புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
1 Post - 1%
viyasan
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_m10குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:30 am

குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? P28a

ஸ்கூல் அட்மிஷன் நேரமிது. 'என் புள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில படிக்கிறான்’, 'பொண்ணை மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல சேர்த்திருக்கேன்’ என்று ஆளாளுக்கு ஒவ்வொரு பாடத்திட்டத்தின் பெயரைச் சொல்வார்கள். ஆனால், அந்தப் பாடத்திட்டங்களின் இயல்பென்ன என்பது, அவற்றில் சேர்த்துவிட்ட பெற்றோர்களில் பலருக்குமே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. இவர்களுக்கும்... பிள்ளைகளை எந்தப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் சேர்த்து... 'ஸ்கூல் எஜுகேஷன்’ பற்றி தெளிவுபடுத்துவதற்காக இங்கே பேசுகிறார், கல்வியாளரும் எழுத்தாளருமான ஆயிஷா இரா.நடராசன்.

''சமச்சீர் கல்வி (மெட்ரிக்குலேஷன், ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ இண்டியன்... என பல கல்விகுழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? P28 முறைகள் நம் மாநிலத்தில் சொல்லப்பட்டாலும், இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சமச்சீர் கல்வியாக மாற்றப்பட்டுவிட்டது), சி.பி.எஸ்.இ (CBSE- Central Board of Secondary Education), ஐ.சி.எஸ்.இ (ICSE- Indian Certificate of secondary Education), இன்டர்நேஷனல் பள்ளிகள் (International Schools), மான்டிசோரி பள்ளிகள் (Montessori Schools), சுதந்திரப் பள்ளிகள் (Independant Schools ), டிஸ்கூலிங் (Deschooling) என்று பலவகை பாட முறைகளிலான பள்ளிகளுடன், வேறு சில பாடமுறைகளிலான பள்ளிகளும் இங்கே இருக்கின்றன.

கல்வி முறை எதுவாக இருந்தாலும்... பாடம் குறித்துப் படிக்கின்ற வார்த்தை ஒன்றுதான். ஆனால், கற்பிக்கும் முறையும், பாடத்தின் விரிவாக்கமும்தான் மாறுபடுகின்றன. உதாரணத்துக்கு, 'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எங்கு உள்ளது?' என்றால், அதற்கு நேரடியாக பதில் அளிப்பதே சமச்சீர் கல்வி முறையாக இருக்கிறது. இதுவே மற்ற கல்வி முறைகளில், வரைபடங்களுடன் அந்த களஞ்சியத்தைப் பற்றிய கடந்தகால, தற்கால தகவல்கள், செய்முறை தகவல்கள் என்று பலவித தகவல்களும் கூடுதலாக இருக்கும்'' என்று சொன்ன நடராசன், ஒவ்வொரு பாடத்திட்டம் பற்றியும் சிறுசிறு குறிப்புகள் தந்தார்.
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? P28b
சி.பி.எஸ்.இ பள்ளிகள்: இந்தியக் கல்வி முறையில் இயங்கக்கூடிய பள்ளிகள் இவை. பாடங்கள் விரிவானதாக இருக்கும். பெரும்பாலும் ஆய்வுகளைச் செய்யும் வகையிலான பாடங்கள் இருக்கும். புராஜெக்ட் எனப்படும் திட்டப்பணிகளும் இவற்றில் அதிக அளவில் இருக்கும். மாணவர்கள் வெறுமனே படம் பார்த்து பாடத்தைப் படிக்காமல், செயல்முறையாகவும் படிப்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், விஷயங்களை உள்வாங்கி படிப்பதாக இருக்கும். 'குடை' என்றால், படமாக மட்டுமே சமச்சீர் கல்வி முறையில் இருக்கும். சி.பி.எஸ்.இ முறையில் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களால் செய்தே காட்டுவார்கள். மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான கல்வி இது.

ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்: கிட்டத்தட்ட சி.பி.எஸ்.இ போன்றதே இந்தக் கல்விமுறையும். என்றாலும், இங்கே செயல்வழிக்கற்றல் என்பது மேலும் விரிவாக இருக்கும். உதாரணத்துக்குக் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களில் செய்துகாட்டுவதோடு... அதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

சுதந்திர பள்ளிகள்: மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிப்பதாக இயங்கி வருபவை, இந்தப் பள்ளிகள். தி ஸ்கூல், ஈஷா கேம்பஸ் (The School, Isha Campus) போன்ற பள்ளிகள், இவற்றில் அடக்கம். இந்தப் பள்ளிகள், வழக்கமான கல்வி முறையில் இல்லாமல் தங்களுக்கென தனித்தனி பாடமுறைகளை வகுத்துக்கொண்டு, அதை செயல்படுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு தி ஸ்கூல் என்பது ஐ.ஜி.சி.எஸ்.இ எனும் ஆக்ஸ்போர்டு கல்வி முறையில் இயங்குகிறது. பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் ஐ.சி.எஸ்.இ கல்வி முறையிலே செயல்படுவதாக தெரிகிறது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சம், ஒரு மாணவன், ஒரு வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கிருந்தபடியே தோல்வியடைந்த முந்தைய வகுப்பு பாடத்தைப் படித்து தேர்ச்சி பெறலாம். முழுக்க முழுக்க வாழ்வியல் சார்ந்த நடைமுறைக் கல்வியாகவும் இது இருக்கும்.

இன்டர்நேஷனல் பள்ளிகள்: இந்த சர்வதேசப் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. கூடுதலாக இசை, நடனம், நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பலவித பயிற்சிகளும் வழங்கப்படும். ஏ.சி வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, சாட்டிலைட் மூலமாக வெளிநாட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பது முதலான தொழில்நுட்பங்கள் இந்த வகைப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள். பாடம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கே மாணவர்களை அழைத்துச் செல்லும் 'ஃபீல்டு ட்ரிப்’களும் நடத்தப்படுகின்றன.  இங்கே மாணவர்கள் உணவு மற்றும் உடை ஆகியவையும் வெளிநாட்டு கலாசாரத்துக்கு இணையானதாகவே இருக்கும்.

மான்டிசோரி பள்ளிகள்: மரியா மான்டிசோரி என்பவர் கண்டுபிடித்த இந்த வெளிநாட்டுக் கல்வி முறையின் சிறப்பம்சமே, ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான். அதேநேரத்தில், ஒரு மாணவன், ஒரே வகுப்பை மூன்று வருடங்கள் (இரண்டரை வயது முதல் ஐந்தரை வயது வரை) படிக்க வேண்டும். பல்வேறு வயதுள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால், அவர்களிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவும் மனப்பான்மையும் வளர்கின்றன. கூடுதலாக இன்னொரு சிறப்பும் இந்தப் பள்ளிகளுக்கு உண்டு. அதாவது, ஒரு வகுப்பின் பாடதிட்டத்தில் சந்தேகம் இருந்தால், அந்த மாணவன் மீண்டும் முந்தைய வகுப்புக்குச் சென்று, அங்கே அமர்ந்து, சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டு வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு இந்த பள்ளிகள் துவக்கப் பள்ளிகள் அளவில் மட்டுமே செயல்படுகின்றன. அதிலும், பல மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் வகையில்தான் இருக்கின்றன. அதன்பிறகு, வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துதான் படிக்க வேண்டும்.

டிஸ்கூலிங்: 'ஒரு குழந்தை வேலைக்கு சென்று கல்லை சுமப்பதும், பள்ளிக்கு சென்று புத்தகத்தை சுமப்பதும் ஒன்றுதான்' என்றும், 'பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு இணையானவர்கள்' என்றும் கருதுபவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் கற்பிக்கும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறையிலான கல்வியை, இந்தியாவில் வெகுசிலர் மட்டுமே பின்பற்றுகிறார்கள். இந்தக் கல்வி முறையைப் பொறுத்தவரை பெற்றோரிடமோ அல்லது தன் வீட்டுக்கு வந்து பாடம் எடுக்கும் ஆசிரியரிடமோ அல்லது 'ஆன்லைன்’ மூலமாகவோ மாணவன் பாடம் பயில்கிறான். அல்லது தனக்குத் தோதான நேரத்தில், தனக்குப் பிடித்த இடங்களுக்கு சென்று பயில்கிறான்.

உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எண்ணங்கள் இருந்தால், தனித்தேர்வர்களாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.

நிறைவாக பேசிய நடராசன், ''மொத்தத்தில் எந்தக் கல்வி முறையாக இருந்தாலும் மனப்பாடத்தை மையப்படுத்தாமல், புரிதலை மையப்படுத்தினால், உலக அளவில் நம் மாணவர்கள் வெற்றிப் படிகளில் முன்னேறுவர்!'' என்று நம்பிக்கை அளித்தார்.

விகடன்


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jun 05, 2014 11:24 am

இக்கட்டுரை முழுமை பெறவில்லை.

பள்ளிக்கூடங்கள் படிப்பதற்கு மட்டுமில்லை.. அங்கே எத்தனை விளையாட்டுத் திடல்கள் இருக்கிறது. வாரத்திற்கு எத்தனை மணி நேர விளையாட விடுகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கேட்டுச் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளுக்கு விளையாட்டு அவசியம். ஆனால் இன்றைய கல்விமுறையில் பெற்றவர்களும் கல்வியாளர்களும் விளையாட்டை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அது மட்டுமல்ல பள்ளியில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேள்வி கேட்டு அது நமக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே அப்பள்ளியில் சேர்க்கலாம். முதலுதவி தெரிந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் ? நூலகம் இருக்கிறதா, குழந்தைகள் நூலகம் செல்லும் நேரம் எவ்வளவு, அங்குள்ள உணவகம் எப்படி என்பது உட்பட பல விசயங்களை கேட்டு தெரிந்து அதன் பின்னரே சேர்க்க வேண்டும்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் செல்போனில் என்ன என்ன இருக்கிறது என்று ஆராயும் நாம், பள்ளிக்கூடங்களில் என்ன என்ன இருக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. பெற்றவர்கள் தங்களை நுகர்வோராக நினைத்து பள்ளியை சரிவர கேள்வி கேட்க வேண்டும்.  

மேலும் சமச்சீர் கல்வி சரியில்லை என்பது போல் இக்கட்டுரை அமைந்துள்ளது. இது முற்றிலும் தவறு. CBSE பாடம் போல் இதிலும் இப்பொழுது பல செயல்முறை பாடத் திட்டங்கள் வந்துள்ளது. அது மட்டுமல்ல பல CBSE  யில் மாணவர்கள் சும்மா பேச்சுக்கு ப்ராஜெக்ட் செய்கிறார்கள், இதன் மூலம் பெற்றவர் பணம் செலவழித்து வேதனைப்படுவதும், பள்ளிகூடம் அருகில் உள்ள பான்சி ஸ்டோர் கடைக்காரர் மகிழ்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் மாணவர்களுக்கு பெரிதாக அறிவு வளர்ந்துவிடவில்லை.  எதற்கு செய்கிறோம், அதன் மூலம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூடச் சொல்லாமல் செக்குமாடு போல் அதைச் செய்து வா இதைச் செய்து வா என்று கட்டளையிடுகின்றனர். இது தான் இன்றைய CBSE இன் நிலைமை.



சதாசிவம்
குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:33 pm

குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? 103459460 குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்களா? 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக