புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உணவு யுத்தம்! I_vote_lcapஉணவு யுத்தம்! I_voting_barஉணவு யுத்தம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு யுத்தம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 7:42 am

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் தொடர் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:-

எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப்போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனுகார்டு கைக்கு வந்தது. புரட்டிபுரட்டிப் பார்த்தேன்.

எனக்குத்தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெகட்டி, சரமுரா, அல்பஸ்தா, க்ரோகுயிட், பேகட் என மாத்திரைப் பெயர்களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.

இதை எல்லாம் எங்கே சாப்பிடப்பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்? என்னைப்போலவே அன்றாடம் வீட்டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப்போடு அவர்களைப்பார்த்தபடி, ‘எப்படித்தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டேன். ‘டிவி விளம்பரத்தில் காட்டுவார்கள்; என்றனர். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை டிவி முடிவு செய்கிறது. இதுதான் காலக்கொடுமை.

பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். இப்போதுதான் நாங்களும் முதன்முறையாகச் சாப்பிடுகிறோம். என்னவோ போல் இருக்கிறது என்றார்கள். அதற்கு அர்த்தம் பிடித்திருக்க்வும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.

நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6500 ரூபாய். அந்த பில்லை உற்றுப்பார்த்தபடி இருந்தேன். கணக்குப்பார்க்காதே என்பது போல் பிள்ளைகள் திரும்பி பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான் செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக்கிறார்கள்.

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது.
(தொடரும்)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 3:56 pm

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது. wrote:

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:58 pm

அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 5:04 pm

ரா.ரா3275 wrote:[link="/t110417-topic#1065228"]அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ? இங்கிருந்து அமெரிக்க போனாலும் நம் சாப்பாட்டை தேடித்தேடி சாப்பிடும் நம் ஆட்கள் இங்கு எதுக்கு அங்கெல்லாம் போகணும்? சொல்லுங்கோ ? புன்னகை

போவானேன் அப்புறம் அவாளை குத்தம் சொல்வானேன் ? அங்கு போக 'dress code ' குட இருக்குமே? அத சொல்லலியே அவர் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 22, 2014 6:30 pm

டை கட்டி
மெனு நீட்டி
பணம் அள்ளும் கூட்டம்
- கையேந்தி பவனே துணை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 10:34 pm

krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 10:38 pm

சாமி wrote:[link="/t110417-topic#1065274"]
krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.

சரியான சவுக்கு சொடுக்கு இது சாமி...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 23, 2014 6:00 am

2. உணவு யுத்தம்! LTJlFnZRhiiAJw4MZHIG+ht2093

வீட்டுக்குப்போய் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் சாப்பிடவேண்டும் என்று பசி இழுத்துக் கொன்டிருந்தது. வீட்டுக்கு வந்து சோறும் தயிறும் சாப்பிட்ட போது பிள்ளைகள், “உங்களை எல்லாம் பன்னாட்டு உணவகத்துக்கு அழைத்துப்போனது வீண். நீங்கள் இட்லி சாப்பிடத்தான் லாயக்கு” என்று கேலி செய்து சிரித்தார்கள்.

இட்லி சாப்பிடுகிற மனிதன் ஏன் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான். இட்லி, சோறு, களி, கம்பங்கூழ், குதிரைவாலிச்சோறு என்று அவரவர் வாழ்விடத்தில் கிடைத்த உணவுகள் ஏன் இன்று பரிகசிக்கப்படும் உணவாக மாறிப்போய்விட்டன?

சோறு என்ற சொல்லை சென்னையில் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. ரைஸ் என்றுதான் கேட்கிறார்கள். சாப்பிடுகிற சோறை சொல்வதற்கு கூசுகிற மனிதனை எப்படிப்புரிந்து கொள்வது?
சோறு என்பதற்கு
அடிசில்,
கூழ்,
அழினி,
அவிழ்,
கொன்றி,
நிமிரல்,
புழுங்கல்,
பொம்மன்,
மிதவை

எனப்பல சொற்கள் தமிழில் உள்ளன.

நீர்கலந்த சோற்றுப்பருக்கையை கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக்கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்று கூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.

உணவு யுத்தம்! Y79aVcHwTpCSKijpeoEn+idli

இட்லி சாப்பிடுவதால் உள்ள நன்மை இளந்தலைமுறைக்குத் தெரியாது. அது ஆவியில் வேகும் எளிமையான உணவு. அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத்தேவையான தாது உப்புகளும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.

திசுக்களைப்புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவில் இட்லி சிறந்த ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இன்று கடைகளில் உடனடி இட்லி, தோசை மாவு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் சில நிறுவனங்கள் மாவு புளித்துப்போகாமல் இருக்க போரிக் ஆசிட் மற்றும் ஆரூட் மாவு கலக்கிறார்கள்.

உணவுப்பழக்கம் தானாக மாறவில்லை. அதைத்திட்டமிட்டு மாற்றுகிறார்கள். உணவுச்சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதற்காக புதிய உணவு ரகங்களை அதன் நன்மை தீமை பற்றி எவ்விதமான கவலையும் இன்று விற்றுத்தள்ளுகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கி வைத்த இந்த மோசடி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

இன்று உணவு வெறும் சாப்பாட்டு விசயம் இல்லை. அது பெரிய சந்தை. கோடி கோடியாக பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக்களம். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அமெரிக்காவில் உட்கார்ந்து தீர்மானிக்கிறான். உணவு குறித்து விதவிதமான பொய்களைப் பரப்புகிறார்கள். நகரம், கிராமம் என பேதமில்லாமல் ஜங்க்ஃபுட் எனப்படும் சக்கை உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 12:53 pm

உணவு யுத்தம்! 103459460 உணவு யுத்தம்! 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக