்லாமியர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இதுதான் நடப்பு நிலை. கலக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதல்ல, கலக்கம் கொள்வதில் பயனில்லை என்பதே சரி. என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் மனங்களில் சற்றே கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் சாத்தியம் இருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்கிற மோடியும் பா.ஜ.க-வும் வெளிப்படையாக முஸ்லிம்களைத் தாக்கிப் பேசவோ, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.

ஆரம்ப கட்டத்திலேயே தமது பிம்பத்தைக் குலைத்துக்கொள்ள முனைய மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பிரதமராக மோடியின் உடனடிக் கவனம் வெளிப்

படையாகப் பார்க்கும்போது வளர்ச்சி, விலைவாசி, ஊழல் போன்றவற்றின் மீதுதான் இருக்குமென்று இப்போதைக்குத் தெரிகிறது. ஆனால், சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்களை மோடி அரசு எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

[thanks]- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர்[/thanks]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 23, 2014 3:54 pm

நன்றாக இருக்கும் மக்கள் மனதை ஏன் இதுபோன்ற கட்டுரைகளை எழுதி குழப்ப வேண்டும்? உண்மையில் மதத் தலைவர்கள் தங்கள் பிழைப்பை நடத்த இதுபோன்ற கட்டுரைகளை எழுதச் சொல்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..நாட்டின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் அதற்கு நாம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதை விடுத்து இது போன்ற புலம்பல்கள் அவசியமா?

இந்தியாவில் அனைவருக்கும் ஒரே உரிமை, மதச்சார்பின்மை என்ற நிலையில் வாதிக்கும் பொழுது பொது சிவில் சட்டம் வருவதால் என்ன பாதிப்பு வந்து விடும். அனைவருக்கும் தண்டனைச் சட்டம் ஒன்று தானே ?? மதம் பார்த்து ஒருவருக்கு சவுக்கடியும், இன்னொருவருக்கு நெய்விளக்கு ஏற்று என்று சட்டம் சொல்லவில்லையே ? இந்நிலையில் மதத்தின் பெயரால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் வைத்து கொண்டு பாதகமானதை விடுத்து பொதுவாக கருத வேண்டும் என்று எத்தனை நாளைக்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிப்பது.

மதம் ஜாதியின் பெயரால் இனி ஓட்டு விழாது என்பதை தலைவர்கள் உணர வேண்டும்.

நாடாளு மன்றத்தில் தங்களின் சதவீதம் குறைகிறது என்று வருத்தப்படும் இவர்கள் ராணுவத்தில், பொது சேவை நிறுவனத்தில், வரி செலுத்துவதில் எத்தனை சதவீதம் பங்களிக்கின்றனர் என்பதையும் எழுதி நியாப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரும் தங்களின் இனத்தை காக்கவே நாடாளுமன்றத்தில் பங்குபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். நாட்டை காக்க கொஞ்சமாவது நினையுங்களேன். இன்னமும் கோட்டா பேசியே குட்டையை குழப்பும் இதுபோன்றவர்களை என்ன செய்வது.





சதாசிவம்
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri May 23, 2014 5:18 pm

.

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:44 pm

எந்த மதமும் இனமும் மொழியும் இகழப்படக் கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 24, 2014 12:41 am

SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat May 24, 2014 7:38 am

ராஜா wrote:[link="/t110451-topic#1065480"]
SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....


நன்றி நண்பரே


தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Respect

.


avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 25, 2014 6:35 am

திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 25, 2014 8:21 am

ஒற்றுமையை வளர்க்க பாடுபடுவோர் பலர் .
வேற்றுமையை உண்டாக்கி குளிர் காய நினைக்கும் வீணர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள் .
காலம் தான் பதில் சொல்லவேண்டும் .
ஒற்றுமையை வளர்ப்போம் .
ரமணியன்



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 26, 2014 12:03 am

நடக்கிற அனைத்தும் நன்மைக்கே என்றே நான் நினைக்கிறேன்




தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Uதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Tதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Hதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Uதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Oதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Hதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Aதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Eதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:27 am

mmani15646 wrote:[link="/t110451-topic#1065669"] திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி...

மக்கள் உணர்ந்தால் சரி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக